Followers

Tuesday, 31 January 2023

 எங்கே நீயோ நானும் அங்கே உன்னொடு,,,,,பேசாலைதாஸ்


ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள்.ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான்.

அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.

அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான்.பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான்.அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான்.ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை.

 ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள்.ஒருநாள்...

அவன் மரணப் படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான்.

எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான். தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான்.அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள். அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான்.அவளோ நீயோ சாகப்போகிறாய்.

நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்று விட்டாள். பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான்.அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.

நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது.

 அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன்.

உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள். ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த 

வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.

உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.

1. நான்காவது மனைவி நமது உடம்பு.நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை.

நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.

2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான்.

நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.

3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள்.அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள்.

அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.

4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா.நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப் படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.


உடனே சொல்லுங்கள்

 உடனே சொல்லுங்கள்  பேசாலைதாஸ் 

ஓர் இளைஞன் செக்ஸ் வைத்தியரிடம் போனான்.

"ஐயா, உடலுறவு கொள்ளும் போது என்னால் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. விந்து விரைவாக வெளியேறி விடுகிறது. அப்படி வெளியேறாமல் இருக்க, அதிக நேரம் தாக்குப் பிடித்து என் காதலிக்கு அதிக இன்பம் கொடுக்க என்ன வழி?'

"விரைவாக விந்து வெளியேறும் பிரச்சினை இன்று பல இளைஞர்களுக்கு இருக்கிறது. உடலுறவின் மேல் உள்ள அளவில்லாத ஆர்வமும், உறவு கொள்ளும் போது ஏற்படும் உணர்ச்சிப் பெருக்கமும் தான் இதற்குக் காரணம். இந்த குறையை நிவர்த்தி செய்ய நல்ல வழி ஒன்று இருக்கிறது.”

“உடனே சொல்லுங்கள், டாக்டர்.”

"பார்த்தீர்களா, இந்த அவசரம்தானே கூடாது என்கிறேன்.

இதே அவசரத்தை செக்சிலும் காட்டுகிறீர்கள். அதனால் தான் விந்து உடனே வெளியேறிவிடுகிறது.மீண்டும் சொல்கிறேன் அவசரம் கூடவே கூடாது.

இப்பொழுது நான் சொல்வதை கவனியுங்கள்.

"அடுத்த முறை ஒரு பெண்ணுடன் உறவு கொள்ளும் போது பெரிய நட்சத்திர உணவு விடுதியில் உணவு அருந்துவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

முதலில் தக்காளி சூப்பில் இருந்து ஆரம்பித்துசாக்லேட், ஐஸ்க்ரீம், முடிக்கும்போது குடிக்கும் காபி வரை, எதையும் ருசித்துச் சாப்பிடுங்கள். ஆற அமர அனுபவித்து ரசியுங்கள். 

"முதலில் தக்காளி சூப் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்குரிய கிண்ணத்தில் அது ஆவிபறக்கச் சூடாக இருக்கிறது. அதற்குத் தேவையான மிளகு பொடியையும் உப்பையும் போட்டு,

பின் மெதுவாக, மிக மெதுவாக ஒரு ஸ்பூன் சூப்பை அருந்துகிறீர்கள். அப்...பா! என்ன சுகம்!

அதன் பின் மதுக் கிண்ணத்தில் ஒயின் (wine) வருகிறது. பளபளக்கும் அந்த கிண்ணத்தை முதலில் நன்றாக உற்றுப் பாருங்கள்.

அதன் பின் அந்த மதுவின் வாசனையை நுகருங்கள். பின் கொஞ்சம் போல் அதைக் குடியுங்கள். அதன் இனிய சுவை தொண்டைக்குழி வழியாக இறங்குவதை ரசித்துக் குடியுங்கள்.

'அதன் பின் உணவு வகைகள் வருகின்றன. சூடான சாம்பார் இட்லி நெய்யில் மிதந்து கொண்டு வருகிறது. அதில் ஒரு விள்ளலை எடுத்து மல்லிச் சட்னியில் தோய்ந்துச் சாப்பிடுகிறீர்கள்.

அதன்பின் பிரியாணி வருகிறது. அதனை கொஞ்சம் கொஞ்சமாக அதன் சுவையை அனுபவித்துச் சாப்பிடுகிறீர்கள்.

கடைசியாக பழவகைகளுடன் கூடிய ஐஸ் க்ரீம் வருகிறது. அதனை மென்மையாக ருசித்து, ரசித்துச் சாப்பிடுகிறீர்கள்.

அதன் பின் சூடான ஃபில்டர் காபி வருகிறது. அதனை கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து அருந்துகிறீர்கள்.

இப்படியாக உடலுறவின் போது கற்பனையில் ஒரு விருந்து உண்பது போல் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் பிரச்சினை ஓடிவிடும்.

அதன் பின் உங்களுக்கு உடலுறவில் உச்சத்தை எய்துவது எளிதாக இருக்கும். உங்களோடு இருக்கும் பெண்ணுக்குள் இன்பம் கொடுப்பீர்கள்.

புரிகிறதா?"

புரிகிறது "மிக்க நன்றி. இதை இன்றே செயல் படுத்துகிறேன்." என்று சொன்ன இளைஞன் மருத்துவர் கேட்ட ஃபீசைக் கொடுத்துவிட்டுத் தன் காதலியைத் தேடிக் கொண்டு போனான்.

அன்று இரவு தனது காதலியோடு உறவு கொள்ளும் போது டாக்டர் சொன்னதை ஞாபகப்படுத்திப் பார்த்தான். விலாவாரியாக வகைவைகயாகச் சாப்பிடும் வரை தன்னால் விந்து வெளியேறாமல் தாக்குப்பிடிக்க முடியும் என்று தோன்றவில்லை.

அதே சமயம் டாக்டர் சொன்னதைச் செய்து பார்த்துவிட வேண்டும் என்று நினைத்தான்.

டாக்டர் சொன்னது போல் ஒரு நட்சத்திர ஹோட்டலில் இருப்பதாக நினைத்துக் கொண்டான். சர்வரைக் கூப்பிட்டான்.

இந்தாப்பா, என்னால் அதிக நேரம் தாக்கு பிடிக்க முடியாது. சீக்கிரம் எனக்கு ஒரு தக்காளி சூப்பும், ஒரு சூடான காபியும் மட்டும் கொண்டு வா என்றான்.

அவசரம் இருக்கும் வரை எதுவும் சாத்தியமில்லை.

தவறான பாதை

 தவறான பாதை  பேசாலைதாஸ் 


மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான் - "என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டுவிட்டார் முறைதவறிப் பிறந்த குழந்தை என்றார்கள் இது என் தவறா?

நான் சத்ரியன் அல்ல என்று கூறி துரோணாச்சாரியார் எனக்கு கல்வியைக் கற்றுத்தரவில்லை இது என் தவறா?

பரசுராமர் எனக்கு கற்றுக் கொடுத்தார், ஆனால் சத்ரியன் எனக்கூறி நான் படித்த எல்லாவற்றையும் மறக்க என்னை சாபம் கொடுத்தார் இது என் தவறா?

ஒரு பசு தற்செயலாக என் அம்பு மூலம் தாக்கப்பட்டது அதன் உரிமையாளர் என்னுடைய தவறுக்காக என்னை சபித்தார்.

திரௌபதியின் சுயம்வரத்திலே நான் தேரோட்டியின் மகன் என்பதற்காக நான் அவமானப்படுத்தப்பட்டேன்

குந்தி கூட இறுதியாக தன் மற்ற மகன்களை காப்பாற்ற மட்டுமே என்னைத் தேடி வந்தார்.இப்படி சுற்றி இருப்பவர்கள் அனைவராலும் வஞ்சிக்கப்பட்ட போது துரியோதனனின் அன்பு மூலமாகவே எனக்கு எல்லாம் கிடைத்தது ஆகையால் அவன் பக்கம் நான் நிற்பது எப்படி தவறாகும் எனக் கேட்டான்

அதற்கு கிருஷ்ணன் பதிலாக "கர்ணா நீயாவது பரவாயில்லை ஆனால், நான் ஒரு சிறையில் பிறந்தேன்.என் பிறப்புக்கு முன்பே மரணம் காத்திருந்தது.நான் பிறந்த இரவு அன்றே என் பெற்றோரிடமிருந்து நான் பிரிக்கப்பட்டேன்.

நீ சிறுவயதிலிருந்து , வாள், இரதங்கள், குதிரைகள், வில், அம்புகள் ஆகியவற்றின் இரைச்சலை நீங்கள் கேள்விப்பட்டிருப்பாய் ஆனால் . நானோ மாடு கொட்டில் சாணம் வைக்கோல் இவைகளுக்கிடையே வளர்ந்தேன் நடக்க ஆரம்பிக்கும் முன்னே என்னைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன

நல்ல கல்வி இல்லை இராணுவ பயிற்சி இல்லை ஆனால் எல்லோரும் நான்தான் நடக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் என்கிறார்கள்.

நீங்கள் ஆசிரியர்களால் மதிக்கப்படுகிறபோது நான் எந்தக் கல்வியையும் பெறவில்லை. நான் 16 வயதில் தான் ரிஷி சாண்திபனியின் குருகுலத்தில் சேர்ந்தேன்!

நீங்கள் விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். ஆனால் நானோ நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் என்னை நேசித்த பெண்களை மேலும் கொடியவர்களிடம் இருந்து நான் காப்பாற்றிய பெண்களை திருமணம் செய்துகொண்டேன்.

ஜராசந்த்திடமிருந்து என் மக்களைக் காப்பாற்றுவதற்காக, யமுனா நதிக்கரையிலிருந்து கடலிலிருந்து தூரத்திலிருந்து என்னுடைய முழு சமூகத்தையும் நகர்த்த வேண்டியிருந்தது. நான் ஓடிப்போன ஒரு கோழை!

துரியோதனன் போரில் வெற்றி பெற்றால், உனக்கு நிறைய பொருள் நாடு சேனை கௌரவம் கிடைக்கும். ஆனால் பஞ்சபாண்டவர் உடன் சேர்ந்து யுத்தம் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்?

கண்ணன்தான் இந்த போருக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே மிஞ்சும்

கர்ணா ஒன்றை நினைவில் கொள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன.

வாழ்க்கை எப்போதுமே இலகுவாகவும் எளிதாகவும் இருப்பதில்லை.ஆனால் மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானதாகும் . எத்தனை முறை நாம் ஏமாற்றப்பட்டோம், எத்தனை முறை நாம் அவமானப்படுதப்பட்டோம், எத்தனை முறை வீழ்ச்சி அடைகிறோம் என்பது முக்கியமானத அல்லஅந்த நேரத்தில் நாம் எப்படி மீண்டு எழுந்தோம் என்பதே முக்கியமானது.

நம் வாழ்க்கையில் நடக்கும் தவறுகள் நம்மை தவறான பாதையில். போவதற்காக உரிமையைக் கொடுக்கவில்லை

எப்போதும் நினைவில் கொள் வாழ்க்கை எனபது ஒரு பாதை சில நேரங்களில் கரடுமுரடாக இருக்கலாம் அதைக் கடப்பது நம் காலணிகளால் அல்ல நாம் எடுத்து வைக்கும் அடிகள் மூலமே.

Monday, 30 January 2023

நாவல்பழம்

நாவல்பழம்   பேசாலைதாஸ்


அன்பர்களே நாம் இறந்த காலத்தை ப்பற்றியோ, எதிர்காலத்தைப்பற் றியோ கவலை கொள்ளாமல் நிகழ் காலத்தில் கவனம் செலுத்த வேன் டும், அது தான் நிஜம், நிஜத்தில் வாழப்பழகுவோம்.  முதிய ஜென் குரு ஒருவர் மரணப் படுக்கையில் இருந்தார். "இன்று மாலைக்குள் இறந்துவிடுவேன்" என்று தன் சீடர்களிடம் தெரிவித்துவிட்டார். இதைக் கேள்விப்பட்ட அவர் நண்பர்கள் பலரும்இ சிஷ்யர்களும் ஆசிரமத்தை வந்தடைந்தனர்.

