Followers

Tuesday 12 December 2023

 சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள். 

அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். 

அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள்!” என்றான். 

ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்து விட்டான்

“நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். 

அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை!” என்று சொன்னான் கர்ணன்.

 “ஆஹா! நீ அல்லவோ சுத்த வீரன்! அர்ஜுனன் காண்டீவத்தை நம்புகிறான். நீ உன் திறமையை நம்புகிறாய்!” என்று கர்ணனைத் துரியோதனன் பாராட்டினான்.

அர்ஜுனன் வனவாச காலத்தில் இந்தச் சம்பவத்தை வியாசரிடம் சொல்லி மிகவும் வருந்தினான். 

இதைக் கேட்டுச் சிரித்த வியாசர், “கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்ததற்கு வேறு காரணம் உள்ளது! அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை!” என்றார்.

 “அது என்ன?” என்று கேட்டான் அர்ஜுனன். 

“நேரம் வரும் போது சொல்கிறேன்!” என்றார் வியாசர்.

பல ஆண்டுகள் கழிந்தன.

மகாபாரத யுத்தம் முடிந்து, தர்மபுத்திரர் முடிசூடிய பின், கண்ணனைச் சந்திக்க அர்ஜுனன் துவாரகைக்குச் சென்றான். 

“அர்ஜுனா! நான் எனது அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுண்டம் செல்லவுள்ளேன். 

அதனால் எனது அரண்மனையிலுள்ள பெண்களை எல்லாம் நீ பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு இந்திரப்ரஸ்தத்துக்குச் சென்று விடு!” என்று கூறினான் கண்ணன்.

கனத்த மனத்துடன் கண்ணனிடமிருந்து விடை பெற்ற அர்ஜுனன், தனது தேரில் பெண்களை அழைத்துக் கொண்டு சென்றான். 

வழியில் சில கொள்ளையர்கள் தேரை நிறுத்தி அர்ஜுனனைத் தாக்கினார்கள். 

அவர்களைப் பதிலுக்குத் தாக்குவதற்காகக் காண்டீவத்தை எடுக்க முற்பட்டான் அர்ஜுனன்.

ஆனால் அவனால் காண்டீவத்தைத் தூக்க முடியவில்லை.

பற்பல பேரரசர்களை வீழ்த்தியவனும், யாராலும் வீழ்த்தமுடியாதவன் என்று போற்றப்படுபவனும், வில் விஜயன் எனப் பெயர் பெற்றவனுமாகிய அர்ஜுனனை அந்தச் சாதாரணத் திருடர்கள் வீழ்த்தி விட்டார்கள்.

தன் வாழ்வில் முதன்முறையாகத் தோல்வியைச் சந்தித்தான் அர்ஜுனன். அதுவும் சாதாரணத் திருடர்களிடம்!

வெட்கத்தால் தலைகுனிந்த நிலையில், இந்திரப்ரஸ்தத்துக்கு நடந்தான் அர்ஜுனன்.

 அப்போது அவன் எதிரில் வந்தார் வேத வியாசர். “அர்ஜுனா! நீயும் உன் சகோதரர்களும் பூமியில் இருந்து புறப்படுவதற்கான காலம் வந்து விட்டது. 

இப்போது நடந்த சம்பவம் அதை நினைவூட்டவே ஏற்பட்டது!” என்று கூறினார் வியாசர்.

 “கண்ணனே புறப்பட்ட பின், நாங்கள் பூமியில் இருந்து என்ன செய்யப் போகிறோம். நாங்களும் புறப்படத் தாயார். 

ஆனால், என் மனதில் பெரும் ஐயம் எழுந்துள்ளது! இதுவரை நான் காண்டீவத்தைப் பொம்மை போலக் கருதி அனாயாசமாகக் கையில் ஏந்தினேன். ஆனால் இப்போது அது மலை போல் கனமாக உள்ளது. 

என்னால் அதைத் தூக்க முடியவில்லையே! என்ன காரணம்?” என்று கேட்டான் அர்ஜுனன்.

அதற்கு வியாசர், “உன்னால் இந்தக் காண்டீவத்தை நிச்சயமாகத் தூக்க முடியாது. 

கண்ணன் உன்னுடன் இருந்தவரை இந்தக் காண்டீவத்தை ஏந்துவதற்கான பலத்தை அவன் உனக்கு அளித்தான். 

அவனது அருளால் தான் நீ காண்டீவத்தைப் பொம்மை போலத் தாங்கினாய்.

இப்போது அவன் பூமியை விட்டுச் சென்று விட்டதால், இதை உன்னால் தூக்க முடியவில்லை!” என்றார். 

மேலும், “சூதாட்டத்தில் நீ காண்டீவத்தை இழந்த போது, அதைக் கர்ணன் வாங்க மறுத்தானே, ஏன் தெரியுமா? 

கண்ணனின் அருள் பெற்ற நீ காண்டீவத்தைத் தூக்கி விட்டாய். 

ஆனால் கண்ணனின் அருள் பெறாத கர்ணனால் இந்தக் காண்டீவத்தை அசைக்கக் கூட இயலாது. இது கர்ணனுக்கும் நன்றாகத் தெரியும்.

அந்தக் காரணத்தை வெளியே சொல்ல விரும்பாத கர்ணன், கௌரவமாகத் தான் சுத்த வீரன் என்றும் இந்த வில்லை நம்பித் தான் இல்லை என்றும் கூறிச் சமாளித்து, காண்டீவம் தனக்கு வேண்டாம் என்று கூறினான்!” என்றார் வியாசர்.

இதிலிருந்து பலசாலிகள் என்று போற்றப் படுபவர்களுக்கும் கூட அந்த பலத்தைத் திருமால் தான் வழங்குகிறார் என்பதை நாம் உணர முடிகிறது. 

இக்கருத்தை “ஸத்வம் ஸத்வவதாம் அஹம்” (பலசாலிகளின் பலமாக நானே இருக்கிறேன்) என்று கண்ணன் கீதையில் கூறுகிறான். இத்தகைய மகா பலத்தோடு கூடியவராகத் திருமால் விளங்குவதால் ‘மஹாபல:’ என்றழைக்கப்படுகிறார்.

அழகு என்பது மனதில் உள்ளது..

அழகு என்பது மனதில் உள்ளது..பேசாலைதாஸ்

 


ஒரு அழகான பெண்.......பார்க்கிறதுக்கு தேவதை மாதிரி இருக்கிறவங்க.... ஒரு விமானத்தில் ஏறினாங்க... ஏறி தனது சீட்டை தேடினாங்க.... அங்க போய் பார்த்தா, அவங்க சீட்க்கு அடுத்த சீட்ல ரெண்டு கையையும் இழந்த ஒருத்தர் உக்கார்ந்திருந்தார்... 

இவங்களுக்கு அவரை பார்த்ததும் ஒரு மாதிரியா அசூசையா இருந்திச்சு....இந்தாளு பக்கத்தில நாம எப்படி உக்காரது...அப்டின்னு யோசிச்சு, விமான பணிப்பெண்ணை கூப்பிட்டு, "எனக்கு வேற இடத்தில சீட் அரேன்ஜ் பண்ணுங்க.."ன்னு கேட்டாங்க.. அதுக்கு விமான பணிப்பெண், "ஏன் என்னாச்சு உங்க சீட்டுக்கு..?"ன்னு கேட்டதுக்கு, "எனக்கு அவர் பக்கத்தில உக்கார்ந்திட்டு வர அருவருப்பா இருக்கு.... அதான்..." அப்டின்னதும், விமான பணிப்பெண்ணுக்கு தூக்கி வாரிபோட்ருச்சு...

பார்க்க இவ்ளோ டீசென்ட்டா இருக்காங்க... ஆனா இவ்ளோ நாகரீகம் இல்லாம பேசுறாங்களேன்னு சங்கடப்பட்டாலும், ஏதும் பண்ண முடியாதே... அவங்க பயணியாச்சே.... வேற வழி.... "இருங்க மேடம் நான் பாக்குறேன்...."ன்னு சொல்லிட்டு செக் பண்ணி பாக்குறாங்க.. எங்கயும் சீட் காலி இல்லை... அந்த பெண்கிட்ட திரும்பவும், "மேடம்... எந்த சீட்டும் காலி இல்லை... கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க... நான் கேப்டன் கிட்ட பேசிட்டு உங்களுக்கு வேற ஏதாவது மாற்று ஏற்பாடு பண்ண முடியுமான்னு கேட்டு வரேன். அதுவரை பொறுத்திருங்க... ப்ளீஸ்... "ன்னு சொல்லிட்டு கேப்டன் ரூம்க்கு போனாங்க..

கொஞ்ச நேரத்தில திரும்பி வந்து, "மேடம்...நீங்க எடுத்திருக்கிற டிக்கெட் எக்கானமி கிளாஸ்... ஆனா எக்கானமி க்ளாஸ்ல உங்களுக்கு  ஒதுக்குறதுக்கு வேற சீட் இல்லை.  முதல்வகுப்பு பிரிவில் மட்டும் தான் ஒரு சீட் காலியா இருக்கு... ஆனாலும் நீங்க எங்களோட மதிப்பு வாய்ந்த பிரயாணி.. உங்களோட கோரிக்கையையும் பரிசீலிக்காம இருக்க முடியாதே.. அதனால, எங்கள் பயண வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு எக்கானமி கிளாஸ் பயணி ஒருத்தருக்கு முதல் வகுப்பு சீட்டை ஒதுக்க போறோம்.... கொஞ்சம் பொறுங்க.."அப்டின்னு சொன்னதும் அந்த பெண்மணிக்கு சந்தோசம் தாங்கல...   விமானப்பணிப்பெண்ணின் பதிலுக்கு கூட காத்திருக்காம, முதல்வகுப்புக்கு போக தயாரானாங்க... 

ஆனா அங்க நடந்ததே வேற.  விமான பணிப்பெண் நேரா அந்த இரண்டு கைகளையும் இழந்தவர்கிட்ட போய், "சார்.... தயவுசெய்து மன்னிச்சிடுங்க.. உங்க லக்கேஜ் எல்லாம் நான் எடுத்திட்டு வரேன்.... நீங்க முதல் வகுப்புக்கு வாங்க சார்... உங்க பக்கத்தில இவங்களை போல ஒருத்தரை உக்காரவைக்க எங்களுக்கு மனமில்லை.. " அப்டின்னு பணிவா சொன்னதும் விமானத்தில் இருந்த எல்லாரும் கைகளை தட்டி ஆரவாரம் செய்து அந்த முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்தாங்க.... 

அந்த அழகான பெண்ணுக்கு ரொம்ப அவமானமா போச்சு... சங்கடத்தோட நெளிஞ்சுக்கிட்டே நின்னாங்க... 

