Followers

Thursday, 28 September 2023

புகழ்ச்சி தரும் அழிவு பேசாலைதாஸ்

புகழ்ச்சி தரும் அழிவு பேசாலைதாஸ் 


கன்றுக்குட்டி ஒன்று அழுதபடியே தாய்ப்பசுவிடம் ஓடி வந்தது.

அதைப் பார்த்த தாய்ப்பசு தனது கன்றை நாக்கினால் நக்கியபடி அதன் அழுகைக்கான காரணத்தை விசாரித்தது.

உடனே அந்த கன்று, "அம்மா, இந்த வீட்டில் என்னைப் போலவே ஆட்டுக்குட்டி ஒன்றும் உள்ளது. என் அழகு அதற்கு இல்லை. கன்னங்கரேலென்று மிகவும் கருப்பாக உள்ளது. என் சுறுசுறுப்பும் அதற்கு இல்லை. ஆனால் இந்த வீட்டில் இருக்கும் முதலாளியின் மகன் என் மீது அன்பு காட்டுவது இல்லை. ஆனால் அந்த ஆட்டுக்குட்டியிடம் மட்டும் விளையாடுகிறான். அதற்கு பசுமையான புல் தருகிறான். அதன் கழுத்தில் அழகான மணி ஒன்று கட்டி அழகு படுத்துகிறான். ஆனால் என்னுடைய நிலையைப் பார். இங்கே கிடக்கும் காய்ந்த வைக்கோலைத்தான் தின்ன வேண்டியிருக்கிறது. என்னிடம் என்னம்மா குறை இருக்கிறது? " என்றபடி மீண்டும் அழத் தொடங்கியது.

"கண்ணே, இதற்காகவா வருத்தப்பட்டு அழுகிறாய்? அதிகமான மரியாதையும், அதிகமான இன்பத்தையும் அனுபவிப்பது மிக்வும் ஆபத்தானது. பிறருக்குக் கிடைக்கும் இன்பத்தைப் பார்த்துப் பொறாமைப் படாதே, அந்த ஆடு பெறும் நலமும் வளமும் அதன் அழிவிற்கே. அதன் நிலையைக் கண்டு இரக்கப்பட வேண்டுமே தவிர பொறாமைப் படாதே." என்றது தாய்ப்பசு.

ஒரு சில மாதங்கள் கடந்தன. அந்த கன்றுக்குட்டி மீண்டும் அழுது கொண்டே வந்தது.

தாய்ப்பசு அழுகையை நிறுத்திக் காரணம் கேட்டது.

"அம்மா, நடந்த கொடுமையை எப்படிச் சொல்வது? அதை நினைத்தாலே எனக்குப் பயமாக இருக்கிறது. இன்று காலையில் அந்த ஆட்டைக் குளிப்பாட்டி மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். அதற்கு சுவையான உணவெல்லாம் கொடுத்தார்கள். சிறிது நேரம் கழித்து ஒருவன் பட்டாக்கத்தியுடன் வந்து அதன் தலையை வெட்டி வீழ்த்தினான். பிறகு அதன் உடலையும் துண்டு துண்டாக வெட்டினார்கள்." என்று சொல்லி மீண்டும் தேம்பித் தேம்பி அழுதது.

"கண்ணே, நான் அன்றே உனக்குச் சொல்லவில்லையா? மாலை மரியாதைகள், புகழ் மொழிகள் இவற்றிற்குப் பின்னால் அழிவு காத்திருக்கிறது. நமக்குக் கிடைப்பதைக் கொண்டு மகிழ்ச்சி அடைவதே மேலானது. மனிதர்களில் பலரும் இப்படித்தான் புகழ்ச்சியான பேச்சுக்கு மயங்கி அனைத்து உடமைகளையும் இழந்து கடைசியில் அழிந்தும் போய் விடுகிறார்கள்." என்றது தாய்ப்பசு.....

சிறந்த அரசன் பேசாலைதாஸ்

சிறந்த அரசன்  பேசாலைதாஸ் 

”திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்ரியே, நீ திருந்தவே மாட்டியா?” என்றார் ஜட்ஜ் ஜவர்லால்.

“எவ்வளவு தரம் பிக் பாக்கெட் அடிச்சாலும் அதே தண்டனையே தர்ரீங்களே, நீங்க சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா?” என்றான் பிக் பாக்கெட் பக்கிரி.

ஜட்ஜூக்கு சுருக்கென்றது.

பக்கிரியை ஜெயிலுக்கு அழைத்துப் போகச் சொல்லிவிட்டு ஜெயிலரைத் தனியாக அழைத்து ஏதோ பேசினார் ஜட்ஜ்.

ஜெயிலர், பிக் பாக்கெட் அடித்த பத்துப் பேரை ஒரு பிளாக்கில் வைத்தார். பக்கிரியைத் தனியாக அழைத்து சொன்னார்,

“இந்த பிளாக்கில் உனக்கு நேரப்படி சோறு கிடையாது. இந்த பிளாக்குக்கு ஒரு கேண்டீன் இருக்கிறது. செய்கிற வேலைக்கு தினமும் இருநூறு ரூபாய் கூலி. அதைக் கொண்டு போய் காசு கொடுத்துச் சாப்பிட வேண்டும். ஒரு டிஃபன் ஐம்பது ரூபாய். ஒரு சாப்பாடு நூறு ரூபாய். மிச்சம் பிடிக்கிற காசு உனக்கு”

பக்கிரி சந்தோஷமாக ஒப்புக் கொண்டான்.

ஜெயிலர் மற்ற ஒன்பது பேரைத் தனியாக அழைத்தார்.

“பக்கிரி கூலியை வாங்கிக்கிட்டு செல்லுக்குப் போகிற வழியில அவனை பிக் பாக்கெட் அடிக்கிறது உங்க வேலை. அவனுக்குத் தெரியவே கூடாது. தினம் ஒருத்தரா இந்த வேலையைச் செய்யணும், யார் எப்ப பண்றீங்கன்னு தெரியக் கூடாது. தெரிஞ்சா உங்க யாருக்கும் சோறு கிடையாது” என்றார்.

அவர்கள் இந்த தொழில் சவாலை ஏற்றார்கள்.

முதல் நாளே பக்கிரி பிக்பாக்கெட்டில் காசை விட்டான். எவ்வளவு கெஞ்சியும் அவனுக்கு இலவசமாய் டிஃபன் தரவில்லை. பசியில் அவனைத் துடிக்க விட்டு கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்ச விட்டு அப்புறம் துளியூண்டு சாப்பிடத் தந்தார்கள்.

அவன் சாப்பாடு கிடைக்காமல் தவிப்பதை மற்ற ஒன்பது பேரும் பார்த்துக் கொண்டிருந்தாலும் வேறு வழியில்லை. ஆட்டத்துக்கு ஒப்புக் கொள்ளா விட்டால் ஒன்பது பேர் பட்டினி! அதை விட ஒருத்தன் பட்டினி பரவாயில்லையே!

எல்லோரும் விடுதலை ஆகும் அன்று ஜட்ஜ் ஜவர்லால் வந்தார்.

“சட்டத்தையோ, தண்டனையையோ கடுமையாக மாற்றுகிற அதிகாரம் எனக்கில்லை. ஆனால் ஜெயில் வழக்கங்களை முன் அனுமதியோடு பரிட்சார்த்தமாக மாற்றும் அதிகாரம் ஜெயிலருக்கு உண்டு. உங்கள் மனப்பாங்கு இப்போது எப்படி இருக்கிறது?” என்றார்.

“ஒரு நாள் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சதை ஒரு செக்கண்டில தட்டிக்கிட்டு போறது எவ்வளவு அக்கிரமம்ன்னு இப்போ புரியுது, இனி பிக்பாக்கெட் அடிக்க எனக்கு மனசு வராது” என்றான் பக்கிரி.

“பிக் பாக்கெட் கொடுத்தவன் பசியில துடிக்கிறதைப் பார்க்க சகிக்கல்லை. செத்தாலும் இனிமே பிக்பாக்கெட் அடிக்க மாட்டோம்” என்றார்கள் மற்ற ஒன்பது பேரும்.

ஜட்ஜ் ஒரு திருக்குறள் அபிமானி. வள்ளுவர் சொன்னதைத்தான் அவர் செய்தார்.

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்

ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து

குற்றம் செய்யப்பட்ட சூழ்நிலையை ஆராய்ந்து, குற்றவாளி மீண்டும் அத்தகைய குற்றத்தைச் செய்யாத வண்ணம் தண்டனை வழங்குகிறவன்தான் சிறந்த அரசன் ஆவான்

புத்திசாலித்தனமான உழைப்பு பேசாலைதாஸ்

புத்திசாலித்தனமான உழைப்பு பேசாலைதாஸ் 

ஒரு ஊரில் , ஒரு ராஜா !

ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி,புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும்,திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே !

கிளி சொன்ன ஞானம்

கிளி சொன்ன ஞானம் பேசாலைதாஸ் 


ஒரு பெரியவர் தவம் செய்து கொண்டிருக்கும்போது அவருக்கு அருகில் ஒரு கிளி இருந்துகொண்டு அவரை கவனித்து “நீங்கள் ஞானி” என்று திரும்ப திரும்ப கூறிக்கொண்டே இருந்தது.

அதைக் கேட்ட பெரியவர் தான் ஞானி இல்லை.

இப்போது தான் நான் தவம் செய்யும் முறையை பயின்று கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.

ஆனாலும் தொடர்ந்து அந்த கிளி அவரை ஞானி என்று கூறிக் கொண்டே இருந்தது.

சிறிது காலம் தவம் செய்த பின் பெரியவருக்கும் கிளி கூறுவதில் உண்மை என்றே நினைத்தார்.

அதனால் அடுத்த நாள் கிளி ஞானி என்று கூறும்போது ஆம் நான் ஞானி தான். தவம் செய்து ஞானத் தன்மை அடைந்துவிட்டேன் என்ற செய்தியை கூற வேண்டும் என்று எண்ணினார்.

அடுத்த நாள் அதேபோல் தவம் செய்ய ஆரம்பித்தவுடன் பெரியவர் அருகில் கிளி வந்தமர்ந்தது.

பெரியவர் கிளி எப்போது ஞானி என்று சொல்லும் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருந்தார்.

வெகு நேரமாகியும் கிளி சொல்வே இல்லை.

பொறுமை இழந்த பெரியவர் தானே கிளியிடம் நீ கூறுவது உண்மை தான். நான் ஞானி என்று என்னை உணர்ந்து கொண்டேன் என்றார்.

அதைக் கேட்ட கிளி உடனே நேற்றுவரை 

நீங்கள் ஞானி தான், ஆனால் இன்று நீங்கள் ஞானி இல்லை என்று கூறியது.

இதைக் கேட்ட பெரியவர் மிகவும் திடுக்கிட்டார்.

பெரியவர் மட்டுமா திடுக்கிட்டார். இதை படிக்கும் நாமும் தானே......!!!

இது கற்பனை கதை என்றாலும் ஆழமான உள் அர்த்தம் இருப்பதை கவனிக்க வேண்டும்.....!!!

யாரோவர் தன்னை ஞானி என்று பறைசாற்றிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறாரோ அவர் ஞானத் தன்மையை அடையவில்லை என்பதே நிதர்சனமான உண்மை......!!!

கல்வி கல்விதான்.

கல்வி கல்விதான்பேசாலைதாஸ்

‘‘அப்பா, உங்க கிட்ட ஒண்ணு கேக்கணும்’’ என மகன் ஆரம்பித்தான். அவனுக்கு 10 வயது இருக்கும்.

‘‘சொல்லுப்பா?’’

‘‘நீங்க படிச்சது பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரியா?’’

‘‘ஆமா. ஏன் கேக்குறே?’’

‘‘கெமிஸ்ட்ரி படிச்சிட்டு ஏன் மரக்கடை வச்சிருக்கீங்க?’’

‘‘ஏன்... வைக்கக்கூடாதா?’’

‘‘வைக்கலாம். ஆனா உங்க படிப்புக்கும் நீங்க செய்யற வேலைக்கும் சம்பந்தமே இல்லையே அப்பா!’’

‘‘சரி, இப்ப நீ சைக்கிள் ஓட்டுறேதானே... அது எப்படி ஓடுகிறது?’’

‘‘அது டயர் இருக்கறதால ஓடுதுப்பா!’’