மூத்த சீடர் ஒருவர் திடீரென கடைவீதிக்குப் புறப்பட்டார். "ஏய்... என்ன மடத்தனம் பண்ணுகிறாய்.. குரு மரணப்படுக்கையில் கிடக்கும்போது அப்படி என்ன அவசரமாக வாங்க வேண்டியிருக்கு?” என்றனர் மற்றவர்கள்.

மூத்த சீடர். "குருநாதருக்கு நாவல்பழம் என்றால் அத்தனை பிரியம். அதை வாங்கத்தான் போகிறேன்!" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

எல்லோரும் கவலையோடிருந் தனர். குரு கண்களைத் திறப்பதும் யாரையோ தேடுவதும் பின் மூடிக் கொள்வதுமாக இருந்தார்.

மூத்த சீடர் வந்ததும்இ "வந்து விட்டாயா...

எங்கே நாவல்பழம்?" என்றார்.

அவர் கையில் நாவல் பழத்தைக் கொடுத்ததும்இ சற்றும் நடுக்கமின்றி அதை வாங்கிக் கொண்டார்.

ஒரு சீடர் குருவிடம்இ “குருவே.. தள்ளாத வயதிலும் உங்கள் கைகளில் நடுக்கமில்லையே?” என்றார்.

குரு சிரித்தபடிஇ "என் கைகள் ஒருபோதும் நடுங்கியதில்லை. ஏனென்றால் எப்போதும் எதற்கும் நான் பயந்ததே இல்லை!" என்று சொல்லிவிட்டு நாவல் பழத்தை ருசித்து தின்னத் தொடங்கிவிட்டார்.

இன்னொரு சீடர் குருவிடம் பணிந்துஇ "ஐயாஇ தாங்கள் சீக்கிரமே இந்த உலகை விட்டுப் பிரியப் போகிறீர்கள். நாங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய தங்களின் இறுதிக் கருத்து என்ன?” என்று கேட்டார்.

குரு சிரித்தபடிஇ “இந்த நாவல்பழம் என்ன அருமையான சுவையுள்ளதாக இருக்கிறது" என்று சொல்லிவிட்டு இறுதி மூச்சை விட்டார்.

😊

அந்தந்தக் கணத்தில் வாழுங்கள். கடந்து போன நிமிடமும்இ வரப் போகும் நிமிடமும் நமக்கானதல்ல. இன்று இப்போது மட்டுமே நிஜம்!

Thursday, 19 January 2023

மெழுகுவத்தின் வெளிச்சம்

 மெழுகுவத்தின் வெளிச்சம் பேசாலைதாஸ் 


ஒரு ஊரில் ஒரு ஞானி இருந்தார். ரொம்ப பெரிய ஞானி. மிகவும் வயதாகி விட்டது .கடைசி காலத்தில் அவரிடம் சில பேர் வந்தார்கள்.

 உங்கள் குரு யார் ? என்று கேட்டார்கள்.

 அவர் நிமிர்ந்து பார்த்தார். எனக்கு ஆயிரக்கணக்கான குருமார்கள் உண்டு. அவர்கள் பெயர் எல்லாம் சொல்ல வேண்டுமென்றால் காலம் போதாது. ஆனால் முக்கியமான மூன்று பேரைப் பற்றி மட்டும் உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்.

 அந்த மூன்று பேரில் ஒருவன் திருடன்.

ஒரு சமயம் ஒரு பாலைவனம் வழியாக நான் போய்க் கொண்டிருந்தேன். அப்போது வழி தவறி போய் ஒரு கிராமத்துக்கு போய்விட்டேன். அது இருட்டும் நேரம். நடு ராத்திரி ஊரே உறங்கிக் கிடந்தது. அந்த நேரத்தில் ஒரு ஆள் மட்டும் வீட்டு சுவற்றில் ஏதோ செய்து கொண்டிருந்தான். அவன் உள்ளே நுழைய முயற்சி செய்து கொண்டிருந்தான். 

அவனிடம் போய் நான் இன்றைக்கு இங்கே எங்கே தங்க முடியும் என்று கேட்டேன்.

 அதற்கு அவன் இந்த இரவில் அது ரொம்ப சிரமம். ஒரு திருடனுடன் உங்களால் தங்க முடியும் என்றால் நீங்கள் என்னோடு தங்கலாம் என்றான்.

 நான் அவனுடன் ஒரு மாதம் தங்கி இருந்தேன். ஒவ்வொரு நாள் இரவும் இப்போது நான் என்னுடைய வேலைக்கு போகிறேன் நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு போவான்.

 அவன் திரும்பி வந்தவுடன் உனக்கு ஏதாவது கிடைத்ததா? என்று கேட்பேன். அதற்கு அவன் இன்று ஒன்றும் கிடைக்கவில்லை. நாளைக்கு மறுபடியும் முயற்சி செய்வேன் என்பான். ஒருபோதும் அவன் நம்பிக்கை இழந்ததே கிடையாது. எப்போதும் சந்தோஷமாகவே இருந்தான்.

 நானும் ரொம்ப காலமாக தியானம் பண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஆனால் என்ன செய்தேன் தெரியுமா? மனது வருத்தப்படும். நம்பிக்கை இழந்து விடுவேன். அப்போதெல்லாம் இந்த திருடனுடைய விடாமுயற்சி தான் ஞாபகத்துக்கு வரும்.

என்னுடைய இரண்டாவது குரு ஒரு நாய்.

ஒரு சமயம் எனக்கு ரொம்ப தாகமாக இருந்தது. ஒரு நதியை நோக்கி போய்க்கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாயும் வந்தது. அதற்கும் தாகம். ஓடி வந்து ஆற்றில் பார்த்தது. அதனுடைய நிழல் ஆற்றில் தெரிந்தது. அதை பார்த்து பயந்துவிட்டது. அதாவது தன் சொந்த உருவத்தையே கண்டு பயந்துவிட்டது. அதை பார்த்து குரைத்தது. திரும்பி ஓடியது. ஆனாலும் அதற்கு தாகம் அதிகமாக இருந்ததனால் அது மறுபடியும் திரும்பி வந்தது. இப்படி சில தடவைகள் பண்ணியது. இருந்தாலும் கடைசியில் தண்ணீரில் குதித்தது.

இப்படி குதித்த உடனே அதன் உருவமும் மறைந்து விட்டது. 

இதை பார்த்து நான் என்ன புரிந்து கொண்டேன் என்றால், எவ்வளவுதான் பயம் இருந்தாலும் கூட ஒருத்தன் தைரியமாக காரியத்தில் இறங்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன். இந்த போதனை எனக்கு அந்த நாயிடம் இருந்து கிடைத்தது.

 என்னுடைய மூன்றாவது குரு யார் என்றால் அது ஒரு சின்ன குழந்தை. நான் ஒரு சமயம் ஒரு நகரத்துக்கு போனேன். அங்கே ஒரு குழந்தை எரிகிற மெழுகுவர்த்தி ஒன்றை எடுத்துக் கொண்டு வந்தது.

 நான் அந்த குழந்தையை பார்த்து வேடிக்கையாக கேட்டேன். ஏன் பாப்பா இந்த மெழுகுவர்த்தியை நீயாவை கொளுத்தினாயா என்று

 ஆமாம் என்றது அந்த குழந்தை.

 சரி இந்த மெழுகுவர்த்தி முதல் எரியாமல் இருந்தது. இப்போது எரிகிறது. இந்த மெழுகுவர்த்திக்கு வெளிச்சம் எங்கே இருந்து வந்தது என்று காட்ட முடியுமா என்று கேட்டேன்.

 அதற்கு அந்த குழந்தை சிரித்தது. இந்த மெழுகுவர்த்தியை ஊதி அணைத்து விட்டது. அதன் பிறகு என்னை பார்த்து கேட்டது இப்போ இந்த மெழுகுவத்தின் வெளிச்சம் போனதை பார்த்தீர்கள் அது எங்கே போனது என்று சொல்ல முடியுமா என்று இந்த குழந்தை இப்படி கேட்டதும் என்னிடம் இருந்து ஆணவம் அழிந்தது.

 நான் படித்ததெல்லாம் அந்த வினாடியில் சுக்கு நூறாகி விட்டது. எனது முட்டாள்தனத்தை நான் உணர்ந்தேன் என்றார்  ஞானி. 

இதனால் நாம் இன்னாரிடமிருந்து இதைத்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை யாரிடமிருந்தும் எதையும் கற்றுக் கொள்ளலாம்.


மரணித்த பின் வரும் மனித நேயம்

 மரணித்த பின் வரும் மனித நேயம்  பேசாலைதாஸ் 


வீட்டு வாடகையை என்னால் கட்டமுடியவில்லை. எனது வாடகை வீட்டில் இருந்து உரிமையாளரால் நான் வெளியேற்றப்படவிருந்தேன். முகநூலில் உதவி கேட்டு பதிவிட்டிருந்தேன். கிடைத்ததெல்லாம் லைக்குகள் மாத்திரமே.

எனது  நட்புப் பட்டியலில் இருக்கும் 250 நண்பர்களுக்கு 30, 000 ரூபாய் கேட்டு தனிப்பட்ட செய்திகளை அனுப்பினேன்.பத்து பேர் மாத்திரம் பதிலளித்தார்கள். அதில் ஆறு பேர் உதவி செய்ய முடியாத நிலையில் இருப்பதாகக் கூறினார்கள். மீதி நான்கு பேரில் ஒருவர் மட்டுமே உதவி செய்தார்.ஏனையோர் எல்லோரும் சாக்குப் போக்குச் சொன்னார்கள். எனது தொலைபேசி அழைப்புகளுக்குக் கூட பதில் சொல்லவில்லை.

இறுதியில் நான் எனது வாடகை வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டேன்.தூங்குவதற்குக் கூட எனக்கு ஒரு இடம் இருக்கவில்லை.என்ன செய்வதென்று தெரியாமல் இருட்டில் நடந்து கொண்டிருந்த போது எனது பையை ஒரு திருடன் பிடுங்கிக் கொண்டு ஓடினான்.ஓடிய வேகத்தில் திருடன் காரில் அடிபட்டு இறந்து விட்டான்.

அடுத்த நாள்,

செய்தி வேகமாகப் பரவியது. திருடன் இறந்ததை நான் இறந்ததாக மக்கள் எண்ணிவிட்டார்கள். சுமார் 2500 பேர் எனது முக நூலில் பக்கத்தில் எனக்கு அனுதாபம் தெரிவித்து எழுதினார்கள். என்னை அவர்களுக்கு எப்படி அறிமுகமானது, நான் எவ்வளவு உன்னதமான பிறவி என்றெல்லாம் எழுதினார்கள்.

எனது ‘விசுவாசமான நண்பர்கள்’ என்ற பெயரில் ஒரு குழு அமைக்கப்பட்டது. சுமார் மூன்று லட்சம் பணம் சேர்த்தார்கள். எனது இறுதிச் சடங்கன்று 100 ஏழைகளுக்கு விருந்தளிப்பதாக அறிவித்தார்கள்.

என்னோடு வேலை செய்தவர்கள் எனது சவப்பெட்டிக்கும், வருகையாளர்களுக்கான கதிரைகளுக்கும், என்னைச் சுற்றும் ஆடைகளுக்கும் ஒரு லட்சம் பணம் சேர்த்தார்கள்.

30 000 பெறுமதியான சவப்பெட்டியில் வைத்து நான் புதைக்கப்படுவதாக திட்டமிடப்பட்டது. அந்தப் பணம்தான் நான் வாழத் தேவையாக இருந்த தொகை.