அப்போ அந்த கைகளை இழந்த அந்த நபர் எழுந்து, "நான் ஒரு ரிட்டயர்டு மிலிட்டரி மேன்... கார்கில் போரில் என்னோட இரண்டு கைகளையும் இழந்திட்டேன்... முதல்முறையா இந்த பெண் சொன்னதை கேட்டதும், இவங்கள மாதிரி ஆட்களுக்காகவா நாம அவ்ளோ கஷ்டப்பட்டு போரில் ஈடுபட்டோம்னு ரொம்ப வருத்தமா இருந்திச்சு... ஆனா இப்போ நீங்க எல்லாரும் கை தட்டி ஆராவாரம் செய்றதை கேட்டதும் மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்குது... உங்களை போன்ற இவ்ளோ நல்ல குடிமக்களுக்காக நான் கைகளை இழந்ததிற்காக சந்தோசப்படுறேன்..." அப்டின்னு சொல்லிகிட்டே முதல்வகுப்பை நோக்கி மெதுவா நடக்க ஆரம்பிச்சார்...

அந்த பெண்மணியோ அவமானத்தின் உச்சத்தில் இருந்தாங்க... யாரையும் பார்க்கும் தைரியமின்றி தலையை குனிஞ்சு உட்கார்ந்துக்கிட்டாங்க...

அழகு என்பது நாம பாக்குற வெளித்தோற்றத்தில் இல்லை... .

மனதில் உள்ளது..

கர்மா பேசாலைதாஸ்

 கர்மா  பேசாலைதாஸ்


ஒரு அரசன் அந்தணர்களுக்கு ஒரு நாள் உணவளித்துக் கொண்டு இருக்கையில் வானில் ஒரு கழுகு, தனக்கு இரையாக பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு அவ்வழியே பறந்து சென்றது. பாம்பின் வாயிலிருந்து சிறு துளி விஷம் அரசன் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தில் விழுந்து விட்டது. அரசன் அந்த உணவை ஓர் அந்தணருக்கு அளிக்க, அதை உண்ட மறு கணமே அவர் இறந்து போனார். அரசன் மிகவும் வருத்தம் அடைந்தான். 

கர்மாக்களுக்கான வினைகளை நிர்ணயிக்கும் சித்திரகுப்தனுக்கு இந்த கர்மவினையை யாருக்குக் கொடுப்பது என்று குழப்பம் வந்தது. கழுகிற்கா, பாம்பிற்கா அல்லது அரசனுக்கா? 

-கழுகு அதன் இரையைத் தூக்கிக் கொண்டு சென்றது, அது அதன் தவறு இல்லை. 

-விஷம் இறந்துபோன பாம்பின் வாயிலிருந்து வழிந்தது, அது பாம்பின் குற்றம் இல்லை. 

-அரசனுக்கும் உணவில் பாம்பின் விஷம் கலந்தது தெரியாது. 

அது அவனும் அறியாமல் நடந்த விஷயம். 

....இதுபற்றி எமதருமனிடமே கேட்கலாம் என்று எமனிடம் சென்று தன் குழப்பத்தைக் கூறினான். 

சித்திரகுப்தன் கூறியதைக் கேட்ட எமதர்மன், சற்று நேர சிந்தனைக்குப் பிறகு, 'இதற்கான விடை விரைவில் கிடைக்கும். அது வரை பொறுமையாக இரு' என அறிவுறுத்தினான். ஒரு சில நாட்கள் கழித்து அரசன் உதவி நாடிச் சென்ற சில அந்தணர்கள் அரண்மணைக்கு வழி தெரியாமல், சாலையோரம் வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்மணி ஒருவரிடம் வழி கேட்டார்கள். அப்பெண்மணியும் அவர்களுக்கு சரியான பாதையை  கூறியதோடு நில்லாமல், 'இந்த அரசன் அந்தணர்களைக் கொல்பவன் சற்று எச்சரிக்கையாக இருங்கள்' என்றும் கூறினாள். 

இந்த வார்த்தைகளை அவள் கூறி முடித்ததும், சித்திரகுப்தனுக்கு தெளிவு பிறந்து விட்டது, அந்தணரைக் கொன்ற கர்மாவின் வினை முழுவதும் இந்தப் பெண்மணிக்கே சேரும் என்று. காரணம், மற்றவர்கள் மீது பழி சுமத்தும் போது அதில் உண்மை இருந்தாலும் அவர்கள் செய்த கர்ம வினையில் பாதி, பழி சுமத்துபவருக்கு வந்து சேர்ந்துவிடும். உண்மையை உணராமல் அபாண்டமாக பழி சுமத்துவோருக்கு அந்த கர்மவினை முழுவதும் சேரும். 

இவ்வாறு, நாம் செய்யும் கர்மவினைகள் ஒரு பக்கம் என்றால் நாம் மற்றவர்கள் செய்வதைப் பற்றி பேசி சேர்த்துக் கொள்ளும் கர்மவினைகள் ஏராளம் ஏராளம். எனவே, நாவடக்கம் தேவை.

Monday 11 December 2023

wisdom by Pesalaithas

wisdom by Pesalaithas 


Once, a student approached Rumi and asked, How should I deal with the pain and suffering in life?"

Rumi, in his wisdom, decided to share a story:
"There was a man who sought the wisdom of a great sage, hoping to find a way to escape his suffering. The sage looked at the man and said, 'I will help you, but first, you must do something for me. Take this spoon, fill it with oil, and walk through the town without spilling a drop.'
"The man thought this task was simple enough and agreed. He took the spoon, filled it with oil, and began to walk through the town. As he carefully balanced the spoon, he couldn't help but focus all his attention on not spilling any oil.
"When he returned to the sage, the sage asked, 'Did you see the beautiful flowers in the town square? Did you notice the children playing and the laughter of families?' The man realized he had been so fixated on the spoon that he hadn't noticed anything else.
"The sage then said, 'This is the key to dealing with pain. Just as you were so focused on the spoon that you missed the beauty around you, when you are consumed by your suffering, you miss the beauty of life. Pain is like the spoon, and life is like the town. Don't let the pain consume your entire focus. Remember to look around and appreciate the beauty that still exists.'"
The student understood the sage's message: while pain and suffering are part of life, it's essential not to let them overshadow the beauty and joy that can be found in every moment. This story serves as a reminder that even in the face of pain, there is an opportunity to find meaning and beauty in life.
Rumi

true love is,,,,,,? by Pesalaithas

 true love is,,,,,,?  by Pesalaithas 


My parents were married for 55 years. One morning, my mom was going downstairs to make dad breakfast, she had a heart attack and fell. My father picked her up as best he could and almost dragged her into the truck. At full speed, without respecting traffic lights, he drove her to the hospital.

When he arrived, unfortunately she was no longer with us.
During the funeral, my father did not speak; his gaze was lost. He hardly cried.
That night, his children joined him. In an atmosphere of pain and nostalgia, we remembered beautiful anecdotes and he asked my brother, a theologian, to tell him where Mom would be at that moment. My brother began to talk about life after death and guesses as to how and where she would be.
My father listened carefully. Suddenly he asked us to take him to the cemetery.
"Dad!" we replied, "it's 11 at night, we can't go to the cemetery right now!"
He raised his voice, and with a glazed look he said: "Don't argue with me, please don't argue with the man who just lost his wife of 55 years."
There was a moment of respectful silence, we didn't argue anymore. We went to the cemetery. With a flashlight we reached her grave.
My father sat down, prayed, and told his children: "It was 55 years... you know? No one can really talk about true love if haven't done life with a person."
He paused and wiped his face.
"She and I, we were together in the good and in the bad." he continued. "When I changed jobs, we packed up when we sold the house and moved. We shared the joy of seeing our children become parents, together we mourned the departure of loved ones, we prayed together in the waiting room of some hospitals, we supported each other in pain, we hugged one another each day, and we forgave mistakes."
And then he paused and added, "Children, that's all gone and I'm happy tonight. Do you know why I'm happy? Because she left before me. She didn't have to go through the agony and pain of burying me, of being left alone after my departure. I will be the one to go through that, and I thank God for that. I love her so much that I wouldn't have liked her to suffer..."
When my father finished speaking, my brothers and I had tears streaming down our faces. We hugged him and he comforted us, "It's okay. We can go home. It's been a good day."
That night I understood what true love is. It is more than just romanticism and sex, it's two people who stand beside one another, who are committed to one another ... through all the good and bad that life throws at you.

Saturday 9 December 2023

எமனாயிருந்தாலும், எவனாயிருந்தாலும், பேசாலைதாஸ்

 

எமனாயிருந்தாலும்,  எவனாயிருந்தாலும், பேசாலைதாஸ்

எமதர்மராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தார்..!

அவள் மானுடப் பெண் என்றாலும் ,

அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது.

அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன். 

அவர் மணந்த பெண் நல்லவள் தான்.

 என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது.  

மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார். 

ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் ,

மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார்.

மகன் கொஞ்சம் வளர்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார்.

மகனே..

நீ சிறந்த வைத்தியனாக வேண்டும்.  

மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம்.

   எப்படித் தெரியுமா...? 

ஒருவர் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன். 

 உனக்கு மட்டும் நான் கண்ணுக்குத் தெரிவேன்.

 நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே. 

நீ வைத்தியம் செய்து அவர் இறந்து போனால் உன் புகழ் குறையும்.

 எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால்,

 தைரியமாக மருந்து கொடு.

 அவன் பிழைத்து எழுந்து கொள்வான்.  

அதனால் உன் புகழ் மேலும் மேலும் பரவும் என்றார் எமன்.

   மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல்,

 மகனை அணைத்து கண்ணீர் விட்டு எமதர்மன் நழுவி விட்டார்.

மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான். 

அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான்.

 ஒருவர் கூடச் சாகவில்லை. எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள்.  

யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது,

 எதிரில் அப்பாவை (எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான்.

 இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது.

கொஞ்ச நாளில் அந்த ஊர் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள். 

யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை.  

இவனை அழைத்தார்கள். என் மகளைக் காப்பாற்றினால் ,

அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன்,

 ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா.  

அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி.

 எமன் (அப்பா) நின்று கொண்டிருந்தார்.

 வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள்.

 ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி,

 ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும்.

இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார்.  

எப்படி அவரை விரட்டுவது..?

 பளிச்சென்று யோசனை பிறந்தது. 

வாசல் பக்கம் பார்த்து கத்தினான். 

அம்மா....!!

அப்பா உள்ளே இருக்கார். 

ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினேயே....!!

இங்கே தான் இருக்கார்..அம்மா ...!

