Followers

Wednesday 29 November 2023

நீண்ட காலத்திற்கு முன்பு, விலங்குகளின் ராஜ்ஜியத்தில், ஒரு செம்மறி ஆடு சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு கூண்டுக்குள் சிங்கம் அழுவதைக் கண்டது, சிங்கம் "நான் உன்னை கொன்று சாப்பிட மாட்டேன்" என்று உறுதியளித்து., ஆட்டிடம் தன்னைக் காப்பாற்றும்படி கெஞ்சியது,

ஆனால், செம்மறி ஆடு மறுத்துவிட்டது. சிங்கம் மீண்டும் மீண்டும் வற்புறுத்திய பிறகு, அதன் வார்த்தையை நம்பி செம்மறி ஆடு சிங்கத்தின் கூண்டைத் திறந்தது.

சிங்கம் உணவு இல்லாமல் பல நாட்கள் கூண்டில் இருந்ததால் மிகவும் பசியுடன் இருந்தது. 

அது செம்மறி ஆட்டை கொன்று சாப்பிடுவதற்காக  எட்டிப் பிடித்தது, ஆனால், செம்மறி ஆடு சிங்கத்தின் வாக்குறுதியை நினைவுபடுத்தியது. மற்ற விலங்குகள் அவ்வழியாக கடந்து போகையில், சிங்கம் மற்றும் ஆட்டின் வாக்குவாதத்தை பார்த்து என்ன நடந்தது என்பதை அறிய முற்பட்டன. 

சிங்கமும், செம்மறி ஆடும் என்ன? நடந்தது என்பதை விவரித்தன.

ஆனால், சிங்கத்தின் மேல் உள்ள பயத்தால் மற்ற விலங்குகள், நாங்கள் ஏதும் சொல்ல முடியாது என்று நழுவின.  ஆனால், ஆமையைத் தவிர அனைத்து விலங்குகளும் சிங்கத்தின் பக்கம் சாய்ந்தன. ஆமை மட்டும் ஆட்டை காப்பற்ற முற்பட்டது.

அப்போது ஆமை சிங்கத்திடம், செம்மறி ஆடு உன்னைக் காப்பாற்றுவதற்கு முன்பு, நீ இருந்த இடத்தைக் காட்டு என்று கேட்டது. சிங்கம் அந்த கூண்டைக் காட்டியது. ஆமை கேட்டது,  ஆடு வந்தபோது நீ உள்ளே இருந்தாயா? வெளியில் இருந்தாயா? என்று கேட்டது.  

சிங்கம் தான் உள்ளே இருந்ததாகச் சொன்னது. ஆமையோ "சரி, உள்ளே நுழையுங்கள், உண்மையில் சிரமத்தில் இருந்தீர்களா?  என்று பார்ப்போம்" என்றது. சிங்கம் உள்ளே நுழைந்தது.. அடுத்த கணம் ஆமை சிங்கத்தின் கூண்டைப் பூட்டியது.

ஆச்சரியத்துடன், மற்ற விலங்குகள் ஆமையிடம் "ஏன் இப்படி செய்தாய்?என்று கேட்டன.

அதற்கு ஆமை  "இன்று இந்த ஆட்டை காப்பாற்றாமல் சாப்பிட அனுமதித்தால்,  நாளையும் சிங்கம் பசியுடன் இருக்கும். நாளை நம்மில் ஒருவரை சாப்பிடும் என்று ஏன்?உங்களுக்கு புரியவில்லை.

இன்று அவனுக்குத்தானே பிரச்னை என்று கடந்து சென்றால், அது.. விரைவில் உங்களிடம் வரும். 

"மற்றவர்களை ஒரு பிரச்னையில் இருந்து காப்பாற்றினால், நாளை நாமும் காப்பற்றப்படுவோம்". இது இயற்கையின் நியதி என்றது ஆமை.

ஆம்.. நட்புகளே!

இன்று நீங்கள் தீமையை ஆதரிக்காதீர்கள்,. ஏனென்றால், இன்று..

அது உங்களை நேரடியாக பாதிக்காது, ஆனால், நாளை அது உங்களிடம் வரலாம். 

Sunday 5 November 2023

நடைபாதை

 நடைபாதை    பேசாலைதாஸ்

ஆப்பிரிக்காவிலே ஹம்மாஸ் என்ற நீதிபதி இருந்தார்.

ரொம்ப எளிமையான மனிதர். 

தான் செய்கின்ற பதவிக்காக அரசாங்கத்திடமிருந்து ஊதியம் கூட வாங்குவதில்லை.

 சரி அப்படி என்றால் குடும்பச் செலவுக்கு என்ன செய்கிறார்? இரவு நேரங்களில் புத்தகங்கள் எழுதுவார். 

அதை விற்று அதிலிருந்து வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தினார். 

வீட்டு வேலைக்கும் யாரையும் வைத்துக் கொள்வதில்லை.

தினமும் ஆற்றுக்கு போய் குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வர வேண்டியது இவருடைய வேலை. 

மக்கள் எந்த நேரத்தில் வந்தாலும் விசாரித்து தீர்ப்பு வழங்குவார். 

இரவு என்றாலும் சரி கதவை தட்டினால் தீர்ப்பு வழங்குவார். இதனால் மக்களுக்கு அவர் பெயரில் மிகவும் மரியாதை.

அந்த ஊர் முதல் மந்திரி அவருக்கு ஒரு பணமுடிப்பை பரிசாக கொடுக்க முன் வந்தார். 

இவர் அதை மறுத்து விட்டார்.

சரி உங்களுக்கு ஒரு உதவியாளரையாவது ஏற்பாடு செய்கிறேன் என்றார்.

 அவர் அதுவும் வேண்டாம் என்றார்.

 சரி ஒரு வேலையாளையாவது அனுப்புகிறேன் என்றார்.

 தேவையில்லை என்றார் இவர்.

 நீங்கள் வெளியே போக வர ஒரு வாகனம் ஏற்பாடு செய்கிறேன்.

 அதுவும் வேண்டாம் என்றார்.

 நீதித்துறையில் நீங்கள் பல பொறுப்புக்களை வகிக்கிறீர்கள். அதனால் இரவு நேரத்தில் நீங்கள் நூல்கள் எழுதுவதற்கு அது தடையாக இருக்கும். அரசாங்க நிதியில் இருந்து சிறு தொகையாவது சம்பளமாக வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்.

 நான் மக்களுக்கு பணியாற்றுகிறவன். 

 மக்கள் தொண்டுக்கு ஊதியம்  எதையும் நான் வாங்க விரும்பவில்லை என்றார்.

முதலமைச்சர் பார்த்தார் சரி இதுக்கு மேல் இவரை வற்புறுத்தினால் இவர் பதவியில் இருந்து விலகினாலும் விலகி கொள்வார். 

ஒரு நல்ல நீதிபதியை நாம் இழக்கக்கூடாது என்று நினைத்து அதோடு விட்டு விட்டார்.

அந்த ஊரில் ஒருத்தர் ஆடு மாடு வைத்திருந்தார். 

அவைகளை எல்லாம் ஓட்டிக்கொண்டு போய் புல் வெளியிலே மேய விடுவார். 

இவர் உட்கார்ந்து அதை கவனிப்பதற்கு ஒரு நிழலான இடம் தேவைப்பட்டது.

அந்தப் புல்வெளி பக்கத்தில் இருந்த ஒரு நடைபாதை ஓரமாக தன்னுடைய நண்பன் ஒருவனுடைய வீட்டை ஒட்டி ஒரு குடிசை போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தார்.

நண்பன் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

இது நடைபாதை. 

இதிலே குடிசை போடக்கூடாது என்றான் நண்பன்.

இரண்டு பேருக்கும் தகராறு வந்துவிட்டது. 

சரி இதற்கு மேலே நமக்குள் வம்பு வேண்டாம். 

பேசாமல் நீதிபதியிடம் போய் முறையிடுவோம் என்று முடிவு செய்தார்கள். 

இரண்டு பேரும் நீதிபதியை தேடி போனார்கள். 

நீதிபதி யார் என்று அவர்களுக்கு தெரியாது. 

நீதிமன்றத்தை நோக்கி அவர்கள் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். 

எதிரில் ஒருவர் தண்ணீர் குடத்தை சுமந்து கொண்டு வந்தார். 

அவரைப் பார்த்து ஊர் நீதிபதியை பார்க்க வேண்டும். எங்கே இருப்பார்? என்று கேட்டார்கள்.

நான்தான் நீதிபதி. உங்களுக்குள் என்ன தகராறு? என்று கேட்டார் அவர்.

ஐயா வணக்கம்! 

எங்கள் பிரச்சனையைச் சொல்கிறோம். 

ஆனால் நீங்கள் தண்ணீர் குடத்தை சுமந்து கொண்டிருக்கிறீர்கள். 

அதை கொஞ்சம் கீழே இறக்கி வையுங்கள். 

பின்னர் நிதானமாக நாங்கள் சொல்வதை கேளுங்கள் என்றார்கள்.

 அதற்கு நீதிபதி  இது மக்கள் நடந்து போகிற நடைபாதை. அதனால் நான் வைத்திருக்கிற குடத்தை இங்கே இறக்கினால் இந்த வழியாக போகும் ஜனங்களுக்கு இடைஞ்சல் ஏற்படும். 

 எனவே நான் அதைச் செய்ய விரும்பவில்லை. 

நீங்கள் சொல்லுங்கள் என்றார்.

சரி ஐயா நாங்கள் போயிட்டு வருகிறோம் என்று இரண்டு பேரும் புறப்பட்டார்கள்.

 என்ன இது உங்கள் பிரச்சனை என்னவென்று சொல்லவில்லை. நான் அதற்கு தீர்க்கும் சொல்லவில்லை. அதற்குள் கிளம்பி விட்டீர்களே என்றார் நீதிபதி.

 நீங்கள் தீர்ப்பு சொல்லி விட்டீர்கள். 

 அதனால்தான் புறப்பட்டு விட்டோம் என்றார்கள் இவர்கள்.

 உண்மை தானே தன் கையிலே இருக்கிற குடத்தை தரையிலே வைக்க விரும்பாத ஒருவர் நடைபாதையில் குடிசை போடுவதை எப்படி சரி என்று ஒத்துக் கொள்வார் நீதிபதிக்கு நன்றி சொல்லிவிட்டு தன் நண்பனிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு கிளம்பி விட்டார் அந்த ஆள்.