எனது உறவினர்கள் சந்தித்துக் கொண்டார்கள். அப்படிச் சந்திப்பது அபூர்வமாக இருந்தது. அதில் அவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒன்றரை லட்சம் பங்களித்தார்கள்.

எனது மரணச் சடங்களில் ஒவ்வொருவரும் பேச விரும்பினார்கள். என்னைத் தெரியாதவர்கள் எல்லாம் நான் எத்தனை சிறந்த மனிதன் என்று பேசினார்கள். எனக்கு உண்மையாகவே உதவி செய்த நண்பர்களுக்கு என்னைப் பற்றிப் பேச வாய்ப்புக் கிட்டவில்லை.எனது மரணச் சடங்கில் பங்குபற்றக் கிடைக்காதவர்கள் கூட நான் எவ்வளவு திறமை படைத்தவன் என்றெல்லாம் பேசி, எழுதினார்கள்.

நான் இன்னும் தூங்குவதற்கு இடம் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்.

திடீரென நான் அவர்கள் முன் தோன்றினால் என்னைப் பேய் என்று நினைத்து ஓடிவிடுவார்கள்.

தத்துவம் என்னவென்றால் ஒருவன் வாழும் போது அவனை நேசிப்பதைவிட அவன் மரணித்த பின்னர்தான் அவனை நேசிக்கிறோம்..!


மனம் முழுவதும் துன்ப மூட்டைகள்"

 மனம் முழுவதும் துன்ப மூட்டைகள்" பேசாலைதாஸ் 


மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை...! 

மனமது செம்மையானால்....

அரண்மனையை ஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான். அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான். நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான்.

திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம்... அந்த மாதிரி எண்ணுகிற அளவுக்குத் தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே, அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது. இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரண்மனை வாசலை அடைந்தான்.

வாயிற்காவலனிடம், ''ராஜாவைப் பார்க்க வேண்டும்'' என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான். உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், ''என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே?'' என்றார் அரசர். ''ஆமாம்! நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கும் ஆசை. ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை. என்னை அதிகப்பிரசங்கி என நினைக்காவிட்டால், உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்துகொண்டு விருந் துக்கு வருவேன்'' என்றான் மிகவும் பவ்வியமாக.

அதே நேரம், மன்னர் என்ன சொல்வாரோ என நடுங்கியபடி, அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் மன்னர், அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார். அந்த உடையை உடுத்திக்கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான்; தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான்!

அப்போது மன்னர் அவனிடம், ''விருந்தில் கலந்து கொள்வதற்குத் தகுதி உடையவனாகி விட்டாய். அதைவிட, முக்கியமான ஒன்று... இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப் படாது. உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும். துவைக்கவோ தூய்மைப் படுத்தவோ அவசியம் இருக்காது'' என்றார். கண்ணீர்மல்க, மன்னருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்ப யத்தனித்தவன்,

மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தான். அவனது மனம் சற்றே சலனப்பட்டது. 'ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து, இந்த உடைகள் கிழிந்துவிட்டால்... அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே?!' என யோசித்தவன், சட்டெனச் சென்று தன் பழைய உடைகளை வாரிக்கொண்டான்.

வீடு வாசல் இல்லாத அவனால், பழைய துணிகளை எங்கேயும் வைக்கமுடியவில்லை; எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான். மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை. அடிக்கடி கீழே விழுந்துவிடும் பழைய துணிகளைச் சேகரிக்கும் மும்முரத்தில், பரிமாறப்பட்ட பதார்த்தங்களைச் சரிவர ருசிக்க முடியவில்லை. அரசர் சொன்னது உண்மை என்பது நாளடைவில் அவனுக்குப் புரிந்தது.

அவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை. ஆனாலும், அந்த யாசகனுக்குப் பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது. மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல், அந்த கந்தல் மூட்டையையே பார்த்தனர். அவனைக் 'கந்தல் பொதி கிழவன்' என்றே அழைத்தனர். இறக்கும் தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க, அரசர் வந்தார். அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து, அரசரின் முகம் சோகமாவதைக் கண்டான்.

ஆரம்பத்திலேயே அரசர் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது. பழைய துணி மூட்டை, அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டது. அந்த யாசகனிடம் மட்டுமல்ல, நம் எல்லோரிடமும் அப்படியரு மூட்டை இருக்கிறது.

அதனுள் விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை... எனப் பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன. அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால், நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர முடியாமல் இருக்கிறோம். நம்முடைய தீராத கோபம், எத்தனை இன்பம் வந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு ஆனந்தப்பட முடியாமல் செய்துவிடுகிறது.

அரண்மனைகளில் கூட, இன்றும் பலர் பிச்சைக்காரர்களாகவே வாழ்கின்றனர். அனாதை ஆஸ்ரமங்களில் அரசர்களாக வாழ்வோரும் உண்டு.

நமது மகிழ்ச்சிக்கு மாபெரும் தடையாக இருப்பது நமது கடந்த காலம் பற்றிய சிந்தனைகளே! அவற்றை மூட்டையாகக் கட்டி நம் மேல் ஏற்றிக் கொண்டு, இறக்கி வைக்கமுடியாமல் இம்சைக்கு உள்ளாகிறோம்.

நண்பர் ஒருவர் நம்மைப் பார்த்துப் புன்னகைக்கும்போது கூட, 'நேற்று இவர் நம்மிடம் எரிச்சலுடன் நடந்து கொண்டாரே?' என்ற கடந்த கால நினைவு, கதவைத் திறந்து கொண்டு உள்ளே வருகிறது. அவரோடு நம்மால் சகஜமாகப் பழகமுடிவதில்லை. செயற்கையான பிளாஸ்டிக் புன்னகையுடன் மனிதர்கள் வாழ ஆரம்பித்தால், வாழ்க்கை வறண்டு விடும்.

மனதில் இருக்கிறது மகிழ்ச்சி: 

வாழ்க்கை தினமும் நமக்கு புதுத் துணிகளை நெய்து தருகிறது. நமக்கோ, பழைய துணிகளில் ஒரு நூலைத் தூக்கி எறியவும் மனமில்லை. நம் வீடுகளில், என்றோ வாங்கிய பல பொருள்கள் நிரம்பி இருக்கின்றன. அவற்றால் எந்தப் பயனும் இல்லாவிட்டாலும், தூக்கி எறிய மனமில்லை. வீடையே குடோனுக்கு இணையாக மாற்றிக் குடித்தனம் நடத்துபவர்களும் இருக்கின்றனர்.

இல்லத்தை மட்டுமல்ல, உள்ளத்தையும் குடோனாக்கி பழைய சரக்குகளைப் பத்திரப்படுத்தினால், அவற்றின் அழுகல் நாற்றம் உதடுகளின் வழியே சொற்களாகவும் கரங்களின் வழியே செயல்களாகவும் வெளிப்பட்டு வேதனையையே விநியோகிக்கும்; வெளிச்சத்தை வழங்காது.

மகிழ்ச்சியுடன் மனிதன் வாழ வேண்டும் என்பதற்காகவே, மறதியை நமக்கு வரமாக அளித்திருக்கிறார் இறைவன். ஆனால், அந்த வரத்தைத் தொலைத்துவிட்டு, தேவையானவற்றை வழியவிட்டு, தகுதியற்றவற்றைத் தக்கவைத்துக் கொள்கிறோம்.

விலங்குகள் எப்போதும் மகிழ்ச்சியுடன் விளையாட காரணம், அவை நிகழ்காலத்தில் மட்டுமே நீடித்திருக்கின்றன. நாம் நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் ஏற்படுத்திக்கொள்கிற இணக்கமே, நமது மகிழ்ச்சியை மெருகேற்றுகிறது.

வன்மம் நிறைந்த மனத்துடன் இருப்பவர்கள், மாநகராட்சி குப்பைகளைக் கொட்டும் இடத்தில் இருப்பதைப் போன்ற மனநிலையுடன் இருப்பார்கள்.

சூழலைச் சுகந்தமாக்குபவர்களால் மட்டுமே வாழ்க்கையை வசந்தமாக்கிக் கொள்ளமுடியும். 'நேற்று நம்மிடம் கோபப்பட்ட மனிதன் வேறு; அவனிடம் வருத்தத்தை வரவு வைத்த மனிதன் வேறு' என்கிற புரிதல் வந்தால், மகிழ்ச்சி மட்டுப்படுவதில்லை. வருத்தம் வரும்போதெல்லாம், உடனே அதை வடிகாலாக்குகிற வாழ்க்கை முறை முன்பு இருந்தது. குடும்பம் அதற்கு வழிவகுத்தது. யாரிடமாவது பகிர்ந்துகொண்டால், நமது சோகங்கள் பஸ்பமாகிவிடும் அனுசரணை இருந்தது.

ஆனால், இன்றைய பரபரப்பான வாழ்வில் பகிர்தல் குறைவு. 'உனது சோகம் உன்னுடன்! என்னுடையதை நான் பார்த்துக்கொள்கிறேன்' என்பதே இன்றைக்கு உறவுகளுக்குள் இருக்கும் மேம்போக்கான, மிக மெல்லிய உறவு இழைகள். எப்போது வேண்டுமானாலும் இற்றுப் போகிற நிலையில் ஊசலாடும் உறவுகளில், உண்மை ஊஞ்சலாட மறுக்கிறது. இன்றைக்கு எல்லாக் கதவுகளும் சாத்தப்பட்டே இருக்கின்றன.

நமது உலகே சுருங்கிப்போன சூழலில், கடந்த காலத்தை ஊதி ஊதிப் பெரிதாக்கி, இறக்கி வைக்க முடியாமல் தவிக்கின்ற மனநிலையில், ஆனந்தக் குழந்தைகள் ஓடிவரும்போது, அவற்றை அள்ளி எடுத்து அரவணைக்க முடியவில்லை.

மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை. மகிழ்ச்சியாக இருப்போம்... அப்போது காரணங்கள், தாமாகத் தோன்றி தோரணங்களாகித் துணை நிற்கும்.

நன்றி...

வாழ்க வளமுடன், நலமுடன் 

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

அவசரம் இருக்கும் வரை எதுவும் சாத்தியமில்லை.

 அவசரம் இருக்கும் வரை எதுவும் சாத்தியமில்லை. பேசாலைதாஸ் 


ஓர் இளைஞன் செக்ஸ் வைத்தியரிடம் போனான்.

"ஐயா, உடலுறவு கொள்ளும் போது என்னால் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. விந்து விரைவாக வெளியேறி விடுகிறது. அப்படி வெளியேறாமல் இருக்க, அதிக நேரம் தாக்குப் பிடித்து என் காதலிக்கு அதிக இன்பம் கொடுக்க என்ன வழி?'

"விரைவாக விந்து வெளியேறும் பிரச்சினை இன்று பல இளைஞர்களுக்கு இருக்கிறது. உடலுறவின் மேல் உள்ள அளவில்லாத ஆர்வமும், உறவு கொள்ளும் போது ஏற்படும் உணர்ச்சிப் பெருக்கமும் தான் இதற்குக் காரணம். இந்த குறையை நிவர்த்தி செய்ய நல்ல வழி ஒன்று இருக்கிறது.”

“உடனே சொல்லுங்கள், டாக்டர்.”

"பார்த்தீர்களா, இந்த அவசரம்தானே கூடாது என்கிறேன்.

இதே அவசரத்தை செக்சிலும் காட்டுகிறீர்கள். அதனால் தான் விந்து உடனே வெளியேறிவிடுகிறது.மீண்டும் சொல்கிறேன் அவசரம் கூடவே கூடாது.

இப்பொழுது நான் சொல்வதை கவனியுங்கள்.

"அடுத்த முறை ஒரு பெண்ணுடன் உறவு கொள்ளும் போது பெரிய நட்சத்திர உணவு விடுதியில் உணவு அருந்துவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

முதலில் தக்காளி சூப்பில் இருந்து ஆரம்பித்துசாக்லேட், ஐஸ்க்ரீம், முடிக்கும்போது குடிக்கும் காபி வரை, எதையும் ருசித்துச் சாப்பிடுங்கள். ஆற அமர அனுபவித்து ரசியுங்கள். 