   என்று அலறினான்....!

 அவ்வளவுதான் துண்டைக் காணோம் ,

துணியைக் காணோம் என்று எமன் ஓட்டமாக ஓடியேவிட்டான்....!!

 கட்டுனது     எமனாயிருந்தாலும்,

 இல்லை எவனாயிருந்தாலும், 

பொண்டாட்டிக்கு பயந்தே தான் ஆகனும்..

 மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

Wednesday 29 November 2023

நீண்ட காலத்திற்கு முன்பு, விலங்குகளின் ராஜ்ஜியத்தில், ஒரு செம்மறி ஆடு சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு கூண்டுக்குள் சிங்கம் அழுவதைக் கண்டது, சிங்கம் "நான் உன்னை கொன்று சாப்பிட மாட்டேன்" என்று உறுதியளித்து., ஆட்டிடம் தன்னைக் காப்பாற்றும்படி கெஞ்சியது,

ஆனால், செம்மறி ஆடு மறுத்துவிட்டது. சிங்கம் மீண்டும் மீண்டும் வற்புறுத்திய பிறகு, அதன் வார்த்தையை நம்பி செம்மறி ஆடு சிங்கத்தின் கூண்டைத் திறந்தது.

சிங்கம் உணவு இல்லாமல் பல நாட்கள் கூண்டில் இருந்ததால் மிகவும் பசியுடன் இருந்தது. 

அது செம்மறி ஆட்டை கொன்று சாப்பிடுவதற்காக  எட்டிப் பிடித்தது, ஆனால், செம்மறி ஆடு சிங்கத்தின் வாக்குறுதியை நினைவுபடுத்தியது. மற்ற விலங்குகள் அவ்வழியாக கடந்து போகையில், சிங்கம் மற்றும் ஆட்டின் வாக்குவாதத்தை பார்த்து என்ன நடந்தது என்பதை அறிய முற்பட்டன. 

சிங்கமும், செம்மறி ஆடும் என்ன? நடந்தது என்பதை விவரித்தன.

ஆனால், சிங்கத்தின் மேல் உள்ள பயத்தால் மற்ற விலங்குகள், நாங்கள் ஏதும் சொல்ல முடியாது என்று நழுவின.  ஆனால், ஆமையைத் தவிர அனைத்து விலங்குகளும் சிங்கத்தின் பக்கம் சாய்ந்தன. ஆமை மட்டும் ஆட்டை காப்பற்ற முற்பட்டது.

அப்போது ஆமை சிங்கத்திடம், செம்மறி ஆடு உன்னைக் காப்பாற்றுவதற்கு முன்பு, நீ இருந்த இடத்தைக் காட்டு என்று கேட்டது. சிங்கம் அந்த கூண்டைக் காட்டியது. ஆமை கேட்டது,  ஆடு வந்தபோது நீ உள்ளே இருந்தாயா? வெளியில் இருந்தாயா? என்று கேட்டது.  

சிங்கம் தான் உள்ளே இருந்ததாகச் சொன்னது. ஆமையோ "சரி, உள்ளே நுழையுங்கள், உண்மையில் சிரமத்தில் இருந்தீர்களா?  என்று பார்ப்போம்" என்றது. சிங்கம் உள்ளே நுழைந்தது.. அடுத்த கணம் ஆமை சிங்கத்தின் கூண்டைப் பூட்டியது.

ஆச்சரியத்துடன், மற்ற விலங்குகள் ஆமையிடம் "ஏன் இப்படி செய்தாய்?என்று கேட்டன.

அதற்கு ஆமை  "இன்று இந்த ஆட்டை காப்பாற்றாமல் சாப்பிட அனுமதித்தால்,  நாளையும் சிங்கம் பசியுடன் இருக்கும். நாளை நம்மில் ஒருவரை சாப்பிடும் என்று ஏன்?உங்களுக்கு புரியவில்லை.

இன்று அவனுக்குத்தானே பிரச்னை என்று கடந்து சென்றால், அது.. விரைவில் உங்களிடம் வரும். 

"மற்றவர்களை ஒரு பிரச்னையில் இருந்து காப்பாற்றினால், நாளை நாமும் காப்பற்றப்படுவோம்". இது இயற்கையின் நியதி என்றது ஆமை.

ஆம்.. நட்புகளே!

இன்று நீங்கள் தீமையை ஆதரிக்காதீர்கள்,. ஏனென்றால், இன்று..

அது உங்களை நேரடியாக பாதிக்காது, ஆனால், நாளை அது உங்களிடம் வரலாம். 

Sunday 5 November 2023

நடைபாதை

 நடைபாதை    பேசாலைதாஸ்

ஆப்பிரிக்காவிலே ஹம்மாஸ் என்ற நீதிபதி இருந்தார்.

ரொம்ப எளிமையான மனிதர். 

தான் செய்கின்ற பதவிக்காக அரசாங்கத்திடமிருந்து ஊதியம் கூட வாங்குவதில்லை.

 சரி அப்படி என்றால் குடும்பச் செலவுக்கு என்ன செய்கிறார்? இரவு நேரங்களில் புத்தகங்கள் எழுதுவார். 

அதை விற்று அதிலிருந்து வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தினார். 

வீட்டு வேலைக்கும் யாரையும் வைத்துக் கொள்வதில்லை.

தினமும் ஆற்றுக்கு போய் குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வர வேண்டியது இவருடைய வேலை. 

மக்கள் எந்த நேரத்தில் வந்தாலும் விசாரித்து தீர்ப்பு வழங்குவார். 

இரவு என்றாலும் சரி கதவை தட்டினால் தீர்ப்பு வழங்குவார். இதனால் மக்களுக்கு அவர் பெயரில் மிகவும் மரியாதை.

அந்த ஊர் முதல் மந்திரி அவருக்கு ஒரு பணமுடிப்பை பரிசாக கொடுக்க முன் வந்தார். 

இவர் அதை மறுத்து விட்டார்.

சரி உங்களுக்கு ஒரு உதவியாளரையாவது ஏற்பாடு செய்கிறேன் என்றார்.

 அவர் அதுவும் வேண்டாம் என்றார்.

 சரி ஒரு வேலையாளையாவது அனுப்புகிறேன் என்றார்.

 தேவையில்லை என்றார் இவர்.

 நீங்கள் வெளியே போக வர ஒரு வாகனம் ஏற்பாடு செய்கிறேன்.

 அதுவும் வேண்டாம் என்றார்.

 நீதித்துறையில் நீங்கள் பல பொறுப்புக்களை வகிக்கிறீர்கள். அதனால் இரவு நேரத்தில் நீங்கள் நூல்கள் எழுதுவதற்கு அது தடையாக இருக்கும். அரசாங்க நிதியில் இருந்து சிறு தொகையாவது சம்பளமாக வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்.

 நான் மக்களுக்கு பணியாற்றுகிறவன். 

 மக்கள் தொண்டுக்கு ஊதியம்  எதையும் நான் வாங்க விரும்பவில்லை என்றார்.

முதலமைச்சர் பார்த்தார் சரி இதுக்கு மேல் இவரை வற்புறுத்தினால் இவர் பதவியில் இருந்து விலகினாலும் விலகி கொள்வார். 

ஒரு நல்ல நீதிபதியை நாம் இழக்கக்கூடாது என்று நினைத்து அதோடு விட்டு விட்டார்.

அந்த ஊரில் ஒருத்தர் ஆடு மாடு வைத்திருந்தார். 

அவைகளை எல்லாம் ஓட்டிக்கொண்டு போய் புல் வெளியிலே மேய விடுவார். 

இவர் உட்கார்ந்து அதை கவனிப்பதற்கு ஒரு நிழலான இடம் தேவைப்பட்டது.

அந்தப் புல்வெளி பக்கத்தில் இருந்த ஒரு நடைபாதை ஓரமாக தன்னுடைய நண்பன் ஒருவனுடைய வீட்டை ஒட்டி ஒரு குடிசை போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தார்.

நண்பன் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

இது நடைபாதை. 

இதிலே குடிசை போடக்கூடாது என்றான் நண்பன்.

இரண்டு பேருக்கும் தகராறு வந்துவிட்டது. 

சரி இதற்கு மேலே நமக்குள் வம்பு வேண்டாம். 

பேசாமல் நீதிபதியிடம் போய் முறையிடுவோம் என்று முடிவு செய்தார்கள். 

இரண்டு பேரும் நீதிபதியை தேடி போனார்கள். 

நீதிபதி யார் என்று அவர்களுக்கு தெரியாது. 

நீதிமன்றத்தை நோக்கி அவர்கள் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். 

எதிரில் ஒருவர் தண்ணீர் குடத்தை சுமந்து கொண்டு வந்தார். 

அவரைப் பார்த்து ஊர் நீதிபதியை பார்க்க வேண்டும். எங்கே இருப்பார்? என்று கேட்டார்கள்.

நான்தான் நீதிபதி. உங்களுக்குள் என்ன தகராறு? என்று கேட்டார் அவர்.

ஐயா வணக்கம்! 

எங்கள் பிரச்சனையைச் சொல்கிறோம். 

ஆனால் நீங்கள் தண்ணீர் குடத்தை சுமந்து கொண்டிருக்கிறீர்கள். 

அதை கொஞ்சம் கீழே இறக்கி வையுங்கள். 

பின்னர் நிதானமாக நாங்கள் சொல்வதை கேளுங்கள் என்றார்கள்.

 அதற்கு நீதிபதி  இது மக்கள் நடந்து போகிற நடைபாதை. அதனால் நான் வைத்திருக்கிற குடத்தை இங்கே இறக்கினால் இந்த வழியாக போகும் ஜனங்களுக்கு இடைஞ்சல் ஏற்படும். 

 எனவே நான் அதைச் செய்ய விரும்பவில்லை. 

நீங்கள் சொல்லுங்கள் என்றார்.

சரி ஐயா நாங்கள் போயிட்டு வருகிறோம் என்று இரண்டு பேரும் புறப்பட்டார்கள்.

 என்ன இது உங்கள் பிரச்சனை என்னவென்று சொல்லவில்லை. நான் அதற்கு தீர்க்கும் சொல்லவில்லை. அதற்குள் கிளம்பி விட்டீர்களே என்றார் நீதிபதி.

 நீங்கள் தீர்ப்பு சொல்லி விட்டீர்கள். 

 அதனால்தான் புறப்பட்டு விட்டோம் என்றார்கள் இவர்கள்.

 உண்மை தானே தன் கையிலே இருக்கிற குடத்தை தரையிலே வைக்க விரும்பாத ஒருவர் நடைபாதையில் குடிசை போடுவதை எப்படி சரி என்று ஒத்துக் கொள்வார் நீதிபதிக்கு நன்றி சொல்லிவிட்டு தன் நண்பனிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு கிளம்பி விட்டார் அந்த ஆள்.

Saturday 28 October 2023

விழி மூடிய நீதி!
                                   ( சரித்திர நாடகம்)
                                                           காட்சி ஒன்று
மேடை எங்கும் இருள் பரவி நிற்கின்றது. மேடையின் நடுவே, மிக மிக முன் பாக ஒரு தூண் கம்பீர மாக நிற்கின்றது. அதன் மேலே ஒரு மண்டை யோடு தெரிகின்றது. அதன் மீது மட்டும் ஒலி பாய்ச்சப்படுள்ளது. பின் பக்கம் கறு ப்பு திரை உள்ளது. அரசதரப்பு வழக்குரைஞர் மேடையிலே தோன்றுகின்றார்
வழக்கறிஞர்: சபையோரே,சரித்திரம் பற்பல கொலைகளை
 சந்தித்துள்

                              ளது. அந்த கொலைகளுக்கு நீதி விசாரணைகள் நடத்தப்
                              படவில்லை. அக்கொலைகள் யாவுமே நீதியின் கண்களுக்கு
                              மறைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டையோடு கிறிஸ்து வாழ்
                              ந்த காலத்திற்கு  உரியது என தடயவியல் சான்றுகள் சொல்
                              கின்றது, அதுவும் சிரைச்சேதம் செய்யப்பட்ட கொலையாக
                              இருக்கின்றது என தடய வல்லுணர்கள் எடுத்திரக்கின்றா
                              ர்கள். அப்படி இயேசு காலத்தில் சிரைச்சேதம் நடந்து உள்ளது
                             என்றால் அது யோவான் என அழைக்கப்படுகின்ற ஸ்நாபக
                             அருளப்பரின் கொலையாகவே இருக்கமுடியும், வாருங்கள்
                             என்ன நடந்தது என்று பார்ப்போம்!
பார்ப்போம் என்று சொல்லிவிட்டு தூனையும், மண்டையோட்டையும் எடுத்து செல்கின்றார். பின் பக்கம் உள்ள கறுப்பு திரை விலகுகின்றது)
                                                        காட்சி இரண்டு
 ஏரோது, ஏரோதியாள், மந்திரிகள் சபையில் வீற்றிருக்க, சலோமி ஆடலுடன் அரங்கத் தில் பிரவேசிக்கின்றாள். சலோமியின் நடனம், எபிரேய பாணியில் அமைவது நல்லது.
ஏரோது: அபாரம் அற்புதம் கலிலேயா தெசமெங்கும் இப்படிப்பட்ட ஒரு
                   நடனத்தை யாருமே கண்டுகளித்திருக்கமாட்டார்கள், நாட்டிய
                  நாடகபேரொளி, உலகம் போற்றும் நடன நர்த்தகி என் மகள்
                  சலோமையே உன் நாட்டிய விருந்துக்கு நான் ஒரு பரிசு தரவேண்
                  டுமே! கேள் எதுவானாலும் கேள் தருகின்றேன்.
(உடனே எரோதியள் எழுந்து)
ஏரோதியாள்: சலோமை, யோவானின் தலையை பரிசாக கேள்!
ஏரோது:  யோவான் தலையா? பரிசாகவா? ஏன் இந்த கொலைவெறி?
                     எதற்காக அவன் தலை உனக்கு?
ஏரோதியாள்: என் மணவாளரே! அந்த யோவான் ஒரு விச ஜந்து! உம்மை
                                யும் என்னையும் பற்றி அவதூறு பேசித்திரிகின்றான்,
                               அதுமட்டுமல்ல இயேசு என்ற புரட்சியாளனுக்கு ஸ்நானம்
                               கொடுத்து, வரப்போகின்ற யூத ராஜா இயேசு என நாடெங்
                               கும் பிரசங்கம் செய்கின்றான். இறை அரசை இந்த உலகத்
                              தில் நிறுவவேண்டும் என துடிக்கின்றான். இவனை விட்டால்
                              உமதுப்பதவிக்கே ஆபத்து, உடனே அவனை படுகொலை
                              செய்யவேண்டும்!
ஏரோது:    என்ன இன்னுமொரு அரசு, உரோமை பேரரசுக்கு எதிராகவா?
                      அரச சதிப்புரட்சிக்கு யோவானும் இயேசுவும் தீட்டம் தீட்டுகின்
                      றார்களா? இத அப்படியே விட்டுவிடக்கூடாது, முளையிலேயே
                     கிள்ளி எறியவேண்டும், ஏரோதியாள் சொல்லவதே சரியானது!
                      எங்கே காவலா! யோவானின் தலையை சிரைச்சேதம் செய்து
                      அவன் தலையை பரிசாக சலோமைக்கு கொடு
(திரை மூடுகின்றது,)
                                                            காட்சி மூன்று
(மீண்டும் வழக்கறிஞர் மண்டையோட்டு தூணுடன் மேடையிலே, மிக மிக முன் பக்கமாக தோன்று கின்றார். பின் பக்கமாக கறுப்பு திரைச்சீலை தென்படுகின்றது. )
வழக்கறிஞன்: யோவானுக்கு என்ன நடந்தது என்று இப்போது எல்லோருக்
                                  கும் தெரியும், இந்த கொலை பற்றி விசாரிக்கப்பட வேண்டி
                                  யவர்கள் ஏரோது அவன் மணைவி எரோதியாள், இந்த
                                  குறுக்கு விசானையை தொடங்கு முன்பு, இந்த கொலைக்கு
                                  முக்கிய காரணம், யோவான் இயேசுவோடு இணைந்து
                                  இறை இராட்சியத்தை இவ்வுலகத்தில் அமைக்க முயற்ச்சி
                                  க்கின்றார்கள் என்பதே! இந்த சந்தேகத்தின் அடிப்படை
                                  யில், இயசுவை கொலை செய்வதற்கு பரிசேயர்கள், சதுசே
                                 யர்களின் சதித்திட்டம் பின்னணியாக இருக்கின்றது
                                 என்பதே உண்மை! இயேசுவின் கொலை ஆய்வு செய்யப்பட
                                 வேண்டும்.
( வழக்கறிஞன் மீண்டும் மண்டையோட்டு தூணை துக்கிக்கொண்டு மறை கின்றார், பின்பக்க உள்ள கறுப்பு திரை விலகுகின்றது, மேடையில் இடப் புறமாக இருந்து சில சிறுவர்கள் அரங்கத்தில் பிரவேசிக்கின்றார்கள். அவர்கள் கைகளில் ஒலிவ மரக்கிளைகள் இருக்கின்றன, ஓசானா தாவீ தின் குமரன் ஓசானா ஓசானா என்று சிறுவர்கள் பாட பின்னணி குழுவி னரும் சேர்ந்து குரல் கொடுக்க இயேசு வெள்ளை அங்கியோடு மேடைக்கு வந்து அப்படியே வலப்புறமாக மேடையை விட்டு விலகுகின்றார், மெல்லி தயாக, ஓசான்னா என்ற பாடல் இசை இசைத்துக்கொண்டே இருக்க வேண் டும். பின்பக்கமுள்ள கறுப்பு சீலை விலகுகின்றது,  மேடை இப்போது
சியோன் ஆலையாமாக காட்சி அளிக்கின்றது. சதுசேயர்கள், பரிசேயர் கள் கூட்டமாக ஒரே தொனியில் ஜெகோவை கடவுளை  ஆராதிக்கின்றா ர்கள். ஆராதனை செபத்தை தலைமக்குரு ஆனாஸ் ஆரம்பிக்கின்றார்)
ஆனாஸ்: வானத்தையும் பூமியையும் சகல சிருஸ்டிகளையும் படைத்தளி  
                      த்த எமது தந்தையே உம்மை புகழ்கின்றோம். எங்கள் பிதாப்
                     பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்,யாக்கோபு, மோசே இவர்கள்
                     கடவுளான எமது தந்தையே உம்மை புகழ்கின்றோம், உமது தெரி
                     ந்து கொள்ளப்பட்ட இனமாக இஸ்ரவேலராகிய எம்மை உமது
                      பிள்ளைகாக தெரிந்தெடுத்தமைக்காக எமது தந்தையே உம்மை
                     புகழ்கின்றோம். 
பரி+ சதுசேயர்கள் எல்லோரும், எமது தந்தையே உம்மை  புகழ்கின்றோம். 
என்பதை மட்டும் உச்சரிக்கின்றார்கள், இப்பொழுது ஓசான்னா என்ற பாட லின் இசை சற்று பெரிதாக கேட்கின்றது.
ஆனாஸ்: ஓசான்னா என்ற வாழ்த்தொலி கேட்கின்றதே! என்ன அது?
 (என்று கேட்க பரிசேயரில் ஒருவன்)
பரிசேயன் 1: அதை என்னவென்று சொல்வது தலைமைக்குருவே! இயேசு
                             என்ற அந்த மந்திரக்காரன் பாஸ்கா பண்டிகையை கொண்
                            டாட எமது புனித நகராம் ஜெருசலேமுக்கு வருகை தந்துள்
                            ளான். அவனை யூதர்களின் இராசாவே வருக வருக என வாழ்
                            த்தி வரவவேற்பதாக கேள்விப்பட்டேன்.
ஆனாஸ்:  என்ன உளறுகின்றாய், யூதர்களின் இராசாவா? அப்படியா என்று
                       அவன் சொன்னான்.
பரிசேயன் 2: அதுமட்டுமல்ல குருவே, தான் கடவுளால் அனுப்பட்ட மெசியா 
                              என்று தன்னைத்தானே சொல்லித்திரிகின்றான்.
சதுசேயன் : ஆமாம் ஆமாம் அப்படித்தான் அவன் சொல்லித்திரிகின்றான்.