Saturday 28 October 2023

விழி மூடிய நீதி!
                                   ( சரித்திர நாடகம்)
                                                           காட்சி ஒன்று
மேடை எங்கும் இருள் பரவி நிற்கின்றது. மேடையின் நடுவே, மிக மிக முன் பாக ஒரு தூண் கம்பீர மாக நிற்கின்றது. அதன் மேலே ஒரு மண்டை யோடு தெரிகின்றது. அதன் மீது மட்டும் ஒலி பாய்ச்சப்படுள்ளது. பின் பக்கம் கறு ப்பு திரை உள்ளது. அரசதரப்பு வழக்குரைஞர் மேடையிலே தோன்றுகின்றார்
வழக்கறிஞர்: சபையோரே,சரித்திரம் பற்பல கொலைகளை
 சந்தித்துள்

                              ளது. அந்த கொலைகளுக்கு நீதி விசாரணைகள் நடத்தப்
                              படவில்லை. அக்கொலைகள் யாவுமே நீதியின் கண்களுக்கு
                              மறைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டையோடு கிறிஸ்து வாழ்
                              ந்த காலத்திற்கு  உரியது என தடயவியல் சான்றுகள் சொல்
                              கின்றது, அதுவும் சிரைச்சேதம் செய்யப்பட்ட கொலையாக
                              இருக்கின்றது என தடய வல்லுணர்கள் எடுத்திரக்கின்றா
                              ர்கள். அப்படி இயேசு காலத்தில் சிரைச்சேதம் நடந்து உள்ளது
                             என்றால் அது யோவான் என அழைக்கப்படுகின்ற ஸ்நாபக
                             அருளப்பரின் கொலையாகவே இருக்கமுடியும், வாருங்கள்
                             என்ன நடந்தது என்று பார்ப்போம்!
பார்ப்போம் என்று சொல்லிவிட்டு தூனையும், மண்டையோட்டையும் எடுத்து செல்கின்றார். பின் பக்கம் உள்ள கறுப்பு திரை விலகுகின்றது)
                                                        காட்சி இரண்டு
 ஏரோது, ஏரோதியாள், மந்திரிகள் சபையில் வீற்றிருக்க, சலோமி ஆடலுடன் அரங்கத் தில் பிரவேசிக்கின்றாள். சலோமியின் நடனம், எபிரேய பாணியில் அமைவது நல்லது.
ஏரோது: அபாரம் அற்புதம் கலிலேயா தெசமெங்கும் இப்படிப்பட்ட ஒரு
                   நடனத்தை யாருமே கண்டுகளித்திருக்கமாட்டார்கள், நாட்டிய
                  நாடகபேரொளி, உலகம் போற்றும் நடன நர்த்தகி என் மகள்
                  சலோமையே உன் நாட்டிய விருந்துக்கு நான் ஒரு பரிசு தரவேண்
                  டுமே! கேள் எதுவானாலும் கேள் தருகின்றேன்.
(உடனே எரோதியள் எழுந்து)
ஏரோதியாள்: சலோமை, யோவானின் தலையை பரிசாக கேள்!
ஏரோது:  யோவான் தலையா? பரிசாகவா? ஏன் இந்த கொலைவெறி?
                     எதற்காக அவன் தலை உனக்கு?
ஏரோதியாள்: என் மணவாளரே! அந்த யோவான் ஒரு விச ஜந்து! உம்மை
                                யும் என்னையும் பற்றி அவதூறு பேசித்திரிகின்றான்,
                               அதுமட்டுமல்ல இயேசு என்ற புரட்சியாளனுக்கு ஸ்நானம்
                               கொடுத்து, வரப்போகின்ற யூத ராஜா இயேசு என நாடெங்
                               கும் பிரசங்கம் செய்கின்றான். இறை அரசை இந்த உலகத்
                              தில் நிறுவவேண்டும் என துடிக்கின்றான். இவனை விட்டால்
                              உமதுப்பதவிக்கே ஆபத்து, உடனே அவனை படுகொலை
                              செய்யவேண்டும்!
ஏரோது:    என்ன இன்னுமொரு அரசு, உரோமை பேரரசுக்கு எதிராகவா?
                      அரச சதிப்புரட்சிக்கு யோவானும் இயேசுவும் தீட்டம் தீட்டுகின்
                      றார்களா? இத அப்படியே விட்டுவிடக்கூடாது, முளையிலேயே
                     கிள்ளி எறியவேண்டும், ஏரோதியாள் சொல்லவதே சரியானது!
                      எங்கே காவலா! யோவானின் தலையை சிரைச்சேதம் செய்து
                      அவன் தலையை பரிசாக சலோமைக்கு கொடு
(திரை மூடுகின்றது,)
                                                            காட்சி மூன்று
(மீண்டும் வழக்கறிஞர் மண்டையோட்டு தூணுடன் மேடையிலே, மிக மிக முன் பக்கமாக தோன்று கின்றார். பின் பக்கமாக கறுப்பு திரைச்சீலை தென்படுகின்றது. )
வழக்கறிஞன்: யோவானுக்கு என்ன நடந்தது என்று இப்போது எல்லோருக்
                                  கும் தெரியும், இந்த கொலை பற்றி விசாரிக்கப்பட வேண்டி
                                  யவர்கள் ஏரோது அவன் மணைவி எரோதியாள், இந்த
                                  குறுக்கு விசானையை தொடங்கு முன்பு, இந்த கொலைக்கு
                                  முக்கிய காரணம், யோவான் இயேசுவோடு இணைந்து
                                  இறை இராட்சியத்தை இவ்வுலகத்தில் அமைக்க முயற்ச்சி
                                  க்கின்றார்கள் என்பதே! இந்த சந்தேகத்தின் அடிப்படை
                                  யில், இயசுவை கொலை செய்வதற்கு பரிசேயர்கள், சதுசே
                                 யர்களின் சதித்திட்டம் பின்னணியாக இருக்கின்றது
                                 என்பதே உண்மை! இயேசுவின் கொலை ஆய்வு செய்யப்பட
                                 வேண்டும்.
( வழக்கறிஞன் மீண்டும் மண்டையோட்டு தூணை துக்கிக்கொண்டு மறை கின்றார், பின்பக்க உள்ள கறுப்பு திரை விலகுகின்றது, மேடையில் இடப் புறமாக இருந்து சில சிறுவர்கள் அரங்கத்தில் பிரவேசிக்கின்றார்கள். அவர்கள் கைகளில் ஒலிவ மரக்கிளைகள் இருக்கின்றன, ஓசானா தாவீ தின் குமரன் ஓசானா ஓசானா என்று சிறுவர்கள் பாட பின்னணி குழுவி னரும் சேர்ந்து குரல் கொடுக்க இயேசு வெள்ளை அங்கியோடு மேடைக்கு வந்து அப்படியே வலப்புறமாக மேடையை விட்டு விலகுகின்றார், மெல்லி தயாக, ஓசான்னா என்ற பாடல் இசை இசைத்துக்கொண்டே இருக்க வேண் டும். பின்பக்கமுள்ள கறுப்பு சீலை விலகுகின்றது,  மேடை இப்போது
சியோன் ஆலையாமாக காட்சி அளிக்கின்றது. சதுசேயர்கள், பரிசேயர் கள் கூட்டமாக ஒரே தொனியில் ஜெகோவை கடவுளை  ஆராதிக்கின்றா ர்கள். ஆராதனை செபத்தை தலைமக்குரு ஆனாஸ் ஆரம்பிக்கின்றார்)
ஆனாஸ்: வானத்தையும் பூமியையும் சகல சிருஸ்டிகளையும் படைத்தளி  
                      த்த எமது தந்தையே உம்மை புகழ்கின்றோம். எங்கள் பிதாப்
                     பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்,யாக்கோபு, மோசே இவர்கள்
                     கடவுளான எமது தந்தையே உம்மை புகழ்கின்றோம், உமது தெரி
                     ந்து கொள்ளப்பட்ட இனமாக இஸ்ரவேலராகிய எம்மை உமது
                      பிள்ளைகாக தெரிந்தெடுத்தமைக்காக எமது தந்தையே உம்மை
                     புகழ்கின்றோம். 
பரி+ சதுசேயர்கள் எல்லோரும், எமது தந்தையே உம்மை  புகழ்கின்றோம். 
என்பதை மட்டும் உச்சரிக்கின்றார்கள், இப்பொழுது ஓசான்னா என்ற பாட லின் இசை சற்று பெரிதாக கேட்கின்றது.
ஆனாஸ்: ஓசான்னா என்ற வாழ்த்தொலி கேட்கின்றதே! என்ன அது?
 (என்று கேட்க பரிசேயரில் ஒருவன்)
பரிசேயன் 1: அதை என்னவென்று சொல்வது தலைமைக்குருவே! இயேசு
                             என்ற அந்த மந்திரக்காரன் பாஸ்கா பண்டிகையை கொண்
                            டாட எமது புனித நகராம் ஜெருசலேமுக்கு வருகை தந்துள்
                            ளான். அவனை யூதர்களின் இராசாவே வருக வருக என வாழ்
                            த்தி வரவவேற்பதாக கேள்விப்பட்டேன்.
ஆனாஸ்:  என்ன உளறுகின்றாய், யூதர்களின் இராசாவா? அப்படியா என்று
                       அவன் சொன்னான்.
பரிசேயன் 2: அதுமட்டுமல்ல குருவே, தான் கடவுளால் அனுப்பட்ட மெசியா 
                              என்று தன்னைத்தானே சொல்லித்திரிகின்றான்.
சதுசேயன் : ஆமாம் ஆமாம் அப்படித்தான் அவன் சொல்லித்திரிகின்றான்.
                            அதுமட்டுமா? தான் கடவுளின் மகன், ஒரே பேரான மகன்
                           என்றும் பிதற்றுகின்றான்
ஆனாஸ்: கடவுளின் மகனா? அபச்சாரம அபச்சாரம்! இது தேவ தூசணம்!
                      இவன் தச்சன் மகன் யோசேப்பின் மகனல்லவா? இவன் தாய்
                      மரியாளும் தாவீது குலத்தவள் தானே! இவளது உறவுகளும் நம
                      க்குள் இருக்கின்றார்களே! அப்படி இருக்க இறை மகன் என்று 
                      எப்படி அவன் சொல்லக்கூடும்? கேட்கவே காது கூசுகின்றது!
பரிசேயன்1: அதுமட்டுமா சொன்னான்! ஜெருசலேம் ஆலையத்தை இடித்
                            துவிடுங்கள், நான் மூன்று நாட்களுக்குள் கட்டி எழுப்புவேன்
                            என்று சொல்கின்றான்.
                                           (எல்லோரும் சிரிக்கின்றார்கள்)
ஆனாஸ்: என்ன பைத்தியக்காரத்தனமான பேச்சி இது! எம் பிதாப்பிதாக்
                     கள் இந்த ஆலையத்தைக்கட்டி முடிக்க பல்லாண்டுகள் முயற்ச்சி
                     த்தார்கள், இயேசு என்ற முட்டாள் மூன்று நாளில் முடிப்பானாம்!
                                              (மீண்டும் எல்லோரும் சிரிக்கின்றார்கள்)
பரிசேயன் 2: அதுமட்டுமா சொன்னான், புனித நகரம் ஜெருசலேம், அதன்
                              ஆலயம், கோட்டை கொத்தளங்கள், அரண்மனை, இந்த
                             ஜெபக்கூடம் எல்லாம் இடித்து அழிக்கப்படும், கல்லின் மேல்
                             கல் இராதபடி இடித்து அழிக்கப்படும், புதிய ஜெருசலேம்,
                             புதிய வானம் புதிய பூமி உருவாகப்படும் என எச்சரிக்கின்
                             ரான் இயேசு!
சதுசேயன்: ஆமாம் நானும் அப்படித்தான் கேள்விப்பட்டேன், உரோமை
                          இராச்சியம், யூத இராட்சியம் இவைகளை அழித்து, இறை
                          அரசை தன் தலமையில் அமைப்பதுவே அவன் திட்டம்!
பரிசேயன் 1: இந்த மாயக்காரன் இயேசு, பேயேல்ஸேபு என்ற பேய்களின் 
                             தலைமைப்பேயின் உதவியால், குருடர்களுக்கு பார்வை
                            அளிக்கின்றான், முடவர்களை நடக்கவைக்கின்றான்
பரிசேயன் 2: தொழு நோயாளர்களை தொட்டுக் குணமாக்கின்றான்,
                              இறந்தவர்களை உயிரோடு எழுப்புகின்றான். தனது மந்திர
                              தந்திரத்தால் மாயங்கள் செய்து, அதனை புதுமை என நம்