"முதலில் தக்காளி சூப் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்குரிய கிண்ணத்தில் அது ஆவிபறக்கச் சூடாக இருக்கிறது. அதற்குத் தேவையான மிளகு பொடியையும் உப்பையும் போட்டு,

பின் மெதுவாக, மிக மெதுவாக ஒரு ஸ்பூன் சூப்பை அருந்துகிறீர்கள். அப்...பா! என்ன சுகம்!

அதன் பின் மதுக் கிண்ணத்தில் ஒயின் (wine) வருகிறது. பளபளக்கும் அந்த கிண்ணத்தை முதலில் நன்றாக உற்றுப் பாருங்கள்.

அதன் பின் அந்த மதுவின் வாசனையை நுகருங்கள். பின் கொஞ்சம் போல் அதைக் குடியுங்கள். அதன் இனிய சுவை தொண்டைக்குழி வழியாக இறங்குவதை ரசித்துக் குடியுங்கள்.

'அதன் பின் உணவு வகைகள் வருகின்றன. சூடான சாம்பார் இட்லி நெய்யில் மிதந்து கொண்டு வருகிறது. அதில் ஒரு விள்ளலை எடுத்து மல்லிச் சட்னியில் தோய்ந்துச் சாப்பிடுகிறீர்கள்.

அதன்பின் பிரியாணி வருகிறது. அதனை கொஞ்சம் கொஞ்சமாக அதன் சுவையை அனுபவித்துச் சாப்பிடுகிறீர்கள்.

கடைசியாக பழவகைகளுடன் கூடிய ஐஸ் க்ரீம் வருகிறது. அதனை மென்மையாக ருசித்து, ரசித்துச் சாப்பிடுகிறீர்கள்.

அதன் பின் சூடான ஃபில்டர் காபி வருகிறது. அதனை கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து அருந்துகிறீர்கள்.

இப்படியாக உடலுறவின் போது கற்பனையில் ஒரு விருந்து உண்பது போல் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் பிரச்சினை ஓடிவிடும்.

அதன் பின் உங்களுக்கு உடலுறவில் உச்சத்தை எய்துவது எளிதாக இருக்கும். உங்களோடு இருக்கும் பெண்ணுக்குள் இன்பம் கொடுப்பீர்கள்.

புரிகிறதா?"

புரிகிறது "மிக்க நன்றி. இதை இன்றே செயல் படுத்துகிறேன்." என்று சொன்ன இளைஞன் மருத்துவர் கேட்ட ஃபீசைக் கொடுத்துவிட்டுத் தன் காதலியைத் தேடிக் கொண்டு போனான்.

அன்று இரவு தனது காதலியோடு உறவு கொள்ளும் போது டாக்டர் சொன்னதை ஞாபகப்படுத்திப் பார்த்தான். விலாவாரியாக வகைவைகயாகச் சாப்பிடும் வரை தன்னால் விந்து வெளியேறாமல் தாக்குப்பிடிக்க முடியும் என்று தோன்றவில்லை.

அதே சமயம் டாக்டர் சொன்னதைச் செய்து பார்த்துவிட வேண்டும் என்று நினைத்தான்.

டாக்டர் சொன்னது போல் ஒரு நட்சத்திர ஹோட்டலில் இருப்பதாக நினைத்துக் கொண்டான். சர்வரைக் கூப்பிட்டான்.

இந்தாப்பா, என்னால் அதிக நேரம் தாக்கு பிடிக்க முடியாது. சீக்கிரம் எனக்கு ஒரு தக்காளி சூப்பும், ஒரு சூடான காபியும் மட்டும் கொண்டு வா என்றான்.

அவசரம் இருக்கும் வரை எதுவும் சாத்தியமில்லை.



உருவத்தை வைத்து எடை போடாதே....

 உருவத்தை வைத்து எடை போடாதே....

.பேசாலைதாஸ் 


ஜனக மகராஜா ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்தார்.

அவருக்கு அப்போது ஒரு கனவு வந்தது.

அதில் அவர் ஒரு பிச்சைகாரனாக மிகவும் சிரமப்படுவது போல் கனவு. கனவில் அவர் படாத பாடு பட்டு  

துன்பப்பட்டார்.

அப்போது அது கனவு போலவே அவருக்குத் தெரியவில்லை. நிஜம் போலவே இருந்தது.

திடுக்கிட்டு "நாராயணா" என்று அலறினார். கண் விழித்தார்.

கண்விழித்துப் பார்த்தால் எல்லாம் மாறியிருந்தது. சில வினாடி முன்பு பிச்சைக்காரராக இருந்தவர் இப்போது மன்னராக இருந்தார்.

இது தொடர்ந்து பல நாட்களாக நடந்து கொண்டே இருந்தது.

அவர் தினசரி இரவு தூங்கும் போது கனவில் பிச்சைக்காரனாகி படாத பாடுபடுவார்.

பகலில் எழுந்தால் மன்னனாக சகல சுகபோகங்களுடன் இருப்பார்.

ஜனகருக்கு ஒரு பெரும் சந்தேகம் உதித்தது.

"நான் மன்னனாக இருந்து பிச்சைக்காரனாக இருப்பது போல் கனவு கண்டேனா?

அல்லது பிச்சைகாரனாக இருந்து இப்போது மன்னராக இருப்பது போல் கனவு காண்கிறேனா?" என சந்தேகம் வந்து விட்டது.

மந்திரி,ராஜகுரு எனப் பலரிடம் கேட்டுப் பார்த்தார். யாருக்கும் பதில் தெரியவில்லை.அந்த சந்தேகம் அவர் மனதை அரித்துக் கொண்டே இருந்தது.

"நான் பிச்சைக்காரனா,  

மன்னனா" என்று அவர் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்.

பிறகு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.தமது சந்தேகத்தைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பெரும் பரிசை அளிப்பதாகச் சொன்னார்.

நாட்டிலிருந்த வித்வான்கள் எல்லாரும் வந்தனர். தூர தேசத்திலிருந்து பண்டிதர்கள், முனிவர்கள்,வேத விற்பன்னர்கள் எல்லாரும் வந்தனர். யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

வெளியூரிலிருந்து விதேக நாட்டுக்கு ஒரு முனிவர் வந்தார்

.அவர் பெயர் அஷ்டாவக்கிர மகரிஷி. அவர் உடல் 8 கோணலாக வளைந்திருக்கும். அது ஏனென்றால் அவர் தம் அன்னையின் வயிற்றிலிருந்த போது கத்துக்குட்டியான அவர் தகப்பனார் வேதத்தை தப்புத் தப்பாக படிப்பாராம்.

அப்போது வயிற்றிலிருந்த மகா ஞானியான குழந்தை அதைக் கேட்கச் சகிக்காமல் உடம்பை திருப்புமாம். அப்படி 8 தடவை திருப்பி உடல் அஷ்ட கோணலாக வளைந்து அஷ்டா வக்கிரன் என்ற பெயரும் ஏற்பட்டது.

ஜனகரின் கேள்வியை அறிந்த அஷ்டாவக்கிர மகரிஷி ஜனகரின் அவைக்குச் சென்றார். பண்டிதர்களின் பெருங்கூட்டம் அவையில் இருந்தது. யாருக்கும் பதில் தெரியவில்லை

." என் கேள்விக்கு பதில் சொல்ல ஆளே இல்லையா?" என ஜனகர் வேதனையுடன் கேட்டார்.

"நான் சொல்கிறேன்" என்றார் அஷ்டாவக்கிரர்.

அரசவை முழுக்க அவரைத் திரும்பிப் பார்த்தது.

அவரைப் பார்த்த மறுவினாடியே பண்டிதர்கள் சிரிக்கத் துவங்கி விட்டனர்.

குள்ளமாக,கறுப்பாக,  

எண் கோணலாக வளைந்த உடலை வைத்துக் கொண்டு ஒருவர் சபைக்கு வந்தால் எப்படி இருக்கும்? அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

சிரிப்பொலி அடங்கும் வரை அஷ்டாவக்கிரர் மவுனமாக நின்றார்.

"என் கேள்விக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள்" என்று ஜனகர் ஆவலுடன் கேட்டார்.

"சொல்கிறேன்.அதற்கு முன் சபையில் இருக்கும் தோல் வியாபாரிகளையும்,  

கசாப்புக் கடைகாரர்களையும் வெளியே அனுப்புங்கள்" என்றார் அஷ்டா வக்கிரர்.

"என்ன சொல்கிறீர்கள்? இது பண்டிதர்களின் சபை. இங்கு எந்த கசாப்பு கடைக்காரனும் தோல் வியாபாரியும் இல்லை" என்றார் ஜனகர்.

"இங்கு பண்டிதன் என யாரும் இல்லை.  

இங்கிருப்போர் அனைவரும் கசாப்புக் கடைக்காரர்களும் தோல் வியபாரிகளும் தான்" என்றார் அஷ்டாவக்கிரர்.

சபை முழுக்க கொதித்தெழுந்தது.  

"என்ன திமிர் இந்த குரங்கனுக்கு?" என்று சப்தமிட்டார் ராஜகுரு.

"வேதம் கற்ற பண்டிதர்களை இழிவுபடுத்திய இவனை கழுவிலேற்றுங்கள்" என்று அனைவரும் கூச்சலிட்டனர்.

"ஏன் அப்படி சொன்னீர்கள்?" என்று பரிவுடன் கேட்டார் ஜனகர்.

"கற்றறிந்த பண்டிதர்களை கசாப்புக் கடைக்காரன் என்று சொல்லலாமா?" என்று கேட்டார்.

உரத்த குரலில் அஷ்டாவக்கிரர் பதில் சொன்னார்.

"ஓ மன்னா! உன் கேள்விக்கு பதில் நான் சொல்கிறேன் என்று சொன்னேன். சபை முழுக்க என்னைப் பார்த்துச் சிரித்தது.

ஏன் சிரித்தார்கள்?என் குறைவான ஞானத்தைக் கண்டு சிரித்தார்களா?நான் தவறாகச் சொன்ன விளக்கத்தைக் கண்டு சிரித்தார்களா?இல்லை.

இது எதைக் கண்டும் அவர்கள் சிரிக்கவில்லை. என் உருவத்தைப் பார்த்து சிரித்தார்கள். என் தோலின் நிறத்தை வைத்து,என் உடலின் உருவத்தை வைத்து இவர்கள் என்னை, என் அறிவை மதிப்பிட்டார்கள்.

என் தோலை வைத்து என் மதிப்பை நிர்ணயிக்கும் இவர்கள் தோல் வியாபாரிகள் தானே?

தோல் வியாபாரி தான் தோலின் நிறத்தை வைத்து ஆட்டுத் தோலுக்கு விலை போடுவான். கசாப்புக் கடைக்காரன் தான் ஆட்டின் உருவத்தை வைத்து ஆட்டுக்கு மதிப்பு போடுவான்.

இவர்களும் என்னை அப்படித் தான் மதிப்பிட்டார்கள். அதனால் தான் இவர்களை தோல் வியாபாரி என்றேன்.

பண்டிதர்கள் இருக்க வேண்டிய சபையில் தோல் வியாபாரிகளுக்கு என்ன வேலை?அதனால் தான் இவர்களை வெளியே போகச் சொன்னேன்" என்றார் அஷ்டாவக்கிரர்.

அவமானமடைந்த பண்டிதர்கள் தலை குனிந்து சபையை விட்டு வெளியேறினார்கள்.

வந்தவர்

மகா ஞானி என ஜனகரும் அறிந்தார். மகா பணிவுடன் அவர் காலடியில் அமர்ந்து தன் சந்தேகத்துக்கு விடை கேட்டுத் தெரிந்து கொண்டார்.