‘‘அந்த டயர்ல காத்து இல்லன்னா என்னவாகும்?’’

‘‘சைக்கிளை ஓட்ட முடியாது.’’

‘‘சரி, இப்படி காற்று அடைக்கிற சைக்கிள் டயரை முதன்முதலில் கண்டுபிடித்தவர் யார்... சொல்லு!’’

‘‘ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜான் டன்லப் என்ற விஞ்ஞானிதான் அதைக் கண்டுபிடித்தவர் அப்பா.’’

‘‘சரியான விடை. காற்று அடிக்கும் வகை சைக்கிள் டயரைக் கண்டுபிடித்தவர் ஜான் டன்லப்தான். ஆனால், அவர் விஞ்ஞானி கிடையாது. அவர் ஒரு கால்நடை மருத்துவர். அவருக்கும் டயருக்கும் சம்பந்தமே கிடையாது. அவர் தன் மகனின் முச்சக்கர சைக்கிளை வேகமாக நகர வைக்க என்ன வழி என்று யோசித்தார். இந்த காற்று அடைக்கும் டயரைக் கண்டறிந்தார்.

அதைப் பயன்படுத்தும்போது சைக்கிள் வேகமாக ஓடியது. அந்த காற்று அடைக்கும் டயர் முறை பிரபலமாகி, அதைக் கண்டுபிடித்த பெருமையும் ஜான் டன்லப்புக்கு வந்து சேர்ந்தது.’’

‘‘இந்த புதிய தகவல் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது அப்பா.’’

‘‘ஆமாம். இதைக் கேட்கும் அனைவருக்கும் ‘கால்நடை மருத்துவரா காற்றடிக்கும் டயரைக் கண்டுபிடித்தார்’ என்று ஆச்சரியமாக இருக்கும். ஜான் டன்லப் தான் கற்ற கல்வியை ஒரு துறை சார்ந்த கல்வியாக பார்க்கவில்லை.

எந்த விஷயத்தையும் கூர்ந்து கவனித்து ஆராயும் முறையைத்தான் அவர் கல்லூரியில் கற்றுக் கொண்டதாக நினைத்தார். அதனால்தான் தன் மகனின் சைக்கிளைக் கூட தனது துறையைச் சார்ந்ததாக இல்லாவிட்டாலும் கூர்ந்து கவனித்து ஆராய்ந்து காற்றடிக்கும் டயரைக் கண்டுபிடித்தார்.’’

‘‘புரிகிறது அப்பா!’’

‘‘நான் பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரி படித்துவிட்டு மரக்கடை வைத்திருக்கலாம். ஆனால், கெமிஸ்ட்ரியை எப்படி ஆராய்ந்து புரிந்து படித்தேனோ, அதே யுத்தியைத்தான் வியாபாரத்திலும் செயல்படுத்துகிறேன். அந்த வகையில், நான் கற்ற கல்வி எனக்கு மிக உபயோகமாக இருக்கிறது.

எந்த துறையைப் படித்தாலும், கல்வி கல்விதான். அது நம் அறிவை வளர்த்து நன்மையைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். ஆகையால் எந்த துறையானாலும் விருப்பத்துடன் படிக்க வேண்டும்’’ என்று அப்பா சொல்லி முடித்தார்.

Monday, 28 August 2023

காவி

 1983 இலங்கை இன கலவரத்துக்கு பின்பும் கிளிநொச்சியில் புலிகள் மற்றும் போராட்ட இயக்கங்களுக்கு மத்தியில் கண்டி பிரதான சாலைக்கு அருகில் சிங்கள மகா வித்தியாலயம் இயங்கி கொண்டிருந்தது. ஒரு புத்த பிக்குவும் அருகில் இருந்தார். முழு தமிழர்கள் நிறைந்த தெருவில் ஒரு சிங்களவரும் இல்லாத தெருவில் பிக்கு குடை பிடித்தபடி நடந்து போய் வந்து கொண்டிருந்தார். அவர் அருகில் தமிழ் பிள்ளைகள் கூட சென்று வந்தனர்.அந்த காவி நிறம் எங்கள் தெருவுக்கு மிக அழகாக இருந்தது. காவி எப்போது அழகாக இருந்ததெனில் அப்போது தான்.

கிளிநொச்சி கரடி போக்கு சந்திக்கு அருகில் போர் தொடங்கிய பின்னரும் அரச மரம் புத்த பகவான் சிலை இருந்தது. அதை ஆக்கிரமிப்பு சின்னமாக நினைத்து போராளிகள் உடைத்து எறிந்ததை நான் காண வில்லை. புத்தர் சிலை எப்போது ஆக்கிரமிப்பு சின்ன மாறுகிறது இந்த கேள்விகளுக்கு பதில் தேட வேண்டியது தென் இலங்கையே.
அந்த புத்த பிக்கு தன் வீட்டில் இருந்து தமிழ் சனங்களுக்கு ஓதி நீர் தெளித்து ஆசீர் வதித்தார். அந்த அன்புக்காக கிளிநொச்சி பிள்ளைகள் கிளிநொச்சி குளத்தில் தாமரை மலர்கள் பறித்து சென்று பிக்குவுக்கு கொடுத்து அவர் தமிழில் மகிழ்ந்தனர்.
நல்ல நினைவு இருக்கிறது நானும் என் தாயாரும் சென்று. பிக்குவிடம் மருந்து எண்ணெய் பெற்று அவரிடம் நூல் கட்டி கொண்டோம். அந்த நூல் ஒரு விஷ பாம்பு போல் கை களில் தோன்ற வில்லை.
பிறகு கிளிநொச்சி பெரும் போரின் போது தமிழ் மக்களோடு அந்த பிக்குவும் அகதியாக நடந்து கொண்டிருந்தார்.இப்போதும் நாம் எதிர் பார்ப்பது அவரை போல தமிழ் மக்களை புரிந்து கொண்ட ஒரு பிக்கு கூட நடந்து வர வேண்டும் என்பதையே அந்த அன்பின் பிரதி உப கார மான தாமரை மலர் கள் இப்போதும் எங்களிடம் உண்டு.

என் உள்ளத்தில் குடிபுகுந்தாள்! சிறுகதை பேசாலைதாஸ்

 என் உள்ளத்தில் குடிபுகுந்தாள்! சிறுகதை   பேசாலைதாஸ்

ஆவணித்திங்கள் பதினாலாம் திகதி இரவு பத்து மணி,மடுக் கோவி லைச் சுற்றி எங்குமே மின்சாரகுமிழி கள் ஒளி எச்சில்களை துப்பி கொண்டிருக்க, போதாக்குறைக்கு நிறை பெளர்னமி, முழுமதி வானில் குளிர்நிலவை பரப்ப, மருதமடு அன்னையின் அலங்கார தேர், வெள்ளிக்கொன்றை குடையோடு நகர, அன்னையவள் அருள் முகம், முழுமதியை ஏளனம் செய்வது போல, அருள்பாலித்துகொண்டிருந்தது. நாளை விடிந்தால் மருத மடு அன்னை யின் திருநாள், வழமையாக திருநாளுக்கு முன் இரவு, வேஸ்பர் என்று இஸ்பெயின் மொழியில் அழைக்கப்படும், திருத்தேர் பவணி இடம் பெறும், இது கத்தோலிக்க பாரமரியத்தின் உலகளாவிய ஓர் தேர் உற்ச்சவம். 

நானும் அன்னையின் அருள்வேண்டி, மடுத்திருப்பதிக்கு பயணம் செய்து, அந்த இரவில் இரவுத்தேர்பவணியில் கலந்து கொள்கின்றேன், அன்னைய வளிடம் சிறப்பாக இரந்து மன்றாட எனக்கு எதுவுமே இல்லை, அன்னையவ ளுக்கு   நன்றி சொல்வதைவிட வேறு என்னதான் இருக்கு எனக்கு, மன்னார் மருதமடுவில் வீற்றிருக்கும் அன்னையவள் என்னை நிறைவாகவே ஆசீர்வ தித்துள்ளாள், குறையேதும் எனக்கில்லை, மரியன்னையே என்று கண்கல ங்கி பாடவேண்டும் போல இருந்தது, ஏனோ என் மனம் பாடுகின்றது, என்னையறியாமல் கண்ணத்தில் கண்ணிர்த்துளி உருண்டு ஓடுகின்றது!

என்னதான் நான்,நிறைவு பெற்றிருந்தாளும், அன்னையவளிடம் இன்னும் ஒரு உதவி கேட்டுவிடவேண்டும் போல இருந்தது,  என் அக்கா மகள் இளம் வயதில், விபத்தொன்றில் கணவனை பறிகொடுத்துவிட்டு, இராணுவ கெடு பிடிக்கு பயந்து, தன்மூன்று பிள்ளைகளையும் தவிக்கவிட்டு வெளி நாடு வர வேண்டிய ஓர் இக்கட்டான சூழ்நிலை, பிள்ளைகளை பிரிந்து வந்து, பனிரண்டு வருடங்களாகிவிட்டது, அந்தபிள்ளைகள் தாயோடு இணையவேண்டும்,  அதற்கு தாயாம் மருதமடு அன்னை அருள்பாலிக்க வேண்டும் என என் மனம் வேண்டிக்கொன்டே இருந்தது, அந்த இரவு வேளையில், வெண்குடைத்தேரில் பவணிவரும் அன்னை முகத்தை பார்க் கின்றேன். நான் அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன்!

நான் பார்த்தது சரசுவின் முகத்தை, அன்னைமுகவடிவில், சரசுவின் முகமா, என்னால் நம்பவே முடியவில்லை. கண்களை கசக்கிக்கொண்டு மீண்டும் உற்று நோக்குகின்றேன். அதே சரசுவின் முகம் தான்! அந்த சரசு வைப்பற்றி நான் கொஞ்சம் உங்களுக்கு சொல்லவேண்டும். சரசு அவளை ப்பார்த்துவிட்டாளே போதும், நெஞ்சில் ஆசை தீயாக உரசிக்கொள்ளும், அவள் மீது என் ஊர்பசங்களுகெல்லாம் ஒரு கிறக்கம் தான், எனக்கும் கூடத்தான்! ஆனால் அவளை கல்யாணம் செய்துகொள்ள யாருமே துணி யவில்லை. 

அதற்கு காரனம் அவள் அம்மாசியின் மகள். அந்த காலத்தில், இப்போது இருக்கின்ற மாதிரி, குழிக்கழிவறைகள் இல்லை, வீட்டுக்கு வீடு  வாளிக் கழிவறைகள்தான். அதிகாலையில் இந்த அம்மாசிதான் வீடு வீடாக சென்று வாளிகளுக்குள் நிரம்பி வழியும் மலத்தை, தான் கொண்டுவரும் வாளிக்குள் திணித்துக்கொள்வான். வீடு வீடாக சென்று மலம் நீக்கும், இந்த அம்மாசி, ஒரு நாள் வராவிட்டால் போதும், ஊரவருக்கெல்லாம் மலச் சிக்கல் வேதனை வந்துவிடும். அம்மாசி பஞ்சம் பிழைக்க தமிழகத்தில் இருந்துவந்த ஒரு தலித்தமிழன். அவனை ஒரு தமிழனாக, ஏன் ஒரு மனித னாகக்கூட ஈழத்தமிழர் நினைத்தது இல்லை, இதிலே சரசுவின் வாழ்க்கை பற்றி சொல்லவே தேவை இல்லை. அம்மாசி தீண்டத்தகாதவன் ஆனல் அவன் மகள் சரசுவும் அவள் தேகமும் தீண்டத்தகாதவை அல்ல, காம சுகம் அளிக்கும் தேன் தடாகம் அவள்!

சரசுவை உரசிப்பார்க்காத ஊரவனே கிடையாது, எனக்கும் அவள் மீது சின்ன ஆசைதான்! அம்மாசியின் மனைவி முத்தம்மா வீட்டுக்கு, வீடு கூலி வேலை செய்பவள், என் வீட்டுக்கு அப்படித்தான் முத்தம்மா வந்து போவாள்,கூடவே சரசுவை கூட்டிவருவாள், சரசுவுக்கு அப்போது பனிரெ ண்டு வயசு இருக்கும், சரசு கறுப்பாக இருந்தாலும், வித்தியாசமான அழகு, மெட்டவிழத்துடிக்கும் மலர் போல, திமிறப்பார்க்கும் சின்ன மார்புகள், வகிடெடுத்த நெற்றி, அதிலே தள்ளாடும் சுருள் மயிர்கள், என்னவோ எனக்கு அவள் மீது ஒரு மயக்கம். அப்போது எனக்கு பதினெட்டு வயது இருக்கும், என் காதாலை வெளிக்காட்டவோ, எனது சமூகத்தை எதிர் க்கவோ எனக்கு திரணி இல்லாத சமயம். சரசுவின் மீது கொண்ட மோகம் கலைந்துபோன மேகமாகவே போய்விட்டது.