                              பவைத்து மக்களை புரட்சிக்கு வழிவகுக்கின்றான். இவனை
                             ஆதரித்து பேசிய பரபாஸும் இப்போது சிறையில் இருக்கி
                             ன்றான்.
சதுசேயன்: மக்களின் ஆதரவை அவன் திரட்டுவதும் உண்மையே!  இயேசு
                           சொல்வதையும், அவன் செய்வதையும் ஒருங்கிணைத்து பார்
                           த்தால் யூதர்களின் இராசா நான் தான் என்று சொல்லாமல் 
                           சொல்கின்றன்
பரிசேயன் 1: இப்படியே இந்த பைத்தியக்கார இயேசு உளறித்திரிந்தால்,
                               அதன் விளைவு என்னவாகும் தெரியுமா?
பரிசேயன் 2: யூத இராணுவம் ஜெருசலேமை ஆக்கிரமிக்கும், மக்களை
                            வாட்டி வதைக்கும்
பரிசேயன் 1: நாம் மீண்டும் நாடறவர்களாக, நாடோடிகளாக பாலைவனத்
                             தில் அலையவேன்டியது தான்!
பரி1+பரி2: ஆம் நாம் மீண்டும் பாலைவனத்தில் நாடறவர்களாக அலைய
                         வேண்டியதுதான்.
( எல்லோரும் ஒருமிக்க குரல் கொடுக்க, அங்கே கூச்சலும் குழப்பு உண்டா கின்றது)
ஆனாஸ் : அமைதி அமைதி சற்று பொறுமைகாருங்கள், இது பற்றி நான்
                       தமைக்குரு கயாபாவிடம் கலந்து பேசி முடிவெடுப்போம், அதற்
                       முன்னர் இயேசுவை அழைத்து அவனை கண்டித்து திருத்த
                        பார்க்கலாம், அல்லது நம் பக்கம் வளைக்கப்பார்க்கலாம்
                       என்ன சொல்கின்றிர்கள் சதுசேயரே!
சதுசேயர்: ஆமாம் அதுவும் சிறந்த யோசனைதான், இது பற்றி நான்
                         முன்னமே நினைத்ததுண்டு, ஆனால் அது இலேசான காரிய
                         மல்ல, இயேசுவுக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உண்டு.
                         கூடவே அவனது சீடர்களும் எப்போதும் புடை சூழ்ந்தவண்னம்
                         உள்ளார்கள். அவனை யாரும் அறிய வண்ணம் படை வீரர்
                        களை கொண்டு கைது செய்து அழைத்து வந்து, எச்சரித்தால்
                        அவன் அடங்கிவிடுவான்
பரிசேயன்1 : அவனை தனியாக கைது செய்வது இயலாத காரியம், கூட்டம்
                             அவன் பின்னால் அலைமோதுகின்றது.
சதுசேயர் : கொஞ்சம் பொறுங்கள், நான் திட்டம் வகுத்துள்ளேன், இயேசு
                         வின் சீடர்களில் ஒருவனாகிய யூதாஸ் ஸ்கரியோத்திடம் இரக
                          சியமாக தொடர்பு கொண்டு,  இயேசு தனிமையாக இருக்கும்
                         இரவு நேரம் எது? எந்த இடம் என்பதை தெரிவிக்க சொல்லி
                         இருக்கின்றேன். நீங்கள் அனைவரும் உடண்பட்டால் அவனை
                         இங்கே அழைக்கின்றேன்.
( எல்லோரும் தலையாட்டி ஆமோதிக்கின்றார்கள், சதுசேயன் ஆலையக் காவலாளியை அழைத்து, யூதாசை வரவழைக்கச்சொல்கின்றான்)
சதுசேயன்: யூதாஸ் ஜெருசலேமில் தான் இருக்கின்றான், இன்னும் சொற்ப
                           வினாடிக்குள் வந்துவிடுவான்.
(யூதாஸ் சபைக்கு வருகின்றான்)
சதுசேயன் : வருக வருக ஸ்காரியோத்! உன் வருகைக்காகவே நாங்கள் 
                            காத்திருந்தோம். நான் கேட்டதின் பிரகாரம் யேசு தனிமை
                            யாக இருக்கும் இடம், அவரை அழைத்துவரும், நேரம், காலம்
                           வசதியான சந்தர்ப்பம் இவைகளை சொல்வாயா ஸ்கரியோத்!
                           உனக்கு முப்பது வெள்ளிக்காசுகள் தருகின்றோம்
யூதாஸ்:        வசதியான சந்தர்ப்பம்,,,,,,,, முப்பது வெள்ளிக்காசுகள் ,,,,,,
                          நீங்கள் சொல்வதையும், செய்வதையும் பார்த்தால்,  ஏதோ ஒரு
                          உள்நோக்கம் இருப்பதாக தெரிகின்றதே!
சதுசேயன்: இல்லை இல்லை நீ நினைப்பது போல எந்த தீய உள்நோக்கம்,
                           எம்மிடம் இல்லை. இயேசுவின் செல்வாக்கும், அவரது புகழும்
                           யூத தேசம், கலிலியாதேசம் எங்கும் பரவி நிற்கின்றது,  அதி 
                           லும் சிறப்பாக இறை இராச்சியம் அமைக்கும் நோக்கமும்,
                           அவருக்கு இருக்கின்றது அல்லவா!
யூதாஸ்:        நீங்கள் சொல்வதும் சரிதான், இறை அரசை, பரலோக இராச்சி
                          யத்தை அறிவிப்பதே அவரின் போதனையின் நோக்கம்.
சதுசேயன் : ஆமாம் அதினால் தான், அவர் அமைக்க இருக்கும் இராச்சிய
                           பரிபாலனத்தில் நாங்களும் பங்கு கொள்ள சந்தர்ப்பம் கிடை
                            க்குமா? என்பதை இயேசுவிடம் இரகசியமாக கேட்டு அறிவ
                           தற்கே அவரை தனியாக உரோமை இராணுவத்தை அனுப்பி
                           அவரை அழைத்துவர ஏற்பாடுகள் செய்கின்றோம். இது
                          குறி த்து உரோமை ஆளுணர் பிலாத்துவுக்கு சந்தேகம் வரக்
                          கூடாது அல்லவா! அதற்குத்தான் இந்த ஏற்பாடு!
யூதாஸ்:        அப்படியா இது சிறந்த யோசனை,நான் தான் சீடர்களின் கஜா
                          னாவுக்கு பொறுப்பாளன், பாஸ்கா பண்டிகை கொண்டாட்டம்
                         வேறு, கையில் பணம் ஏதும் இல்லை, இந்த முப்பது வெள்ளிக்
                          காசு துணையாக இருக்கும்!
( யூதாஸ் பணப்பை சதுசேயரிடம் இருந்து வாங்குகின்றான்)
பரிசேயன்1: இதில் ஒரு சிக்கல் இருக்கின்றது, உரோமை வீரர்களுக்கு 
                             இயேசு யார் என்று தெரியாது, ஒருவேளை ஆள் மாறி அழை
                              த்துவந்துவிட்டால்,,,,,,,,,,,?
யூதாஸ் :      அந்த பிரச்சனை உங்களுக்கு ஏன்? நான் யாரை முத்துமிடுகி
                         ன்றேனோ, அவர்தான் இயேசு என இராணுவ வீரர்களுக்கு
                         சொல்லிவிடுகின்றேன்.
சதுசேயன்: நீ ரெம்ப ரெம்ப புத்திசாலி ஸ்காரியோத்!
( பணப்பை வாங்கிக்கொண்டு யூதாஸ் செல்கின்றான்.  மற்றவர்கள் சந்
தோச அக்களிப்பில் மனமகிழ்கின்றார்கள், திரை மூடுகின்றது)
                                                            காட்சி நான்கு
(திரை விலகுகின்றது, அங்கே கெத்சமனே தோட்டம் தெரிகின்றது
அப்போஸ்தலர்கள் அயர்ந்த தூக்கம், இயேசு மட்டும் விழித்திரு ந்து செபிக்கின்றார். அப்போது படை வீரர்களோடு யூதாஸ் வருகின்றான்)
இயேசு :  இனி நீங்கள் நித்திரை கொண்டு இளைப்பாறுங்கள். 
                    இதோ மனுமகன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொ
                    டுக்கும் வேளை வந்தது, என்னைக்காட்டிக்கொடுக்கின்
                    றவன் இதோ வந்துவிட்டான், எழுந்திருங்கள் போவோம்.
(யூதாஸ் இயேசுவிடம் வந்து,  ராபி என முத்தம் கொடுக்கின்றான்)
இயேசு:   நண்பனே என்னை முத்தம் இட்டு காட்டிகொடுக்கி
                   ன்றாயா? 
என்கின்றார்.  இராணுவ வீரர்கள் இயேசுவின் மீது கைவைத்து அவரை கட்டுவதற்கு எத்தனிக்கின்றார்கள். இந்த கலவரத்தில் இயேசுவின் சீடன் ஒருவன் பட்டயத்தை உருவி படை வீரனின் கதை வெட்டுகின்றார்.)
இயேசு: பட்டயத்தை உறையினுள் போடு, பட்டயத்தை எடுக்கின்
                  றவன் பட்டயத்தாலே மடிவான். நான் இப்பொழுது என்
                  பிதாவினிடத்தில் வேண்டிக்கொண்டால் அவர் பனிரெ
                 ண்டு லேகியோனுக்கு  அதிகமான துதர்களை அனுப்பமா
                 ட்டாரோ என நினைக்கின்றாயா? அப்படி நான் செய்தால்
                இவ்விதமாய் நிகழவேண்டும் என்கின்ற சம்பவம் எப்படி
                நிகழக்கூடும்? 
                                               ( இயேசு படைகளை பார்த்து)
இயேசு: கள்ளனை பிடிக்க புறப்பட்டது போல, நீங்கள் பட்டயங்க
                  ளோடும் தடிகளோடும் என்னை பிடிக்கவந்தீர்கள். நான்
                  தினம் தோறும், ஆலையத்தில் உங்கள் நடுவேஉட்கார்ந்து 
                   போதகம் செய்தேனே, அப்போது என்னை பிடிக்கவி
                 ல்லையே, ஆகிலும் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறும் படி
                 இப்படி நடக்கின்றது.  
இயேசுவை பிடித்து இழுத்து செல்கின்றார்கள், யூதாஸ் மற்றும் சீடர்கள் அங்கிருந்து ஓடிப்போகின்றார்கள் திரை மூடுகின்றது)
                                                     காட்சி ஐந்து
(மூப்பர்களின் மண்டபம், பரிசேயர் சதுசேயர் பிரதான ஆசாரி யான் காய்பா எல்லோரும் இருக்கின்றார்கள். இயேசுவை அங்கே இழுத்து வருகின்றார்கள்)
பரிசேயன்1: இவன் ஜெருசலேம் தேவாலையத்தை இடித்துவிடு
                             ங்கள், மூன்று நாளில் அதனை கட்டி எழுப்புவேன்
                            என்கின்றான்.
பரிசேயன் 2: இவன் தானே மெய்யான தேவ குமாரன் என்று
                              தேவதூசனம் சொகின்றான், இறைவனை தனக்கு
                              சமமாக எண்ணுகின்றான். அதனை மக்கள் நம்பும்
                              படியா போதிக்கின்றான்
சதுசேயன்: நமது யூத மதவழக்கத்தை புறக்கணிக்கும்படியும்,
                          மோசே நமக்களித்த சட்டங்களும் செல்லுபடியாகது
                           என்கின்றான்
பரிசேயன் 1: நம்மைவிட புறஜாதியினரே மீட்படைவர் என்று எமது 
                             இனத்தை காட்டிக்கொடுக்கின்றான். இவன் ஒரு இன
                             த்துரோகி!
பரிசேயன் 2: இஸ்ரவேலர்கள் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட
                            வில்லை, மாறக இஸ்ரவேலர்களை சிதறடிப்பார் என 
                            சாபம்வேறு விடுகின்றான்.
சதுசேயன்: இவன் நமது யூத வழக்கத்தின்படி கொலை செய்ய
                           ப்பட வேண்டும்
கொலை செய்யப்பட வேண்டும் என சதுசேயன் சொன்னவுடன் 
அந்த வசனத்தை எல்லோரும் பலத்த சத்தமாக உச்சரிக்கின்றனர்)
பிரதான ஆசாரி: இவர்கள் எல்லோரும் உனக்கு விரோதமாக 
                                      சாட்சி சொல்வதை குறித்து ஏன் நீ பேசாமல்
                                     இருக்கின்றாய்?
இயேசு அமைதியாக இருக்கின்றார், பிரதான ஆசாரி 