ஜனகருக்கு அஷ்டாவக்கிரர் சொன்ன அந்த உபதேசம் அஷ்டாவக்கிர கீதை என்ற பெயருடன் விளங்குகிறது.

அந்த உபதேசத்தை பெற்ற ஜனகர் அன்று முதல் மகா ஞானியாகி விட்டார். ஜனகரின் சந்தேகம் தீர்த்த மகரிஷியின் விளக்கம் என்ன?

தூங்கினப்போ கண்டதும் கனவு தான். இப்போ நீ வாழும் வாழ்வும் கனவுதான்.

உன்னோட ராஜ வாழ்வும்,பிச்சைக்கார வாழ்வும் ரெண்டும் உண்மையில்லை.

ராஜாவா இருக்கறப்ப சந்தோஷப்படாதே.  

தூங்கறப்ப அந்த சந்தோஷம் போயிடும்.  

பிச்சைக்காரனா இருக்கறப்ப வருத்தப்படாதே.  

முழிச்சா அந்த வருத்தம் மறைஞ்சுடும்.

ரெண்டு நிலையிலும் ஒரே மாதிரி இருக்கக் கத்துக்க என்றார்...

உலகினில் எதுவும் நிரந்தரம் இல்லை

கடவுளை தவிர..


முடிவெட்ட நாலணா

முடிவெட்ட நாலணா பேசாலைதாஸ் 


என்னப்பா! முடி வெட்ட எவ்வளவு? சவரம் பண்ண எவ்வளவு?" என்றார்...

அவரும், "முடிவெட்ட நாலணா, சவரம் பண்ண ஒரணா சாமி!" என்று பணிவுடன் கூறினார்...

🙏பண்டிதர் சிரித்தபடியே,

"அப்படின்னா, என் தலையை சவரம் பண்ணு..." என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார்...

🙏வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை...

வேலையை ஆரம்பித்தார்...

🙏நாவிதர் கோபப்படுவார்' என்று எதிர்பார்த்திருந்த

பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான்...

பின்னர், பண்டிதர் அடுத்த கணையைத் தொடுத்தார்...

🙏"ஏன்டாப்பா ! உன் வேலை முடி வெட்டுறது...

உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே... அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப் படுத்தி நாவிதன்னு சொல்றாங்க...?"

🙏இந்தக் கேள்வி நாவிதரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை.

"நல்ல சந்தேகங்க சாமி...

நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது.

🙏முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத் தட்டாம இருக்க, நாவால இதமா நாலு வார்த்தை பேசுறதனால தான் நாங்க நாவிதர்கள்...

எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா...?"

🙏இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது.

அடுத்த முயற்சியைத் துவங்கினார்...

"இதென்னப்பா, கத்தரிக் கோல்னு சொல்றீங்க. கத்தரி மட்டுந்தானே இருக்கு... கோல் எங்கே போச்சு?''

🙏இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது நாவிதரிமிருந்து.

"சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க..." என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்...

இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம்.

கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்...

🙏"எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குற...

ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு..."

🙏இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது...

அவர் முகத்தில் கொஞ்சம் வித்தியாசம்...

இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார்.

கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்....

இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார்...

 🙏பண்டிதரின் பிரியமான மீசையைத் தொட்டுக் காட்டிக் கேட்டார்,

"சாமிக்கு இந்த மீசை வேணுங்களா?"

பண்டிதர் உடனே, "ஆமாம்..." என்றார்...

கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின் மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்து,

"மீசை வேணுமுன்னிங்களே சாமி! இந்தாங்க..."

🙏பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய்...

அதிர்ச்சியில் உறைந்து போனார் பண்டிதர்...

நாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார்.

🙏அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக் கேட்டார்,

"சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா...?"

இப்போது பண்டிதர் சுதாரித்தார்.

'வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான்...' என்ற பயத்தில் உடனே சொன்னார்,

"இந்தப் புருவம் எனக்கு வேண்டாம்... வேண்டவே வேண்டாம்...".

🙏நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார்...

"சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல? அதைக் குப்பைல போட்டுடுறேன். சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது..." என்றபடி கண்ணாடியை பண்டிதரின் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்...

🙏நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல்...

முகத்துக்கு கம்பீரம் சேர்த்த அடர்த்தியான புருவமும் இல்லாமல்...

அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது...

🙏கண்கள் கலங்கக் குனிந்த தலை நிமிராமல் ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு, விரக்தியில் தளர்ந்து போய் நடையைக் கட்டினார் பண்டிதர்...

💓*"நம்முடைய அறிவும்...*

💓*புத்தியும்...*

💓*திறமையும்...*

💓*அதிகாரமும்...*

💓*அந்தஸ்தும்...*

💓*பொருளும்...*

💓*மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல..."*

🙏இதை உணராதவர்கள் இப்படித்தான் அவமானப்பட நேரும்...

*தலைக்கனம் நம் தலையெழுத்தை மாற்றி விடும்...*

*இந்த பிரபஞ்சம் அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது...*

*அனைத்து உயிர்களும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவைகளே...*

🙏*நாம் பெற வேண்டியது நல்ல அனுபவங்களை தவிர வேறோன்றுமில்லை...*

ஆகவே,

🙏*இறைவனால் படைக்க பட்ட அனைத்து உயிர்களையும் நேசிப்போம்...*

*மதிப்போம்...*...

*வாழ்வளிப்போம்*..............✍️

எமனாயிருந்தாலும், இல்லை எவனாயிருந்தாலும் ,,,,

எமனாயிருந்தாலும்,

 இல்லை எவனாயிருந்தாலும்  ,,,,பேசாலைதாஸ் 

 


எமதர்மராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தார்..!

அவள் மானுடப் பெண் என்றாலும் ,

அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது.

அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன். 

அவர் மணந்த பெண் நல்லவள் தான்.

 என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது.  

மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார். 

ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் ,

மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார்.

மகன் கொஞ்சம் வளர்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார்.

மகனே..

   நீ சிறந்த வைத்தியனாக வேண்டும்.  

மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம்.

   எப்படித் தெரியுமா...? 

ஒருவர் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன். 

 உனக்கு மட்டும் நான் கண்ணுக்குத் தெரிவேன்.

 நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே. 

நீ வைத்தியம் செய்து அவர் இறந்து போனால் உன் புகழ் குறையும்.

 எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால்,

 தைரியமாக மருந்து கொடு.

 அவன் பிழைத்து எழுந்து கொள்வான்.  

அதனால் உன் புகழ் மேலும் மேலும் பரவும் என்றார் எமன்.

   மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல்,

 மகனை அணைத்து கண்ணீர் விட்டு எமதர்மன் நழுவி விட்டார்.

மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான். 

அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான்.

 ஒருவர் கூடச் சாகவில்லை. எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள்.  

யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது,

 எதிரில் அப்பாவை(எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான்.

 இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது.

கொஞ்ச நாளில் அந்த ஊர் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள். 

யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை.  

இவனை அழைத்தார்கள். என் மகளைக் காப்பாற்றினால் ,

அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன்,

 ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா.  

அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி.

 எமன் (அப்பா)நின்று கொண்டிருந்தார்.

 வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள்.

 ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி,

 ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும்.

இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார்.  

எப்படி அவரை விரட்டுவது..?

 பளிச்சென்று யோசனை பிறந்தது. 

வாசல் பக்கம் பார்த்து கத்தினான். 

அம்மா....!!

   அப்பா உள்ளே இருக்கார். 

ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினேயே....!!

இங்க இருக்கார்.....!

   என்று அலறினான்....!

 அவ்வளவுதான் துண்டைக் காணோம் ,

துணியைக் காணோம் என்று எமன் ஓட்டமாக ஓடியேவிட்டான்....!!

 கட்டுனது     எமனாயிருந்தாலும்,

 இல்லை எவனாயிருந்தாலும்  ,,,,

பொண்டாட்டிக்கு பயந்தே தான் ஆகனும்...!!....

Tuesday, 10 January 2023

 பதராய் மாறி விட்ட  பயிர்கள்   பேசாலைதாஸ் 


வருஷம்பூரா பாடுபட்டும் பலன் கிடைக்காமல் பயிர்கள் திடீர் மழையாலும், திடீர் புயலாலும், திடீர் வறட்சியாலும் பாதிக்கப் பட்டதால் மனம் வெறுத்துப் போன ஒரு விவசாயி கடவுள்கிட்டே கேட்டான்,” ஏன் ஆண்டவனே உனக்குக் கொஞ்சமாச்சும் மூளை இருக்கா? மழையை அளவாப் பெய்ய வைச்சா என்ன? ஏன் இப்பிடி காட்டாற்று வெள்ளமா பெருக வச்சு பயிர்களையெல்லாம் அழிக்கறே.. அதே மாதிரி காத்து அடிச்சாப் பத்தாதா? புயலாய்த்தான் அடிக்கணுமா? வெயில் அடிச்சாப் பரவாயில்லே... ஒரேயடியா இப்பிடி வறட்சி வர வைக்கணுமா? “உனக்கு பஞ்ச பூதங்களை எப்படி மேனேஜ் பண்றதுன்னு கொஞ்சம் கூடத் தெரியலை... எங்கிட்டே அந்த சக்தியைக் கொடு. உற்பத்தியைப் பெருக்கி நாட்டில் சுபிட்சத்தை உண்டாக்கிக் காட்டறேன்”ன்னு சவால் விட்டான். கடவுளும் சரி உன் இஷ்டம். இனி இயற்கை உன் சொல்படி நடக்கும்னு அவனுக்கு சக்தியைக் கொடுத்தார். அன்னேலேர்ந்து அந்த விவசாயி இட்ட கட்டளைக்கு நிலம், நீர், ஆகாயம், வெப்பம், காற்று எல்லாம் கட்டுப்பட்டுச்சு. மழை அளவா பேஞ்சுது. காற்று மிதமா வீசிச்சு. நிலம் நல்ல விளைச்சலைக் கொடுத்துச்சு. வெப்பம் அளவோடு இருந்துச்சு. பயிர்கள் அமோகமா விளைஞ்சிருப்பதைப் பாத்து அவனுக்குப் பெருமிதம் பிடிபடலை. கடவுளைக் கூப்பிட்டு.. பாத்தீங்களா ஆண்டவனே. நான் எப்பிடி விளைச்சலைப் பெருக்கி இருக்கேன்ன்னு சொன்னான். கடவுளும் சரி..அறுவடை செய் என்று அருகில் நின்று வேடிக்கை பார்த்தார். விவசாயி அறுவடை செய்து முற்றிய கதிர்களை உதிர்த்துப் பார்த்தான். நெல் சிதறியது. ஆனால் உள்ளே அரிசி இல்லை. எல்லாமே பதராக இருந்தன. அவன் திகைத்துப் போயி இறைவனை ஏறிட்டுப் பார்த்தான். கடவுள் அமைதியாகச் சொன்னார்... இதான் உனக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். நான் புயலைக் கொடுக்கும் போது பயிர் தன் வேரை பலப்படுத்திக்கும். நான் வரட்சியைக் கொடுக்கும் போது பயிர் தன் வேர்களை நன்றாக பரவ விட்டு நீரைத் தேடி வளரும். நான் நீரை அதிகமாகக் கொடுக்கும் போது அதில் வேர்கள் அழுகிப் போகாமல் தன் வேர்க்கால்களை வலுவாக்கிக் கொள்ளும். அதனால் அதன் வளர்ச்சி எல்லா பருவ நிலைகளுக்கேற்றபடி மாறி, நல்லதொரு பலன் கொடுக்கும் பயிராய் அது வளரும்... ஆனால் நீ வளர்த்த பயிர்கள், சகல வசதியும் சுகமாய் கிடைத்ததும்... சோம்பேறியாய் வளர்ந்து பலன் கொடுக்காமல் பதராய் மாறி விட்டது. இது நம் குடும்பத்துக்கும் பொருந்தும்.

நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள். மனதை கைவிட்டால் போதும்.

நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள். மனதை கைவிட்டால் போதும். பேசாலைதாஸ்  

அவன் சாதாரணத் திருடன் இல்லை. அவன் தலை சிறந்தவன். அந்த நாட்டு மன்னனுக்கே அவனிடம் பெரிய மரியாதை இருந்தது.

ஏனென்றால் அவன் அதுவரை பிடிபட்டதேயில்லை. அந்த நாட்டிலேயே அவன்தான் பெரிய திருடன் என்று எல்லாருக்கும் தெரியும்.

திருடர்கள் மத்தியில் அவன் புகழ் நாலாபக்கமும் பரவியிருந்தது. அவனால் திருடப்படுவதையே கெளரவமாக நினைத்தார்கள் மக்கள்.

"நேற்று எங்கள் வீட்டுக்கு பலே திருடன் வந்தானாக்கும்" என்று பெருமையடித்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். தங்கள் பொருள்கள் திருடு போவதைப் பற்றிக் கூட கவலைப்படாமல் அந்தத் திருடனின் கைவண்ணத்தைப் பாராட்டுவதிலேயே மக்கள் குறியாக இருந்தார்கள்.

அது மட்டுமில்லை. அந்த பலே திருடன் ஒரு வீட்டுக்கு வருகை புரிந்தான் என்றால் அவன் அந்த ஊரிலேயே பெரிய பணக்காரன் என்று பொருள். சாதாரணமானவர்கள் வீட்டுக்கு அவன் போவதில்லை.

மன்னர்கள், அமைச்சர்கள், பெரிய செல்வந்தர்கள் வீட்டுக்கு மட்டும் தான் அவன் போவான். ஆகவே பலே திருடனின் வருகை அந்தஸ்தின் அடையாளமாகப் போய்விட்டது.

அந்த திருடனுக்கு வயதாகிவிட்டது. அவனது மகன் அவனைக் கேட்டான். "அப்பா, உங்களுக்கோ வயதாகிவிட்டது. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நீங்கள் கஷ்டப்படப் போகிறீர்கள்? எனக்கு தொழிலைக் கற்றுக் கொடுங்கள். நீங்கள் ஓய்வெடுங்கள்.''

"அதைத்தானடா யோசித்துக் கொண்டிருக்கிறேன். மகனே, திருடுவது கலையில்லை. அது ஓர் உத்தி. அதை நான் உனக்குச் சொல்லித் தர முடியாது. ஆனால் நீ புத்திசாலியாக இருந்தால் நான் சொல்லாமலேயே உன்னால் அதை என்னிடம் இருந்து கற்றுக் கொள்ள முடியும்."

ஆன்மிகமும் அப்படித்தான். அதை சொல்லித்தர முடியாது. கொஞ்சம் அறிவும் விவேகமும் இருந்தால் அடுத்தவரிடம் இருந்து 'பிடித்துக்' கொள்ளலாம்.

பலே திருடன் தனது மகனிடம் சொன்னதை நினைவில் கொள்ளுங்கள்.

"திருடுதல் என்பது ஓர் உத்தி. நான் உனக்கு உதவத் தயாராக இருக்கிறேன். ஆனால் நீதான் அதைப் 'பிடித்துக்' கொள்ள வேண்டும். நீ அதைப் பிடித்துக் கொள்ள என்னாலானதைச் செய்கிறேன்.

திருடுவது, கவிதை எழுதுவது இதெல்லாம் அடுத்தவர் சொல்லிக் கொடுத்து வராது. தானாக வரவேண்டும். உனக்கு அது வருமா வராதா என்று இப்போது சொல்ல முடியாது. நீ முயற்சி செய்து பார். இன்று இரவு தொழிலுக்குப் போகும் போது நீ என்னுடன் வா.'

அன்று தந்தையுடன் தொழிலுக்குச் சென்றான் மகன். மகன் இளைஞன். நல்ல திடகாத்திரமாக இருந்தான். தந்தைக்கோ எழுபது வயதுக்கு மேல் ஆகியிருந்தது.

அவர்கள் இருவரும் ஒரு பெரிய செல்வந்தரின் வீட்டுக்குப் போனார்கள். பலே திருடன் சுவரை உடைத்தான். அவன் உடைக் கும் அழகை உடல் நடுங்க வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் மகன்.

அது நல்ல குளிர் காலம் என்றாலும் மகனுக்கு வியர்த்துக் கொட்டியது. அவனுக்கு பயமாக இருந்தது. அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தான். யாராவது அவர்களைப் பார்த்துவிட்டால்...

“அப்பாவின் தொழில் நேர்த்தியே நேர்த்தி! ஏதோ தனது சொந்த வீட்டுச் சுவரை உடைப்பது போல் பதற்றப்படாமல் அமைதியாக உடைத்துக் கொண்டிருக்கிறாரே! அவருக்குக் கொஞ்சம் கூட பயம் இருக்காதா?"

தந்தை ஒரு முறை கூட அக்கம் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. சுவரை உடைத்து முடிந்தவுடன் அனாயாசமாக வீட்டுக்குள் நுழைந்தான் தந்தை. மகனைப் பின் தொடர்ந்து வருமாறு சைகை காட்டினான்.

மகன் இப்போது தலையோடு கால் நடுங்கிக் கொண்டிருந்தான். குளித்துவிட்டு வந்தது போல் வியர்த்துக் கொட்டியது மகனுக்கு. நல்ல வெயில் காலத்தில் கூட, பகல் வேளையில் இந்த அளவு அவனுக்கு வியர்த்ததில்லை.

ஆனால் தந்தையோ இருட்டில் அந்த வீட்டில் வசிப்பவனைப் போல் உள்ளே நடமாடிக் கொண்டிருந்தான். எதன் மேலும் தடுமாறி விழவில்லை. எந்த சத்தமும் எழுப்பவில்லை.

வீட்டிற்குள்ளே இருந்த ஓர் அறைக்குச் சென்றார்கள் அவர்கள். அங்கே இருந்த ஆளுயர அலமாரிக்குள் தன் மகனை நுழையுமாறு சொன்னான் தந்தை.மகன் உள்ளே நுழைந்தான்.

அடுத்து மகன் கற்பனையிலும் எதிர்பார்க்காத ஒரு செயலைச் செய்தான் தந்தை.

அந்த அலமாரியை வெளியில் இருந்து பூட்டினான். உள்ளே மகன் இருந்தான். “திருடன் திருடன்” என்று பெரிதாகக் கத்தியபடி வீட்டை விட்டு ஓடிவிட்டான் தந்தை.

வீட்டில் இருந்தவர்கள் எழுந்துவிட்டார்கள். அண்டை வீட்டுக் காரர்கள் எல்லாருமே எழுந்துவிட்டார்கள். எல்லா விளக்குகளையும் ஏற்றித் திருடனை வீடு முழுவதும் தேட ஆரம்பித்தார்கள்.

மகனின் நிலையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

"அவ்வளவுதான். தொலைந்தோம். என் என் அப்பன் ஒரு பைத்தியக்காரன். தொழில் கற்றுக் கொடு என்று நான் அவரைக் கேட்டிருக்கக்கூடாது. இது எனக்கான தொழிலே அல்ல. அந்த ஆள் சொல்வது சரிதான். திருடர்கள் பிறக்கிறாரக்ள், உருவாக்கப் படுவதில்லை.

"இப்படியா ஒரு மனுஷன் சொல்லித் தருவான்? நான் மட்டும் இவர்களிடமிருந்து பிழைத்தால் என் அப்பனைத் தேடிப் பிடித்துக் கொலை செய்வேன். வீட்டிற்குப் போய் அவன் தலையை அறுத்துக் கொல்வேன்."

அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. யாருக்கும் அந்த சூழ்நிலையில் கோபம் வரத்தானே செய்யும்? ஆனால் இப்போது கோபப்பட நேரம் இல்லை. ஏதாவது செய்து இவர்களிடம் இருந்து தப்பிச் செல்ல வேண்டும். என்ன செய்வது என்று புரியவில்லை. அவன் மனம் சிந்திக்க மறுத்தது.

அதுதான் உண்மையான தியான நிலை. மனம் செயலற்று, சிந்தனையற்று இருப்பதுதான் உண்மையான தியானம்.

அடுத்து என்ன செய்வது என்று மனதிற்கு சத்தியமாகத் தெரியாது. ஏனென்றால் மனத்திற்கு தெரிந்த விஷயங்கள் இந்த சூழ்நிலைக்குப் பயன்படாது.

அவனுடைய மனம் இப்படி ஓர் இக்கட்டான சூழ்நிலையை இதுவரை சந்தித்ததேயில்லை. குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் மனம் தெரிந்ததைத்தான் சுற்றிச் சுற்றி வரும்.

தெரியாதது எதையாவது பார்க்க நேர்ந்தால் மனம் அப்படியே ஸ்தம்பித்துப் போய்விடுகிறது. மனம் ஓர் இயந்திரம். சரியான செய்திகளை மனதிற்கு நீங்கள் கொடுக்கவில்லையென்றால் அதனால் இயங்க முடியாது.

இது ஒரு புதிய சூழ்நிலை. பலே திருடனின் மகனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவன் செய்வதற்கு ஒன்றும் இல்லை. அப்போது அந்த வீட்டின் வேலைக்காரி கையில் ஏற்றிய மெழுகுவர்த்தியோடு அந்த அறைக்குள் நுழைந்தாள். எப்படியும் திருடன் வீட்டுக்குள்தான் இருக்க வேண்டும். சுவர் உடைக்கப்பட்டிருக்கிறது,

கதவுகள் எல்லாம் திறந்திருந்தன. அப்படியென்றால் திருடன் எப்படியும் உள்ளே இருக்கும் இந்த அறைக்குத்தான் வந்திருக்கவேண்டும். இங்கே தான் எங்கோ அவன் ஒளிந்து கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்தாள் அவள்.

மகன் பதுங்கியிருந்த ஆளுயர அலமாரியில் ஏதோ சத்தம் கேட்க, அலமாரியை திறந்தாள் அவள். 

உள்ளே இருந்த திருடனின் மகன் தனது கையால் அலமாரியைச் சுரண்டிக் கொண்டிருந்தான். அந்த செயலை அவன் தன்னிச்சையாகச் செய்து கொண்டிருந்தான். மனதால் திட்டமிட்டுச் செய்யவில்லை.

அலமாரி கதவுகளின் இடுக்கு வழியாக யாரோ விளக்குடன் அறைக்குள் நுழைவதைப் பார்த்தான். காலடி ஓசையைக் கேட்டான். இப்போது அறையில் அவ்வளவாக இருட்டு இல்லை. கதவைத் திறக்க வேண்டுமென்றால் ஏதாவது செய்தே ஆக வேண்டும். என்ன செய்வது?

எலியைப் போல் பிறாண்ட ஆரம்பித்தான்.

சத்தம் கேட்டு அந்த வேலைக்காரி கதவைத் திறந்தாள். திறந்து உள்ளே யார் இருக்கிறார்கள் என்று மெழுகுவர்த்தியால் பார்க்க முயன்றாள்.

உடனே அவன் அந்த மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு அந்தப் பெண்ணைத் தள்ளிவிட்டுவிட்டு ஓட ஆரம்பித்தான்.

விளக்குகளையும் வேல் கம்புகளையும் எடுத்துக் கொண்டு பத்து பேர் அவனைப் பின் தொடர்ந்து ஓட ஆரம்பித்தார்கள். அவன் எப்படியும் பிடிப்பட்டுவிடுவான் என்று அவர்கள் நினைத்தார்கள்.

அப்போது வழியில் ஒரு பாழுங் கிணற்றைப் பார்த்தான். பக்கத்தில் இருந்த ஒரு பெரிய பாறாங்கல்லைத் தூக்கி அந்த கிணற்றில் போட்டான். அது பெரிய சத்தத்துடன் உள்ளே விழுந்தது. அருகில் இருந்த மரத்துக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கத் தொடங்கினான்.