                            அதுமட்டுமா? தான் கடவுளின் மகன், ஒரே பேரான மகன்
                           என்றும் பிதற்றுகின்றான்
ஆனாஸ்: கடவுளின் மகனா? அபச்சாரம அபச்சாரம்! இது தேவ தூசணம்!
                      இவன் தச்சன் மகன் யோசேப்பின் மகனல்லவா? இவன் தாய்
                      மரியாளும் தாவீது குலத்தவள் தானே! இவளது உறவுகளும் நம
                      க்குள் இருக்கின்றார்களே! அப்படி இருக்க இறை மகன் என்று 
                      எப்படி அவன் சொல்லக்கூடும்? கேட்கவே காது கூசுகின்றது!
பரிசேயன்1: அதுமட்டுமா சொன்னான்! ஜெருசலேம் ஆலையத்தை இடித்
                            துவிடுங்கள், நான் மூன்று நாட்களுக்குள் கட்டி எழுப்புவேன்
                            என்று சொல்கின்றான்.
                                           (எல்லோரும் சிரிக்கின்றார்கள்)
ஆனாஸ்: என்ன பைத்தியக்காரத்தனமான பேச்சி இது! எம் பிதாப்பிதாக்
                     கள் இந்த ஆலையத்தைக்கட்டி முடிக்க பல்லாண்டுகள் முயற்ச்சி
                     த்தார்கள், இயேசு என்ற முட்டாள் மூன்று நாளில் முடிப்பானாம்!
                                              (மீண்டும் எல்லோரும் சிரிக்கின்றார்கள்)
பரிசேயன் 2: அதுமட்டுமா சொன்னான், புனித நகரம் ஜெருசலேம், அதன்
                              ஆலயம், கோட்டை கொத்தளங்கள், அரண்மனை, இந்த
                             ஜெபக்கூடம் எல்லாம் இடித்து அழிக்கப்படும், கல்லின் மேல்
                             கல் இராதபடி இடித்து அழிக்கப்படும், புதிய ஜெருசலேம்,
                             புதிய வானம் புதிய பூமி உருவாகப்படும் என எச்சரிக்கின்
                             ரான் இயேசு!
சதுசேயன்: ஆமாம் நானும் அப்படித்தான் கேள்விப்பட்டேன், உரோமை
                          இராச்சியம், யூத இராட்சியம் இவைகளை அழித்து, இறை
                          அரசை தன் தலமையில் அமைப்பதுவே அவன் திட்டம்!
பரிசேயன் 1: இந்த மாயக்காரன் இயேசு, பேயேல்ஸேபு என்ற பேய்களின் 
                             தலைமைப்பேயின் உதவியால், குருடர்களுக்கு பார்வை
                            அளிக்கின்றான், முடவர்களை நடக்கவைக்கின்றான்
பரிசேயன் 2: தொழு நோயாளர்களை தொட்டுக் குணமாக்கின்றான்,
                              இறந்தவர்களை உயிரோடு எழுப்புகின்றான். தனது மந்திர
                              தந்திரத்தால் மாயங்கள் செய்து, அதனை புதுமை என நம்
                              பவைத்து மக்களை புரட்சிக்கு வழிவகுக்கின்றான். இவனை
                             ஆதரித்து பேசிய பரபாஸும் இப்போது சிறையில் இருக்கி
                             ன்றான்.
சதுசேயன்: மக்களின் ஆதரவை அவன் திரட்டுவதும் உண்மையே!  இயேசு
                           சொல்வதையும், அவன் செய்வதையும் ஒருங்கிணைத்து பார்
                           த்தால் யூதர்களின் இராசா நான் தான் என்று சொல்லாமல் 
                           சொல்கின்றன்
பரிசேயன் 1: இப்படியே இந்த பைத்தியக்கார இயேசு உளறித்திரிந்தால்,
                               அதன் விளைவு என்னவாகும் தெரியுமா?
பரிசேயன் 2: யூத இராணுவம் ஜெருசலேமை ஆக்கிரமிக்கும், மக்களை
                            வாட்டி வதைக்கும்
பரிசேயன் 1: நாம் மீண்டும் நாடறவர்களாக, நாடோடிகளாக பாலைவனத்
                             தில் அலையவேன்டியது தான்!
பரி1+பரி2: ஆம் நாம் மீண்டும் பாலைவனத்தில் நாடறவர்களாக அலைய
                         வேண்டியதுதான்.
( எல்லோரும் ஒருமிக்க குரல் கொடுக்க, அங்கே கூச்சலும் குழப்பு உண்டா கின்றது)
ஆனாஸ் : அமைதி அமைதி சற்று பொறுமைகாருங்கள், இது பற்றி நான்
                       தமைக்குரு கயாபாவிடம் கலந்து பேசி முடிவெடுப்போம், அதற்
                       முன்னர் இயேசுவை அழைத்து அவனை கண்டித்து திருத்த
                        பார்க்கலாம், அல்லது நம் பக்கம் வளைக்கப்பார்க்கலாம்
                       என்ன சொல்கின்றிர்கள் சதுசேயரே!
சதுசேயர்: ஆமாம் அதுவும் சிறந்த யோசனைதான், இது பற்றி நான்
                         முன்னமே நினைத்ததுண்டு, ஆனால் அது இலேசான காரிய
                         மல்ல, இயேசுவுக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உண்டு.
                         கூடவே அவனது சீடர்களும் எப்போதும் புடை சூழ்ந்தவண்னம்
                         உள்ளார்கள். அவனை யாரும் அறிய வண்ணம் படை வீரர்
                        களை கொண்டு கைது செய்து அழைத்து வந்து, எச்சரித்தால்
                        அவன் அடங்கிவிடுவான்
பரிசேயன்1 : அவனை தனியாக கைது செய்வது இயலாத காரியம், கூட்டம்
                             அவன் பின்னால் அலைமோதுகின்றது.
சதுசேயர் : கொஞ்சம் பொறுங்கள், நான் திட்டம் வகுத்துள்ளேன், இயேசு
                         வின் சீடர்களில் ஒருவனாகிய யூதாஸ் ஸ்கரியோத்திடம் இரக
                          சியமாக தொடர்பு கொண்டு,  இயேசு தனிமையாக இருக்கும்
                         இரவு நேரம் எது? எந்த இடம் என்பதை தெரிவிக்க சொல்லி
                         இருக்கின்றேன். நீங்கள் அனைவரும் உடண்பட்டால் அவனை
                         இங்கே அழைக்கின்றேன்.
( எல்லோரும் தலையாட்டி ஆமோதிக்கின்றார்கள், சதுசேயன் ஆலையக் காவலாளியை அழைத்து, யூதாசை வரவழைக்கச்சொல்கின்றான்)
சதுசேயன்: யூதாஸ் ஜெருசலேமில் தான் இருக்கின்றான், இன்னும் சொற்ப
                           வினாடிக்குள் வந்துவிடுவான்.
(யூதாஸ் சபைக்கு வருகின்றான்)
சதுசேயன் : வருக வருக ஸ்காரியோத்! உன் வருகைக்காகவே நாங்கள் 
                            காத்திருந்தோம். நான் கேட்டதின் பிரகாரம் யேசு தனிமை
                            யாக இருக்கும் இடம், அவரை அழைத்துவரும், நேரம், காலம்
                           வசதியான சந்தர்ப்பம் இவைகளை சொல்வாயா ஸ்கரியோத்!
                           உனக்கு முப்பது வெள்ளிக்காசுகள் தருகின்றோம்
யூதாஸ்:        வசதியான சந்தர்ப்பம்,,,,,,,, முப்பது வெள்ளிக்காசுகள் ,,,,,,
                          நீங்கள் சொல்வதையும், செய்வதையும் பார்த்தால்,  ஏதோ ஒரு
                          உள்நோக்கம் இருப்பதாக தெரிகின்றதே!
சதுசேயன்: இல்லை இல்லை நீ நினைப்பது போல எந்த தீய உள்நோக்கம்,
                           எம்மிடம் இல்லை. இயேசுவின் செல்வாக்கும், அவரது புகழும்
                           யூத தேசம், கலிலியாதேசம் எங்கும் பரவி நிற்கின்றது,  அதி 
                           லும் சிறப்பாக இறை இராச்சியம் அமைக்கும் நோக்கமும்,
                           அவருக்கு இருக்கின்றது அல்லவா!
யூதாஸ்:        நீங்கள் சொல்வதும் சரிதான், இறை அரசை, பரலோக இராச்சி
                          யத்தை அறிவிப்பதே அவரின் போதனையின் நோக்கம்.
சதுசேயன் : ஆமாம் அதினால் தான், அவர் அமைக்க இருக்கும் இராச்சிய
                           பரிபாலனத்தில் நாங்களும் பங்கு கொள்ள சந்தர்ப்பம் கிடை
                            க்குமா? என்பதை இயேசுவிடம் இரகசியமாக கேட்டு அறிவ
                           தற்கே அவரை தனியாக உரோமை இராணுவத்தை அனுப்பி
                           அவரை அழைத்துவர ஏற்பாடுகள் செய்கின்றோம். இது
                          குறி த்து உரோமை ஆளுணர் பிலாத்துவுக்கு சந்தேகம் வரக்
                          கூடாது அல்லவா! அதற்குத்தான் இந்த ஏற்பாடு!
யூதாஸ்:        அப்படியா இது சிறந்த யோசனை,நான் தான் சீடர்களின் கஜா