காலஓட்டத்தில் கரைகடந்து நானும் கனடா வந்தேன். என்னிடம் சொல்லா மலே என் வயதும் நாற்பதை தொட்டது. இமிகிரேசன், விசா நடவடிக்கை இப்படியாக காலமும் கரைந்தது, வயதும் கூடி, தலையில் மயிரும் நழுவி,,, கடைசியில் அம்மாவின் நச்சரிப்பு தாங்கமுடியாமல், கனடா கனவில், வாழ்ந்த ஒரு செல்வந்தனின் கடைசி மகள், இருபத்தி நான்கு வயது வசந்தாவை கல்யானம் செய்துகொள். எனச்சொல்லி, ஏஜன்சிக்கு காசு கொடுத்து கனடா அனுப்பிவைத்தனர். பொருந்தாத வாழ்க்கை, வந்தவள் இந்த வழுக்கை தலையைகண்டு, தன் வாழ்க்கை பயணத்தை மாற்றிக் கொண்டாள், புலம்பெயர் தமிழர் வாழ்வில் இது எல்லாம் சகஜமாகிப் போன ஓர் விடயம்.

இப்போது எனக்கு ஐம்பைத்தைந்து வயது, கையில் காசு இருக்கு, ஆனால் என் மனசுக்கு ஏற்ற ஒருத்தி இல்லையே,, இந்த நிலையில் தான் எனக்கு சரசுவின் ஞாபகம் தொற்றிக்கொண்டது. சரசுவின் நிலை முன்பு மாதிரி இல்லை, அவள் ஊருக்குள் பெரும் புள்ளி, காசு பணம் என எல்லாம் அவளி டம் இருந்தது, அரசியல்வாதிகள், பெரும் செல்வந்தர்கள் இப்போது அவளு க்கு வாடிக்கையாளர்கள். ஒரு முறை சரசுவை உரசிப்பார்க்க ஒரு இலட்சம் ரூபாவாம், அந்த அளவுக்கு ஊரவனிடம் வசதி இல்லை, அதனால் வெளியே இருந்து வருபவர்களுக்கு மட்டும் தான், சரசு விருந்து வைப்பதுண்டாம், இது ஊரவரின் நிறைவேறா ஏக்கம்.

எப்படியோ சரசுவை சந்திக்கவேண்டும்  என என் மனம் தத்தளித்துக் கொண்டிருந்தது. அவளுக்காக கனடாவில் இருந்து கையோடு கொண்டு வந்த அந்த ஜஸ்மின் வாசனை குப்பியை அழகான பரிசு பொட்டலமாக தயார் செய்து கொண்டு சரசுவின் வீடு நோக்கிப்போய்க்கொண்டிருந் தேன். அப்போது தான் அந்த சந்தர்ப்பம் நடந்தது, சரசுவோடு எப்படி எப்படி யெல்லாம் இன்பமாக இருக்காலம் என்று எண்ணியவண்ணம் நடந்து கொண்டிருந்தபோதுதான், வாசிகசாலை ஒழுங்கை வளவில் இருந்த யாகப்பரின் வீட்டுக்குள் இருந்து அந்த ஒப்பாரி சத்தமும் அழுகை ஓசை யும் கேட்டது, நான் உடனே அங்கே ஓடுகின்றேன், யாகப்பருக்கு இதயவலி, மனசன் பேச்சு மூச்சற்று வலியில் துடித்துக்கொண்டிருந்தார். உடனே  ஆட்டோவை வரவழைத்து, யாகப்பரை வைத்திசாலைக்கு எடுத்துச் சென்றேன். யாகப்பரை பரிசோதித்த டாக்டர், நல்ல காலம், இவரை இங்கே கொண்டு வந்தீர்கள், இவருக்கு உடனடியாக  இதய அறுவை செய்ய வேண்டும் இல்லையென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று சொல்லிவிட்டார்.

யாகப்பர் பாவம் ஒரு விடுவலை தொழிலாளி, அவரை நம்பி ஐந்து பெண் பிள்ளைகள், என்னசெய்வதென்றே எனக்கு புரியவில்லை, "பரவாயில்லை டாக்டர், நீங்கள் ஆபரேசனுக்கு தாயர் செய்யுங்கள்", என சொல்லிவிட்டு, சரசுவுக்காக வைத்திருந்த பணத்தை கொடுத்துவிட்டேன், சரசுவின் மீது எனகிருந்த ஆசை அந்த நாள் மறைந்து போனது, ஆனாலும் சரசுவின் எண்ணம் என்னை சுற்றி சுற்றியே வந்தது. இரண்டு நாள் கழிந்திருக்கும், சரசுவை நான் எதேச்சையாக சந்தித்தேன், " என்ன தாஸ், எப்போ கனடா வில் இருந்து வந்தாய், என் நினைப்புக்கூட உனக்கு வரவில்லையே" என செல்லமாக கடிந்து கொண்டாள். "சரசு உனக்காக என் மனம் துடித்த துடி ப்பு அதை எப்படி சொல்வது எனத்தெரியாமல் நான் தவித்த தவிப்பு உனக்கென்ன தெரியும்" என என் மனம் எனக்குள்ளெ சொல்லிகொண்டது.

"என்ன தேவா ஏதோ நினைப்பில் ஆழ்ந்துவிட்டாய்!" என சரசு என் கையை பிடித்து உலுப்பிய போதுதான் நான் சட்டென்று சுதாகரித்துக்கொண்டேன். நான் சரசை சந்திக்க வந்தவிடயம், யாகப்பர் வீட்டில் நடந்தவை எல்லாவற் றையும், ஒன்றும்விடாமல் ஒப்புவித்தேன். "என்ன தேவா, நான் உடலை விற்கும் ஒரு பாலியல் தொழிலாளி தான், ஆனாலும் என் தேவாவை நான் அறிவேன். உன் சின்ன வயசு காதலையும் நான் அறிவேன், இந்த சாதி சமூக கட்டமைப்பை தகர்க்க புலிகளால் கூட முடியாது போன போது, நீ எல்லாம் எம்மாத்திரம். என் தலைவிதி, நான் இந்தியாவில் இருந்து வந்த கள்ளத்தோனி, கப்பலுகெல்லாம் ஆசைப்படலாமா" சரசு சொன்னபோது, நான் ஆடிப்போனேன். " இப்ப நீ என் கூட வீட்டுக்கு வருகின்றாய். என் வீட்டில் தான் தங்கவேண்டும், அடம்பிடித்தாள் சரசு!

சரசுவின் வீட்டு வாழ்க்கை எனக்கு ஆனந்த பூங்காவாக மனசுக்கு பிடித்துப் போனது, இதைவிட ஆச்சரியம், சரசுவின் நடவடிக்கை தான், என்னை அசத்தியது, நான் செக்சைப்பற்றி சொல்லவில்லை, அவளது மனசு, இரக்க சுபாவம் எல்லாமே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சரசுவை தேடி, ஏழை எளிய சனங்கள் வந்துபோவார்கள், கடனாக உதவியாக எல்லோருக்கும் கொடுத்து உதவுவாள். ஒரு நாள், நான் அவளிடம் கேட்டேன்." ஏன் சரசு இப்படி உதவிகேட்டு வருபவர்க்கெல்லாம் இல்லை என சொல்லாமல், கொடுக்கின்றாயே, உனக்கென நீ எதையும் சேர்த்துவைக்கவில்லையா" அப்போது சரசு சொன்னதுதான் எனக்கு இன்னமும் ஆச்சரியமாக இருந்தது." தேவா நாய் விற்ற காசு குரைக்காது, நான் என் உடலை விற்று பிழைக்கும், இந்த பணத்தாலே, என் சமூகத்தை சார்ந்தவர்களை என்னால் உயர்த்திவிட முடியாது. நாங்கள் என்றென்றும் தாழ்ந்த சாதிதான், கள்ளத் தோனி இந்தியர் தான். உடலை விற்று நான் சேர்க்கும் இந்தப்பணம், புண்ணியம் சேர்க்கட்டும். எனக்குத்தான் இனி தேவா இருக்கின்றானே" எனச்சொல்லி ஒரு குறும்புப்பார்வை பார்த்தாள் சரசு!

சரசு சொன்ன அந்த வார்த்தையும், அவள் வீசிய அந்த பார்வையும், எனக்கு கிளர்ச்சியை அளிக்கவில்லை மாறாக என் சிந்தனைகளை தூண்டியது. முள்ளிவாய்க்காலில் நாங்கள் செத்து மடிந்தோம், இந்தியா போரை நடத்தியது, தமிழகம் வேடிக்கை பார்த்தது என கொக்கரிக்கும் ஈழத்தமிழ்த் தேசியம், இந்த தமிழகத்து இந்திய தமிழர்களை அடிமைகள் போல நடத்தி, பொருளாதார, காமச்சுரண்டல்களுக்கு அவர்களை உட்படு த்தி, கள்ளத்தோணிகள் என்று சொல்லி, அரசாங்கத்துக்கு காட்டிக்கொடு த்து, அவர்களை நாடு கடத்திய கொடுமைகள் என் மனதில் அலை அலை யாக வந்து மோதியது. சரசு எனக்கு இப்போது அருள்பாலிக்கும் அன்னை யாக காட்சிதருகின்றாள்,,,,,,, மடு அன்னை முகத்தை மீண்டும் மீண்டும் பார்க்கின்றேன். அன்னை முகமும், சரசு முகமும் வந்து வந்து போகின்றது! சரசு இப்போது என் உள்ளத்தில் முழுவதுமாக குடி புகுந்தாள்!  ( யாவும் கற்பனையே)   பேசாலைதாஸ்.

பிற்குறிப்பு: 27 ஆகஸ்ட் ஞாயிறு. நோர்வே, பேர்கன் நகரில் அன்னையின் ஆரோகன திருவிழாவில் அன்னையின் திருச்சுரூபபவணியில் அன்னை முகத்தை பார்த்தவேளையில், என் சிந்தனையில் உதித்த கரு, கதையானது!