பிரதான ஆசாரி: நீ எங்கள் தேவனுடைய குமாரன் தானா? அதை நீ
                           சொல்லும் படி ஜீவனுள்ள தேவன் பேரில் ஆணை
                          யிட்டு கேட்கிறேன்.
இயேசு: நீர் சொன்னபடி தான், அன்றியும் மனுச குமாரன், சர்வ 
                 வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும்,
                 வானத்து மேகங்கள் மீது வருவதையும், இது முதல் காண்                      பீர்கள் என்று உங்களுக்கு சொல்கின்றேன்! 
இதனை கேட்டவுடன், பரிசேயரில் ஒருவன் தன் ஆடையை கிழித்துக்கொண்டு
பிரதான ஆசாரிஇவன் தேவதூசனம் சொன்னான், இனி நமக்கு
                                       சாட்சியங்கள் வேண்டியதென்ன? இதோ இவன்
                                      சொன்ன தேவதூசனத்தை இப்பொழுது கேட்டீர்
                                      களே! உங்களுக்கு என்னமாய்த்தோன்றுகின்றது
எல்லோரும்:             இவன் மரணத்துக்கு பாத்திரமாக இருக்கின்
                                       றான்! இவன் கொலை செய்யப்படவேண்டும்
                                        இவன் கொலை செய்யப்படவேண்டும்
(இவன் கொலை செய்யப்படவேண்டும், என்ற கோசம்  வலுக்கின் றது, பரிசேயர்கள், சதுசேயர்கள் எல்லோரும் ஒன்றாக பாய்ந்து, இயேசுவை காறி துப்புகின்றார்கள். ஒருவன் இயேசுவின் மேல்  ஒரு துணியை மூடி, அவரை அடிக்கின்றார்கள், தலையில் குட்டுகி ன்றார்கள்)
பரிசேயன்1: கிறிஸ்துவே உம்மை அடித்தவன் யார் என்று உமது
                            தீர்க்கதரிசனாத்தல் சொல்லும், உம்மை நாம் நாம்பு
                            கின்றோம்.
பரிசேயன் 2: இந்த தேவதூசனக்காரனை சிலுவையிலே அறைந்து
                            கொல்லுவதற்கு, உத்தரவு பெற, இவனை ஆளுனர்
                            பிலாத்துவிடம் அழைத்து செல்லவேண்டும்.
பரிசேயன்2: இவன் மீது உள்ள குற்றங்கள் கணக்கில் அடங்காது,
                             ஜெருசலேம் ஆலையத்தை இவன் இடிக்கப்பார்த்
                            தான், ஆலையத்தை இடித்துவிடுங்கள் அதை நான்
                            மூன்றே நாளில் கட்டி எழுப்புவேன் என சவால் விடுகி
                           ன்றான். எங்கள் பிதாப்பிதாங்கள் கட்டிய கோவிலை
                            இடிப்பதற்கு இவன் யார்?
பரிசேயன் 3: அதுமட்டுமா இவன் சொன்னான். தான் மெய்யான
                              தேவனாகிய ஆண்டவரின் மகன், என்றும் இறை         
                              சாம்ராட்சியத்தை தோற்றுவிக்க வந்த இறை தூதன்
                              மெசியா என்னும் மீட்பர் என்கின்றார்.
எல்லோரும்:  ஆமாம் இவனை சிலுவையிலே அறையும், அதிகா
                             ரம் பிலாத்துவிடமே உண்டு, எனவே இவனை ஆளு
                             ணர் பிலாத்துவிடம் கொண்டுபோகவேண்டும்.
( இயேசுவை எல்லோரும் பிலாத்துவின் அரன்மணைக்கு இழுத்துச்சென்றார்கள். திரை மூடுகின்றது)
                                                    காட்சி ஆறு
                        (பிலாத்துவின் அரன்மனை காட்சி)
( இயேசுவை கொல்லவேண்டும், இயேசுவை கொல்லவேண்டும், என்ற கோசத்தோடு, இயேசுவை கட்டி இழுத்துக்கொண்டு, பரி சேயர் கும்பல் பிலாத்து முன் தோன்றுகின்றனர்)
பிலாத்து: இந்த மனிதன் யார்? எதற்காக இவனை என்னிடம்
                     அழைத்து வந்தீர்கள்? இவன் செய்த குற்றம் என்ன?
பரிசேயன் 1: இவன் குற்றமற்றவாராக இருந்திருந்தால் நாங்கள்
                             இவனை உம்மிடம் கொண்டுவந்திருக்கமாட்டோம்.
பரிசேயன் 2: மெசியாவாம், மீட்பராம் அது மட்டுமல்ல , தான் யூத
                              ராஜா என்று உரிமை கொண்டாடுகின்றான்
பரிசேயன் 1: இவன் கலிலேயா தேசம் எங்கும் சுற்றித்திரிந்து 
                              மாயங்கள் செய்து மக்களை தன் பக்கம் சேர்க்கின்
                              றான். புரட்ச்சிக்கு வித்திடுகின்றான். உரோமை
                             இராச்சியத்துக்கு எதிராக செயல்படுகின்றான்.
பிலாத்து:      இவன் கலிலேயா நாட்டவனா? அப்படியானால் 
                           கலிலேயா ஆளூனர் ஏரோது ஜெருசலேம் வந்துள்ளார்
                            இயேசுவை ஏரோதுவிடம் அனுப்புகின்றேன் அவரும்
                            இவரை விசாரிக்கட்டும்!
( திரை விலகுகின்றது. இப்போது இயேசு எரோது முன்னிலையில் தோன்றுகின்றார்)
ஏரோது: வருக வருக யேசுவே! உம்மைக்குறித்து நான் அனேகம்
                    கேள்விப்பட்டேன். உம்மை காணவேண்டும் என ஆசைப்
                    பட்டேன். பிலாத்துவுக்கும் எனக்கும் ஆகாது, ஆயினும்
                    உன்னை என்னிடம் அனுப்பினான். இன்றுமுதல் நாம்
                     இருவரும் நண்பர்களானோம். நல்ல காரியம் உன்னால்
                     நடந்துள்ளது. பிலாத்து உன்னை என்னிடம் அனுப்பும்
                     அளவுக்கு நீ என்ன காரியம் செய்தாய் சொல்!
( இயேசு பதில் ஏதும் கூறாமல் மெளனம் காக்கின்றார்)
பரிசேயன் 3: இவன் பதில் சொல்லமாட்டான்! இறுமாப்புகாரன்.
                             நான் சொல்கின்றேன். இவன் ஜெருசலேம் ஆலையத்
                             இடித்து, அதை மூன்று நாளில் கட்டுவேன் என்றான்.
பரிசேயன் 2: தன்னை மெசியா, தேவனின் ஏக குமாரன் என 
                              சொல்லித்திரிகின்றான், அதை நம்பும் படி மாயம்
                              செய்து புதுமை என்கின்றான்.
ஏரோது:  ஆமாம் இவன் நிறைய அற்புதங்கள் செய்வதாக அறிந்
                    தேன். இயேசுவே நீ எனக்கு அற்புதம் ஒன்று செய்வாயா?
                    உன்னை நான் கடவுளின் மகன் என்று ஏற்றுக்கொண்டு
                     உனக்கு சிபார்சு பண்ணுகின்றேன்.
                    ( இயேசுவின் எள்னம் தொடர்கின்றது)
பரிசேயன் 1: மன்னவரே இவன் பதில் சொல்லமாட்டான், பேரரசு
                             மன்னருக்கே பதில் சொல்வான், இவன்தான் யூத
                              இராஜா என்று தன்னத்தானே சொல்கின்றானே!
ஏரோது:  ஆமாம் நானும் அதை மறந்துவிட்டேன். யூத ராஜாவுக்கு
                    உரிய மரியாதை கெளரவம் எல்லம் இவனுக்கு அளித்து
                     பிலாத்துவிடம் மீண்டும் அனுப்புவோம்
( இயேசுவுக்கு கரும்பு தடி கோலாக கொடுத்து, முள்முடி தரித்து,
சிகப்பு போர்வை போர்த்தி பரிகாசம் செய்து, பிலாத்துவிடம் மீண்டும் அனுப்புகின்றார்கள். இப்போது பிலாத்துவின் அரன்
மனையில் மீண்டும் இயேசு)
பரிசேயன் 2: ஆளுனரே இவன் எரோது ராஜாவை மதிக்காமல், பதில் ஏதும்
                             சொல்லாமல் இருந்தபடியால், மீண்டும் உங்களிடம் அனுப்பி
                             விட்டார், எமது நியாயப்படி இவன் கொலசெய்யப்படவேண்
                             டும்.
  எல்லோரும்: இவனை சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்!          
பிலாத்து: அப்படியா இவனை நீங்களே கொண்டுபோய் உங்கள்
                       நியாயப்பிரமானத்தின்படி நியாய்ம் தீருங்கள்!
சதுசேயன்: ஒருவனை மரண தீர்வைக்கு, தீர்ப்பிடும் அதிகாரம்
                         எமக்கு இல்லை
பிலாத்து:       நீ யூதர்களின் ராஜாவா?
இயேசு:     நீராக இதை சொல்கின்றீர்களா? அல்லது மற்றவர்கள்
                     என்னைக்குறித்து இப்படி உமக்கு சொன்னார்களா?
பிலாத்து: நான் உம்மைப்போல யூதனா? உன் ஜனங்களும், உன்
                     ஆசாரியர்களும் உன்னை என்னிடத்தில் ஒப்புவித்தார்
                     களே! நீ என்ன குற்றம் செய்தாய்?
இயேசு: என் இராச்சியம், இவ்வுலகத்துக்கு உரியதல்ல, என் இராச்
                  சியம் இவ்வுலகத்துக்கு உரியதானல், நான் யூதர்களிடம்
                  ஒப்புக்கொடுக்காதபடி. என் ஊழிக்காரகள் போராடி இரு
                  ப்பர்களே. இப்படி இருக்க என் இராச்சியம் இவ்விடத்துக்கு
                  உரியதல்ல.
பிலாத்து: நீர் சொல்லும் தோரணையை பார்த்தால்,,,நீர் ராஜாவா?
இயேசு: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்! சத்தியத்தை குறி
                 த்து சாட்சி சொல்லவே நான் பிறந்தேன். அதற்காகவே 
                 நான் இவ்வுலகத்துக்கு வந்தேன். சத்தியவன் எவனும் என்
                 சத்தியத்தைக்கேட்கின்றான்.
பிலாத்து: சத்தியம்! ,,,, சத்தியமாவது என்ன? சிந்திக்கவேன்டிய
                      விடயம் (சற்று அமைதிக்கு பின்) மகா ஜனங்களே நான்
                      இவன் மீது எந்த குற்றத்தையும் காணொம்! பாஸ்கா 
                      பண்டிகையின் நிமித்தம் நான் உங்களுக்கு ஒருவனை 
                       விடுதலை பண்ணும் வக்கம் உண்டல்லவா? ஆகையல் 
                       யூதர்களின் ராஜாவாகிய இவனை விடுதலை பண்ண
                      உங்களுக்கு மனதுண்டா?
எல்லோரும்: இவனை அல்ல, இவனுக்கு  பதிலாக பரபாசை விடு
                           தலை செய்யுங்கள்! பரபாசை விடுதலை செய்யுங்கள்
பிலாத்து: அப்படியானால், யூதர்களின் ராஜா என்று நீங்கள் சொல்
                       லும் இவரை நான் என்ன செய்யவேண்டும் 
எல்லோரும்: இவனை சிலுவையில் அறைந்து கொல்ல உத்தரவு 
                             வேண்டும். சிலுவையில் அறையும், சிலுவையில்
                             அறையும், சிலுவையில் அறையும்!
பிலாத்து: சிலுவையில் அறைந்து கொல்லும் அளவுக்கு இவன்
                       என்ன பொல்லாப்பு செய்தான்?
எல்லோரும்: இவனை சிலுவையில் அறைந்து கொல்ல உத்தரவு 
                             வேண்டும். சிலுவையில் அறையும், சிலுவையில்
                             அறையும், சிலுவையில் அறையும்!
பிலாத்து: நான் இந்த மனிதன் மட்டில் ஒரு குற்றமும் காணவி
                      ல்லை என்பதை நீங்கள் அறியும் பொருட்டு, இதோ
                      அவரை இங்கே அழைக்கின்றேன். இதோ மனிதனை
                      பாருங்கள்!
எல்லோரும்: சிலுவையில் அறையும், சிலுவையில்அறையும்,
                              சிலுவையில் அறையும்!
                      
பிலாத்து: நீங்களே இவனை கொண்டுபோய் சிலுவையில் அறையு
                       ங்கள், இவரிடத்தில் ஒரு குற்றமும் காணோம்!
சதுசேயர்: ஆளுணரே எமக்கு என்று ஒரு நியாயப்பிரமாணம்
                        உண்டு. இவன் தன்னை இறைவனின் மகன் என்று
                       சொன்னபடியால், அந்த நியாய பிரமானத்தின் படி
                       இவன் சிலுவையில் சாகவேண்டும்! 
பிலாத்து: நீ எங்கிருந்து வருகின்றாய்?
பிலாத்து: நீ என்னோடு பேசமாட்டாயா?  உன்னை சிலுவையில் 
                       அறையவும், விடுதலை செய்யவும் எனக்கு அதிகரம்
                       உண்டு என உனக்கு தெரியாதா?
இயேசு: பாத்திரத்திலிருந்து உமக்கு கொடுக்கப்படாதிருந்தால், 
                  என் மீது உமக்கு ஒரு அதிகரமும் இல்லை. ஆகையால்
                  என்னை உம்மிடம் ஒப்புவித்தவனுக்கு அதிக பாவம்
                  உண்டு
சதுசேயர்: இவனை நீங்கள் விடுதலை பண்ணினால், நீ உரோமை
                       இராஜனுக்கு நண்பரல்ல,  தன்னை ராஜா என்கின்ற
                       எவனும் உரோமை ராஜனுக்கு எதிரியாகின்றான்
(இதை கேட்டவுடன் பிலாத்து கபத்தா என்ற நியாயசனத்திலே
அமர்ந்தான். இயேசுவை மன்றத்தில் முன் கொண்டுவந்தார்கள்)
பிலாத்து : இதோ மனிதனைப்பாருங்கள்!
எல்லோரும்: இவனை சிலுவையில் அறையுங்கள்! இவனை சிலு
                             வையில் அறையுங்கள்! 
பிலாத்து: நான் இவனை சிலுவையில் அறைந்து கொல்வதற்கான
                      இவன் மீது ஒரு குற்றமும் காணவில்லை, எனவே இவன்
                      கொலை மீது எனக்கு எந்தவித பங்கும் இல்லை என்பத
                       ற்காக இந்த பாவத்தில் இருந்து கை கழுவுகின்றேன்.
( பிலாத்து கைகழுவுகின்றான். மக்கள் மீண்டும் உரத்த சத்தமாக)
எல்லோரும்: இவன் இரத்த பழி, எங்கள் சந்ததி மீதும் இருக்கட்டும்
                              இவனை சிலுவையில் அறையும். இவனை சிலுவை
                             யில் அறையும்.
பிலாத்து: இதோ உங்கள் இஸ்டப்படி இவனை சிலுவையிலே
                      அறைந்து கொல்லும் படி உங்களிடம் கையளித்தேன்.
(பிலாத்து சொன்னவுடன், அக்களிப்பால் பரிசேயர் கூட்டம் சத்தமி ட்டு கத்துகின்றார்கள். பிலாத்து மாளிகைவிட்டு அகல்கின்றான்.
இயேசுவுக்கு வெள்ளை அங்கி அணிவித்து, அவர் மீது சிலுவை சுமத்தி, இழுத்து செல்கின்றார்கள். திரை மூடுகின்றது) (இயே சுவை கொலைசெய்யப்போகின்றார்கள் என்று கேள்விப்பட்டு, யூதாஸ் தலைமக்குருவின் மாளிகை செல்கின்றான்)
                                                       காட்சி ஏழு
யூதாஸ்  : இது அநியாயம்! நீங்கள் சொன்னது இப்போது செய்வது எல்லாம்
                     நியாயமாகுமா? விசாரணை என்று அழைத்து சென்று இப்போது
                      அவரை கொலைக்களத்து அனுப்பிவிட்டீர்களே!
பெரிய குரு: ஆமாம் எங்கள் யூத குல மரபின் படி, அவன் குற்றவாளி 
                            எனவே அவனை கொலை செய்ய உத்தரவிட்டேன்
யூதாஸ் : ஆனால் இப்போ நான் அந்த கொலைக்கு உடந்தை ஆனேனே!
பெரிய குரு: அது உன்பாடு, வெள்ளிக்காசு எண்ணி வாங்கும் போது, 
                             அதைப்பற்றி சிந்திக்கவில்லையோ
யூதாஸ்: உங்களின் பாவப்பணம் எனக்கு எதற்கு? (பணப்பையை வீசி எறி ந்துவிட்டு அகல்கின்றான். திரைச்சீலை நகர்கின்றது. யூதாச் தனியே புலம்பும் காட்சி, பின்னணியில் குற்றம் புரிந்தவன் என்ற பாட்டின் இசை ஒலிக்கின்றது, யூதாஸ் புலம்புகின்றான்)
யூதாஸ்:  குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மது காண்பதேது? ஆம்
                     குற்றம் புரிந்தேன். போதகர் படுகொலைக்கு நான் துணை
                     போனேன். ஐயகோ நான் கேடுவிளைவித்துவிட்டேனே!
                      கேடுவிளைவித்துவிட்டேனே! இந்த இரத்தபழி என்மீது வாழ் நாள்
                      முழுவதும் தொடருமே! நான் வாழக்கூடாது வாழக்கூடது, நான்
                      சாகவேண்டும், நான் சாகவேண்டும்
(யூதாஸ் தன்னத்தானே மாய்த்துக்கொள்கின்றான். அந்த காட்சி அதே மேடையில் கறுப்பு திரையால் மறைக்கப்பட, வலப்புறம் இருந்து இயேசு சிலுவையோடு நுழைகின்றார். இதற்கு பொருமான பின்னணி இசையும்
பாட்டும் இருக்கவேண்டும், இந்த காட்சி அமைப்புக்குள் இயேசுவை ஆடை களைகின்றது சிலுவையில் அறைகின்றது. பின்னர் இயேசு சிலுவையில் தொங்கி பின்னர் அவர் ஏலி ஏலி லாமா சப்க்தானி என் எபிரேய பாசை யில் கூறி, என் பிதாவே உமது கையில் ஆவியை ஒப்படைக்கின்றேன் எனச்சொல்லி உயிர் விடுகின்றார். உயிர் விடும் போது இடி மின்னல் பூகம் திரைச்சீலை கிழிதல், கல்லறை பிணங்கள் எழுந்து ஓடுவது இவைகளை பயங்கர சத்தங்களோடு, நிகழ்த்தி காட்டி காட்சி முடிகின்றது) ( மீண்டும் திரைவிலகுகின்றது, வெறும் சிலுவை மட்டும் உள்ளது,  அதன் முன் குற்ற வாளி கூண்டு உள்ளது. வழக்கறிஞர் தோன்றுகின்றார்)
                                                       காட்சி எட்டு
வழக்கறிஞர்: இப்படித்தான் இயேசுவின் கொலை நடந்துள்ளது,
                              ஒரு தனி மனித கொலையாக இருந்தாலும், இது 
                               ஒழுங்கமைக்கப்பட்ட  திட்டமிடப்பட்ட கொலை!
                              (Well Organized muder crime ) இந்த கொலை தனி மனித
                              பழிவாங்கலாக நடத்தப்படவில்லை, இந்த கொலை
                               யில் அரசாங்கம், அரசாங்க பாதுகாப்பு இராணுவம்
                               மற்றும் மதத்தின் மகா சங்கத்தினால் திட்டமிடப்
                               பட்ட சதிக்கொலையாக இது நடந்துள்ளது! இந்த 
                               கொலை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்
                                லவேன்டும். இதன் மூலமாக அரசாங்கம் மத நிறுவ
                               ணங்களின் கொலைகளுக்கும், புதை குழிகளுக்கும்
                               நியாயம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு ! எமக்கு
                              கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் படி, இயேசுவின்
                               கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் இரா
                                ணுவ வீரர்கள்!
(இராணுவ வீரர்கள் என்று சொன்னவுடன், இராணுவ வீரன் ஒரு வன் குற்றவாளி கூண்டில் நிற்கின்றார்)
வழக்கறிஞர்: இயேசுவின் சிலுவைக்கொலையில் இராணுவம்
                               நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளது, இராணுவ தரப்
                               பில் சாட்சியம் சொல்லவந்திருக்கும் நீங்கள் 
                                கொலைக்கான குற்றத்தை ஏற்றுக்கொள்கின்றி
                                ர்களா?
இராணுவ வீரன்: கொலையை நாம்தான் நிறைவேற்றினோம்,
                                       ஆனால் குற்றத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது?
வழக்கறிஞர்: ஏன் முடியாது? அதற்கான காரணம் கூற முடியுமா?
இ,வீரன் : நாம் எமது கடமையை செய்தோம், மேலிடத்தில் இருந்து
                      வரும் கட்டளைகளுக்கு அடிபணிவதே எமது கடமை!
வழக்கறிஞர் : உங்களுக்கு கட்டளை கொடுத்த அந்த மேலதிகாரி
                                யார் என்று சொல்லமுடியுமா?
இ, வீரன்:  அவர்தான் ஆளுணர் பிலாத்து அவரிடம் கேளுங்கள்.
வழக்கறிஞர்: இப்போது நீங்கள் போகலாம்,இப்பொழுது நாம்
                                ஆளூனர் பிலாத்துவை அழைக்கின்றோம்  நசரேத்
                                இயேசுவை சிலுவையில்றைந்து கொல்லூம் படி நீர்
                                தானா உத்தரவு பிறப்பித்தீர்கள்
பிலாத்து: ஆமாம் நானேதான்!
வழக்கறிஞர்: என்ன குற்றத்திற்காக நீங்கள் அவரை சிலுவைக்
                                கொலைக்கு கையளித்தீர்கள்.
பிலாத்து:  நான் தீர நன்றாக விசாரித்ததின் படி, இயேசுவின் மீது
                        எந்தவித குற்றத்தையும் நான் காணமுடியவில்லை
                         ஆயினும் அவரை நான் கொலை செய்யும் படி உத்தர
                        விட்டேன்.
வழக்க்றிஞர்:  அதுதான் நான் கேட்கின்றேன், செய்யாத குற்றத்து
                                க்கு    ஏன் மரணதண்டனை ?
பிலாத்து: இயேசுவின் மீது இரண்டுவிதமான கோனத்தில் குற்ற்ச்
                       சாட்டுக்கள் சுமத்தப்பட்டன, ஒன்று யூதமத நம்பிக்கை
                        க்கு எதிரானது, மற்றது உரோமை ஆட்சிக்கு எதிரானது
                        இதிலே யூதமத நம்பிக்கைக்கு எதிரான குற்றச்சாட்டு
                       வலுவாக இருந்தது
வழக்கறிஞர்: அப்படியானல் யூதமத சட்டப்படியல்லவா நீங்கள்
                               தீர்ப்பளித்திருக்கவேண்டும்?
பிலாத்து: உண்மைதான்! ஆனால் யூத மத சட்டத்தில் மரணதண்
                      டனை வழங்கமுடியாதே, யூத மத தலைவர்களின் எண்
                      ணம் முழுவதும், இயேசுவுக்கு சிலுவை மரணம் அளிக்
                       கவேண்டும் என்பதே! அதற்காக உரோமை அரசுக்கு
                       எதிரான புரட்சிக்காரன் என குற்றத்தை சுமத்தினார்
                       கள். அந்த குற்றச்சாட்டுக்களை பொய்யென நிரூபிக்க
                        இயேசுவால் முடியவில்லை. ஆயினும் இயேசுவை விடு
                        விக்க, பரபாசோடு இயேசுவை முன்னிறுத்தி எனது
                       இராஜ தந்திரத்தை பிரயோகித்தேன்.
வழ்கக்கறிஞர்: பிறகு என்ன நடந்தது?
பிலாத்து: நான் எதிர்பார்த்ததுக்கு மாறக யூத மதகுருமார்களின்
                      கோரிக்கை பரபாசை விடுவிக்க கோரினார்கள். அவ
                      கொலைகாரன் கொள்ளைக்காரன், இதில் வேடிக்கை
                      என்னவென்றால் மக்களும் யூத மத தலைவர்களோடு
                       சேர்ந்து கொண்டார்கள். அது மட்டுமல்ல எனது பதவி
                      க்கே ஆபத்துவந்துவிடுமோ? எனப்பயந்து நான் இயேசு
                       கொலைக்கு கையளித்தேன், நான் சட்டப்படியே மக்க
                       ளின்  ஞனநாயக உரிமைக்கு மதிப்பளித்தேன். எனவே
                      நான் நிரபராதி !   
வழக்கறிஞன்: ஆளுனரே நீங்கள் போகலாம்! ஆளுனரின் வாக்கு
                                  மூலத்தின் படி, இயேசுவின் சிலுவைகொலை 
                                   யூதமத சங்கத்தின் சதிச்செயலாகவே தெரிகின்
                                   றது, எனவெ யூத மத சங்கத்தின் வாக்கு மூலத்தை
                                   கேட்டறிந்து கொள்வோம். மகா சங்கைகுரிய
                                    பெரிய குருவை அழைக்கின்றோம்!
                                     (பெரிய குரு சாட்சிக்கூண்டில்)
                                    மகா பெரிய குரு அவர்களே! முதலில் வணக்கம்!
                                    ஆளுனர் பிலாத்துவின் வாக்குமூலத்தின்படி
                                   இயேசுவின் சிலுவைக்கொலை மகா சங்கத்தின்
                                   விருப்படி நடந்துள்ளதாக கூறுகின்றார்.
பெரிய குரு: ஆமாம் வாஸ்தவம் தான். எங்களைபொறுத்தவரை
                             இயேசு தேவதூசணக்காரன். ஆண்டாண்டு தோறும்
                              ஏன் இன்று கூட இஸ்ரவேலராகிய நாம், கடவுள் 
                              மெரியாவாக யூதர்களின் இராஜாவாக, சகல தேச
                              இஸ்ரவேலர்கள் ஆளும் படியாக மாபெரும் சாம்
                              ராச்சியத்தை அமைப்பார் என நாம் இன்றுவரை
                              நம்புகின்றோம். இன்றுவரை நாம் அண்டை எதிரி
                              நாடுகளுடன் போர் தொடுக்கின்றோம். அப்படி இரு
                              க்கையில் எமது நம்பிக்கையை சீரழித்த் இந்த சதி
                              காரனை நாம் சிலுவையில் அறைந்து கொண்டது
                              மிகச்சரியான் செயலே! எம்மை எவரும் கேள்வி
                               கேட்கேவே கூடாது.
வழக்குரைஞன்: உங்களை தொந்தரவு செய்தமைக்கு மன்னிக்க
                                     வும், நீங்கள் போகலாம்
                                     (பெரியகுரு போகின்றார்)
                                     இதுவரையும் நீங்கள் கேட்ட வாதப்பிரதிவாத
                                     ங்களின் அடிப்படையில் ஒவ்வொருவருமே
                                     தம்மை நிராபாராதிகள் என நிருபிக்கின்றா                                               ர்கள். அப்படியானால் இயேசுவை சிலுவையில்                                           அறைந்து கொன்ற குற்றவாளிகள் யார்  


 

Sunday 1 October 2023

மளிகை கடை

 ஒருவர் முதலில் சிறியதாக 

*மளிகை கடை ஒன்றை ஆரம்பித்தார்*.

பின்பு ஜூவல்லரி ஷாப், ஹோட்டல், *துணிக்கடை, டிபார்ட்மென்டல் ஸ்டோர் என வளர்ந்தது.*

ஒருநாள் இரவு அவர் வீடு திரும்பியபோது மணி பன்னிரண்டைத்  தாண்டி இருந்தது.

*வழக்கமாக அவரை எதிர்கொண்டு அழைக்ககாத்திருக்கும் அவர் மனைவி அன்றைக்கு இல்லை.*

வீட்டுப் பணியாளர் தான் கதவை திறந்தார். அவர் முகக் *குறிப்பை* உணர்ந்து அந்தப் பணியாளர் சொன்னார்.

*ஐயா அம்மாவுக்கு திடீர்னு மயக்கம் வந்துடுச்சு ஹாஸ்பிடலுக்கு போய் ட்ரீட்மென்ட் எடுத்து விட்டு ஒரு மணி நேரத்திற்கு முன்னாடி தான் வந்தாங்க ரூம்ல தூங்குறாங்க.*

*ஏன் என்னாச்சு.?*

பிரஷர் என்று டாக்டர் சொல்லி இருக்காங்க. ஆனா பயப்படத் தேவை இல்லையாம். *மருந்து மாத்திரை சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடுமாம்.*

எனக்கு போன் பண்ணி சொல்ல *வேண்டியதுதானே.?*

நிறைய தடவை உங்க பெரிய பையன் போன் பண்ணினாராம். *ஸ்விட்ச்டு ஆஃப்னே  வந்துச்சாம்.*

அப்போதுதான் அவருக்கு ஒரு மீட்டிங்குக்காக இரவு எட்டு மணிக்கு.

 *தன் மொபைல் போனை சுவிட்ச் ஆஃப் செய்தது நினைவுக்கு வந்தது.*

அவர் தன் மனைவி படுத்திருந்த அறைக்குள் அவசரமாக நுழைந்தார். 

*அங்கு அவர் மனைவி ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்*.

அவர் மனைவியின் தலையை வருடிக் கொண்டிருந்தார். 

*சே இவளை கவனிக்காமல் விட்டு விட்டோமே என்கிற வருத்தம் எழுந்தது.*

அவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. *குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்ந்து இருந்த நாட்கள் எல்லாம் நினைவுக்கு கொண்டு வர முயன்றார்.*

அவர் நினைவுக்கு வந்தது மிக மிகச் சொற்ப தினங்களே.

*தன் மனைவியின் பக்கத்தில் இப்படி நெருக்கமாக அமர்ந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. என்பதை நினைத்ததும் அவருக்கு திடுக் கென்று இருந்தது.*

அறையை விட்டு வெளியே வந்தார் அடுத்த அறை கதவை திறந்து பார்த்தார். 

*இரு மகன்களும் படுக்கையில் படுத்து இருந்தார்கள்.*

சத்தம் இல்லாமல் கதவை மூடினார். *மாடியிலிருந்த தன் தனியறைக்கு போவதற்காக படிகளில் ஏறினார்.*

*ஐயா* சாப்பிட ஏதாவது வேணுமா.? *பணியால் கேட்டான்.*

வேண்டாம் என்று சொல்லிவிட்டு. 

*அவர் தன் அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டார்.*

உடையை மாற்றிக் கொண்டு கட்டிலில் அமர்ந்தார். *இவ்வளவு சம்பாதித்து என்ன பிரயோஜனம் நாம் யாருக்காக வாழ வேண்டும்*.

பிள்ளைகள் மனைவி இவர்களோடு கூட நேரத்தை செலவழிக்க முடியாமல். 

*அப்படி என்ன பிசினஸ் என்னென்னவோயோசனை வந்தது.*

கடைசியில் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். இன்றுதான் கடைசி. 

இன்றோடு பிசினஸில் இருந்து ஓய்வு பெற்று விடவேண்டும். *இனிமேல் வாழவேண்டும் எனக்காக என் மனைவிக்காக என் குடும்பத்திற்காக.*

அப்போதுதான் கட்டிலுக்கு அருகில் இருந்த நாற்காலியில் யாரோ உட்கார்ந்து இருப்பது அவருக்கு தெரிந்தது. 

*கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு தானே வந்தோம் இது யார் எப்படி உள்ளே வந்தார்..?*

யார் நீங்க எப்படி உள்ளே வந்தீங்க.? *என்று கேட்டார்*.

அந்த உருவம் சொன்னது நான் மரண தேவதை. *உன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்*.

*அவர் திடுக்கிட்டுப் போனார்.*

*அய்யாசாமி* நான் இப்போதுதான் வாழணும்னு முடிவு செஞ்சிருக்கேன். *இப்போ போய் என்னை கூட்டிட்டு போக வந்து இருக்கீங்களே கொஞ்சம் அவகாசம் கொடுங்க.*

அவர் எவ்வளவோ பேசி மன்றாடிப் பார்த்தார். தன் *செல்வத்தை* *எல்லாம் கொடுப்பதாக சொல்லிப் பார்த்தார்*.

மரண தேவதை அவருக்கு செவிசாய்க்க மறுத்தது. *அங்கிருந்து நகராமல் அவரை அழைத்துச் செல்ல ஆணி அடித்ததுபோல் அப்படியே உட்கார்ந்து இருந்தது.*

ஒரே ஒரு மணி நேரம் மட்டும் அவகாசம் கொடுங்க ஐயா. 

*என் மனைவி குழந்தைகளுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கு.*

*அதை முடித்துவிடுவேன்.என்று கேட்டார்.*

அதற்கும் மரண தேவதை ஒப்புக்கொள்ளவில்லை. 

அவர் கெஞ்சி அழும் குரலில் கேட்டார். 

*சரி ஒரே ஒரு நிமிஷமாவது கொடுப்பீர்களா உலகத்திற்கு நான் ஒரு குறிப்பு எழுதனும்.*

மரண தேவதை ஒப்புக்கொண்டது.

*அவர் இப்படி எழுதினார்.*

உங்களுக்கான நேரத்தை. 

*சரியான வழியில் செலவழித்து விடுங்கள்.*

என்னுடைய அனைத்து சொத்துக்களை ஈடாக கொடுத்தாலும் கூட.

 *எனக்காக ஒரு மணி நேரத்தை என்னால் வாங்க முடியவில்லை.*

இது ஒரு பாடம் எனவே உங்கள் வாழ்க்கையில் *ஒவ்வொரு நிமிடத்தையும் வீணடித்து விடாமல் அனுபவித்து வாழ்ந்து விடுங்கள்.*

அப்போது யாரோ கதவை பலமாக தட்டும் சத்தம் கேட்டது. 

*அவர் திடுக்கிட்டு கண் விழித்தார்.*

விடிந்து வெகுநேரம் மாகிவிட்டிருந்தது. அவர் எழுந்து போய் கதவை திறந்தார். *பணியால் தான் வெளியே நின்று கொண்டிருந்தார்.*

*ஐயா* ரொம்ப நேரமா கதவைத் தட்டுறேங்க நீங்க திறக்கலையா. *பயந்துட்டேன் அதான் கொஞ்சம் பலமாக தட்டினேன்.*

அவர் அவசரமாக திரும்பி தன் பெட்டுக்கு அருகில் இருக்கும் *மேஜையை பார்த்தார்.*

அங்கே அவர் எழுதிய குறிப்பு இல்லை. 

*பேனாவும் எழுதப்படாத வெள்ளைத்தாளும் தான் இருந்தன*...

லட்சுமி கடாட்சம்

 பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, ‘பக்தனே! நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன். நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது.

எனவே இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள். ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக் கூடாது’ என்றாள்.

மறுநாள் பொழுது விடிந்தது. வியாபாரி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கனவில் நடந்தவற்றைக் கூறினார். மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று அவர் தம் குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆலோசனை கூறினர்.

ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே கருத்தையே வெளிப்படுத்தினர். ‘நவ ரத்தினங்களை வரமாக கேளுங்கள்; ஏராளமான பொற்குவியல்களை கேளுங்கள்; நிறைய உணவு பொருட்களை கேளுங்கள்; மாட மாளிகைகள் பலவற்றை கேளுங்கள்’ என்று அடுக்கிக் கொண்டே போனார்கள்.

அப்போது அந்த வீட்டின் கடைசி பெண் தன் தந்தையிடம், ‘அப்பா நமக்கு தேவையான பொன், வைரம், வைடூரியம், மாணிக்கம், வீடு என எவற்றை வரமாக கேட்டு வாங்கினாலும், அது நம் வீட்டில் நிலைக்கப் போவதில்லை. ஏனெனில் எப்போது நம் வீட்டில் இருந்து மகாலட்சுமி தேவி வெளியேறப் போகிறேன் என்று எப்போது கூறி விட்டாளோ, அவள் வெளியேறியவுடன் அவளது ஐஸ்வரியம் பொருந்திய இந்த பொருட்களும் வெளியேறி விடும், அல்லது நிலைக்காமல் போய்விடும்.

எனவே எப்போதும் எங்கள் வீட்டில் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்கும்படி வரம் அருளுங்கள் என்று மகாலட்சுமி தேவியை கேளுங்கள்’ என்று கூறினாள்.

இளைய மகள் கூறியதே சரி என்று வியாபாரிக்கு தோன்றியது. அதையே இறுதி முடிவாகக் கொண்டு, இரவு தூங்கச் சென்றார் வியாபாரி.

அன்றைய தினம் இரவில், அவர் கனவில் மகாலட்சுமி தோன்றினாள். அவளிடம், ‘அன்னையே! எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் எப்போதும் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்க வேண்டும். இதுவே நான் உன்னிடம் கேட்கும் வரம். இந்த வரத்தை மட்டும் தாங்கள் அருளினால் போதுமானது’ என்று வியாபாரி கேட்டார்.

லட்சுமிதேவி சிரித்தபடி ‘மகனே! இப்படி ஒரு வரத்தைக் கேட்டு மீண்டும் உன் வீட்டிலேயே என்னை கட்டிப்போட்டு விட்டாய். எந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்கிறார்களோ, எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லையோ, அந்த வீட்டில் நிச்சயமாக நான் இருந்தே தீருவது என்று முடிவு எடுத்துள்ளேன். எனவே நீ கேட்ட இந்த வரத்தால் மீண்டும் நான் உன் வீட்டிலேயே தங்கி இருந்து விடுகிறேன்’ என்று கூறி அங்கேயே தங்கிவிட்டாள்.

*‘எந்த வீட்டில் குடும்பத்து பெரியவர்களை, மதித்து வழிபடுகிறார்களோ, எங்கு நாகரீகமான முறையில் மற்றவர்களுடன் மரியாதையோடு பழகுகிறார்களோ, பிறருடைய செய்கையால் மனதில் கோபம் ஏற்பட்டாலும் எவர் தங்கள் வாயால் சண்டை செய்யாமல் இருக்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன்’ என்று இந்திரனிடம் ஒருமுறை லட்சுமி கூறியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. ஆகையால் லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.*

ஒரு ஜோடி காலணி

 ஒரு தபால்காரர், "கடிதம்" என்று ஒரு வீட்டின் கதவைத் தட்டினார்.

 “வருகிறேன்” என்று உள்ளிருந்து குழந்தை போன்ற குரல் கேட்டது.

 ஆனால், நபர் வரவில்லை;  மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் கழிந்தன.

 இறுதியாக, கோபமடைந்த தபால்காரர், "ஏய், சீக்கிரம் வந்து கடிதத்தை எடுத்துக்கொள்.

 மீண்டும் குழந்தை போன்ற குரல், "ஐயா, கடிதத்தை கதவுக்கு அடியில் வைக்கவும்; நான் வருகிறேன்" என்றது.

 தபால்காரர், "இது ஒரு பதிவு செய்யப்பட்ட கடிதம், அதற்கு ஒப்புதல் தேவை, எனவே நீங்கள் கையெழுத்திட வேண்டும்" என்றார்.

 *பத்து நிமிடங்களுக்குப் பிறகு, கதவு திறந்ததும், எரிச்சலடைந்த தபால்காரர் வாயடைத்தார்!*

 *கடிதத்தை எடுக்க கால் இல்லாத ஒரு சிறுமி அவன் முன் மண்டியிட்டாள்.*

 தபால்காரர் கடிதத்தை அமைதியாக கொடுத்துவிட்டு வருத்தத்துடன் திரும்பிச் சென்றார்.

 இப்படியே நாட்கள் சென்றது.

 தபால்காரர் சிறுமியின் வீட்டிற்கு கடிதம் அனுப்பும் போதெல்லாம் கதவு திறக்கும் வரை காத்திருப்பது வழக்கம்.

 தீபாவளி நெருங்கிக் கொண்டிருந்தது, தபால்காரர் எப்போதும் வெறுங்காலுடன் இருப்பதை அந்தப் பெண் கவனித்தாள்.

 எனவே, ஒருமுறை தபால்காரர் கடிதம் வழங்க வந்தபோது, ​​​​அந்தப் பெண் அமைதியாக தரையில் உள்ள கால்தடங்களில் இருந்து தபால்காரரின் கால் அளவை அளந்தார்.

 தீபாவளிக்கு முன்பு, அந்த பெண் அவரிடம், *"மாமா, இது தீபாவளியன்று உங்களுக்கு நான் கொடுத்த பரிசு" என்று சொன்னாள்.

 தபால்காரர், *"நீ எனக்கு மகள் போன்றவள்; உன்னிடம் இருந்து நான் எப்படி பரிசு வாங்க முடியும்?"* என்றார்.

 சிறுமி வற்புறுத்தியதால், தபால்காரர் வீட்டிற்கு எடுத்துச் சென்று பாக்கெட்டைத் திறந்தார்.

 அவர் ஒரு ஜோடி காலணிகளைப் பார்த்தபோது அவரது கண்கள் கண்ணீர் நிரம்பியது, ஏனெனில் அவரது முழு சேவையின் போதும், அவர் வெறுங்காலுடன் இருப்பதை யாரும் கவனிக்கவில்லை.

 அடுத்த நாள், தபால்காரர் தனது தபால் நிலையத்தை அடைந்து, *அவரை உடனடியாக வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும்* என்று தபால் அதிகாரியிடம் கெஞ்சினார்.

 போஸ்ட் மாஸ்டர் காரணம் கேட்டதும், எல்லாத்தையும் சொல்லி, கண்ணீருடன்,

 *"ஐயா, இன்னைக்கு அப்புறம் அந்தத் தெருவுக்குப் போக முடியாது. அந்தச் சிறுமி என்னை வெறுங்காலுடன் பார்த்துக் காலணியைக் கொடுத்தாள்; நான் எப்படி அவளுக்குக் கால் கொடுப்பேன்?"*

 ++++++++

 *மற்றவர்களின் வலி, அனுபவங்கள் மற்றும் அவர்கள

பசுமரத்தாணி

 பார்வையற்ற இளைஞன் ஒருவனை சிலர் புத்தரிடம் அழைத்து வந்தனர்.

அவர்கள், “இந்த இளைஞன் வெளிச்சத்தைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் நம்ப மறுக்கிறான்” என்று கூறினர்.

அப்போது பார்வையற்ற இளைஞன், “வெளிச்சத்தை நான் தொட்டுப் பார்க்க வேண்டும். சுவைத்துப் பார்க்க வேண்டும்.

அதன் வாசனையையோ அல்லது ஓசையையோ நான் உணர வேண்டும். இவை எதுவும் இல்லாத வெளிச்சம் என்ற ஒன்று இருப்பதை நான் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?” என்றான்.

அவனுடன் வந்தவர்கள் புத்தரிடம், “நீங்கள் தான் வெளிச்சம் உண்டு என்பதை அவன் நம்பும்படி செய்ய வேண்டும்” என்று கூறினர்.

அதற்கு புத்தர், “அவன் உணர முடியாத ஒன்றை அவனை நம்ப வைக்கும் செயலை நான் செய்ய மாட்டேன்.

இப்போது அவனுக்கு தேவை பார்வை. வெளிச்சம் பற்றிய விளக்கமல்ல. அவனுக்கு பார்வை வந்து விட்டால், விளக்கம் தேவைப்படாது.

அவனைத் தகுந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்று பார்வை கிடைக்கச் செய்யுங்கள்” என்று கூறி அனுப்பினார்.

புத்தர் கூறியதை ஏற்று பார்வையற்ற இளைஞனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். சிகிச்சை முலம் அவனுக்கு பார்வையும் கிடைத்தது.

உடனே அந்த இளைஞன் புத்தரிடம் ஓடி வந்து, “வெளிச்சம் இருக்கிறது” என்று கூறினான்.

உடனே புத்தர், “வெளிச்சம் இருக்கிறது என்று அவர்கள் கூறிய போது ஏன் நம்ப மறுத்து விட்டாய்?” என்று கேட்டார்.

அதற்கு அந்த இளைஞன்,

“கண் தெரியாத என்னால், எவ்வாறு வெளிச்சத்தை உணர முடியும்? அவர்கள் சொன்னதை அப்படியே நான் ஏற்றுக் கொண்டிருந்தால், இன்னும் நான் கண் தெரியாதவனாகவே இருந்திருப்பேன்” என்றான்.

அனுபவத்தால் உணர வேண்டிய ஒன்றை ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது என்பதை புத்தர் இந்த நிகழ்ச்சியின் முலம் சீடர்களுக்கு புரிய வைத்தார்.

ஆம்..

"அனுபவமே சிறந்த ஆசான்!" அனுபவமே ஒரு மனிதனுக்கு நல்ல பாடத்தைக் கற்றுத்தரும்.

எங்கு வேலை பார்த்தாலும் அதை வேலையாகக் கருதாமல், அதை ஒரு அனுபவமாக தெரிந்து கொள்ளக்கூடிய ஓரு வாய்ப்பாக நினைத்து, அதில் ஈடுபாடு காட்ட வேண்டும்.

இந்த அனுபவப் பாடம்தான் மனிதர்கள் உயர்வதற்கான தாரக மந்திரம் ''நெருப்பு சுடும் என்பதும், நீர் குளிரும்" என்பதும் நம் அனுபவங்கள் மூலமாகக் கற்றுக் கொண்டவைதானே.

பக்கம் பக்கமாகப் படித்த பாடங்கள் மறந்து போகலாம்.

ஆனால், பசுமரத்தாணிபோல மனதில் படிந்த அனுபவங்கள் மறக்காது.

0 comments


காது கேட்காது!

 ஒரு செல்வந்த முதலாளியின் வீட்டில் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். முதலாளி தினமும் வீட்டுக்கு வரும் போது ஓடோடிச் சென்று வீதிக்கதவை திறந்து அவருக்கு வணக்கம் சொல்வது அவனது வழக்கம். ஆனாலும் ஒரு நாளேனும் அந்த முதலாளி பதில் கூறியதும் கிடையாது; காவலாளி முகத்தை ஏறெடுத்து பார்ப்பதும் கிடையாது.

ஒரு நாள் பசியோடிருந்த அந்தக் காவலாளி வீட்டுக்கு வெளியே உள்ள குப்பத்தொட்டியில் வீசப்பட்ட உணவுகள் ஏதும் இருந்தால் எடுத்து சாப்பிடுவோம் என குப்பத்தொட்டியை கிளரும் போது முதலாளி அதனைக் கண்டார். ஆனாலும் வழக்கம் போல எதையுமே கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார்.

அடுத்த நாள் அதே இடத்தில் காவலாளி உணவைத் தேடும் போது புதிதாக தயாரிக்கப்பட்ட சுத்தமான உணவுகள் ஒரு பையினுள் காணப்பட்டது. காவலாளி சந்தோஷத்தில் எங்கிருந்து வந்தது என்றெல்லாம் பார்க்காமல் எடுத்துச் சென்றான்.

இவ்வாறே தினமும் அதே இடத்தில் ஒரு பையிருக்கும், அந்த பை நிறைய உணவுப்பொருட்கள் இருக்கும். அவனும் அதை தவறாமல் எடுத்து தன் மனைவி, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தான். இருந்தாலும் எந்த முட்டாள் இப்படி தினமும் பொருட்களை வாங்கி இங்கே விட்டுச் செல்கிறான் என மனதுக்குள் ஒரு நகைப்புடன் கூடிய கேள்வியும் வேற.

திடிரென ஒரு நாள் முதலாளி இறந்துவிட்டார். வீடு நிறைய முதலாளியின் உறவினர்களும், நண்பர்களும் வந்தனர். அன்று அதே இடத்தில் உணவுப்பொதியை தேடினான். உணவு இருக்கவில்லை. ஒரு வேளை பார்க்க வந்தவர் யாரேனும் எடுத்திருக்க முடியும் என நினைத்து விட்டுவிட்டான். இரண்டாம் நாள் பார்க்கிறான், அந்த இடத்தில் உணவுப்பை இல்லை; மூன்றாம் நாள், நான்காம் நாள் என பார்க்கிறான். உணவுப்பை இருக்கவில்லை.

இப்படியே சென்றதால் அந்தக் காவலாளிக்கு தன் குடும்பத்துக்கு உணவளிக்க பெரும் சிரமமாய் போயிற்று. உடனே தனது முதலாளியம்மாவிடம் போய் சம்பளத்தை உயர்த்தவும் இல்லையாயின் வேலையை விட்டு விடுவதாகவும் கூறினான். அதற்கு முதலாளியம்மா மறுத்துவிட்டார்.

வேறு வழியில்லாமல் வீதியோரம் எடுக்கும் உணவுப்பை கதையையும், அது இல்லாததால் தன் குடும்பம் படும் அவஸ்தையையும் சொன்னான். உடனே முதலாளியம்மா கேட்டார்; எப்போதிலிருந்து உணவுப் பை இல்லாமல் போனதென்று. அதற்கு அவனும் முதலாளி இறந்த நாளிலிருந்து என சொன்னதும், முதலாளியம்மா ‘ஓ’ என அழத்தொடங்கினார். இதனைப் பார்த்து கவலையடைந்த காவலாளி சம்பள உயர்வு வேண்டாம், நான் இங்கேயே வேலை செய்கிறேன், அழுவதை நிறுத்துங்கள் என கூறினான்..

அதற்கு முதலாளியம்மா, நான் அதற்கு அழவில்லை. என் கணவர் தினமும் ஏழு பேருக்கு உணவளித்து வந்தார். அதில் ஆறு பேரை ஏற்கனவே இனம் கண்டுவிட்டேன். ஏழாம் நபரைத்தான் இத்தனை நாளாய் தேடிக்கொண்டிருந்தேன். ஏழாவது நபர் நீதான் என தெரிந்து கொண்டதும் சந்தோஷத்தில் அழுகிறேன் என்றாள்.

நான் தினமும் தவறாமல் வணக்கம் சொல்லியும் ஏறெடுத்தும் கூட பார்க்காத நம்ம முதலாளியா இப்படி நமக்கு உணவு தந்தார் என நம்பியும் நம்பாமலும் யோசித்தபடியே அவன் சென்றான்.

அடுத்த நாளிலிருந்து முதலாளியின் மகன் தினமும் காவலாளியின் வீடு தேடி வந்து உணவுப்பையை காவலாளியின் கையிலே கொடுத்துச் சென்றான். காவலாளி நன்றி சொல்லியும் முதலாளி மகன் அதற்கு பதில் சொல்லாமலே செல்வான், அவனது தந்தையைப் போல.

ஒரு நாள் இப்படித்தான் முதலாளியின் மகன் வீடு தேடிவந்து கையில் உணவுப்பையை கொடுக்கும் போது வழக்கம் போல நன்றி சொன்னான் காவலாளி. அதற்கு அங்கிருந்து எந்த பதிலும் இல்லை.

பொறுமையை இழந்த காவலாளி மிகவும் உரத்த குரலில் நன்றி சொன்னான். திரும்பிப்பார்த்த அந்த சிறுவன் “எனக்கும் என் தந்தையைப் போல் காது இரண்டும் கேட்காது” என்று சொல்லிவிட்டு திரும்பிப் போனான்.

நாமும் இவ்வாறு தான் அடுத்தவரது நிலைமைகள் புரியாது பார்த்த மாத்திரத்திலே அவர்களை தவறாக முடிவெடுத்துவிடுகிறோம். அடுத்தவரது

நடவடிகைகளுக்கு பின்னால் ஒளிந்துள்ள உண்மைத்தன்மையை அறியாமல்.......

வில் அம்பு

 ஒரு வேட்டை தொழில் செய்யும் அப்பா  

வில் அம்புகளை எடுத்து 

மகனையும் வேட்டைக்கு அழைத்து செல்ல தயாராகிக் கொண்டிருந்தார்.

வேட்டை என்றால் கண்ணில் படும் உயிர்களை எல்லாம் கொல்வது என்ற கிளுகிளுப்பு ஆளாகி இருந்தான் மகன்.

“அப்பா இதோ பாருங்க ஒரு குட்டிப்பல்லி. இத நான் மிதித்து விடவா”

“ச்சே ச்சே பாவம் அது குஞ்சுப்பா. சின்னது கொல்லக் கூடாது”

“அப்பா இதோ ஒரு சிலந்தி பாருங்க. இத நசுக்கிரவா”

“நல்லா பாரு இது குட்டி சிலந்தி. சிலந்தியோட பாப்பா. அத அழிக்க கூடாது”

வெளியே வந்தார்கள். காட்டை நோக்கி நடந்தார்கள்.

“அப்பா இங்க ஒரு நாகப்பாம்பு குஞ்சு ரெண்டு இருக்குது அது மேல கல்லை போடவா”

“வேண்டாம் அது குஞ்சுங்க. அதுல கல்லைப் போடக் கூடாது”

“அப்பா அதோ ஒரு கட்டுவீரியன் குஞ்சு இருக்குது அதையாவது அழிக்கவா. அது ரொம்ப விஷம்தானே”

“ஆனா குட்டியாச்சே. பாப்பாச்சே. அதை கொல்ல கூடாது”

“அப்பா அதோ ஒரு பறவை குஞ்சுகளுக்கு உணவு கொடுக்குது. மரத்து மேல ஏறி கூட்டை கலைச்சி குஞ்சுகளை பிடிக்கவா. பொரிச்சா ருசியா இருக்கும்”

“அடடா அது குஞ்சு ஆச்சே. பிறந்ததுங்க இருக்கும். அது கூட்டை கெடுக்க கூடாது”

“அதோ அப்பா அதோ மூணு மான்குட்டி நிக்குது. இளங்கறியா இருக்கும். எளிதா பிடிச்சிரலாம்”

“மகனே அது குட்டிடா. அத எப்படி அழிக்க முடியும்”

இப்போது மகன் சோர்வுற்றான். 

“என்னப்பா எதையெடுத்தாலும் குஞ்சு, குட்டி அழிக்காதே என்று சொல்றீங்க. அப்ப உங்க சட்டப்படி குஞ்சுகளை குட்டிகளை அழிக்க கூடாதா”

“அப்படி நான் சொல்லலியே மகனே. அழிக்கலாமே”

மகன் துள்ளி குதித்தான். 

“சொல்லுங்கப்பா நா எந்த குஞ்சை எந்த குட்டியை அழிக்கலாம்”

அப்பா சிரித்தார்.

அவர்கள் வேட்டைக்கு அன்று எதுவும் கிடைக்கவில்லை. மாலையில் சோர்வாக ஆற்றில் மீன் பிடித்து வீடு வந்தார்கள்.

அவர்கள் பக்கத்து குடிலின் வெளியே மான் தோல் இருந்தது. 

இவர்களைப் பார்த்ததும் பக்கத்து குடில் வேடன் வந்தார். தன் மகனுடன் வந்தார்.

“இந்தாங்க மான் மாமிசம். இன்று இந்த மானை என் மகனே வேட்டையாடினான். அவ்வளவு திறமை அவனுக்கு”என்றார்.

இதைக் கேட்ட மீன் பிடித்த வேடன் பக்கத்து குடில் மகனை மனமார பாராட்டினார். 

தன் அப்பா பக்கத்து குடிலில் இருக்கும் தன் வயதை ஒத்த இன்னொரு சிறுவனை பாராட்டுவது கண்டு இவன் மனம் குமைந்தான். இவனால் அதை ஏற்கமுடியவில்லை.

அப்படியே திணறி சுவர் பார்த்து நின்றிருந்தான்.

அப்பா அவன் தோளை தொட்டார்.

“ஏன் உன் முகம் வாடி இருக்கிறது”

“இல்லையே நான் சரியாகத்தான் இருக்கிறேன்”

“உன் நண்பன் வேட்டையில் சாதித்தது. நான் அவனை மனம் விட்டு பாராட்டியது உனக்கு ஒருமாதிரி இருக்கிறதா. உண்மையை சொல் சில உணர்வுகளை வாய்விட்டு சொன்னால் சரியாகிவிடும்.

“ஆம்” என்று மகன் தலையசைத்தான். 

”இன்று காலையில் இருந்து ஒவ்வொரு குட்டியாக, குஞ்சியாக நீ கொன்று விடவா கொன்றுவிடவா என்று கேட்டாய். நான் கொடிய விஷமாக மாறக்கூடிய குட்டி நாகப்பாம்பை கூட தேவையில்லாமல் அழிக்காதே  என்றே சொன்னேன். 

ஆனால் இப்போது சொல்கிறேன் இந்த குட்டியை,  அழித்து விடு”

“எதை அப்பா” 

உன் மனதில் இப்போது பிறந்திருக்கும் பொறாமை என்ற குட்டியை உடனே கொன்று விடு. ஈவு இரக்கமில்லாமல் கொன்றுவிடு. அதனால் பிறந்த காழ்புணர்ச்சி என்ற குஞ்சை உடனே நசுக்கி விடு. ஈவு இரக்கம் பார்க்காதே. அம்மிருகங்கள் வளர்ந்தால் உன்னை அழித்து விடும்”

இப்போது மகனுக்கு குஞ்சிலே அழிக்க வேண்டிய பறவை எது. குட்டியிலேயே அழிக்க வேண்டிய மிருகம் எது என்று நன்றாக புரிந்து விட்டது.

வியர்வை வடியும் அப்பாவை அணைத்துக் கொண்டான்.

“அப்பா நான்  என் நண்பனை பாராட்டி வருகிறேன்” என்று பக்கத்து குடிலை நோக்கி சென்றான்.

Once upon a time,

 Once upon a time, in a lush green forest, there lived a monkey named Kapi. Kapi was known throughout the forest for his intelligence and his ability to solve complex problems. Other animals would often come to him for advice, and he would always come up with a solution that would benefit everyone.

One day, Kapi noticed that the fruits on the trees in the forest were dwindling in numbers. He realized that if the animals continued to consume the fruits at the same rate, soon there would be no fruits left for anyone. So, Kapi came up with a plan to solve this problem.

He called a meeting of all the animals in the forest and explained the situation to them. He proposed that they should only take the fruits they needed and leave the rest for others to consume. Initially, some animals were skeptical about the idea, but Kapi convinced them that it was the best solution.

As time went by, the animals started following Kapi’s plan, and the fruits on the trees began to grow back. The forest became a happy place again, and the animals lived in peace and harmony.

However, not everyone was happy with the new arrangement. There was a group of monkeys who were greedy and refused to follow Kapi’s plan. They continued to take more fruits than they needed, which caused a shortage for others.

Kapi knew he had to do something about this, so he came up with a new plan. He gathered a group of animals and trained them to shake the trees in such a way that only the ripe fruits would fall, and the unripe ones would remain on the branches. The greedy monkeys wouldn’t be able to distinguish between the ripe and unripe fruits and would have to leave the trees empty-handed.

The plan worked, and the greedy monkeys were left with no choice but to follow Kapi’s plan. They realized that their greed was causing harm to the entire forest and started cooperating with the other animals.

From that day on, Kapi’s intelligence and wisdom were highly respected by all the animals in the forest. They learned that it was essential to work together and follow a wise leader who had everyone’s best interest at heart.

Moral of the story

The moral of the story is that intelligence is not just about solving complex problems, but also about using that intelligence to benefit others. When we work together for a common goal, we can achieve great things and live in peace and harmony.

Conclusion

So, the story of the intelligent monkey, Kapi, teaches us that intelligence is not just about solving complex problems but also about using that intelligence to benefit others. When we work together for a common goal and follow wise leaders who have everyone’s best interest at heart, we can achieve great things and live in peace and harmony. Let us remember the valuable lessons from Kapi’s story and always strive to be wise, helpful, and cooperative like him. Who knows, maybe someday we’ll be as intelligent and respected as Kapi, the intelligent monkey!

0 comments

நீண்ட காலத்திற்கு முன்பு, விலங்குகளின் ராஜ்ஜியத்தில், ஒரு செம்மறி ஆடு சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு கூண்டுக்குள் சிங்கம் அழுவதைக் கண்டது...