                          னாவுக்கு பொறுப்பாளன், பாஸ்கா பண்டிகை கொண்டாட்டம்
                         வேறு, கையில் பணம் ஏதும் இல்லை, இந்த முப்பது வெள்ளிக்
                          காசு துணையாக இருக்கும்!
( யூதாஸ் பணப்பை சதுசேயரிடம் இருந்து வாங்குகின்றான்)
பரிசேயன்1: இதில் ஒரு சிக்கல் இருக்கின்றது, உரோமை வீரர்களுக்கு 
                             இயேசு யார் என்று தெரியாது, ஒருவேளை ஆள் மாறி அழை
                              த்துவந்துவிட்டால்,,,,,,,,,,,?
யூதாஸ் :      அந்த பிரச்சனை உங்களுக்கு ஏன்? நான் யாரை முத்துமிடுகி
                         ன்றேனோ, அவர்தான் இயேசு என இராணுவ வீரர்களுக்கு
                         சொல்லிவிடுகின்றேன்.
சதுசேயன்: நீ ரெம்ப ரெம்ப புத்திசாலி ஸ்காரியோத்!
( பணப்பை வாங்கிக்கொண்டு யூதாஸ் செல்கின்றான்.  மற்றவர்கள் சந்
தோச அக்களிப்பில் மனமகிழ்கின்றார்கள், திரை மூடுகின்றது)
                                                            காட்சி நான்கு
(திரை விலகுகின்றது, அங்கே கெத்சமனே தோட்டம் தெரிகின்றது
அப்போஸ்தலர்கள் அயர்ந்த தூக்கம், இயேசு மட்டும் விழித்திரு ந்து செபிக்கின்றார். அப்போது படை வீரர்களோடு யூதாஸ் வருகின்றான்)
இயேசு :  இனி நீங்கள் நித்திரை கொண்டு இளைப்பாறுங்கள். 
                    இதோ மனுமகன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொ
                    டுக்கும் வேளை வந்தது, என்னைக்காட்டிக்கொடுக்கின்
                    றவன் இதோ வந்துவிட்டான், எழுந்திருங்கள் போவோம்.
(யூதாஸ் இயேசுவிடம் வந்து,  ராபி என முத்தம் கொடுக்கின்றான்)
இயேசு:   நண்பனே என்னை முத்தம் இட்டு காட்டிகொடுக்கி
                   ன்றாயா? 
என்கின்றார்.  இராணுவ வீரர்கள் இயேசுவின் மீது கைவைத்து அவரை கட்டுவதற்கு எத்தனிக்கின்றார்கள். இந்த கலவரத்தில் இயேசுவின் சீடன் ஒருவன் பட்டயத்தை உருவி படை வீரனின் கதை வெட்டுகின்றார்.)
இயேசு: பட்டயத்தை உறையினுள் போடு, பட்டயத்தை எடுக்கின்
                  றவன் பட்டயத்தாலே மடிவான். நான் இப்பொழுது என்
                  பிதாவினிடத்தில் வேண்டிக்கொண்டால் அவர் பனிரெ
                 ண்டு லேகியோனுக்கு  அதிகமான துதர்களை அனுப்பமா
                 ட்டாரோ என நினைக்கின்றாயா? அப்படி நான் செய்தால்
                இவ்விதமாய் நிகழவேண்டும் என்கின்ற சம்பவம் எப்படி
                நிகழக்கூடும்? 
                                               ( இயேசு படைகளை பார்த்து)
இயேசு: கள்ளனை பிடிக்க புறப்பட்டது போல, நீங்கள் பட்டயங்க
                  ளோடும் தடிகளோடும் என்னை பிடிக்கவந்தீர்கள். நான்
                  தினம் தோறும், ஆலையத்தில் உங்கள் நடுவேஉட்கார்ந்து 
                   போதகம் செய்தேனே, அப்போது என்னை பிடிக்கவி
                 ல்லையே, ஆகிலும் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறும் படி
                 இப்படி நடக்கின்றது.  
இயேசுவை பிடித்து இழுத்து செல்கின்றார்கள், யூதாஸ் மற்றும் சீடர்கள் அங்கிருந்து ஓடிப்போகின்றார்கள் திரை மூடுகின்றது)
                                                     காட்சி ஐந்து
(மூப்பர்களின் மண்டபம், பரிசேயர் சதுசேயர் பிரதான ஆசாரி யான் காய்பா எல்லோரும் இருக்கின்றார்கள். இயேசுவை அங்கே இழுத்து வருகின்றார்கள்)
பரிசேயன்1: இவன் ஜெருசலேம் தேவாலையத்தை இடித்துவிடு
                             ங்கள், மூன்று நாளில் அதனை கட்டி எழுப்புவேன்
                            என்கின்றான்.
பரிசேயன் 2: இவன் தானே மெய்யான தேவ குமாரன் என்று
                              தேவதூசனம் சொகின்றான், இறைவனை தனக்கு
                              சமமாக எண்ணுகின்றான். அதனை மக்கள் நம்பும்
                              படியா போதிக்கின்றான்
சதுசேயன்: நமது யூத மதவழக்கத்தை புறக்கணிக்கும்படியும்,
                          மோசே நமக்களித்த சட்டங்களும் செல்லுபடியாகது
                           என்கின்றான்
பரிசேயன் 1: நம்மைவிட புறஜாதியினரே மீட்படைவர் என்று எமது 
                             இனத்தை காட்டிக்கொடுக்கின்றான். இவன் ஒரு இன
                             த்துரோகி!
பரிசேயன் 2: இஸ்ரவேலர்கள் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட
                            வில்லை, மாறக இஸ்ரவேலர்களை சிதறடிப்பார் என 
                            சாபம்வேறு விடுகின்றான்.
சதுசேயன்: இவன் நமது யூத வழக்கத்தின்படி கொலை செய்ய
                           ப்பட வேண்டும்
கொலை செய்யப்பட வேண்டும் என சதுசேயன் சொன்னவுடன் 
அந்த வசனத்தை எல்லோரும் பலத்த சத்தமாக உச்சரிக்கின்றனர்)
பிரதான ஆசாரி: இவர்கள் எல்லோரும் உனக்கு விரோதமாக 
                                      சாட்சி சொல்வதை குறித்து ஏன் நீ பேசாமல்
                                     இருக்கின்றாய்?
இயேசு அமைதியாக இருக்கின்றார், பிரதான ஆசாரி 
பிரதான ஆசாரி: நீ எங்கள் தேவனுடைய குமாரன் தானா? அதை நீ
                           சொல்லும் படி ஜீவனுள்ள தேவன் பேரில் ஆணை
                          யிட்டு கேட்கிறேன்.
இயேசு: நீர் சொன்னபடி தான், அன்றியும் மனுச குமாரன், சர்வ 
                 வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும்,
                 வானத்து மேகங்கள் மீது வருவதையும், இது முதல் காண்                      பீர்கள் என்று உங்களுக்கு சொல்கின்றேன்! 
இதனை கேட்டவுடன், பரிசேயரில் ஒருவன் தன் ஆடையை கிழித்துக்கொண்டு
பிரதான ஆசாரிஇவன் தேவதூசனம் சொன்னான், இனி நமக்கு
                                       சாட்சியங்கள் வேண்டியதென்ன? இதோ இவன்
                                      சொன்ன தேவதூசனத்தை இப்பொழுது கேட்டீர்
                                      களே! உங்களுக்கு என்னமாய்த்தோன்றுகின்றது
எல்லோரும்:             இவன் மரணத்துக்கு பாத்திரமாக இருக்கின்
                                       றான்! இவன் கொலை செய்யப்படவேண்டும்
                                        இவன் கொலை செய்யப்படவேண்டும்
(இவன் கொலை செய்யப்படவேண்டும், என்ற கோசம்  வலுக்கின் றது, பரிசேயர்கள், சதுசேயர்கள் எல்லோரும் ஒன்றாக பாய்ந்து, இயேசுவை காறி துப்புகின்றார்கள். ஒருவன் இயேசுவின் மேல்  ஒரு துணியை மூடி, அவரை அடிக்கின்றார்கள், தலையில் குட்டுகி ன்றார்கள்)
பரிசேயன்1: கிறிஸ்துவே உம்மை அடித்தவன் யார் என்று உமது
                            தீர்க்கதரிசனாத்தல் சொல்லும், உம்மை நாம் நாம்பு
                            கின்றோம்.
பரிசேயன் 2: இந்த தேவதூசனக்காரனை சிலுவையிலே அறைந்து
                            கொல்லுவதற்கு, உத்தரவு பெற, இவனை ஆளுனர்
                            பிலாத்துவிடம் அழைத்து செல்லவேண்டும்.
பரிசேயன்2: இவன் மீது உள்ள குற்றங்கள் கணக்கில் அடங்காது,
                             ஜெருசலேம் ஆலையத்தை இவன் இடிக்கப்பார்த்
                            தான், ஆலையத்தை இடித்துவிடுங்கள் அதை நான்
                            மூன்றே நாளில் கட்டி எழுப்புவேன் என சவால் விடுகி
                           ன்றான். எங்கள் பிதாப்பிதாங்கள் கட்டிய கோவிலை
                            இடிப்பதற்கு இவன் யார்?
பரிசேயன் 3: அதுமட்டுமா இவன் சொன்னான். தான் மெய்யான
                              தேவனாகிய ஆண்டவரின் மகன், என்றும் இறை         
                              சாம்ராட்சியத்தை தோற்றுவிக்க வந்த இறை தூதன்
                              மெசியா என்னும் மீட்பர் என்கின்றார்.
எல்லோரும்:  ஆமாம் இவனை சிலுவையிலே அறையும், அதிகா
                             ரம் பிலாத்துவிடமே உண்டு, எனவே இவனை ஆளு
                             ணர் பிலாத்துவிடம் கொண்டுபோகவேண்டும்.
( இயேசுவை எல்லோரும் பிலாத்துவின் அரன்மணைக்கு இழுத்துச்சென்றார்கள். திரை மூடுகின்றது)
                                                    காட்சி ஆறு
                        (பிலாத்துவின் அரன்மனை காட்சி)
( இயேசுவை கொல்லவேண்டும், இயேசுவை கொல்லவேண்டும், என்ற கோசத்தோடு, இயேசுவை கட்டி இழுத்துக்கொண்டு, பரி சேயர் கும்பல் பிலாத்து முன் தோன்றுகின்றனர்)
பிலாத்து: இந்த மனிதன் யார்? எதற்காக இவனை என்னிடம்
                     அழைத்து வந்தீர்கள்? இவன் செய்த குற்றம் என்ன?
பரிசேயன் 1: இவன் குற்றமற்றவாராக இருந்திருந்தால் நாங்கள்
                             இவனை உம்மிடம் கொண்டுவந்திருக்கமாட்டோம்.
பரிசேயன் 2: மெசியாவாம், மீட்பராம் அது மட்டுமல்ல , தான் யூத
                              ராஜா என்று உரிமை கொண்டாடுகின்றான்
பரிசேயன் 1: இவன் கலிலேயா தேசம் எங்கும் சுற்றித்திரிந்து 
                              மாயங்கள் செய்து மக்களை தன் பக்கம் சேர்க்கின்
                              றான். புரட்ச்சிக்கு வித்திடுகின்றான். உரோமை
                             இராச்சியத்துக்கு எதிராக செயல்படுகின்றான்.
பிலாத்து:      இவன் கலிலேயா நாட்டவனா? அப்படியானால் 
                           கலிலேயா ஆளூனர் ஏரோது ஜெருசலேம் வந்துள்ளார்
                            இயேசுவை ஏரோதுவிடம் அனுப்புகின்றேன் அவரும்
                            இவரை விசாரிக்கட்டும்!
( திரை விலகுகின்றது. இப்போது இயேசு எரோது முன்னிலையில் தோன்றுகின்றார்)
ஏரோது: வருக வருக யேசுவே! உம்மைக்குறித்து நான் அனேகம்
                    கேள்விப்பட்டேன். உம்மை காணவேண்டும் என ஆசைப்
                    பட்டேன். பிலாத்துவுக்கும் எனக்கும் ஆகாது, ஆயினும்
                    உன்னை என்னிடம் அனுப்பினான். இன்றுமுதல் நாம்
                     இருவரும் நண்பர்களானோம். நல்ல காரியம் உன்னால்
                     நடந்துள்ளது. பிலாத்து உன்னை என்னிடம் அனுப்பும்
                     அளவுக்கு நீ என்ன காரியம் செய்தாய் சொல்!
( இயேசு பதில் ஏதும் கூறாமல் மெளனம் காக்கின்றார்)
பரிசேயன் 3: இவன் பதில் சொல்லமாட்டான்! இறுமாப்புகாரன்.
                             நான் சொல்கின்றேன். இவன் ஜெருசலேம் ஆலையத்
                             இடித்து, அதை மூன்று நாளில் கட்டுவேன் என்றான்.
பரிசேயன் 2: தன்னை மெசியா, தேவனின் ஏக குமாரன் என 
                              சொல்லித்திரிகின்றான், அதை நம்பும் படி மாயம்
                              செய்து புதுமை என்கின்றான்.
ஏரோது:  ஆமாம் இவன் நிறைய அற்புதங்கள் செய்வதாக அறிந்
                    தேன். இயேசுவே நீ எனக்கு அற்புதம் ஒன்று செய்வாயா?
                    உன்னை நான் கடவுளின் மகன் என்று ஏற்றுக்கொண்டு
                     உனக்கு சிபார்சு பண்ணுகின்றேன்.
                    ( இயேசுவின் எள்னம் தொடர்கின்றது)
பரிசேயன் 1: மன்னவரே இவன் பதில் சொல்லமாட்டான், பேரரசு
                             மன்னருக்கே பதில் சொல்வான், இவன்தான் யூத
                              இராஜா என்று தன்னத்தானே சொல்கின்றானே!
ஏரோது:  ஆமாம் நானும் அதை மறந்துவிட்டேன். யூத ராஜாவுக்கு
                    உரிய மரியாதை கெளரவம் எல்லம் இவனுக்கு அளித்து
                     பிலாத்துவிடம் மீண்டும் அனுப்புவோம்
( இயேசுவுக்கு கரும்பு தடி கோலாக கொடுத்து, முள்முடி தரித்து,
சிகப்பு போர்வை போர்த்தி பரிகாசம் செய்து, பிலாத்துவிடம் மீண்டும் அனுப்புகின்றார்கள். இப்போது பிலாத்துவின் அரன்
மனையில் மீண்டும் இயேசு)
பரிசேயன் 2: ஆளுனரே இவன் எரோது ராஜாவை மதிக்காமல், பதில் ஏதும்
                             சொல்லாமல் இருந்தபடியால், மீண்டும் உங்களிடம் அனுப்பி
                             விட்டார், எமது நியாயப்படி இவன் கொலசெய்யப்படவேண்
                             டும்.
  எல்லோரும்: இவனை சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்!          
பிலாத்து: அப்படியா இவனை நீங்களே கொண்டுபோய் உங்கள்
                       நியாயப்பிரமானத்தின்படி நியாய்ம் தீருங்கள்!
சதுசேயன்: ஒருவனை மரண தீர்வைக்கு, தீர்ப்பிடும் அதிகாரம்
                         எமக்கு இல்லை
பிலாத்து:       நீ யூதர்களின் ராஜாவா?
இயேசு:     நீராக இதை சொல்கின்றீர்களா? அல்லது மற்றவர்கள்
                     என்னைக்குறித்து இப்படி உமக்கு சொன்னார்களா?
பிலாத்து: நான் உம்மைப்போல யூதனா? உன் ஜனங்களும், உன்
                     ஆசாரியர்களும் உன்னை என்னிடத்தில் ஒப்புவித்தார்
                     களே! நீ என்ன குற்றம் செய்தாய்?
இயேசு: என் இராச்சியம், இவ்வுலகத்துக்கு உரியதல்ல, என் இராச்
                  சியம் இவ்வுலகத்துக்கு உரியதானல், நான் யூதர்களிடம்
                  ஒப்புக்கொடுக்காதபடி. என் ஊழிக்காரகள் போராடி இரு
                  ப்பர்களே. இப்படி இருக்க என் இராச்சியம் இவ்விடத்துக்கு
                  உரியதல்ல.
பிலாத்து: நீர் சொல்லும் தோரணையை பார்த்தால்,,,நீர் ராஜாவா?
இயேசு: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்! சத்தியத்தை குறி
                 த்து சாட்சி சொல்லவே நான் பிறந்தேன். அதற்காகவே 
                 நான் இவ்வுலகத்துக்கு வந்தேன். சத்தியவன் எவனும் என்
                 சத்தியத்தைக்கேட்கின்றான்.
பிலாத்து: சத்தியம்! ,,,, சத்தியமாவது என்ன? சிந்திக்கவேன்டிய
                      விடயம் (சற்று அமைதிக்கு பின்) மகா ஜனங்களே நான்
                      இவன் மீது எந்த குற்றத்தையும் காணொம்! பாஸ்கா 
                      பண்டிகையின் நிமித்தம் நான் உங்களுக்கு ஒருவனை 
                       விடுதலை பண்ணும் வக்கம் உண்டல்லவா? ஆகையல் 
                       யூதர்களின் ராஜாவாகிய இவனை விடுதலை பண்ண
                      உங்களுக்கு மனதுண்டா?
எல்லோரும்: இவனை அல்ல, இவனுக்கு  பதிலாக பரபாசை விடு
                           தலை செய்யுங்கள்! பரபாசை விடுதலை செய்யுங்கள்
பிலாத்து: அப்படியானால், யூதர்களின் ராஜா என்று நீங்கள் சொல்
                       லும் இவரை நான் என்ன செய்யவேண்டும் 
எல்லோரும்: இவனை சிலுவையில் அறைந்து கொல்ல உத்தரவு 
                             வேண்டும். சிலுவையில் அறையும், சிலுவையில்
                             அறையும், சிலுவையில் அறையும்!
பிலாத்து: சிலுவையில் அறைந்து கொல்லும் அளவுக்கு இவன்
                       என்ன பொல்லாப்பு செய்தான்?
எல்லோரும்: இவனை சிலுவையில் அறைந்து கொல்ல உத்தரவு 
                             வேண்டும். சிலுவையில் அறையும், சிலுவையில்
                             அறையும், சிலுவையில் அறையும்!
பிலாத்து: நான் இந்த மனிதன் மட்டில் ஒரு குற்றமும் காணவி
                      ல்லை என்பதை நீங்கள் அறியும் பொருட்டு, இதோ
                      அவரை இங்கே அழைக்கின்றேன். இதோ மனிதனை
                      பாருங்கள்!
எல்லோரும்: சிலுவையில் அறையும், சிலுவையில்அறையும்,
                              சிலுவையில் அறையும்!
                      