Monday, 14 August 2023

பறவை எச்சம்

 குஞ்சுப் பறவை ஒன்று சோகமாய் இருந்தது. அதன் தாய்ப் பறவை, ‘‘ஏன் சோகமாய் இருக்கிறாய்’’ என்று கேட்டட் து. குஞ்சுப் பறவை, ‘‘எனக்கு பிறரிடம் எதை யும் கேட்பதட் ற்கே கூச்சச் மாக இருக்கிறது’’ என்றது. ‘‘தேவையில்லாத வெட்கட் ம் உன் வாழ்க்கை யை சிறப்பில்லாததாக ஆக்கிவிடும்’ என்று தாய் எச்சச் ரித்தது. குஞ்சு அதை க் கேட்டுட் , ‘‘சும்மா பொன்மொழியாக சொல்வது எளிது. செய்து காட்டுட் வது கடினம்’’ என்றது. இதை க் கேட்டட் தாய்ப்பறவை, தன் குஞ்சுப் பறவையை அழைத்துத் க் கொண்டு பறந்தது. ஏரிக்கரையோரம் சென்று பறந்தபடி, நீரின் அருகே எச்சச் மிட்டட் து. ஏரியில் ததும்பிய சிற்றலை, எச்சச் த்தை நீரில் கரைத்தது. தாய்ப்பறவை ஏரியை அழைத்துத் , ‘‘எனக்கு என் எச்சச் ம் வேண்டும். கொடுத்துத் விடு’’ என்றது. ‘‘அது என்னுள் கரைந்து போய்விட்டட் து. அதை த் திருப்பிக் கொடுக்க முடியாது. அதற்கு பதிலாக ஏரிக்குள் இருக்கும் மீன் ஒன்றைத் தருகிறேன்’’ என்றது ஏரி. தாய்ப்பறவை அந்த மீனை எடுத்துத் க்கொ க் ண்டு பறந்தது. ஒரு வீட்டிட் ன் முன்னால் வைத்துத் விட்டுட் கொஞ்ச நேரம் மறைந்திருந்தது. வீட்டிட் ல் இருந்தவர்கர் ள் மீனை எடுத்துத் ச் சென்ற சிறிது நேரம் கழித்துத் கதவைத் தட்டிட் , ‘‘என் மீன் எங்கே? எனக்கு அது வேண்டும்’’ என்றது. ‘‘அதை க் குழம்பு வைத்துத் சாப்பிட்டுட் விட்டோ ட் ம். அதற்கு பதிலாக நாங்களே தயாரித்த தரமான கயிறு தருகிறோம்’’ என்று கொடுத்தார்கர் ள். தாயும் குஞ்சும் கயிறை எடுத்துத் க் கொண்டு பறந்தன. வழியில் ஒருவர் கிணற்றருகே கவலையுடன் நின்று கொண்டிருந்ததை ப் பார்த்ர் த்ன. அவருடைய கிணற்றில் கயிறு இற்றுப் போய்விட்டட் தாம். ‘‘கயிறில்லாமல் நீர் இறைக்க முடியாது. நீர் இல்லாமல் போனால் என் வீட்டிட் ல் நடக்க இருக்கும் விழா நடக்காது’’ என்று புலம்பினார்.ர் ‘‘நான் கயிறைக் கொடுத்தால் நீங்கள் என்ன தருவீர்கர் ள்?’’ என்று தாய் கேட்டட் து. ‘‘என்னிடம் இருக்கும் அரிய வகை விதை நெல் ஒரு படி தருகிறேன். அது அழிந்து விட்டட் தாக மக்கள் நினைத்துத் க் கொண்டிருக்கிறார்கர் ள். ஆனால் அது அழியவில்லை. என்னிடம் விதை யாக கொஞ்சம் இருக்கிறது’’ என்றார் அவர்.ர் தாயும் குஞ்சும் விதை நெல்லை சுமந்துகொண்டு வயலுக்கு வந்தன. அங்கே அந்நாட்டிட் ன் ராஜா விவசாயத்தை கண்காணித்துத் க் கொண்டிருந்தார். ர் அவருக்கு விவசாயத்தில் அதிக ஆர்வர் ம். அவர் அருகே விதை நெல்லைப் போட்டுட் விட்டுட் தாயும் குஞ்சும் மறைந்தன. திரும்பி வந்தால் நெல் இல்லை. ராஜாவிடம் தாய் கேட்டட் து, ‘‘என் அரிய வகை விதை நெல் எங்கே?’’ ராஜா திடுக்கிட்டுட் , ‘‘அந்த அரிய வகை விதை நெல் யாருடையது என தெரியாது. நான் அதை ப் பயிரிடச் சொல்லிவிட்டேட் ன். அது உன்னுடையதா? அதற்கு பதிலாக நீ என்ன கேட்டாட் லும் செய்கிறேன்’’ என்றார்.ர் ராஜாவின் அரியணையில் ஒரு மணி நேரம் அமர்ந்ர் ந்து அரசாட்சிட் புரியும் உரிமையை தாய்ப்பறவை கேட்டட் து. ராஜாவும் ஒரு மணி நேரம் அதை ஆட்சிட் செய்ய வைத்தார்.ர் அதிகாரத்தை ப் பெற்றதும் தாய்ப்பறவை, ‘‘எங்கள் பறவை இனங்களுக்கு தேவையான உணவை இனிமேல் ராஜாவே கொடுக்க வேண்டும்’’ என்றொரு ராஜ கட்டட் ளை பிறப்பித்தது. இதை யெல்லாம் பார்த்ர் துத் க் கொண்டிருந்த குஞ்சுப் பறவை அசந்துவிட்டட் து. ஒன்றுக்குமே உதவாத எச்சச் த்தில் ஆரம்பித்துத் நாட்டை ட் ஆளும் அதிகாரத்தை ப் கை ப்பற்றி, தங்களுக்கான உணவுக்கும் வழி செய்த அம்மாவின் செயல்திறன் பற்றி பெருமைப்பட்டுட் புகழ்ந்து சொன்னது. அதற்கு தாய்ப்பறவை, ‘‘நமக்கு இந்த உணவு வேண்டாம  அதற்கு தாய்ப்பறவை, ‘‘நமக்கு இந்த உணவு வேண்டாம். ராஜாவிடம் சொல்லிவிடுவேன். நான் இதை ச் செய்து காட்டிட் யது உனக்கு புரிய வைக்கத்தான

Monday, 10 July 2023

The wise donkey

The Wise Donkey


day a farmer’s donkey fell into a well. The animal cried loudly for hours, while the farmer tried to find something to do to get him out.

Finally, the farmer decided that the donkey was old and the well was already dry and needed to be covered anyway; that it really wasn't worth pulling the donkey out of the well..
He invited all his neighbors to come help him. They each grabbed a shovel and began to throw dirt into the well.
The donkey realized what was happening and cried horribly loud. Then, to everyone's surprise, he quieted down after a few shovelfuls of dirt.
The farmer finally looked down into the well and was amazed at what he saw... with each shovelful of dirt, the donkey was doing something incredible: It was shaking off the dirt and stepping on top of the dirt.
Very soon everyone saw surprised how the donkey reached the mouth of the well, went over the edge and trotted out...
Life is going to throw dirt at you, all kinds of dirt... the trick to getting out of the hole is to shake it off and use it to step up. Each of our problems is a step up. We can get out of the deepest holes if we don't give up...
Use the land they throw you to get ahead!!!
Remember the 5 rules to be happy:
1. Free your heart from hate.
2. Free your Mind of distractions.
3. Simplify your life.
4. Give more and expect less.
5. Love more and... shake the dirt, because in this life you have to be a solution, not the problem!
Thanks for reading

Tuesday, 31 January 2023

 எங்கே நீயோ நானும் அங்கே உன்னொடு,,,,,பேசாலைதாஸ்


ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள்.ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான்.

அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.

அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான்.பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான்.அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான்.ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை.

 ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள்.ஒருநாள்...

அவன் மரணப் படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான்.

எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான். தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான்.அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள். அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான்.அவளோ நீயோ சாகப்போகிறாய்.

நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்று விட்டாள். பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான்.அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.

நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது.

 அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன்.

உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள். ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த 

வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.

உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.

1. நான்காவது மனைவி நமது உடம்பு.நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை.

நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.

2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான்.

நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.

3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள்.அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள்.

அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.

4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா.நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப் படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.


உடனே சொல்லுங்கள்

 உடனே சொல்லுங்கள்  பேசாலைதாஸ் 

ஓர் இளைஞன் செக்ஸ் வைத்தியரிடம் போனான்.

"ஐயா, உடலுறவு கொள்ளும் போது என்னால் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. விந்து விரைவாக வெளியேறி விடுகிறது. அப்படி வெளியேறாமல் இருக்க, அதிக நேரம் தாக்குப் பிடித்து என் காதலிக்கு அதிக இன்பம் கொடுக்க என்ன வழி?'

"விரைவாக விந்து வெளியேறும் பிரச்சினை இன்று பல இளைஞர்களுக்கு இருக்கிறது. உடலுறவின் மேல் உள்ள அளவில்லாத ஆர்வமும், உறவு கொள்ளும் போது ஏற்படும் உணர்ச்சிப் பெருக்கமும் தான் இதற்குக் காரணம். இந்த குறையை நிவர்த்தி செய்ய நல்ல வழி ஒன்று இருக்கிறது.”

“உடனே சொல்லுங்கள், டாக்டர்.”

"பார்த்தீர்களா, இந்த அவசரம்தானே கூடாது என்கிறேன்.

இதே அவசரத்தை செக்சிலும் காட்டுகிறீர்கள். அதனால் தான் விந்து உடனே வெளியேறிவிடுகிறது.மீண்டும் சொல்கிறேன் அவசரம் கூடவே கூடாது.

இப்பொழுது நான் சொல்வதை கவனியுங்கள்.

"அடுத்த முறை ஒரு பெண்ணுடன் உறவு கொள்ளும் போது பெரிய நட்சத்திர உணவு விடுதியில் உணவு அருந்துவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

முதலில் தக்காளி சூப்பில் இருந்து ஆரம்பித்துசாக்லேட், ஐஸ்க்ரீம், முடிக்கும்போது குடிக்கும் காபி வரை, எதையும் ருசித்துச் சாப்பிடுங்கள். ஆற அமர அனுபவித்து ரசியுங்கள். 

"முதலில் தக்காளி சூப் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்குரிய கிண்ணத்தில் அது ஆவிபறக்கச் சூடாக இருக்கிறது. அதற்குத் தேவையான மிளகு பொடியையும் உப்பையும் போட்டு,

பின் மெதுவாக, மிக மெதுவாக ஒரு ஸ்பூன் சூப்பை அருந்துகிறீர்கள். அப்...பா! என்ன சுகம்!

அதன் பின் மதுக் கிண்ணத்தில் ஒயின் (wine) வருகிறது. பளபளக்கும் அந்த கிண்ணத்தை முதலில் நன்றாக உற்றுப் பாருங்கள்.

அதன் பின் அந்த மதுவின் வாசனையை நுகருங்கள். பின் கொஞ்சம் போல் அதைக் குடியுங்கள். அதன் இனிய சுவை தொண்டைக்குழி வழியாக இறங்குவதை ரசித்துக் குடியுங்கள்.

'அதன் பின் உணவு வகைகள் வருகின்றன. சூடான சாம்பார் இட்லி நெய்யில் மிதந்து கொண்டு வருகிறது. அதில் ஒரு விள்ளலை எடுத்து மல்லிச் சட்னியில் தோய்ந்துச் சாப்பிடுகிறீர்கள்.

அதன்பின் பிரியாணி வருகிறது. அதனை கொஞ்சம் கொஞ்சமாக அதன் சுவையை அனுபவித்துச் சாப்பிடுகிறீர்கள்.

கடைசியாக பழவகைகளுடன் கூடிய ஐஸ் க்ரீம் வருகிறது. அதனை மென்மையாக ருசித்து, ரசித்துச் சாப்பிடுகிறீர்கள்.

அதன் பின் சூடான ஃபில்டர் காபி வருகிறது. அதனை கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து அருந்துகிறீர்கள்.

இப்படியாக உடலுறவின் போது கற்பனையில் ஒரு விருந்து உண்பது போல் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் பிரச்சினை ஓடிவிடும்.

அதன் பின் உங்களுக்கு உடலுறவில் உச்சத்தை எய்துவது எளிதாக இருக்கும். உங்களோடு இருக்கும் பெண்ணுக்குள் இன்பம் கொடுப்பீர்கள்.

புரிகிறதா?"

புரிகிறது "மிக்க நன்றி. இதை இன்றே செயல் படுத்துகிறேன்." என்று சொன்ன இளைஞன் மருத்துவர் கேட்ட ஃபீசைக் கொடுத்துவிட்டுத் தன் காதலியைத் தேடிக் கொண்டு போனான்.

அன்று இரவு தனது காதலியோடு உறவு கொள்ளும் போது டாக்டர் சொன்னதை ஞாபகப்படுத்திப் பார்த்தான். விலாவாரியாக வகைவைகயாகச் சாப்பிடும் வரை தன்னால் விந்து வெளியேறாமல் தாக்குப்பிடிக்க முடியும் என்று தோன்றவில்லை.

அதே சமயம் டாக்டர் சொன்னதைச் செய்து பார்த்துவிட வேண்டும் என்று நினைத்தான்.

டாக்டர் சொன்னது போல் ஒரு நட்சத்திர ஹோட்டலில் இருப்பதாக நினைத்துக் கொண்டான். சர்வரைக் கூப்பிட்டான்.

இந்தாப்பா, என்னால் அதிக நேரம் தாக்கு பிடிக்க முடியாது. சீக்கிரம் எனக்கு ஒரு தக்காளி சூப்பும், ஒரு சூடான காபியும் மட்டும் கொண்டு வா என்றான்.

அவசரம் இருக்கும் வரை எதுவும் சாத்தியமில்லை.

தவறான பாதை

 தவறான பாதை  பேசாலைதாஸ் 


மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான் - "என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டுவிட்டார் முறைதவறிப் பிறந்த குழந்தை என்றார்கள் இது என் தவறா?

நான் சத்ரியன் அல்ல என்று கூறி துரோணாச்சாரியார் எனக்கு கல்வியைக் கற்றுத்தரவில்லை இது என் தவறா?

பரசுராமர் எனக்கு கற்றுக் கொடுத்தார், ஆனால் சத்ரியன் எனக்கூறி நான் படித்த எல்லாவற்றையும் மறக்க என்னை சாபம் கொடுத்தார் இது என் தவறா?

ஒரு பசு தற்செயலாக என் அம்பு மூலம் தாக்கப்பட்டது அதன் உரிமையாளர் என்னுடைய தவறுக்காக என்னை சபித்தார்.

திரௌபதியின் சுயம்வரத்திலே நான் தேரோட்டியின் மகன் என்பதற்காக நான் அவமானப்படுத்தப்பட்டேன்

குந்தி கூட இறுதியாக தன் மற்ற மகன்களை காப்பாற்ற மட்டுமே என்னைத் தேடி வந்தார்.இப்படி சுற்றி இருப்பவர்கள் அனைவராலும் வஞ்சிக்கப்பட்ட போது துரியோதனனின் அன்பு மூலமாகவே எனக்கு எல்லாம் கிடைத்தது ஆகையால் அவன் பக்கம் நான் நிற்பது எப்படி தவறாகும் எனக் கேட்டான்

அதற்கு கிருஷ்ணன் பதிலாக "கர்ணா நீயாவது பரவாயில்லை ஆனால், நான் ஒரு சிறையில் பிறந்தேன்.என் பிறப்புக்கு முன்பே மரணம் காத்திருந்தது.நான் பிறந்த இரவு அன்றே என் பெற்றோரிடமிருந்து நான் பிரிக்கப்பட்டேன்.

நீ சிறுவயதிலிருந்து , வாள், இரதங்கள், குதிரைகள், வில், அம்புகள் ஆகியவற்றின் இரைச்சலை நீங்கள் கேள்விப்பட்டிருப்பாய் ஆனால் . நானோ மாடு கொட்டில் சாணம் வைக்கோல் இவைகளுக்கிடையே வளர்ந்தேன் நடக்க ஆரம்பிக்கும் முன்னே என்னைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன

நல்ல கல்வி இல்லை இராணுவ பயிற்சி இல்லை ஆனால் எல்லோரும் நான்தான் நடக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் என்கிறார்கள்.

நீங்கள் ஆசிரியர்களால் மதிக்கப்படுகிறபோது நான் எந்தக் கல்வியையும் பெறவில்லை. நான் 16 வயதில் தான் ரிஷி சாண்திபனியின் குருகுலத்தில் சேர்ந்தேன்!

நீங்கள் விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். ஆனால் நானோ நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் என்னை நேசித்த பெண்களை மேலும் கொடியவர்களிடம் இருந்து நான் காப்பாற்றிய பெண்களை திருமணம் செய்துகொண்டேன்.

ஜராசந்த்திடமிருந்து என் மக்களைக் காப்பாற்றுவதற்காக, யமுனா நதிக்கரையிலிருந்து கடலிலிருந்து தூரத்திலிருந்து என்னுடைய முழு சமூகத்தையும் நகர்த்த வேண்டியிருந்தது. நான் ஓடிப்போன ஒரு கோழை!

துரியோதனன் போரில் வெற்றி பெற்றால், உனக்கு நிறைய பொருள் நாடு சேனை கௌரவம் கிடைக்கும். ஆனால் பஞ்சபாண்டவர் உடன் சேர்ந்து யுத்தம் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்?

கண்ணன்தான் இந்த போருக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே மிஞ்சும்

கர்ணா ஒன்றை நினைவில் கொள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன.

வாழ்க்கை எப்போதுமே இலகுவாகவும் எளிதாகவும் இருப்பதில்லை.ஆனால் மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானதாகும் . எத்தனை முறை நாம் ஏமாற்றப்பட்டோம், எத்தனை முறை நாம் அவமானப்படுதப்பட்டோம், எத்தனை முறை வீழ்ச்சி அடைகிறோம் என்பது முக்கியமானத அல்லஅந்த நேரத்தில் நாம் எப்படி மீண்டு எழுந்தோம் என்பதே முக்கியமானது.

நம் வாழ்க்கையில் நடக்கும் தவறுகள் நம்மை தவறான பாதையில். போவதற்காக உரிமையைக் கொடுக்கவில்லை

எப்போதும் நினைவில் கொள் வாழ்க்கை எனபது ஒரு பாதை சில நேரங்களில் கரடுமுரடாக இருக்கலாம் அதைக் கடப்பது நம் காலணிகளால் அல்ல நாம் எடுத்து வைக்கும் அடிகள் மூலமே.

Monday, 30 January 2023

நாவல்பழம்

நாவல்பழம்   பேசாலைதாஸ்


அன்பர்களே நாம் இறந்த காலத்தை ப்பற்றியோ, எதிர்காலத்தைப்பற் றியோ கவலை கொள்ளாமல் நிகழ் காலத்தில் கவனம் செலுத்த வேன் டும், அது தான் நிஜம், நிஜத்தில் வாழப்பழகுவோம்.  முதிய ஜென் குரு ஒருவர் மரணப் படுக்கையில் இருந்தார். "இன்று மாலைக்குள் இறந்துவிடுவேன்" என்று தன் சீடர்களிடம் தெரிவித்துவிட்டார். இதைக் கேள்விப்பட்ட அவர் நண்பர்கள் பலரும்இ சிஷ்யர்களும் ஆசிரமத்தை வந்தடைந்தனர்.

மூத்த சீடர் ஒருவர் திடீரென கடைவீதிக்குப் புறப்பட்டார். "ஏய்... என்ன மடத்தனம் பண்ணுகிறாய்.. குரு மரணப்படுக்கையில் கிடக்கும்போது அப்படி என்ன அவசரமாக வாங்க வேண்டியிருக்கு?” என்றனர் மற்றவர்கள்.

மூத்த சீடர். "குருநாதருக்கு நாவல்பழம் என்றால் அத்தனை பிரியம். அதை வாங்கத்தான் போகிறேன்!" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

எல்லோரும் கவலையோடிருந் தனர். குரு கண்களைத் திறப்பதும் யாரையோ தேடுவதும் பின் மூடிக் கொள்வதுமாக இருந்தார்.

மூத்த சீடர் வந்ததும்இ "வந்து விட்டாயா...

எங்கே நாவல்பழம்?" என்றார்.

அவர் கையில் நாவல் பழத்தைக் கொடுத்ததும்இ சற்றும் நடுக்கமின்றி அதை வாங்கிக் கொண்டார்.

ஒரு சீடர் குருவிடம்இ “குருவே.. தள்ளாத வயதிலும் உங்கள் கைகளில் நடுக்கமில்லையே?” என்றார்.

குரு சிரித்தபடிஇ "என் கைகள் ஒருபோதும் நடுங்கியதில்லை. ஏனென்றால் எப்போதும் எதற்கும் நான் பயந்ததே இல்லை!" என்று சொல்லிவிட்டு நாவல் பழத்தை ருசித்து தின்னத் தொடங்கிவிட்டார்.

இன்னொரு சீடர் குருவிடம் பணிந்துஇ "ஐயாஇ தாங்கள் சீக்கிரமே இந்த உலகை விட்டுப் பிரியப் போகிறீர்கள். நாங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய தங்களின் இறுதிக் கருத்து என்ன?” என்று கேட்டார்.

குரு சிரித்தபடிஇ “இந்த நாவல்பழம் என்ன அருமையான சுவையுள்ளதாக இருக்கிறது" என்று சொல்லிவிட்டு இறுதி மூச்சை விட்டார்.

😊

அந்தந்தக் கணத்தில் வாழுங்கள். கடந்து போன நிமிடமும்இ வரப் போகும் நிமிடமும் நமக்கானதல்ல. இன்று இப்போது மட்டுமே நிஜம்!

Thursday, 19 January 2023

மெழுகுவத்தின் வெளிச்சம்

 மெழுகுவத்தின் வெளிச்சம் பேசாலைதாஸ் 


ஒரு ஊரில் ஒரு ஞானி இருந்தார். ரொம்ப பெரிய ஞானி. மிகவும் வயதாகி விட்டது .கடைசி காலத்தில் அவரிடம் சில பேர் வந்தார்கள்.

 உங்கள் குரு யார் ? என்று கேட்டார்கள்.

 அவர் நிமிர்ந்து பார்த்தார். எனக்கு ஆயிரக்கணக்கான குருமார்கள் உண்டு. அவர்கள் பெயர் எல்லாம் சொல்ல வேண்டுமென்றால் காலம் போதாது. ஆனால் முக்கியமான மூன்று பேரைப் பற்றி மட்டும் உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்.

 அந்த மூன்று பேரில் ஒருவன் திருடன்.

ஒரு சமயம் ஒரு பாலைவனம் வழியாக நான் போய்க் கொண்டிருந்தேன். அப்போது வழி தவறி போய் ஒரு கிராமத்துக்கு போய்விட்டேன். அது இருட்டும் நேரம். நடு ராத்திரி ஊரே உறங்கிக் கிடந்தது. அந்த நேரத்தில் ஒரு ஆள் மட்டும் வீட்டு சுவற்றில் ஏதோ செய்து கொண்டிருந்தான். அவன் உள்ளே நுழைய முயற்சி செய்து கொண்டிருந்தான். 

அவனிடம் போய் நான் இன்றைக்கு இங்கே எங்கே தங்க முடியும் என்று கேட்டேன்.

 அதற்கு அவன் இந்த இரவில் அது ரொம்ப சிரமம். ஒரு திருடனுடன் உங்களால் தங்க முடியும் என்றால் நீங்கள் என்னோடு தங்கலாம் என்றான்.

 நான் அவனுடன் ஒரு மாதம் தங்கி இருந்தேன். ஒவ்வொரு நாள் இரவும் இப்போது நான் என்னுடைய வேலைக்கு போகிறேன் நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு போவான்.

 அவன் திரும்பி வந்தவுடன் உனக்கு ஏதாவது கிடைத்ததா? என்று கேட்பேன். அதற்கு அவன் இன்று ஒன்றும் கிடைக்கவில்லை. நாளைக்கு மறுபடியும் முயற்சி செய்வேன் என்பான். ஒருபோதும் அவன் நம்பிக்கை இழந்ததே கிடையாது. எப்போதும் சந்தோஷமாகவே இருந்தான்.

 நானும் ரொம்ப காலமாக தியானம் பண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஆனால் என்ன செய்தேன் தெரியுமா? மனது வருத்தப்படும். நம்பிக்கை இழந்து விடுவேன். அப்போதெல்லாம் இந்த திருடனுடைய விடாமுயற்சி தான் ஞாபகத்துக்கு வரும்.

என்னுடைய இரண்டாவது குரு ஒரு நாய்.

ஒரு சமயம் எனக்கு ரொம்ப தாகமாக இருந்தது. ஒரு நதியை நோக்கி போய்க்கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாயும் வந்தது. அதற்கும் தாகம். ஓடி வந்து ஆற்றில் பார்த்தது. அதனுடைய நிழல் ஆற்றில் தெரிந்தது. அதை பார்த்து பயந்துவிட்டது. அதாவது தன் சொந்த உருவத்தையே கண்டு பயந்துவிட்டது. அதை பார்த்து குரைத்தது. திரும்பி ஓடியது. ஆனாலும் அதற்கு தாகம் அதிகமாக இருந்ததனால் அது மறுபடியும் திரும்பி வந்தது. இப்படி சில தடவைகள் பண்ணியது. இருந்தாலும் கடைசியில் தண்ணீரில் குதித்தது.

இப்படி குதித்த உடனே அதன் உருவமும் மறைந்து விட்டது. 

இதை பார்த்து நான் என்ன புரிந்து கொண்டேன் என்றால், எவ்வளவுதான் பயம் இருந்தாலும் கூட ஒருத்தன் தைரியமாக காரியத்தில் இறங்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன். இந்த போதனை எனக்கு அந்த நாயிடம் இருந்து கிடைத்தது.

 என்னுடைய மூன்றாவது குரு யார் என்றால் அது ஒரு சின்ன குழந்தை. நான் ஒரு சமயம் ஒரு நகரத்துக்கு போனேன். அங்கே ஒரு குழந்தை எரிகிற மெழுகுவர்த்தி ஒன்றை எடுத்துக் கொண்டு வந்தது.

 நான் அந்த குழந்தையை பார்த்து வேடிக்கையாக கேட்டேன். ஏன் பாப்பா இந்த மெழுகுவர்த்தியை நீயாவை கொளுத்தினாயா என்று

 ஆமாம் என்றது அந்த குழந்தை.

 சரி இந்த மெழுகுவர்த்தி முதல் எரியாமல் இருந்தது. இப்போது எரிகிறது. இந்த மெழுகுவர்த்திக்கு வெளிச்சம் எங்கே இருந்து வந்தது என்று காட்ட முடியுமா என்று கேட்டேன்.

 அதற்கு அந்த குழந்தை சிரித்தது. இந்த மெழுகுவர்த்தியை ஊதி அணைத்து விட்டது. அதன் பிறகு என்னை பார்த்து கேட்டது இப்போ இந்த மெழுகுவத்தின் வெளிச்சம் போனதை பார்த்தீர்கள் அது எங்கே போனது என்று சொல்ல முடியுமா என்று இந்த குழந்தை இப்படி கேட்டதும் என்னிடம் இருந்து ஆணவம் அழிந்தது.

 நான் படித்ததெல்லாம் அந்த வினாடியில் சுக்கு நூறாகி விட்டது. எனது முட்டாள்தனத்தை நான் உணர்ந்தேன் என்றார்  ஞானி. 

இதனால் நாம் இன்னாரிடமிருந்து இதைத்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை யாரிடமிருந்தும் எதையும் கற்றுக் கொள்ளலாம்.


மரணித்த பின் வரும் மனித நேயம்

 மரணித்த பின் வரும் மனித நேயம்  பேசாலைதாஸ் 


வீட்டு வாடகையை என்னால் கட்டமுடியவில்லை. எனது வாடகை வீட்டில் இருந்து உரிமையாளரால் நான் வெளியேற்றப்படவிருந்தேன். முகநூலில் உதவி கேட்டு பதிவிட்டிருந்தேன். கிடைத்ததெல்லாம் லைக்குகள் மாத்திரமே.

எனது  நட்புப் பட்டியலில் இருக்கும் 250 நண்பர்களுக்கு 30, 000 ரூபாய் கேட்டு தனிப்பட்ட செய்திகளை அனுப்பினேன்.பத்து பேர் மாத்திரம் பதிலளித்தார்கள். அதில் ஆறு பேர் உதவி செய்ய முடியாத நிலையில் இருப்பதாகக் கூறினார்கள். மீதி நான்கு பேரில் ஒருவர் மட்டுமே உதவி செய்தார்.ஏனையோர் எல்லோரும் சாக்குப் போக்குச் சொன்னார்கள். எனது தொலைபேசி அழைப்புகளுக்குக் கூட பதில் சொல்லவில்லை.

இறுதியில் நான் எனது வாடகை வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டேன்.தூங்குவதற்குக் கூட எனக்கு ஒரு இடம் இருக்கவில்லை.என்ன செய்வதென்று தெரியாமல் இருட்டில் நடந்து கொண்டிருந்த போது எனது பையை ஒரு திருடன் பிடுங்கிக் கொண்டு ஓடினான்.ஓடிய வேகத்தில் திருடன் காரில் அடிபட்டு இறந்து விட்டான்.

அடுத்த நாள்,

செய்தி வேகமாகப் பரவியது. திருடன் இறந்ததை நான் இறந்ததாக மக்கள் எண்ணிவிட்டார்கள். சுமார் 2500 பேர் எனது முக நூலில் பக்கத்தில் எனக்கு அனுதாபம் தெரிவித்து எழுதினார்கள். என்னை அவர்களுக்கு எப்படி அறிமுகமானது, நான் எவ்வளவு உன்னதமான பிறவி என்றெல்லாம் எழுதினார்கள்.

எனது ‘விசுவாசமான நண்பர்கள்’ என்ற பெயரில் ஒரு குழு அமைக்கப்பட்டது. சுமார் மூன்று லட்சம் பணம் சேர்த்தார்கள். எனது இறுதிச் சடங்கன்று 100 ஏழைகளுக்கு விருந்தளிப்பதாக அறிவித்தார்கள்.

என்னோடு வேலை செய்தவர்கள் எனது சவப்பெட்டிக்கும், வருகையாளர்களுக்கான கதிரைகளுக்கும், என்னைச் சுற்றும் ஆடைகளுக்கும் ஒரு லட்சம் பணம் சேர்த்தார்கள்.

30 000 பெறுமதியான சவப்பெட்டியில் வைத்து நான் புதைக்கப்படுவதாக திட்டமிடப்பட்டது. அந்தப் பணம்தான் நான் வாழத் தேவையாக இருந்த தொகை.

எனது உறவினர்கள் சந்தித்துக் கொண்டார்கள். அப்படிச் சந்திப்பது அபூர்வமாக இருந்தது. அதில் அவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒன்றரை லட்சம் பங்களித்தார்கள்.

எனது மரணச் சடங்களில் ஒவ்வொருவரும் பேச விரும்பினார்கள். என்னைத் தெரியாதவர்கள் எல்லாம் நான் எத்தனை சிறந்த மனிதன் என்று பேசினார்கள். எனக்கு உண்மையாகவே உதவி செய்த நண்பர்களுக்கு என்னைப் பற்றிப் பேச வாய்ப்புக் கிட்டவில்லை.எனது மரணச் சடங்கில் பங்குபற்றக் கிடைக்காதவர்கள் கூட நான் எவ்வளவு திறமை படைத்தவன் என்றெல்லாம் பேசி, எழுதினார்கள்.

நான் இன்னும் தூங்குவதற்கு இடம் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்.

திடீரென நான் அவர்கள் முன் தோன்றினால் என்னைப் பேய் என்று நினைத்து ஓடிவிடுவார்கள்.

தத்துவம் என்னவென்றால் ஒருவன் வாழும் போது அவனை நேசிப்பதைவிட அவன் மரணித்த பின்னர்தான் அவனை நேசிக்கிறோம்..!


மனம் முழுவதும் துன்ப மூட்டைகள்"

 மனம் முழுவதும் துன்ப மூட்டைகள்" பேசாலைதாஸ் 


மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை...! 

மனமது செம்மையானால்....

அரண்மனையை ஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான். அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான். நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான்.

திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம்... அந்த மாதிரி எண்ணுகிற அளவுக்குத் தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே, அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது. இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரண்மனை வாசலை அடைந்தான்.

வாயிற்காவலனிடம், ''ராஜாவைப் பார்க்க வேண்டும்'' என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான். உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், ''என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே?'' என்றார் அரசர். ''ஆமாம்! நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கும் ஆசை. ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை. என்னை அதிகப்பிரசங்கி என நினைக்காவிட்டால், உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்துகொண்டு விருந் துக்கு வருவேன்'' என்றான் மிகவும் பவ்வியமாக.

அதே நேரம், மன்னர் என்ன சொல்வாரோ என நடுங்கியபடி, அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் மன்னர், அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார். அந்த உடையை உடுத்திக்கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான்; தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான்!

அப்போது மன்னர் அவனிடம், ''விருந்தில் கலந்து கொள்வதற்குத் தகுதி உடையவனாகி விட்டாய். அதைவிட, முக்கியமான ஒன்று... இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப் படாது. உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும். துவைக்கவோ தூய்மைப் படுத்தவோ அவசியம் இருக்காது'' என்றார். கண்ணீர்மல்க, மன்னருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்ப யத்தனித்தவன்,

மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தான். அவனது மனம் சற்றே சலனப்பட்டது. 'ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து, இந்த உடைகள் கிழிந்துவிட்டால்... அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே?!' என யோசித்தவன், சட்டெனச் சென்று தன் பழைய உடைகளை வாரிக்கொண்டான்.

வீடு வாசல் இல்லாத அவனால், பழைய துணிகளை எங்கேயும் வைக்கமுடியவில்லை; எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான். மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை. அடிக்கடி கீழே விழுந்துவிடும் பழைய துணிகளைச் சேகரிக்கும் மும்முரத்தில், பரிமாறப்பட்ட பதார்த்தங்களைச் சரிவர ருசிக்க முடியவில்லை. அரசர் சொன்னது உண்மை என்பது நாளடைவில் அவனுக்குப் புரிந்தது.

அவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை. ஆனாலும், அந்த யாசகனுக்குப் பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது. மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல், அந்த கந்தல் மூட்டையையே பார்த்தனர். அவனைக் 'கந்தல் பொதி கிழவன்' என்றே அழைத்தனர். இறக்கும் தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க, அரசர் வந்தார். அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து, அரசரின் முகம் சோகமாவதைக் கண்டான்.

ஆரம்பத்திலேயே அரசர் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது. பழைய துணி மூட்டை, அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டது. அந்த யாசகனிடம் மட்டுமல்ல, நம் எல்லோரிடமும் அப்படியரு மூட்டை இருக்கிறது.

அதனுள் விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை... எனப் பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன. அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால், நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர முடியாமல் இருக்கிறோம். நம்முடைய தீராத கோபம், எத்தனை இன்பம் வந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு ஆனந்தப்பட முடியாமல் செய்துவிடுகிறது.

அரண்மனைகளில் கூட, இன்றும் பலர் பிச்சைக்காரர்களாகவே வாழ்கின்றனர். அனாதை ஆஸ்ரமங்களில் அரசர்களாக வாழ்வோரும் உண்டு.

நமது மகிழ்ச்சிக்கு மாபெரும் தடையாக இருப்பது நமது கடந்த காலம் பற்றிய சிந்தனைகளே! அவற்றை மூட்டையாகக் கட்டி நம் மேல் ஏற்றிக் கொண்டு, இறக்கி வைக்கமுடியாமல் இம்சைக்கு உள்ளாகிறோம்.

நண்பர் ஒருவர் நம்மைப் பார்த்துப் புன்னகைக்கும்போது கூட, 'நேற்று இவர் நம்மிடம் எரிச்சலுடன் நடந்து கொண்டாரே?' என்ற கடந்த கால நினைவு, கதவைத் திறந்து கொண்டு உள்ளே வருகிறது. அவரோடு நம்மால் சகஜமாகப் பழகமுடிவதில்லை. செயற்கையான பிளாஸ்டிக் புன்னகையுடன் மனிதர்கள் வாழ ஆரம்பித்தால், வாழ்க்கை வறண்டு விடும்.

மனதில் இருக்கிறது மகிழ்ச்சி: 

வாழ்க்கை தினமும் நமக்கு புதுத் துணிகளை நெய்து தருகிறது. நமக்கோ, பழைய துணிகளில் ஒரு நூலைத் தூக்கி எறியவும் மனமில்லை. நம் வீடுகளில், என்றோ வாங்கிய பல பொருள்கள் நிரம்பி இருக்கின்றன. அவற்றால் எந்தப் பயனும் இல்லாவிட்டாலும், தூக்கி எறிய மனமில்லை. வீடையே குடோனுக்கு இணையாக மாற்றிக் குடித்தனம் நடத்துபவர்களும் இருக்கின்றனர்.

இல்லத்தை மட்டுமல்ல, உள்ளத்தையும் குடோனாக்கி பழைய சரக்குகளைப் பத்திரப்படுத்தினால், அவற்றின் அழுகல் நாற்றம் உதடுகளின் வழியே சொற்களாகவும் கரங்களின் வழியே செயல்களாகவும் வெளிப்பட்டு வேதனையையே விநியோகிக்கும்; வெளிச்சத்தை வழங்காது.

மகிழ்ச்சியுடன் மனிதன் வாழ வேண்டும் என்பதற்காகவே, மறதியை நமக்கு வரமாக அளித்திருக்கிறார் இறைவன். ஆனால், அந்த வரத்தைத் தொலைத்துவிட்டு, தேவையானவற்றை வழியவிட்டு, தகுதியற்றவற்றைத் தக்கவைத்துக் கொள்கிறோம்.

விலங்குகள் எப்போதும் மகிழ்ச்சியுடன் விளையாட காரணம், அவை நிகழ்காலத்தில் மட்டுமே நீடித்திருக்கின்றன. நாம் நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் ஏற்படுத்திக்கொள்கிற இணக்கமே, நமது மகிழ்ச்சியை மெருகேற்றுகிறது.

வன்மம் நிறைந்த மனத்துடன் இருப்பவர்கள், மாநகராட்சி குப்பைகளைக் கொட்டும் இடத்தில் இருப்பதைப் போன்ற மனநிலையுடன் இருப்பார்கள்.

சூழலைச் சுகந்தமாக்குபவர்களால் மட்டுமே வாழ்க்கையை வசந்தமாக்கிக் கொள்ளமுடியும். 'நேற்று நம்மிடம் கோபப்பட்ட மனிதன் வேறு; அவனிடம் வருத்தத்தை வரவு வைத்த மனிதன் வேறு' என்கிற புரிதல் வந்தால், மகிழ்ச்சி மட்டுப்படுவதில்லை. வருத்தம் வரும்போதெல்லாம், உடனே அதை வடிகாலாக்குகிற வாழ்க்கை முறை முன்பு இருந்தது. குடும்பம் அதற்கு வழிவகுத்தது. யாரிடமாவது பகிர்ந்துகொண்டால், நமது சோகங்கள் பஸ்பமாகிவிடும் அனுசரணை இருந்தது.

ஆனால், இன்றைய பரபரப்பான வாழ்வில் பகிர்தல் குறைவு. 'உனது சோகம் உன்னுடன்! என்னுடையதை நான் பார்த்துக்கொள்கிறேன்' என்பதே இன்றைக்கு உறவுகளுக்குள் இருக்கும் மேம்போக்கான, மிக மெல்லிய உறவு இழைகள். எப்போது வேண்டுமானாலும் இற்றுப் போகிற நிலையில் ஊசலாடும் உறவுகளில், உண்மை ஊஞ்சலாட மறுக்கிறது. இன்றைக்கு எல்லாக் கதவுகளும் சாத்தப்பட்டே இருக்கின்றன.

நமது உலகே சுருங்கிப்போன சூழலில், கடந்த காலத்தை ஊதி ஊதிப் பெரிதாக்கி, இறக்கி வைக்க முடியாமல் தவிக்கின்ற மனநிலையில், ஆனந்தக் குழந்தைகள் ஓடிவரும்போது, அவற்றை அள்ளி எடுத்து அரவணைக்க முடியவில்லை.

மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை. மகிழ்ச்சியாக இருப்போம்... அப்போது காரணங்கள், தாமாகத் தோன்றி தோரணங்களாகித் துணை நிற்கும்.

நன்றி...

வாழ்க வளமுடன், நலமுடன் 

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

அவசரம் இருக்கும் வரை எதுவும் சாத்தியமில்லை.

 அவசரம் இருக்கும் வரை எதுவும் சாத்தியமில்லை. பேசாலைதாஸ் 


ஓர் இளைஞன் செக்ஸ் வைத்தியரிடம் போனான்.

"ஐயா, உடலுறவு கொள்ளும் போது என்னால் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. விந்து விரைவாக வெளியேறி விடுகிறது. அப்படி வெளியேறாமல் இருக்க, அதிக நேரம் தாக்குப் பிடித்து என் காதலிக்கு அதிக இன்பம் கொடுக்க என்ன வழி?'

"விரைவாக விந்து வெளியேறும் பிரச்சினை இன்று பல இளைஞர்களுக்கு இருக்கிறது. உடலுறவின் மேல் உள்ள அளவில்லாத ஆர்வமும், உறவு கொள்ளும் போது ஏற்படும் உணர்ச்சிப் பெருக்கமும் தான் இதற்குக் காரணம். இந்த குறையை நிவர்த்தி செய்ய நல்ல வழி ஒன்று இருக்கிறது.”

“உடனே சொல்லுங்கள், டாக்டர்.”

"பார்த்தீர்களா, இந்த அவசரம்தானே கூடாது என்கிறேன்.

இதே அவசரத்தை செக்சிலும் காட்டுகிறீர்கள். அதனால் தான் விந்து உடனே வெளியேறிவிடுகிறது.மீண்டும் சொல்கிறேன் அவசரம் கூடவே கூடாது.

இப்பொழுது நான் சொல்வதை கவனியுங்கள்.

"அடுத்த முறை ஒரு பெண்ணுடன் உறவு கொள்ளும் போது பெரிய நட்சத்திர உணவு விடுதியில் உணவு அருந்துவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

முதலில் தக்காளி சூப்பில் இருந்து ஆரம்பித்துசாக்லேட், ஐஸ்க்ரீம், முடிக்கும்போது குடிக்கும் காபி வரை, எதையும் ருசித்துச் சாப்பிடுங்கள். ஆற அமர அனுபவித்து ரசியுங்கள். 

"முதலில் தக்காளி சூப் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்குரிய கிண்ணத்தில் அது ஆவிபறக்கச் சூடாக இருக்கிறது. அதற்குத் தேவையான மிளகு பொடியையும் உப்பையும் போட்டு,

பின் மெதுவாக, மிக மெதுவாக ஒரு ஸ்பூன் சூப்பை அருந்துகிறீர்கள். அப்...பா! என்ன சுகம்!

அதன் பின் மதுக் கிண்ணத்தில் ஒயின் (wine) வருகிறது. பளபளக்கும் அந்த கிண்ணத்தை முதலில் நன்றாக உற்றுப் பாருங்கள்.

அதன் பின் அந்த மதுவின் வாசனையை நுகருங்கள். பின் கொஞ்சம் போல் அதைக் குடியுங்கள். அதன் இனிய சுவை தொண்டைக்குழி வழியாக இறங்குவதை ரசித்துக் குடியுங்கள்.

'அதன் பின் உணவு வகைகள் வருகின்றன. சூடான சாம்பார் இட்லி நெய்யில் மிதந்து கொண்டு வருகிறது. அதில் ஒரு விள்ளலை எடுத்து மல்லிச் சட்னியில் தோய்ந்துச் சாப்பிடுகிறீர்கள்.

அதன்பின் பிரியாணி வருகிறது. அதனை கொஞ்சம் கொஞ்சமாக அதன் சுவையை அனுபவித்துச் சாப்பிடுகிறீர்கள்.

கடைசியாக பழவகைகளுடன் கூடிய ஐஸ் க்ரீம் வருகிறது. அதனை மென்மையாக ருசித்து, ரசித்துச் சாப்பிடுகிறீர்கள்.

அதன் பின் சூடான ஃபில்டர் காபி வருகிறது. அதனை கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து அருந்துகிறீர்கள்.

இப்படியாக உடலுறவின் போது கற்பனையில் ஒரு விருந்து உண்பது போல் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் பிரச்சினை ஓடிவிடும்.

அதன் பின் உங்களுக்கு உடலுறவில் உச்சத்தை எய்துவது எளிதாக இருக்கும். உங்களோடு இருக்கும் பெண்ணுக்குள் இன்பம் கொடுப்பீர்கள்.

புரிகிறதா?"

புரிகிறது "மிக்க நன்றி. இதை இன்றே செயல் படுத்துகிறேன்." என்று சொன்ன இளைஞன் மருத்துவர் கேட்ட ஃபீசைக் கொடுத்துவிட்டுத் தன் காதலியைத் தேடிக் கொண்டு போனான்.

அன்று இரவு தனது காதலியோடு உறவு கொள்ளும் போது டாக்டர் சொன்னதை ஞாபகப்படுத்திப் பார்த்தான். விலாவாரியாக வகைவைகயாகச் சாப்பிடும் வரை தன்னால் விந்து வெளியேறாமல் தாக்குப்பிடிக்க முடியும் என்று தோன்றவில்லை.

அதே சமயம் டாக்டர் சொன்னதைச் செய்து பார்த்துவிட வேண்டும் என்று நினைத்தான்.

டாக்டர் சொன்னது போல் ஒரு நட்சத்திர ஹோட்டலில் இருப்பதாக நினைத்துக் கொண்டான். சர்வரைக் கூப்பிட்டான்.

இந்தாப்பா, என்னால் அதிக நேரம் தாக்கு பிடிக்க முடியாது. சீக்கிரம் எனக்கு ஒரு தக்காளி சூப்பும், ஒரு சூடான காபியும் மட்டும் கொண்டு வா என்றான்.

அவசரம் இருக்கும் வரை எதுவும் சாத்தியமில்லை.



உருவத்தை வைத்து எடை போடாதே....

 உருவத்தை வைத்து எடை போடாதே....

.பேசாலைதாஸ் 


ஜனக மகராஜா ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்தார்.

அவருக்கு அப்போது ஒரு கனவு வந்தது.

அதில் அவர் ஒரு பிச்சைகாரனாக மிகவும் சிரமப்படுவது போல் கனவு. கனவில் அவர் படாத பாடு பட்டு  

துன்பப்பட்டார்.

அப்போது அது கனவு போலவே அவருக்குத் தெரியவில்லை. நிஜம் போலவே இருந்தது.

திடுக்கிட்டு "நாராயணா" என்று அலறினார். கண் விழித்தார்.

கண்விழித்துப் பார்த்தால் எல்லாம் மாறியிருந்தது. சில வினாடி முன்பு பிச்சைக்காரராக இருந்தவர் இப்போது மன்னராக இருந்தார்.

இது தொடர்ந்து பல நாட்களாக நடந்து கொண்டே இருந்தது.

அவர் தினசரி இரவு தூங்கும் போது கனவில் பிச்சைக்காரனாகி படாத பாடுபடுவார்.

பகலில் எழுந்தால் மன்னனாக சகல சுகபோகங்களுடன் இருப்பார்.

ஜனகருக்கு ஒரு பெரும் சந்தேகம் உதித்தது.

"நான் மன்னனாக இருந்து பிச்சைக்காரனாக இருப்பது போல் கனவு கண்டேனா?

அல்லது பிச்சைகாரனாக இருந்து இப்போது மன்னராக இருப்பது போல் கனவு காண்கிறேனா?" என சந்தேகம் வந்து விட்டது.

மந்திரி,ராஜகுரு எனப் பலரிடம் கேட்டுப் பார்த்தார். யாருக்கும் பதில் தெரியவில்லை.அந்த சந்தேகம் அவர் மனதை அரித்துக் கொண்டே இருந்தது.

"நான் பிச்சைக்காரனா,  

மன்னனா" என்று அவர் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்.

பிறகு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.தமது சந்தேகத்தைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பெரும் பரிசை அளிப்பதாகச் சொன்னார்.

நாட்டிலிருந்த வித்வான்கள் எல்லாரும் வந்தனர். தூர தேசத்திலிருந்து பண்டிதர்கள், முனிவர்கள்,வேத விற்பன்னர்கள் எல்லாரும் வந்தனர். யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

வெளியூரிலிருந்து விதேக நாட்டுக்கு ஒரு முனிவர் வந்தார்

.அவர் பெயர் அஷ்டாவக்கிர மகரிஷி. அவர் உடல் 8 கோணலாக வளைந்திருக்கும். அது ஏனென்றால் அவர் தம் அன்னையின் வயிற்றிலிருந்த போது கத்துக்குட்டியான அவர் தகப்பனார் வேதத்தை தப்புத் தப்பாக படிப்பாராம்.

அப்போது வயிற்றிலிருந்த மகா ஞானியான குழந்தை அதைக் கேட்கச் சகிக்காமல் உடம்பை திருப்புமாம். அப்படி 8 தடவை திருப்பி உடல் அஷ்ட கோணலாக வளைந்து அஷ்டா வக்கிரன் என்ற பெயரும் ஏற்பட்டது.

ஜனகரின் கேள்வியை அறிந்த அஷ்டாவக்கிர மகரிஷி ஜனகரின் அவைக்குச் சென்றார். பண்டிதர்களின் பெருங்கூட்டம் அவையில் இருந்தது. யாருக்கும் பதில் தெரியவில்லை

." என் கேள்விக்கு பதில் சொல்ல ஆளே இல்லையா?" என ஜனகர் வேதனையுடன் கேட்டார்.

"நான் சொல்கிறேன்" என்றார் அஷ்டாவக்கிரர்.

அரசவை முழுக்க அவரைத் திரும்பிப் பார்த்தது.

அவரைப் பார்த்த மறுவினாடியே பண்டிதர்கள் சிரிக்கத் துவங்கி விட்டனர்.

குள்ளமாக,கறுப்பாக,  

எண் கோணலாக வளைந்த உடலை வைத்துக் கொண்டு ஒருவர் சபைக்கு வந்தால் எப்படி இருக்கும்? அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

சிரிப்பொலி அடங்கும் வரை அஷ்டாவக்கிரர் மவுனமாக நின்றார்.

"என் கேள்விக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள்" என்று ஜனகர் ஆவலுடன் கேட்டார்.

"சொல்கிறேன்.அதற்கு முன் சபையில் இருக்கும் தோல் வியாபாரிகளையும்,  

கசாப்புக் கடைகாரர்களையும் வெளியே அனுப்புங்கள்" என்றார் அஷ்டா வக்கிரர்.

"என்ன சொல்கிறீர்கள்? இது பண்டிதர்களின் சபை. இங்கு எந்த கசாப்பு கடைக்காரனும் தோல் வியாபாரியும் இல்லை" என்றார் ஜனகர்.

"இங்கு பண்டிதன் என யாரும் இல்லை.  

இங்கிருப்போர் அனைவரும் கசாப்புக் கடைக்காரர்களும் தோல் வியபாரிகளும் தான்" என்றார் அஷ்டாவக்கிரர்.

சபை முழுக்க கொதித்தெழுந்தது.  

"என்ன திமிர் இந்த குரங்கனுக்கு?" என்று சப்தமிட்டார் ராஜகுரு.

"வேதம் கற்ற பண்டிதர்களை இழிவுபடுத்திய இவனை கழுவிலேற்றுங்கள்" என்று அனைவரும் கூச்சலிட்டனர்.

"ஏன் அப்படி சொன்னீர்கள்?" என்று பரிவுடன் கேட்டார் ஜனகர்.

"கற்றறிந்த பண்டிதர்களை கசாப்புக் கடைக்காரன் என்று சொல்லலாமா?" என்று கேட்டார்.

உரத்த குரலில் அஷ்டாவக்கிரர் பதில் சொன்னார்.

"ஓ மன்னா! உன் கேள்விக்கு பதில் நான் சொல்கிறேன் என்று சொன்னேன். சபை முழுக்க என்னைப் பார்த்துச் சிரித்தது.

ஏன் சிரித்தார்கள்?என் குறைவான ஞானத்தைக் கண்டு சிரித்தார்களா?நான் தவறாகச் சொன்ன விளக்கத்தைக் கண்டு சிரித்தார்களா?இல்லை.

இது எதைக் கண்டும் அவர்கள் சிரிக்கவில்லை. என் உருவத்தைப் பார்த்து சிரித்தார்கள். என் தோலின் நிறத்தை வைத்து,என் உடலின் உருவத்தை வைத்து இவர்கள் என்னை, என் அறிவை மதிப்பிட்டார்கள்.

என் தோலை வைத்து என் மதிப்பை நிர்ணயிக்கும் இவர்கள் தோல் வியாபாரிகள் தானே?

தோல் வியாபாரி தான் தோலின் நிறத்தை வைத்து ஆட்டுத் தோலுக்கு விலை போடுவான். கசாப்புக் கடைக்காரன் தான் ஆட்டின் உருவத்தை வைத்து ஆட்டுக்கு மதிப்பு போடுவான்.

இவர்களும் என்னை அப்படித் தான் மதிப்பிட்டார்கள். அதனால் தான் இவர்களை தோல் வியாபாரி என்றேன்.

பண்டிதர்கள் இருக்க வேண்டிய சபையில் தோல் வியாபாரிகளுக்கு என்ன வேலை?அதனால் தான் இவர்களை வெளியே போகச் சொன்னேன்" என்றார் அஷ்டாவக்கிரர்.

அவமானமடைந்த பண்டிதர்கள் தலை குனிந்து சபையை விட்டு வெளியேறினார்கள்.

வந்தவர்

மகா ஞானி என ஜனகரும் அறிந்தார். மகா பணிவுடன் அவர் காலடியில் அமர்ந்து தன் சந்தேகத்துக்கு விடை கேட்டுத் தெரிந்து கொண்டார்.

ஜனகருக்கு அஷ்டாவக்கிரர் சொன்ன அந்த உபதேசம் அஷ்டாவக்கிர கீதை என்ற பெயருடன் விளங்குகிறது.

அந்த உபதேசத்தை பெற்ற ஜனகர் அன்று முதல் மகா ஞானியாகி விட்டார். ஜனகரின் சந்தேகம் தீர்த்த மகரிஷியின் விளக்கம் என்ன?

தூங்கினப்போ கண்டதும் கனவு தான். இப்போ நீ வாழும் வாழ்வும் கனவுதான்.

உன்னோட ராஜ வாழ்வும்,பிச்சைக்கார வாழ்வும் ரெண்டும் உண்மையில்லை.

ராஜாவா இருக்கறப்ப சந்தோஷப்படாதே.  

தூங்கறப்ப அந்த சந்தோஷம் போயிடும்.  

பிச்சைக்காரனா இருக்கறப்ப வருத்தப்படாதே.  

முழிச்சா அந்த வருத்தம் மறைஞ்சுடும்.

ரெண்டு நிலையிலும் ஒரே மாதிரி இருக்கக் கத்துக்க என்றார்...

உலகினில் எதுவும் நிரந்தரம் இல்லை

கடவுளை தவிர..


முடிவெட்ட நாலணா

முடிவெட்ட நாலணா பேசாலைதாஸ் 


என்னப்பா! முடி வெட்ட எவ்வளவு? சவரம் பண்ண எவ்வளவு?" என்றார்...

அவரும், "முடிவெட்ட நாலணா, சவரம் பண்ண ஒரணா சாமி!" என்று பணிவுடன் கூறினார்...

🙏பண்டிதர் சிரித்தபடியே,

"அப்படின்னா, என் தலையை சவரம் பண்ணு..." என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார்...

🙏வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை...

வேலையை ஆரம்பித்தார்...

🙏நாவிதர் கோபப்படுவார்' என்று எதிர்பார்த்திருந்த

பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான்...

பின்னர், பண்டிதர் அடுத்த கணையைத் தொடுத்தார்...

🙏"ஏன்டாப்பா ! உன் வேலை முடி வெட்டுறது...

உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே... அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப் படுத்தி நாவிதன்னு சொல்றாங்க...?"

🙏இந்தக் கேள்வி நாவிதரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை.

"நல்ல சந்தேகங்க சாமி...

நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது.

🙏முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத் தட்டாம இருக்க, நாவால இதமா நாலு வார்த்தை பேசுறதனால தான் நாங்க நாவிதர்கள்...

எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா...?"

🙏இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது.

அடுத்த முயற்சியைத் துவங்கினார்...

"இதென்னப்பா, கத்தரிக் கோல்னு சொல்றீங்க. கத்தரி மட்டுந்தானே இருக்கு... கோல் எங்கே போச்சு?''

🙏இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது நாவிதரிமிருந்து.

"சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க..." என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்...

இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம்.

கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்...

🙏"எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குற...

ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு..."

🙏இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது...

அவர் முகத்தில் கொஞ்சம் வித்தியாசம்...

இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார்.

கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்....

இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார்...

 🙏பண்டிதரின் பிரியமான மீசையைத் தொட்டுக் காட்டிக் கேட்டார்,

"சாமிக்கு இந்த மீசை வேணுங்களா?"

பண்டிதர் உடனே, "ஆமாம்..." என்றார்...

கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின் மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்து,

"மீசை வேணுமுன்னிங்களே சாமி! இந்தாங்க..."

🙏பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய்...

அதிர்ச்சியில் உறைந்து போனார் பண்டிதர்...

நாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார்.

🙏அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக் கேட்டார்,

"சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா...?"

இப்போது பண்டிதர் சுதாரித்தார்.

'வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான்...' என்ற பயத்தில் உடனே சொன்னார்,

"இந்தப் புருவம் எனக்கு வேண்டாம்... வேண்டவே வேண்டாம்...".

🙏நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார்...

"சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல? அதைக் குப்பைல போட்டுடுறேன். சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது..." என்றபடி கண்ணாடியை பண்டிதரின் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்...

🙏நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல்...

முகத்துக்கு கம்பீரம் சேர்த்த அடர்த்தியான புருவமும் இல்லாமல்...

அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது...

🙏கண்கள் கலங்கக் குனிந்த தலை நிமிராமல் ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு, விரக்தியில் தளர்ந்து போய் நடையைக் கட்டினார் பண்டிதர்...

💓*"நம்முடைய அறிவும்...*

💓*புத்தியும்...*

💓*திறமையும்...*

💓*அதிகாரமும்...*

💓*அந்தஸ்தும்...*

💓*பொருளும்...*

💓*மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல..."*

🙏இதை உணராதவர்கள் இப்படித்தான் அவமானப்பட நேரும்...

*தலைக்கனம் நம் தலையெழுத்தை மாற்றி விடும்...*

*இந்த பிரபஞ்சம் அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது...*

*அனைத்து உயிர்களும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவைகளே...*

🙏*நாம் பெற வேண்டியது நல்ல அனுபவங்களை தவிர வேறோன்றுமில்லை...*

ஆகவே,

🙏*இறைவனால் படைக்க பட்ட அனைத்து உயிர்களையும் நேசிப்போம்...*

*மதிப்போம்...*...

*வாழ்வளிப்போம்*..............✍️

எமனாயிருந்தாலும், இல்லை எவனாயிருந்தாலும் ,,,,

எமனாயிருந்தாலும்,

 இல்லை எவனாயிருந்தாலும்  ,,,,பேசாலைதாஸ் 

 


எமதர்மராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தார்..!

அவள் மானுடப் பெண் என்றாலும் ,

அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது.

அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன். 

அவர் மணந்த பெண் நல்லவள் தான்.

 என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது.  

மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார். 

ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் ,

மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார்.

மகன் கொஞ்சம் வளர்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார்.

மகனே..

   நீ சிறந்த வைத்தியனாக வேண்டும்.  

மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம்.

   எப்படித் தெரியுமா...? 

ஒருவர் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன். 

 உனக்கு மட்டும் நான் கண்ணுக்குத் தெரிவேன்.

 நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே. 

நீ வைத்தியம் செய்து அவர் இறந்து போனால் உன் புகழ் குறையும்.

 எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால்,

 தைரியமாக மருந்து கொடு.

 அவன் பிழைத்து எழுந்து கொள்வான்.  

அதனால் உன் புகழ் மேலும் மேலும் பரவும் என்றார் எமன்.

   மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல்,

 மகனை அணைத்து கண்ணீர் விட்டு எமதர்மன் நழுவி விட்டார்.

மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான். 

அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான்.

 ஒருவர் கூடச் சாகவில்லை. எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள்.  

யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது,

 எதிரில் அப்பாவை(எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான்.

 இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது.

கொஞ்ச நாளில் அந்த ஊர் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள். 

யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை.  

இவனை அழைத்தார்கள். என் மகளைக் காப்பாற்றினால் ,

அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன்,

 ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா.  

அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி.

 எமன் (அப்பா)நின்று கொண்டிருந்தார்.

 வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள்.

 ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி,

 ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும்.

இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார்.  

எப்படி அவரை விரட்டுவது..?

 பளிச்சென்று யோசனை பிறந்தது. 

வாசல் பக்கம் பார்த்து கத்தினான். 

அம்மா....!!

   அப்பா உள்ளே இருக்கார். 

ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினேயே....!!

இங்க இருக்கார்.....!

   என்று அலறினான்....!

 அவ்வளவுதான் துண்டைக் காணோம் ,

துணியைக் காணோம் என்று எமன் ஓட்டமாக ஓடியேவிட்டான்....!!

 கட்டுனது     எமனாயிருந்தாலும்,

 இல்லை எவனாயிருந்தாலும்  ,,,,

பொண்டாட்டிக்கு பயந்தே தான் ஆகனும்...!!....

புகழ்ச்சி தரும் அழிவு பேசாலைதாஸ்

புகழ்ச்சி தரும் அழிவு பேசாலைதாஸ்  கன்றுக்குட்டி ஒன்று அழுதபடியே தாய்ப்பசுவிடம் ஓடி வந்தது. அதைப் பார்த்த தாய்ப்பசு தனது கன்றை நாக்கினால் நக்...