அவனைத் துரத்தி வந்தவர்கள் அவன் கிணற்றில் குதித்துவிட்டான் என்று நினைத்தார்கள்.

"இனிமேல் அவனைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்அவன் கிணற்றில் குதித்துவிட்டான். காலையில் வருவோம்

அவனை வெளியில் எடுப்போம். உயிருடன் இருந்தால் காவலர்களுக்குச் சொல்லியனுப்பி அவனைச் சிறையில் அடைப்போம். அவன் செத்திருந்தால் அவனுக்கு ஏற்கனவே கிடைத்துவிட்டது என்று நினைத்துக் கொள்ளலாம். வாருங்கள் போகலாம்.'

மகன் வீடு திரும்பினான். அவனுடைய தந்தை கம்பளியைப் போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான். கோபத்தில் கம்பளியை உருவிப் போட்டான் மகன்.

"உங்களுக்கு என்ன பைத்தியமா பிடித்துவிட்டது? அப்படிச் செய்தீர்கள்?”

"அப்....பா. நீ திரும்பி வந்துவிட்டாயா? அது போதும். நீ பிறவிக் கள்ளன் தான் என்பதை இப்போது ஒத்துக் கொள்கிறேன். நாளை முதல் நீ தனியாகத் தொழில் செய்யத் தொடங்கலாம். இந்தத் தொழிலின் சூட்சுமத்தைப் புரிந்து கொண்டுவிட்டாய்.

"எனக்குப் பைத்தியம் பிடிக்கவில்லை மகனே! நான் உன்னை வைத்துச் சூதாடினேன். இந்த சூதில் நான் தோற்றால் உன் கதை முடிந்திருக்கும். நீ உயிருடன் திரும்பிவிட்டாய் என்றால் நான் சூதில் ஜெயித்துவிட்டேன் என்று அர்த்தம்.

"இப்போது நீ வந்துவிட்டாய். நான் ஜெயித்துவிட்டேன். இப்போது என்னைத் தொந்தரவு செய்யாமல் போய்த் தூங்கு. நாளை காலை நீ எப்படி தப்பித்தாய் என்று எனக்குச் சொல்ல வேண்டும் என்று தோன்றினால் சொல்லு.

ஆனால் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியும். விவரங்கள் தெரியாதேயொழிய சாரம் தெரியும். அதுவே எனக்குப் போதும். இதுதான் என் தொழில். இதுதான் என் கலை. நீ இதில் கைதேர்ந்துவிட்டாய். நாளையே நான் செத்தாலும் சந்தோஷமாகச் சாவேன்.

“என் கலை என் வாரிசிடமும் இருக்கிறது என்று நிம்மதியாகச் சாவேன். இப்படித்தான் என் தந்தை எனக்கு தொழில் கற்றுக் கொடுத் தார்.

இந்தத் தொழிலைக் கற்றுக் கொள்ள இந்த ஒரு வழிதான் இருக்கிறது. ஆபத்துக்களை நேரில் சந்திப்பதுதான் அந்த வழி.

தியானமும் அப்படித்தான்.திருடன் கூட ஞானியாகலாம். திருடன் கூட இந்த தருணத்தில் வாழலாம். திருடன் கூட மனம் என்னும் சுமையை உதறித் தள்ளிவிட்டு ஞானியாகிவிடலாம்.

அதனால்தான் நான் நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் என்பது பற்றி நான் அதிகம் கவலைப்படுவதில்லை.

தீட்சை வேண்டும் என்று என்னைத் தேடி வருபவர்களுக்கெல்லாம் நான் தீட்சை தருகிறேன்.

அவர்கள் என்ன தொழில் புரிகிறார்கள் என்று ஒரு போதும் நான் கேட்டதேயில்லை. வருபவர்களில் சிலர் அவர்களாகவே, "ஓஷோ, நான் குடிகாரன். அதனால் பரவாயில்லையா?” என்று கேட்பார்கள். இன்னும் சிலர் தங்களைத் திருடர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள்.

நான் கொலைகாரன் என்று சொல்லிக் கொண்டு வந்தவர்கள் கூட என்னிடம் தீட்சை பெற்றிருக்கிறார்கள். 'நான் இப்போது தான் ஜெயிலில் இருந்து விடுதலையானேன் என்று சொல்லிக் கொண்டு வருபவர்களும் இருக்கிறார்கள்.

அவர்களிடம் நான் இதைத்தான் சொல்வேன்.

“எனக்கு விவரங்கள் தேவையில்லை. நீங்கள் இதுவரை ஒரு மாதிரியான தூக்க நிலையில்தான் வாழ்ந்து வந்திருக்கிறீர்கள். அந்த நிலையில் நீங்கள் செய்த செயல்களில் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை.

நீங்கள் பாவியாக இருந்தாலும் சரி, பரோபகாரியாக இருந்தாலும் சரி, நீங்கள் புனிதராக வாழந்திருந்தாலும் சரி, சாத்தானின் பிரதிநிதியாக இருந்தாலும் சரி, எனக்கு எல்லாம் ஒன்றுதான்."

தன்னுணர்வு இல்லாமல் செய்த செயல்களில் என்ன பெரிதாக வித்தியாசம் இருந்துவிடப் போகிறது? ஒருவன் தான் பாவங்கள் செய்ததாக கனவு கண்டிருக்கலாம். மற்றொருவன் கொலை செய்வதாகக் கனவு கண்டிருக்கலாம்.

இன்னும் ஒருவன் தான் தூயவனாக வாழ்ந்ததாக கனவு கண்டிருக்கலாம். தூக்கம் கலைந்தவுடன், காலையில் விழிப்பு வந்தவுடன் எல்லாரும் ஒன்றுதான்.

கனவில் கொலை செய்தவனுக்குத் தண்டனையும் கிடைக்கப்போவதில்லை. தூய்மையான வாழ்க்கைக்குப் பரிசும் கிடைக்கப்போவதில்லை.

நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள். மனதை கைவிட்டால் போதும். நீங்களும் சத்தியத்தை அடையலாம்..

Monday, 9 January 2023

புரிதலில் குழப்பம்

புரிதலில் குழப்பம் பேசாலைதாஸ்  


ஜீலு நாட்டில் *#மாவீரன்* ஒருவன் இருந்தான். 

அவன் அந்த நாட்டு மன்னனிடம் சென்று அவனது மகளைத் தனக்கு திருமணம் செய்து தருமாறு கேட்டான்.

" நான் இடுகின்ற மூன்று கட்டளைகளை அணுவளவும் பிசகாது எவன் ஒருவன் செய்கிறானோ, 

அவனுக்கே என் மகளைத் திருமணம் செய்து தருவேன்" என்று அந்த மன்னன் அவனுக்கு பதில் அளித்தான்.

" அந்த முன்று கட்டளைகள் என்னென்ன? சொல்லுங்கள் மன்னவா! 

உடனே அவற்றை நிறைவேற்றிவைக்கிறேன்!" என்றான் அந்த மாவீரன்.

" நான் மூன்று கூடாரங்களை ஏற்ப்படுத்தி வைத்திருக்கிறேன்,

 முதல் கூடாரத்தில் பெரியதொரு சாராயப் பீப்பாய் இருக்கிறது. 

அதில் உள்ள சாராயம் முழுவதையும் ஒரே மூச்சில் குடித்து முடித்துவிட வேண்டும் "

" இந்தக் காரியத்தை முடித்த கையோடு உடனே இரண்டாவது கூடாரத்திற்க்குச் செல்ல வேண்டும்

 அங்கே பல்வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் பைத்தியம் பிடித்த கொரில்லா குரங்கு ஒன்று இருக்கும்.

 ஏழு அடி உயரம் உள்ள அந்த கொரில்லா குரங்கிற்க்கு தொல்லை தரும் பல் எது என்பதைக் கண்டுபிடித்து , 

அந்த பல்லை வெறும் கையினாலேயே பிடுங்கி எறிய வேண்டும்."

இந்த வேலை முடிந்தவுடன் சிறிதும் தாமதியாது மூன்றாவது கூடாரத்திற்க்கு செல்லவேண்டும். 

அங்கே ஒரு ஆங்கிலேயப் பெண் இருப்பாள். 

எந்த ஒரு ஆண்மகனும் அவளை உடலுறவில் முழுதும் திருப்தி செய்ய முடியாதபடி ஒரு தனிப் பயிற்சி பெற்றவளாக இருப்பாள். 

அவளோடு உடலுறவு கொண்டு அவளை முழுவதும் திருப்தி செய்ய வேண்டும் " என்றான் மன்னன்

 இப்போதே இதை செய்கிறேன்" எனக் கூறிவிட்டு அந்த மாவீரன் முதல் கூடாரத்தினுள் நுழைந்தான். 

ஒரே மூச்சில் பீப்பாய் சாராயத்தையும் காலி செய்தான்.

பின்னர் பைத்தியம் பிடித்த கொரில்லாக் குரங்கு இறுக்கும் கூடாரத்தினுள் தடுமாறியபடி நுழைந்தான்.

அங்கே அவனுக்கும் அந்தக் கொரில்லாக்கும் ஒரு பயங்கரமான சண்டை நடந்து. 

அந்த சண்டையில் அந்த கூடாரமே ஆட்டம் கண்டது. 

வேதனைக் கூக்குரல் விண்ணைப் பிளந்தது.

அந்தக் கொரில்லாவின் உடம்பின் மேலுள்ள முடிக்கற்றைகள் பறந்து வந்து வெளியே விழுந்தன.

மனிதக் காது ஒன்றுகூட வெளியில் வந்து விழுந்து.

இந்த கூச்சலும் கூக்குரலும் சுமார் அரை மணி நேரம் நீடித்தது.

சற்று அமைதி, பின் அந்தக் கூடாரத்திலிருந்து மாவீரன் தவழ்ந்து கொண்டே வெளியே வந்தான்.

தள்ளாடிக் கொண்டே எழுந்து நின்று அந்த மன்னனைப் பார்த்துக் கேட்டான்.

" சரி அரசே! 

இப்போது பல்வலியால் அவதிப்படும் அந்த ஆங்கிலேயப் பெண்மனி இருக்கும் இடத்தைக் காட்டுகிறீர்களா😁😁😁 ?"

Sunday, 8 January 2023

 டிக் டிக் டிக் ,,,,,,, பேசாலைதாஸ் 


நஸுருதீன் தன்னுடைய கை கடிகாரத்தை பழைய பொருட்கள் போட்டு வைக்கும் ஒரு இருட்டு அறைக்குள் தொலைத்துவிட்டார்.அது விலை மதிப்பு மிக்கது.

பலர் அதை எடுக்க முயற்சி செய்தார்கள் முடியவில்லை.இறுதியில் ஒரு சிறுவன் வந்தான் நான் எடுத்து தருகிறேன் என்று.முல்லா அனுமதித்தார்.

உள்ளே சென்ற அடுத்த நிமிடம் எடுத்து வந்துவிட்டான்.

முல்லா கேட்டார் இவ்வளவு பேர் முயற்சித்து முடியவில்லை உன்னால் எப்படி?அவன் சொன்னான் எல்லோரும் தேடுகிறேன் என்று இரைச்சலை உருவாக்கினார்கள்.

நான் சென்று அமைதியாக வெறுமனே கவனித்தேன்.எதையும் நகர்த்தவில்லை, தேடவில்லை.

கடிகாரத்தின் டிக் டிக் சத்தம் மெதுவாக கேட்டது.அதைவைத்து எடுத்து வந்துவிட்டேன்.

தியானமும் அப்படித்தான்.

தியானம் உங்களுக்கு ஏன் சிரமமானதாக உள்ளது.மனம் என்னும் குரங்கை அடக்க முயற்சிப்பதால்,அதனுடன் போராடுவதால்.