பிலாத்து: நீங்களே இவனை கொண்டுபோய் சிலுவையில் அறையு
                       ங்கள், இவரிடத்தில் ஒரு குற்றமும் காணோம்!
சதுசேயர்: ஆளுணரே எமக்கு என்று ஒரு நியாயப்பிரமாணம்
                        உண்டு. இவன் தன்னை இறைவனின் மகன் என்று
                       சொன்னபடியால், அந்த நியாய பிரமானத்தின் படி
                       இவன் சிலுவையில் சாகவேண்டும்! 
பிலாத்து: நீ எங்கிருந்து வருகின்றாய்?
பிலாத்து: நீ என்னோடு பேசமாட்டாயா?  உன்னை சிலுவையில் 
                       அறையவும், விடுதலை செய்யவும் எனக்கு அதிகரம்
                       உண்டு என உனக்கு தெரியாதா?
இயேசு: பாத்திரத்திலிருந்து உமக்கு கொடுக்கப்படாதிருந்தால், 
                  என் மீது உமக்கு ஒரு அதிகரமும் இல்லை. ஆகையால்
                  என்னை உம்மிடம் ஒப்புவித்தவனுக்கு அதிக பாவம்
                  உண்டு
சதுசேயர்: இவனை நீங்கள் விடுதலை பண்ணினால், நீ உரோமை
                       இராஜனுக்கு நண்பரல்ல,  தன்னை ராஜா என்கின்ற
                       எவனும் உரோமை ராஜனுக்கு எதிரியாகின்றான்
(இதை கேட்டவுடன் பிலாத்து கபத்தா என்ற நியாயசனத்திலே
அமர்ந்தான். இயேசுவை மன்றத்தில் முன் கொண்டுவந்தார்கள்)
பிலாத்து : இதோ மனிதனைப்பாருங்கள்!
எல்லோரும்: இவனை சிலுவையில் அறையுங்கள்! இவனை சிலு
                             வையில் அறையுங்கள்! 
பிலாத்து: நான் இவனை சிலுவையில் அறைந்து கொல்வதற்கான
                      இவன் மீது ஒரு குற்றமும் காணவில்லை, எனவே இவன்
                      கொலை மீது எனக்கு எந்தவித பங்கும் இல்லை என்பத
                       ற்காக இந்த பாவத்தில் இருந்து கை கழுவுகின்றேன்.
( பிலாத்து கைகழுவுகின்றான். மக்கள் மீண்டும் உரத்த சத்தமாக)
எல்லோரும்: இவன் இரத்த பழி, எங்கள் சந்ததி மீதும் இருக்கட்டும்
                              இவனை சிலுவையில் அறையும். இவனை சிலுவை
                             யில் அறையும்.
பிலாத்து: இதோ உங்கள் இஸ்டப்படி இவனை சிலுவையிலே
                      அறைந்து கொல்லும் படி உங்களிடம் கையளித்தேன்.
(பிலாத்து சொன்னவுடன், அக்களிப்பால் பரிசேயர் கூட்டம் சத்தமி ட்டு கத்துகின்றார்கள். பிலாத்து மாளிகைவிட்டு அகல்கின்றான்.
இயேசுவுக்கு வெள்ளை அங்கி அணிவித்து, அவர் மீது சிலுவை சுமத்தி, இழுத்து செல்கின்றார்கள். திரை மூடுகின்றது) (இயே சுவை கொலைசெய்யப்போகின்றார்கள் என்று கேள்விப்பட்டு, யூதாஸ் தலைமக்குருவின் மாளிகை செல்கின்றான்)
                                                       காட்சி ஏழு
யூதாஸ்  : இது அநியாயம்! நீங்கள் சொன்னது இப்போது செய்வது எல்லாம்
                     நியாயமாகுமா? விசாரணை என்று அழைத்து சென்று இப்போது
                      அவரை கொலைக்களத்து அனுப்பிவிட்டீர்களே!
பெரிய குரு: ஆமாம் எங்கள் யூத குல மரபின் படி, அவன் குற்றவாளி 
                            எனவே அவனை கொலை செய்ய உத்தரவிட்டேன்
யூதாஸ் : ஆனால் இப்போ நான் அந்த கொலைக்கு உடந்தை ஆனேனே!
பெரிய குரு: அது உன்பாடு, வெள்ளிக்காசு எண்ணி வாங்கும் போது, 
                             அதைப்பற்றி சிந்திக்கவில்லையோ
யூதாஸ்: உங்களின் பாவப்பணம் எனக்கு எதற்கு? (பணப்பையை வீசி எறி ந்துவிட்டு அகல்கின்றான். திரைச்சீலை நகர்கின்றது. யூதாச் தனியே புலம்பும் காட்சி, பின்னணியில் குற்றம் புரிந்தவன் என்ற பாட்டின் இசை ஒலிக்கின்றது, யூதாஸ் புலம்புகின்றான்)
யூதாஸ்:  குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மது காண்பதேது? ஆம்
                     குற்றம் புரிந்தேன். போதகர் படுகொலைக்கு நான் துணை
                     போனேன். ஐயகோ நான் கேடுவிளைவித்துவிட்டேனே!
                      கேடுவிளைவித்துவிட்டேனே! இந்த இரத்தபழி என்மீது வாழ் நாள்
                      முழுவதும் தொடருமே! நான் வாழக்கூடாது வாழக்கூடது, நான்
                      சாகவேண்டும், நான் சாகவேண்டும்
(யூதாஸ் தன்னத்தானே மாய்த்துக்கொள்கின்றான். அந்த காட்சி அதே மேடையில் கறுப்பு திரையால் மறைக்கப்பட, வலப்புறம் இருந்து இயேசு சிலுவையோடு நுழைகின்றார். இதற்கு பொருமான பின்னணி இசையும்
பாட்டும் இருக்கவேண்டும், இந்த காட்சி அமைப்புக்குள் இயேசுவை ஆடை களைகின்றது சிலுவையில் அறைகின்றது. பின்னர் இயேசு சிலுவையில் தொங்கி பின்னர் அவர் ஏலி ஏலி லாமா சப்க்தானி என் எபிரேய பாசை யில் கூறி, என் பிதாவே உமது கையில் ஆவியை ஒப்படைக்கின்றேன் எனச்சொல்லி உயிர் விடுகின்றார். உயிர் விடும் போது இடி மின்னல் பூகம் திரைச்சீலை கிழிதல், கல்லறை பிணங்கள் எழுந்து ஓடுவது இவைகளை பயங்கர சத்தங்களோடு, நிகழ்த்தி காட்டி காட்சி முடிகின்றது) ( மீண்டும் திரைவிலகுகின்றது, வெறும் சிலுவை மட்டும் உள்ளது,  அதன் முன் குற்ற வாளி கூண்டு உள்ளது. வழக்கறிஞர் தோன்றுகின்றார்)
                                                       காட்சி எட்டு
வழக்கறிஞர்: இப்படித்தான் இயேசுவின் கொலை நடந்துள்ளது,
                              ஒரு தனி மனித கொலையாக இருந்தாலும், இது 
                               ஒழுங்கமைக்கப்பட்ட  திட்டமிடப்பட்ட கொலை!
                              (Well Organized muder crime ) இந்த கொலை தனி மனித
                              பழிவாங்கலாக நடத்தப்படவில்லை, இந்த கொலை
                               யில் அரசாங்கம், அரசாங்க பாதுகாப்பு இராணுவம்
                               மற்றும் மதத்தின் மகா சங்கத்தினால் திட்டமிடப்
                               பட்ட சதிக்கொலையாக இது நடந்துள்ளது! இந்த 
                               கொலை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்
                                லவேன்டும். இதன் மூலமாக அரசாங்கம் மத நிறுவ
                               ணங்களின் கொலைகளுக்கும், புதை குழிகளுக்கும்
                               நியாயம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு ! எமக்கு
                              கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் படி, இயேசுவின்
                               கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் இரா
                                ணுவ வீரர்கள்!
(இராணுவ வீரர்கள் என்று சொன்னவுடன், இராணுவ வீரன் ஒரு வன் குற்றவாளி கூண்டில் நிற்கின்றார்)
வழக்கறிஞர்: இயேசுவின் சிலுவைக்கொலையில் இராணுவம்
                               நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளது, இராணுவ தரப்
                               பில் சாட்சியம் சொல்லவந்திருக்கும் நீங்கள் 
                                கொலைக்கான குற்றத்தை ஏற்றுக்கொள்கின்றி
                                ர்களா?
இராணுவ வீரன்: கொலையை நாம்தான் நிறைவேற்றினோம்,
                                       ஆனால் குற்றத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது?
வழக்கறிஞர்: ஏன் முடியாது? அதற்கான காரணம் கூற முடியுமா?
இ,வீரன் : நாம் எமது கடமையை செய்தோம், மேலிடத்தில் இருந்து
                      வரும் கட்டளைகளுக்கு அடிபணிவதே எமது கடமை!
வழக்கறிஞர் : உங்களுக்கு கட்டளை கொடுத்த அந்த மேலதிகாரி
                                யார் என்று சொல்லமுடியுமா?
இ, வீரன்:  அவர்தான் ஆளுணர் பிலாத்து அவரிடம் கேளுங்கள்.
வழக்கறிஞர்: இப்போது நீங்கள் போகலாம்,இப்பொழுது நாம்
                                ஆளூனர் பிலாத்துவை அழைக்கின்றோம்  நசரேத்
                                இயேசுவை சிலுவையில்றைந்து கொல்லூம் படி நீர்
                                தானா உத்தரவு பிறப்பித்தீர்கள்
பிலாத்து: ஆமாம் நானேதான்!
வழக்கறிஞர்: என்ன குற்றத்திற்காக நீங்கள் அவரை சிலுவைக்
                                கொலைக்கு கையளித்தீர்கள்.
பிலாத்து:  நான் தீர நன்றாக விசாரித்ததின் படி, இயேசுவின் மீது
                        எந்தவித குற்றத்தையும் நான் காணமுடியவில்லை
                         ஆயினும் அவரை நான் கொலை செய்யும் படி உத்தர
                        விட்டேன்.
வழக்க்றிஞர்:  அதுதான் நான் கேட்கின்றேன், செய்யாத குற்றத்து
                                க்கு    ஏன் மரணதண்டனை ?
பிலாத்து: இயேசுவின் மீது இரண்டுவிதமான கோனத்தில் குற்ற்ச்
                       சாட்டுக்கள் சுமத்தப்பட்டன, ஒன்று யூதமத நம்பிக்கை
                        க்கு எதிரானது, மற்றது உரோமை ஆட்சிக்கு எதிரானது
                        இதிலே யூதமத நம்பிக்கைக்கு எதிரான குற்றச்சாட்டு
                       வலுவாக இருந்தது
வழக்கறிஞர்: அப்படியானல் யூதமத சட்டப்படியல்லவா நீங்கள்
                               தீர்ப்பளித்திருக்கவேண்டும்?
பிலாத்து: உண்மைதான்! ஆனால் யூத மத சட்டத்தில் மரணதண்
                      டனை வழங்கமுடியாதே, யூத மத தலைவர்களின் எண்
                      ணம் முழுவதும், இயேசுவுக்கு சிலுவை மரணம் அளிக்
                       கவேண்டும் என்பதே! அதற்காக உரோமை அரசுக்கு
                       எதிரான புரட்சிக்காரன் என குற்றத்தை சுமத்தினார்
                       கள். அந்த குற்றச்சாட்டுக்களை பொய்யென நிரூபிக்க
                        இயேசுவால் முடியவில்லை. ஆயினும் இயேசுவை விடு
                        விக்க, பரபாசோடு இயேசுவை முன்னிறுத்தி எனது
                       இராஜ தந்திரத்தை பிரயோகித்தேன்.
வழ்கக்கறிஞர்: பிறகு என்ன நடந்தது?
பிலாத்து: நான் எதிர்பார்த்ததுக்கு மாறக யூத மதகுருமார்களின்
                      கோரிக்கை பரபாசை விடுவிக்க கோரினார்கள். அவ
                      கொலைகாரன் கொள்ளைக்காரன், இதில் வேடிக்கை
                      என்னவென்றால் மக்களும் யூத மத தலைவர்களோடு
                       சேர்ந்து கொண்டார்கள். அது மட்டுமல்ல எனது பதவி
                      க்கே ஆபத்துவந்துவிடுமோ? எனப்பயந்து நான் இயேசு
                       கொலைக்கு கையளித்தேன், நான் சட்டப்படியே மக்க
                       ளின்  ஞனநாயக உரிமைக்கு மதிப்பளித்தேன். எனவே
                      நான் நிரபராதி !   
வழக்கறிஞன்: ஆளுனரே நீங்கள் போகலாம்! ஆளுனரின் வாக்கு
                                  மூலத்தின் படி, இயேசுவின் சிலுவைகொலை 
                                   யூதமத சங்கத்தின் சதிச்செயலாகவே தெரிகின்
                                   றது, எனவெ யூத மத சங்கத்தின் வாக்கு மூலத்தை
                                   கேட்டறிந்து கொள்வோம். மகா சங்கைகுரிய
                                    பெரிய குருவை அழைக்கின்றோம்!
                                     (பெரிய குரு சாட்சிக்கூண்டில்)
                                    மகா பெரிய குரு அவர்களே! முதலில் வணக்கம்!
                                    ஆளுனர் பிலாத்துவின் வாக்குமூலத்தின்படி
                                   இயேசுவின் சிலுவைக்கொலை மகா சங்கத்தின்
                                   விருப்படி நடந்துள்ளதாக கூறுகின்றார்.
பெரிய குரு: ஆமாம் வாஸ்தவம் தான். எங்களைபொறுத்தவரை
                             இயேசு தேவதூசணக்காரன். ஆண்டாண்டு தோறும்
                              ஏன் இன்று கூட இஸ்ரவேலராகிய நாம், கடவுள் 
                              மெரியாவாக யூதர்களின் இராஜாவாக, சகல தேச
                              இஸ்ரவேலர்கள் ஆளும் படியாக மாபெரும் சாம்
                              ராச்சியத்தை அமைப்பார் என நாம் இன்றுவரை
                              நம்புகின்றோம். இன்றுவரை நாம் அண்டை எதிரி
                              நாடுகளுடன் போர் தொடுக்கின்றோம். அப்படி இரு
                              க்கையில் எமது நம்பிக்கையை சீரழித்த் இந்த சதி
                              காரனை நாம் சிலுவையில் அறைந்து கொண்டது
                              மிகச்சரியான் செயலே! எம்மை எவரும் கேள்வி
                               கேட்கேவே கூடாது.
வழக்குரைஞன்: உங்களை தொந்தரவு செய்தமைக்கு மன்னிக்க
                                     வும், நீங்கள் போகலாம்
                                     (பெரியகுரு போகின்றார்)
                                     இதுவரையும் நீங்கள் கேட்ட வாதப்பிரதிவாத
                                     ங்களின் அடிப்படையில் ஒவ்வொருவருமே
                                     தம்மை நிராபாராதிகள் என நிருபிக்கின்றா                                               ர்கள். அப்படியானால் இயேசுவை சிலுவையில்                                           அறைந்து கொன்ற குற்றவாளிகள் யார்  


 

 சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.  அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா!...