மனம் ஒரு குரங்கு.நான் டார்வின் தத்துவத்தைப்பற்றி பேசவில்லை.பரினாம வளர்ச்சி பற்றியோ,மனிதனின் உடல் அமைப்போ பற்றி அல்ல.

இது மனம் சம்பந்தப்பட்டது.குரங்கு எதாவது செய்துகொண்டேயிருக்கும்.அதை அமைதியாக ஒரு இடத்தில் உட்கார வைக்க முடியாது.

உங்கள் மனமும் அப்படித்தான்.தியானத்தில் குரங்கை நீங்கள் அடக்க முயற்சித்தால்,அமைதிப்படுத்த முயற்சித்தால் ஒரு போதும் தியானத்தில் உண்மை தன்மையை அடையவே முடியாது.

எனவே முதலில் குரங்கை கவனியுங்கள்.வெறுமனே கவனியுங்கள்.பிறகு கவனிப்பவன் யார் என கவனியுங்கள்.

கவனிப்பவன் கவனிக்கப்படும்போது குரங்கு அங்கு இருக்காது.

அவ்வளவுதான் நீங்கள் உண்மையை நெருங்கிவிட்டீர்கள்.ஏனென்றால் மனக்குரங்கு இயங்குவதே உங்கள் கவனிப்பு தன்மையால்தான்.

பிறகு குரங்கு வரும் போகும் கவனியுங்கள். அதன் பின்னால் போய்விடாமல் கவனியுங்கள்.பின்பு கவனிப்பவனை கவனியுங்கள்.

என்றாவது ஒரு நாள் குரங்கு முழுவதும் கானாமல் போய்விடும்.

நீங்கள் முழுமையான தியானத்தில் இருப்பீர்கள்.

சம்சாரம் கேட்ட கேள்வி

 சம்சாரம் கேட்ட கேள்வி பேசாலைதாஸ் 


புத்தர் ஞானம் அடைந்தபின் தன் சொந்த ஊர் திரும்பி மனைவியை 
சந்தித்தது பற்றி நிறைய கதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு விதம். 

அதில் ஒரு வெர்சனில் புத்தர் தானே தன் மனைவியையும், மகனையும் சந்திக்கவேண்டும் என சொல்லி கிளம்புகிறார். அவருடன் இருந்த பிட்சுக்கள் "அனைத்தையும் துறந்துவிட்டு வந்தீர்கள். ஏன் மறுபடி போய் மனைவியை சந்திக்கவேண்டும்" என கேட்கிறார்கள். "பழைய வாழ்க்கையின் கடன். அவளிடம் சொல்லாமல், குழந்தையை விட்டுவிட்டு வந்தேன். அதற்கு போய் சமாதானம் சொல்லவேண்டும்" என்கிறார் புத்தர்.

புத்தர் மேல் கடும்கோபத்தில் இருக்கிறார் யசோதரா. புத்தருக்காகவும், அவரது சீடர்களுக்காகவும் புத்தரின் தந்தை சுத்தோதனர் ஒரு மண்டபத்தை கட்டியும் அங்கே அவள் போகவில்லை. "எந்த அறையில் என்னை இரவு தூங்குகையில் சொல்லாமல், கொள்ளாமல் தனியே விட்டுவிட்டு போனாரோ, அங்கேயே அவர் வந்து சந்திக்கவேண்டும்" என்கிறார்.

புத்தரும் அதே அறையில் சென்று யசோதராவை தனிமையில் சந்திக்கிறார். யசோதரா ஒரே கேள்வி தான் கேட்கிறார்.

"நீங்கள் இப்போது என்னவாக வந்து என் முன் நிற்கிறீர்கள் என்பது எனக்கு சரியாக புரியவில்லை. மகான் என்கிறார்கள், கடவுள் என்கிறார்கள். உங்கள் உபதேசங்களை உலகமே கொண்டாடுகிறது. ஆனால் ஒரே ஒரு விசயத்தை மட்டும் எனக்கு தெளிவு படுத்துங்கள். நீங்கள் வீட்டை விட்டு எங்கோ காட்டுக்கு சென்று அடைந்த அந்த ஞானத்தை, அறிவை, சாதகத்தை இதே அரண்மனையில் வசித்தபடி அடைந்திருக்கமுடியாதா? மனைவியையும், பிள்ளையையும் விட்டுவிட்டு காட்டுக்கு போயிருந்தால் மட்டுமே அந்த ஞானம் கிடைத்திருக்குமா?"

பதில் சொல்லமுடியாமல் ஸ்தம்பித்து நின்றார் புத்தர். ஞானிக்கு காடும், அரண்மனையும் ஒன்றுதான் என்பதை இப்போதைய புத்த நிலையில் அவரால் உணரமுடிந்தது. ஆனால் அன்று இளவரசன் நிலையில் அதை அவரால் உணரமுடியவில்லை.

But moral of the story is -> எப்பேர்ப்பட்ட ஞானியானாலும் சம்சாரம் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் திண்டாடிதான் நிக்கணும்

Thursday, 5 January 2023

news

 சகல உள்ளூராட்சி மன்றங்களும் உடனடியாக கலைக்கப்பட வேண்டும் - ஐக்கிய மக்கள் சக்தி


சட்டக்கல்லூரி மாணவர்களின் ஆங்கில மொழி விவகாரம் குறித்த இறுதித் தீர்மானம் ஓரிரு நாட்களுக்குள்


சந்தேகத்துடனேயே பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறோம் - எம்.ஏ.சுமந்திரன்


விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்ட அரகலய செயற்பாட்டாளர் பிணையில் விடுதலை


நீர்வீழ்ச்சிக்கு அருகில் மதுபானசாலை திறப்பதற்கு கொத்மலையில் எதிர்ப்பு

-------------------------------------------


புதிய ஆட்சியெல்லை யதார்த்தங்களை யுக்ரைன் ஏற்றுக்கொண்டால் பேச்சுக்குத் தயார்: புட்டின்


வெளிநாடுகளில் இருந்து இந்தியா சென்ற பயணிகளில் 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


------------------------------------------------------------------------

மேசைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் புனித பீற்றர் கல்லூரி மாணவர் சாதனை


2 ஆவது இருபதுக்கு 20 போட்டியில் சில மாற்றங்கள் !

Tuesday, 3 January 2023

ஒத்திப்போடுதல்.

 ஒத்திப்போடுதல். பேசாலைதாஸ் 


ஒரு உணவக உரிமையாளர் ஒருவர் தன்னுடைய உணவகத்திற்கு வெளியே வீதியில் ஒரு வயதானவர் ஞானியை போன்ற தோற்றத்துடன் வருவதை கண்டார்.

அவரிடம் ஏதாவது ஞானக்கருத்துகளை கேட்டுக்கொள்ளலாம் என இருக்கையிலிருந்து எழுந்து சென்று வீதியிலேயே நின்றுகொண்டு அவரிடம் ஐயா, தாங்கள் எனக்கு ஏதாவது ஞான கருத்துக்களை வழங்க வேண்டும் என்றார்.

அவரும் சில கருத்துக்களை அவனுக்கு சொன்னார்.

அவன் அதை கேட்டுவிட்டு உங்கள் கருத்துகள் நன்றாக உள்ளது ஆனால் எனக்கு ஒரு மகன் இருக்கிறான் அவன் வளர்ந்தவுடன் இந்த உணவகத்தை அவனிடம் விட்டுவிட்டு பிறகுதான் முயற்சி செய்யமுடியும் என்றான்.

சரி பரவாயில்லை என்று சொல்லிய ஞானி அவனிடம் நான் பசியாக உள்ளேன் நான் உணவருந்தி ஓய்வெடுக்கவேண்டுமே என்றார்.

அதற்கு அவன் சொன்னான் அதற்கென்ன ஐயா, இதோ தெரு குழாயில் தண்ணீர் வருகிறது அதை குடித்துவிட்டு எதிரில் உள்ள மரத்தடியில் படுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னான்.

சிரித்துகொண்டே தண்ணீரை குடித்துவிட்டு அவர் போய்விட்டார்.

ஆண்டுகள் கடந்தது அந்த வழியே மீண்டும் ஒருநாள் ஞானி வந்தார்.இப்பொழுது உணவகம் வளர்ந்திருந்தது.உரிமையாளர் இருக்கைக்கு அருகில் மற்றொரு இருக்கை போடப்பட்டு அதில் அவனுடைய மகனும் அமர்ந்து உணவகத்தை நடத்திக்கொண்டிருந்தனர்.

ஞானியை பார்த்ததும் எழுந்து ஓடிவந்த முதலாளி.எனக்கு இன்னும் ஏதாவது ஞானக்கருத்துகள் சொல்லவேண்டும் என்றான்.அவரும் சொன்னார்.பதிலுக்கு அவன் சொன்னான் இப்பொழுது முடியாது என் மகனுக்கு தொழில் தெரியவில்லை கற்றுக்கொடுத்துவிட்டு பிறகு முயற்சி செய்கிறேன் என்றான்.

அவர் சரி பரவாயில்லை எனக்குபசியாக உள்ளது என்றார். அவன் குழாயடியையும்,மரத்தையும் காட்டினான்.தண்ணீரை குடித்து விட்டு போய்விட்டார்.

ஆண்டுகள் கடந்தது.மீண்டும் ஞானி வந்தார்.

முதலாளி இப்பொழுது கிழவன் ஆகிவிட்டான்.அவனுக்கு அவனுடைய மகன், உணவகத்தின் வெளியே ஒரு நாற்காலியை கொடுத்து உட்கார வைத்திருந்தான்.

ஞானியை பார்த்ததும் கிழவன் எழுந்து ஓடிவந்தான்.,ஐயா எனக்கு எதாவது ஞானக்கருத்துகள் சொல்லுங்கள் என்றான்,அவரும் சொன்னார்.இப்பொழுது முடியாது எனக்கு வயதாகிவிட்டது என்றான்.

மேலும் ஞானி கேட்கும் முன் குழாய் நீர்,மரத்தை சுட்டி காட்டினான்.

ஞானி போய்விட்டார்.

ஆண்டுகள் தாண்டி மீண்டும் வந்தார் ஞானி.முதலாளியை காணவில்லை.அவனுடைய புகைப்படம் மாலை போட்டு மாட்டப்பட்டிருந்தது.

மகன் ஒரு நாயை கல்லால் அடித்து விரட்டிவிட்டு உணவகத்திற்கு உள்ளே போனான்.

நாய் இவரை பார்த்ததும் ஓடி வந்து வாலை ஆட்டியது.

ஞானி அது யாரென்று புரிந்து கொண்டார்.தன்னிடம் இருந்த ஒரு தடியால் அதன் தலையில் ஒரு போடு போட்டார்.

நாய் இப்பொழுது பேசியது.

அய்யா முன்பு நீங்கள் சொன்னதை நான் கேட்காமல் போய்விட்டேன் இப்பொழுது என் மகனே என்னை கல்லால் அடிக்கிறான்.நான் விடுதலையாக எதாவது ஞான கருத்துக்கள் சொல்லுங்கள் என்றது.

ஞானி கருத்துக்கள் சொன்னார்.அதற்கு நாய் சொன்னது......... 

இப்பொழுது என்னால் முடியாது ஏனென்றால் இப்பொழுதுதான் எட்டு குட்டிகள் போட்டிருக்கிறேன் அது வளர்ந்தவுடந்தான் முயற்சி செய்யவேண்டும் என்றது.

தடியால் இன்னொரு அடி போட்டார்.

நாய் கத்திக்கொண்டே ஓடிசென்று குழாயடியில் வழிந்தோடும் நீரை குடித்துவிட்டு மரத்தடியில் படுத்துக்கொண்டது.

மனதின் மிகப்பெரிய தந்திரங்களில் ஒன்று ஒத்திப்போடுதல்.

 எங்கே நீயோ நானும் அங்கே உன்னொடு,,,,, பேசாலைதாஸ் ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள்.ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகம...