பின் தொடர்பவர்கள்

சனி, 24 ஜனவரி, 2026

இல்லற இரகசியம்.அன்புடன் பேசாலைதாஸ்
❤️💏


ஒரு சாது மரத்தடியில் அமர்ந்திருந்தார்.
ஒரு பறவை அவரிடம் சென்று,
‘ஐயா! உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன்', என்றது.
‘பறவையே! உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா?முயற்சிப்பதில் தவறில்லை.
ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள். பிரயாணத்தின் போது முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு', என்றார் சாது.
தலையசைத்து விட்டு பறந்தது பறவை.
அதைப்பற்றி கேட்ட சீடனிடம் பேசினார் சாது.
‘சீடனே! முதல் முறை சோர்வடையும் போது பாதி பலத்தை இழந்துவிட்டோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும்',என்றார் சாது.
ஒரு வாரத்திற்குப் பிறகு பறவை திரும்ப வந்தது.
‘ஐயா! கடலில் இருநூறு காத தூரத்தை அடைந்தவுடன், சோர்வடைந்தேன். நீங்கள் சொன்ன படி உடனே திரும்பிவிட்டேன்.
பயணத்தை தொடர்ந்திருந்தால், கடலில் விழுந்திருப்பேன்.
இருந்தாலும், சில நாட்களுக்குப் பிறகு என் முயற்சியை தொடர விரும்புகிறேன்',என்றது பறவை.
‘பறவையே! இம்முறை உன் துணையையும் உடன் அழைத்துச் செல். பறக்கும் போது இரண்டாம் முறையாக சோர்வடைந்தவுடன், திரும்பி வா என்றார் சாது.
பதினைந்து நாட்கள் ஓடிப்போனது. மீண்டும் பறவைகள் திரும்ப வந்தன.
‘ஐயா! எங்களால் கடலில் நானூறு காத தூரம் தான் பறக்க முடிந்தது. நீங்கள் சொன்னபடி இரண்டாவது முறை சோர்வடைந்தவுடன் திரும்ப வந்துவிட்டோம். தொடர்ந்து பறந்திருந்தால் கடலில் விழுந்து இறந்திருப்போம். ஆனாலும் எங்கள் முயற்சியை தொடர விரும்புகிறோம். எங்களுக்கு உதவுங்கள்', என்றது பறவை.
சாது யோசித்தார். கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து பறவையிடம் கொடுத்தார்.
‘பறவைகளே! பயணத்தின் போது இந்தக் குச்சியை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.
சோர்வு ஏற்படும் போது, இந்தக் குச்சியை கடல் தண்ணீரின் மீது போடுங்கள். அது மிதக்கும்.அந்தக் குச்சியின் மீது அமர்ந்து ஓய்வெடுங்கள். களைப்பு தீர்ந்தவுடன் மீண்டும் குச்சியோடு பறந்து செல்லுங்கள்', என்றார் சாது.
பறவைகள் நன்றி சொல்லிவிட்டு பறந்தன. இரண்டு மாதங்களுக்குப் பிறகு சாதுவிடம் வந்தன.
‘ஐயா! உங்களின் ஆசியினால், ஆயிரம் காத தூரத்திற்கு அப்பால் உள்ள தீவை சுற்றிப் பார்த்தோம்.
குச்சியின் உதவியால் சோர்வடையும் போதெல்லாம் ஓய்வெடுத்தோம்', என்றது பறவை.
‘பறவைகளே அருமை! நீங்கள் எடுத்துச் சென்ற குச்சி உங்களுக்கு சுமையாக இல்லையா?'என்று கேட்டார் சாது.
பறவை பேசியது. ‘ஐயா! சில நாட்கள் குச்சியை தனித்தனியே சுமந்து பறந்தோம். சில இடங்களில் சேர்ந்தே சுமந்தோம்.
அப்போதெல்லாம் அது எங்களுக்கு சுமையாகவே இருந்தது. பல இடங்களில் எங்களுக்குள்ளே சண்டையும் வந்தது. ஆனால், கடலில் குச்சியை போட்டு அதில் நாங்கள் ஓய்வெடுக்கும் போதுதான் “குச்சியை நாங்கள் சுமக்கவில்லை. குச்சிதான் எங்களை சுமக்கிறது, காப்பாற்றுகிறது”, என்ற உண்மை புரிந்தது', என்று சொல்லி விட்டு பறந்தன பறவைகள்.
சாதுவைப் பார்த்தான் சீடன். சாது பேசினார்.
‘சீடனே! பறவை முதலில் தனியாக பறந்த போது எளிதில் சோர்வடைந்தது. துணையோடு பறந்த போது அதிக நேரம் சோர்வடையாமல் பறக்க முடிந்தது. அதற்குக் காரணம் ‘துணை'.
ஆனாலும் இலக்கை அடைய முடியவில்லை. இலக்கை அடைய ‘குச்சி' என்ற கருவி அவசியமாகிறது.
அந்தக் கருவி ஓய்வைக் கொடுத்தது, சண்டையைக் கொடுத்தது, பல நேரங்களில் சுமையாகத் தெரிந்தது. ஆனால், அந்தக் கருவியின் உதவியால் மட்டுமே இலக்கை அடைய முடிந்தது...
பறவைகளுக்கு ‘குச்சியை'ப் போல மனிதர்களுக்கு ‘இல்லறம்' கருவியாகிறது. ‘சம்சார சாகரம்', என்ற பிறவிக் கடலை கடக்க, கடலில் குதிக்க வேண்டியதில்லை, நீந்த வேண்டியதில்லை.
‘இல்லறம்' என்ற குச்சியின் உதவியால் மிதந்தே கடக்கலாம்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.
குச்சியை சுமப்பதாக பறவைகள் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், ‘குச்சியே பறவைகளை சுமக்கிறது'.
இதைப் போல, கணவனும், மனைவியும் இல்லறத்தை வழி நடத்துவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், உண்மையில் இல்லறமே அவர்களை வழி நடத்துகிறது.
இதுவே இல்லற ரகசியம்...அன்புடன் பேசாலைதாஸ்❤️💏

🌹🌹🌹🌹🌹🌹

 

சிந்திக்க சில சிறுகதைகள்!

 சிந்திக்க சில சிறுகதைகள்!

1. மன்னன் ஒருவன் வேட்டையாடப் போவதற்கு முன் தனது அமைச்சரை அழைத்து ,''மழை வருமா?'' எனக் கேட்டான். ''வராது''என்றான் அமைச்சன். வழியிலே ஒரு கழுதை மேல் வந்து கொண்டிருந்த குடியானவன் ஒருவன் கொஞ்ச நேரத்தில் மழை வரும் என எச்சரித்தான். 'அதைப் பொருட்படுத்த்தாமல் போன மன்னன் வேட்டை ஆடிக் கொண்டிருந்த போது கடும் மழை வந்து நன்றாய் நனைந்து போனான்.
திரும்பும் வழியில் குடியானவனைச் சந்தித்து, ''மழை வரும் என்று உனக்கு எப்படித் தெரியும்?'' எனக் கேட்டான். அவனோ, 'மன்னா! எனக்குத் தெரியாது. ஆனால் என் கழுதைக்குத் தெரியும். மழை வரும் முன் அது தன் காதுகளை முன்னுக்கு நீட்டிக் கொள்ளும்!' என்றான். உடனே மன்னன் அமைச்சரை பதவியிலிருந்து நீக்கி விட்டு கழுதையை அமைச்சராக்கினான்.
இக்கதையை ஆபிரகாம் லிங்கன் கூறி விட்டு சொன்னார், 'அதில் தான் மன்னன் ஒரு தவறு செய்து விட்டான். என்னவெனில் அது முதற்கொண்டு எல்லாக் கழுதைகளும் ஏதாவது பதவி வேண்டும் என அலைகின்றன.'
2. ஒரு பிச்சைக்காரன், ''சோறு போடவில்லை என்றால் அடுத்த கிராமத்தில் செய்த மாதிரி செய்து விடுவேன்", என்று ஒரு ஊரில் உள்ளவர்களை மிரட்டி பிச்சை வாங்கி வந்தான். அவன் என்ன செய்து விடுவானோ என்று அஞ்சி அனைவரும் அவனுக்கு அன்னமிட்டு வந்தனர். ஒரு தைரியமுள்ள பெண்மணி மட்டும் ஒரு நாள் துணிந்து கேட்டாள். 'அடுத்த கிராமத்தில் அப்படி என்ன தான் செய்தாய்? பிச்சைக்காரன் சொன்னானாம். ''துண்டை உதறித் தோளில்போட்டுக் கொண்டு வேறு ஊர் தேடிப் போய் விடுவேன்.'
3. ரஞ்சித் சிங் என்ற அரசன் பரிவாரங்களுடன் சென்று கொண்டிருந்த போது எங்கிருந்தோ வந்த ஒரு கல் அவன் தலையில் பட்டு காயம் ஏற்பட்டது. வீரர்கள் உடனே நாலாபுறமும் சென்று ஒரு கிழவியைப் பிடித்து வந்தார்கள். கிழவி சொன்னாள், ''அரசே என் மகன் சாப்பிட்டு மூன்று நாள் ஆகிறது. அவனுக்காக பழம் பறிக்க கல்லை விட்டு எறிந்தேன். அது தவறி உங்கள் மேல் பட்டு விட்டது. இதைக் கேட்ட அரசர் மந்திரியிடம் உடனே கிழவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கச் சொன்னார். எல்லோருக்கும் ஆச்சரியம். காரணம் கேட்க அவர் சொன்னார். 'உணர்ச்சியே இல்லாத மரம் தன் மீது கல்லை விட்டு எறிந்ததற்கு புசிக்க பழங்களைத் தருகிறது. ஆறறிவு படைத்த - அதுவும் மன்னனாக இருக்கும் நான் தண்டனையா கொடுப்பது?'
4.ஒரு சமயம் ஸ்பெயினில் இருந்து இளைஞர் ஒருவர் தூதுவராக பக்கத்து நாட்டுக்கு அனுப்பப்பட்டார். அவரைக் கண்ட அந்நாட்டு அரசர், 'ஸ்பெயினில் பெரிய மனிதர்கள் இல்லை போலும்! அதனால்தான் தாடி கூட முளைக்காத ஒரு சிறுவனை அனுப்பியுள்ளார்கள்' என்று சொன்னார் கிண்டலுடன். அதற்கு அந்த இளைஞர், 'அரசே, அறிவு என்பது தாடியில் இருப்பது என்பது எங்கள் மன்னருக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் எனக்குப் பதிலாக ஒரு வெள்ளாட்டையே அனுப்பியிருப்பார்!' என்று பதிலடி கொடுத்தார்.
5. கொடைவள்ளல் ஹாத்தீம் தாயிடம் கேட்கப்பட்டது, 'தங்களைக் காட்டிலும் உயர்ந்த மனிதரை தாங்கள் பார்த்தது உண்டா?''
ஹாத்தீம் தாய் சொன்னார், 'உண்டு. ஒரு நாள் நாற்பது ஒட்டகங்களை அடித்து விருந்து வைத்தேன். அன்று பாலைவனத்தில் ஒருவன் விறகுச் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து
அவனிடம் விருந்துக்கு வராத காரணம் கேட்டேன். அவன் சொன்னான், 'எவன் தன் சொந்தக் கைகளினால் உழைத்து உண்கிறானோ, அவன் பிறர் தரும் விருந்தை எதிர் நோக்கிக் கொண்டிருக்கமாட்டான்! 'அந்த ஏழை தான் என்னைக் காட்டிலும் உயர்ந்தவன்.'
6. ஒரு சாமியாரின் செருப்பு அறுந்து விட்டது. செருப்பு தைப்பவனிடம் சென்று அதை உடனே தைத்து கொடுக்கச் சொன்னார் சாமியார்.
'இப்போது இருட்டி விட்டது. நாளை காலை வந்தால் தைத்துத் தருகிறேன்!' என்றான் அவன்.
'இப்போதே தைத்துக் கொடுக்க வேண்டும். இல்லாவிடில் உன் வாய் அடைத்துப் போகும்படி சாபம் கொடுப்பேன்!' என்று பயமுறுத்தினார் சாமியார். 'உமக்கு அவ்வளவு சக்தி இருந்தால் அறுந்து போன செருப்பை சாபம் போட்டு ஒட்டி வைத்துக் கொள்வது தானே?'' என்று சொல்லி விட்டு அமைதியாக எழுந்து போனான் செருப்பு தைப்பவன்.
7. ஒருவன் மது குடித்துக் கொண்டிருந்தான். அந்த வழியாகப் போன நண்பன் அவனிடம் வந்து, 'என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறாய்? இது மெல்லக் கொல்லும் நஞ்சு,' என்றான். 'பரவாயில்லை! எனக்கொன்றும் அவ்வளவு அவசரமில்லை' என்று பதில் சொன்னான் குடிகாரன்.
8. வியாபாரத்தில் இழப்பு அடைந்த வியாபாரி ஒருவர் தன் மகனை அழைத்து அது பற்றி யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று சொன்னார். மகன் காரணம் கேட்டான். வியாபாரி சொன்னார், 'இரு துன்பங்களை ஒரே நேரத்தில் அனுபவிக்க நான் விரும்பவில்லை. பொருள் இழப்பு ஒன்று; இரண்டாவது, நமது துன்பத்தைக் கேட்டு உறவினர் அடையும் மகிழ்ச்சி!'
9. ஒரு தகப்பனும் மகனும் குற்றவாளியாக மன்னன் முன் நிறுத்தப்பட்டனர். இருவருக்கும் நூறு கசை அடி கொடுக்க மன்னன் உத்தரவிட்டான். முதலில் தகப்பனுக்கு நூறு கசை அடி கொடுக்கப்பட்டது. அவனோ நூறு கசை அடி வாங்கியும் சிறிது கூட கலங்கவில்லை. அடுத்தது மகன் முறை. முதல் அடி மகனுக்கு விழுந்ததுமே தகப்பன் அழத் துவங்கி விட்டார். ஆச்சரியத்துடன் காரணத்தை மன்னன் கேட்டபோது தகப்பன் சொன்னான், ''மன்னா, என் உடம்பில் அடி விழுந்த போது என்னால் அதைத் தாங்க முடிந்தது. ஆனால் இப்போது அடி விழுவது என் நெஞ்சில்!'

வெள்ளம்போல பிரச்னை

வெள்ளம்போல பிரச்னை பேசாலைதாஸ் 

குருவே, எனக்கு ஏன் இந்த நிலைமை? வெள்ளம்போல பிரச்னைகள் என்னை மூழ்கடிக்கின்றன. இனி என்னால் ஒருபோதும் ஊருக்குத் திரும்பவே முடியாது'' என்று குரு முன் நின்று புலம்பினான் அவன்.

குரு அவனைக் கனிவோடு பார்த்தார்.
தன் அறைக்கு அழைத்துச் சென்று ஆசுவாசப்படுத்தினார்.
அலமாரியில் இருந்த அலங்காரமான ஒரு பெட்டியை எடுத்து வெளியே வைத்தார்.
மகனே, இது சாதாரணப் பெட்டியல்ல. சகல பிரச்னைகளையும் தீர்க்கும் மந்திரப்பெட்டி. நீ உன் பிரச்னைகள் ஒவ்வொன்றாகச் சொல். அவற்றை இந்தப் பெட்டியில் போட்டுப் பூட்டிவிடுகிறேன். அதன் பின் நீ நிம்மதியாக வாழலாம்'' என்றார்.
குருவின் மீது நம்பிக்கை வைத்துத் தன் பிரச்னைகளை சொல்லத் தொடங்கினான்.
நான் தொழில் செய்துகொண்டிருந்தேன். அது பெரும் நஷ்டம் அடைந்துவிட்டது. தொழிலுக்காகக் கடன் கொடுத்தவர்கள் எல்லோரும் என்னை நெருக்குகிறார்கள். அவகாசம் கேட்டால்கூடத் தரமறுக்கிறார்கள்.''
குரு, அவன் சொல்லிமுடித்ததும் காற்றில் எதையோ பற்றுவதுபோல் சைகை செய்து அதைப் பெட்டியில் போடுவதைப்போலப் பாவனை செய்தார்.
ம், அடுத்து...'' என்றார்.
என் மனைவிக்கு இவை எல்லாம் பிடிக்கவேயில்லை. வீட்டில் அடிக்கடி சண்டை. நிம்மதியாக ஒருநாள் போகமாட்டேன் என்கிறது'' என்றான்.
மீண்டும் அவர் அதேபோலச் செய்தார்.
ம், அடுத்து...''
என் பிள்ளைகள் என்னை மதிப்பதேயில்லை. இப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டுமா என்றிருக்கிறது.''
குரு மீண்டும் காற்றில் எதையோ பிடித்துப் பெட்டியில் அடைத்தார். பின்பு,
உன் பிரச்னைகள் எல்லாம் இந்தப் பெட்டியில் அடைக்கப்பட்டுவிட்டன. இனி இவை உன்னைத் தொடராது. எனவே நீ, இங்கு ஒருநாள் தங்கியிருந்துவிட்டு மறுநாள் உன் ஊருக்கே போகலாம்'' என்றார்.
அவனும் அப்படியே ஒருநாள் ஆசிரமத்தில் தங்கி, பின் தன் ஊருக்குப் புறப்பட்டான். இந்த ஒரு நாளில் அவன் மனம் கொஞ்சம் தெளிவடைந்திருந்தது. உண்மையிலேயே, குரு தன் பிரச்னைகளை அந்தப் பெட்டியில் அடைத்துவிட்டார் என்று நம்பினான்.
ஊருக்குத் திரும்பினான். ஊரின் எல்லையிலேயே நின்றிருந்த ஓர் உறவுக்காரர், அவனைக் கண்டதும்
ஓடிவந்து கட்டிப்பிடித்துக்கொண்டார்.
நல்லா இருக்கியா, எங்கப்பா போன? உன்னைக் காணாம தவிச்சுப்
போயிட்டோம்'' என்றார்.
அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
அட, இவர் நம்மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பவரா? இத்தனை நாள்களில் ஒருநாள்கூட இதை அவர் வெளிப்படுத்தியதே இல்லையே? அதுசரி, நானும்தான் வெளிப்படுத்தியதில்லை. எல்லாம் அந்த மந்திரப் பெட்டியின் மகிமை' என்று நினைத்துக்கொண்டான்.
கொஞ்சம் தூரம் நடந்ததுமே, அவனுக்குக் கடன்கொடுத்த நபர் ஒருவர் எதிர்ப்பட்டார். வழக்கமாக அவரைக் கண்டதும் பயந்து மறைந்து ஓடும் அவன், இந்தமுறை பயப்படவில்லை. அதுதான் குரு அவன் பிரச்னைகளை அடைத்துவிட்டாரே, நேருக்கு நேராக அவரைச் சந்தித்தான்.
கடன்கொடுத்தவரும், அவன் நேருக்கு நேராக வந்து நிற்பதுகண்டு ஆச்சரியப்பட்டார். நேற்றெல்லாம் அவன் ஊரைவிட்டு ஓடிவிட்டான் என்று கேள்விப்பட்டு, அவன் வீட்டுக்குப் போய் விசாரித்து உறுதி செய்துகொண்டார். 'மொத்த பணமும் போச்சே' என்கிற கவலை. மற்றொருபக்கம், 'ஒரு குடும்பத்தையே தெருவில் நிறுத்திவிட்டானே ' என்கிற வருத்தமும் நிறைந்திருந்தது. அவனை மீண்டும் கண்டது அவருக்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தது.
என்னப்பா நீ? பணம் கொடுக்காமலும்,
பதில் சொல்லாமலும் நழுவி ஓடிக்கொண்டிருந்தாயே என்று நினைத்து கொஞ்சம் கறாராய்ப் பேசினேனே தவிர வேறு ஒன்றும் இல்லை. மனதில் வைத்துக்கொள்ளாதே. உன் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் பணத்தைத் திருப்பிக் கொடு" என்று சொன்னார்.
இதைக் கேட்டதும் அவன் மனம் நெகிழ்ந்தது.
ஐயா,மன்னித்துவிடுங்கள். நான் செய்த சில தவறுகளால் தொழிலில் பணத்தை இழந்துவிட்டேன். கூடிய சீக்கிரம் நல்ல முறையில் தொழில் செய்து, உங்கள் கடனை அடைந்துவிடுகிறேன்" என்றான். அவரும் 'சரி' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
மந்திரப் பெட்டியின் மேல் அவனுக்கு இருந்த நம்பிக்கை இப்போது இரட்டிப்பாகிவிட்டது. ஆனாலும், 'சும்மாவே சண்டையிடும் மனைவி என்ன சொல்வாளோ' என்று பயந்தான். வீட்டை நோக்கிப் போனான்.
அவனைக் கண்டதும் அவன் மனைவி ஓடிவந்து அவனைக் கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்தாள். அவனை உபசரித்து," சாதாரணப் பணப்பிரச்னைக்காக நீங்கள் இப்படி வருந்தலாமா? இனி எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் உணவு உண்ண வாருங்கள்" என்றாள்.
பிள்ளைகளும், அப்பா வந்துவிட்டதை அறிந்தது வீடு திரும்பி அவரைக் கட்டிக்கொண்டன. அவனுக்கு எல்லாம் புதியதாக இருந்தது. அன்றைய இரவில் தீர்க்கமாக ஆலோசித்து மறுநாள், மீண்டும் தொழில் தொடங்கினான்.
எதிர்பார்த்ததைவிடத் தொழில் சிறப்பாக நடந்தது. கடனை அடைத்து முடித்தான். கொஞ்சம் பணமும் சேர்ந்தது.
இவற்றுக்கெல்லாம் காரணமான
குருவைச் சந்தித்து நன்றிகூற விரும்பினான்.
ஒருநாள் காணிக்கைகளை எடுத்து
கொண்டு குருவினைக் காணச் சென்றான். காணிக்கைகளை குருவிடம் சமர்ப்பித்து வணங்கினான்.
குருவே, அன்று நீங்கள் மட்டும் என் பிரச்னைகளை அந்தப் பெட்டியில் அடைக்காவிட்டால், நான் இந்த நேரம் என்ன ஆகியிருப்பேன் என்றே தெரியவில்லை. உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்..." என்று நெகிழ்ச்சியோடு கூறினான்.
குரு சிரித்துக்கொண்டே, "மகனே, அந்தப் பெட்டியில் உண்மையில் நான் எதையும் அடைக்கவில்லை. உன் பிரச்னைகளைக் கேட்டுக்கொண்டேன், அவ்வளவுதான். நீ பெருங்குழப்பத்தில் இருந்தாய். குழப்பத்தில் எடுக்கும் முடிவுகள் எப்போதும் சரியாக இருக்காது. மேலும், நீ பிரச்னைகளில் இருந்து தப்பிப் போக நினைத்தாய்.
அது தவறு. மாறாக, பிரச்னைகளில் இருந்து விலகி நின்று யோசித்தால் மட்டுமே அதைத் தீர்க்கமுடியும்.
உன் பிரச்னைகள் உன்னைவிட்டு நீங்கிவிட்டன என்று நான் சொன்னதை நம்பி, நீ முற்றிலும் அதிலிருந்து விலகி நின்று அவற்றைப் பார்த்தாய்.
அவற்றின் தன்மைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு தீர்க்க முனைந்தாய், அதில் வெற்றியும் பெற்றாய். இதில் என் மாயம் எதுவும் இல்லை" என்றார் குரு.
அவன் கண்ணீரோடு குருவைப் பணிந்துகொண்டான்.
துன்பங்கள் சூழ்ந்து அழுத்தும்போது இது சுமையே அல்ல என்று துணிச்சலுடன் சொல்லுங்கள்.

துன்பம் சிதறி ஓடுவதை உங்கள் அறிவால் உணர்வீர்கள். துன்பத்தில் இருந்து நிரந்தர விடுதலை பெறுவீர்கள். 

கன்னத்தில் என்னடி காயம்

 கன்னத்தில் என்னடி காயம் பேசாலைதாஸ்

அக்பருக்கு பீர்பால் மேல் மரியாதை இருந்தாலும் அவருக்கும் மனிதர்களுக்கே உரிய பொறாமை இருநதது. (அரசர் என்றாலும் மனிதர்தானே)

எப்படி அனைவரையும்விட புத்திசாலியாக இருக்கிறார். இவரை எப்படி மட்டம் தட்டுவது என்று யோசித்தார்.

நாம்தான் அரசர் ஆயிற்றே அந்த அதிகாரத்தில் அனைவர் முன்னிலையிலும் அடிப்போம் என்னசெய்துவிடுவார் என்று நினைக்கிறார்.

அதன்படி அரசவை கூடியதும் பீர்பாலை அழைக்கிறார். ஒன்றும் பேசாமல் அனைவர் முன்னிலுயிலும் கன்னத்தில் ஓங்கி அறைகிறார்.

அனைவருக்கும் படு அதிர்ச்சி. பீர்பால் அப்படி என்ன தவறு செய்துவிட்டார் என்று.

பீர்பால் ஒரு கணம் மட்டுமே யோசித்தார் மறுவினாடி பக்கத்தில் இருந்த அமைச்சர் ஒருவரை ஓங்கி கன்னத்தில் அறைந்தார்.

அவருக்கு பொறிகலங்கியது.

பீர்பால் சொன்னார். ம் நீங்கள் உடனே மற்றவர் கன்னத்தில் அறையுங்கள் பின் அவர் மற்றவர் கன்னத்தில் அறையவேண்டும் இது அரசர் ஆரம்பித்து வைத்த விளையாட்டு .

உடனே அந்த அமைச்சர் மற்ற அமைச்சரை அறைய இப்படியே நாடு முழுவதும் ஒருவர்மாற்றி ஒருவர் அடித்துகொள்கின்றனர்.

கடைசியாக அரண்மனை அந்தப்புரத்தில் விளையாட்டு நுழைகிறது ராணியின் தோழிகள் ஒருவர் மாற்றி ஒருவர் அறைந்துகடைசியாக ராணி அடிவாங்குகிறார்.

ராணி அதிர்ச்சியடைந்து விபரம் கேட்க தோழிகள் இது அரசர் ஆரம்பித்த விளையாட்டாம் இதை நீங்கள் அவரிடமே முடித்துவிடுங்கள் என்கிறார்கள்.

இரவு மன்னர் ஆசையாய் ராணியை(!!) பார்க்கவர ராணி அக்பர் கன்னத்தில் ஓங்கி அறைகிறார்.

மன்னர் பொறிகலங்கி நிற்க ராணி சொன்னாராம்.

இது பீர்பாலிடம் நீங்கள் காலையில் ஆரம்பித்தவிளையாட்டம் நான் அதை உங்களிடமே முடித்துவிட்டேன். என்று.

வியாழன், 4 டிசம்பர், 2025

மணவாட்டி பேசாலைதாஸ்

மணவாட்டி  பேசாலைதாஸ் 


ஓர் ஊருக்கு அழகான பெண்ணொருத்தி, எங்கிருந்தோ சட்டென வந்து தோன்றினாள். அவள் எங்கிருந்து வந்தாள்,

அவள் யார் என்ற விபரங்கள் யாருக்குமே தெரியவில்லை. ஆனால், அவள் பேரழகி.

ஊரே ஒன்று கூடி அவளைப் பார்த்துத் திகைத்தது - ஊரில் இருந்த அத்தனை இளைஞர்களும் - சுமார் 300 பேர் -அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள்.

அவள் அவர்களை அழைத்தாள் .'நானோ ஒருத்தி.

நீங்களோ 300 பேர். நான் ஒருவரைத்தானே மணக்க முடியும்?

அதனால் ஒன்று செய்யுங்கள் நான் நாளைக்கு வருகிறேன்.

உங்களுக்கு 24 மணி நேர கால அவகாசம் தருகிறேன். உங்களில் யார் புத்தரின் தாமரைச் சூத்திரத்தை மனப்பாடமாக ஒப்புவிக்கிறார்களோ, அவரை நான் மணந்து கொள்கிறேன் என்றாள்.

இளைஞர்கள் அனைவரும் தம் வீடுகளுக்கு ஓடினார்கள். உண்ணவில்லை; உறங்கவில்லை. இரவும் பகலுமாய் அதை மனப்பாடம் செய்வதில் முனைந்தார்கள்.

அடுத்த நாள் காலையில் அவள் வந்தாள். பத்து இளைஞர்கள் அதை ஒப்புவித்து விட்டார்கள்!

"சரி. நானோ ஒருத்தி. எப்படி 10 பேரை மணப்பது? இன்னொரு 24 மணி நேரம் தருகிறேன். யார் அதன் பொருளைச் சரியாக விளக்குகிறார்களோ, அவரை நான் மணக்கிறேன். நான் சொல்வதை புரிந்துகொள்ளுங்கள்- ஒப்புவித்தல் எளிய காரியம். புரிந்து கொள்ளாமலே கூட ஒப்புவித்து விட முடியுமே," என்றாள்.

நேரமே இல்லை. ஒரு பகலும், ஓர் இரவுமே இருக்கிறது. தாமரை சூத்திரமோ நீளமானது. போதை வந்துவிட்டால் வேறு வழி ஏது? எதையும் செய்யத் துணிந்து விடுவார்கள். திரும்பி ஓடினார்கள். கடுமையாக அதை புரிந்துகொள்ள முயன்றார்கள் .மறுநாள் மூன்று பேர் மட்டுமே வந்து நின்றார்கள்.

அவர்களுக்கு பொருள் விளங்கிவிட்டது.

அழகி சொன்னாள், " மறுபடியும் சிக்கல் ஏற்பட்டு விட்டதே!

எண்ணிக்கை என்னவோ குறையத்தான் செய்கிறது. ஆனால், சிக்கல் அப்படியே தான் இருக்கிறது.

300லிருந்து 3 என்பது பெரிய வளர்ச்சிதான். ஆனால், மூவரை நான் எவ்வாறு மணப்பது? ஒருவரைத் தானே மணக்க முடியும். ஆகவே, இன்னொரு 24 மணி நேரம் தருகிறேன்....

சூத்திரத்தைப் புரிந்து கொண்டதோடு நில்லாமல், அதன் சுவையை யார் உணர்ந்திருக்கிறார்களோ அவரை நான் மணக்கிறேன். நீங்கள் நன்றாகவே விளக்கினீர்கள். விளக்கம் அறிவுபூர்வமானது. நேற்றைவிடச் சிறப்புதான்.

ஆனால், விளக்கம் அறிவுபூர்வமானதாயிற்றே!தியானச் சுவை, சுவையின் மணம் இருக்க வேண்டாமா ?

அந்த தாமரை உங்களுக்குள் பிரவேசித்திருக்க வேண்டும். நீங்கள் தாமரையாக மாறியிருக்க வேண்டும். அதன் நறுமணத்தை நான் அனுபவிக்க வேண்டும். ஆகவே, நாளைக்கு பார்க்கலாம்: என்றாள்.

மறுநாள் ஒருவன் மட்டுமே வந்தான் ! அவன் சாதித்து விட்டான். அவள் ,அவனை ஊருக்கு வெளியில் இருந்த தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் .

அந்த வீட்டை அவன் அதற்கு முன் பார்த்ததில்லை . மிக அழகான வீடு அது . கனவு மாளிகை . அவளுடைய பெற்றோர் அவனை , வாசலில் வரவேற்றார்கள் . நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் . என்றும் சொன்னார்கள் .

அந்தப் பெண் உள்ளே போய்விட்டாள் . இளைஞன் அவளுடைய பெற்றோரிடம் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தான் . பிறகு அவர்கள் , "அவள் உனக்காக உள்ளே காத்துக் கொண்டிருப்பாள் . இது தான் அவள் அறை," என்று ஒன்றைச் சுட்டிக் காட்டினார்கள் . அவன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனான் . அங்கே யாருமே இல்லை !

அவன் அங்குமிங்கும் பார்த்தான் . ஆனால் , ஒரு கதவு, தோட்டத்திற்குச் செல்வது திறந்து கிடந்தது . ஒருவேளை அவள் தோட்டத்திற்குச் சென்றிருக்கலாம் என்று அதன் வழியாகப் பின்பக்கம் சென்றான் . அங்கே , பாதையில் அவளது காலடிச் சுவடுகள் தென்பட்டன . அவற்றைப் பின்பற்றி நெடுந்தூரம் போனான் . ஒரு மைல் நடந்த பிறகும் அவளைக் காணவில்லை .

தோட்டத்தின் எல்லையில் ஓர் ஆறு காணப்பட்டது . அவளது காலடிச் சுவடிகளும் மறைந்து விட்டன . இரண்டு தங்க மிதியடிகள் மட்டுமே காணப் பட்டன . அவை அவளுடைய காலணிகள் .

அவன் திகப்படைந்தான் . என்ன நேர்ந்தது ? அவன் திரும்பிப் பார்த்தான் .- தோட்டமும் இல்லை ; வீடும் இல்லை ; பெற்றார்களும் இல்லை . ஒன்றுமே இல்லை !

மறுபடியும் ஆற்றுப் பக்கம் திரும்பினான் . ஆற்றையும் காணோம் ! அந்த மிதியடிகளும் காணோம் ! அவன் வெட்ட வெளி வெறுமையில் நின்று கொண்டிருந்தான் !

அப்போது ஒரு சிரிப்புக் குரல் கேட்டது . அதைக் கேட்டதும் அவனும் சிரித்தான் . அவனுக்குத் திருமணம் நடந்து விட்டது !

அழகான பௌத்தக் கதை இது . நடந்ததுஇதுதான்,அவன் வெறுமையை மணந்து கொண்டு விட்டான்! அதாவது , சூனியத்தை! இந்தத் திருமணத்தைத்தான் எல்லா ஞானிகளும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் .

இயேசு கிறிஸ்துவின் 'மணவாட்டி' ஆகும் கணம் இதுதான் . அல்லது கண்ணனின் ஒரு 'கோபி ' ஆதல் . எல்லாம் மறைந்து போகும் . பாதை , தோட்டம் , வீடு , பெண் , காலடிச் சுவடுகள் கூட . எல்லாம் எல்லாம் காணாமற் போய்விடும் . மிஞ்சுவது சிரிப்பு மட்டுமே ! பிரபஞ்சத்தின் அடி வயிற்றிலிருந்து பிறக்கும் சிரிப்பு அது ! உலக்த்தை நினைத்தேன் சிரித்தேன் என்ற செந்திலின் கொமடி போல் அல்லவா இருக்கின்றது.. அன்புடன் பேசாலைதாஸ்

தானமும்  தர்மமும்  பேசாலைதாஸ்


தானம்_என்பது_வேறு   தர்மம்_ என்பது_ வேறு
தானம், தர்மம் என்கிறார்களே?  

அப்படியென்றால் என்ன?

மகாபாரத த்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க  

பேறு பெற்றது.

சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. 

எவரிடம் கேட்பது.? எவர் தெளிவாகக் கூறுவார்கள் ? 

குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது.

இதை உணர்ந்த ஈசன்,  அவர் முன் எழுந்தருளினார்.

சூரியனே,என்ன தடுமாற்றம் உன் மனதில் ? கேட்டவர் ஈசன்.

பரம்பொருளே..பலவிதமான தான தருமங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை போரில் கொன்றது விதி என்று ஏற்றுக் கொண்டேன்.ஆனால்,எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே.

பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது?  இது அநீதி அல்லவா? என கேட்டார் சூரியத் தேவன்.

இறை சிரித்தது.சூரியனே...

நிறைய மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது சொல்கிறேன் கேள்... என்றது.

தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ அல்லது அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம்.

புண்ணியக் கணக்கில் சேராது.

ஏனெனில்.. இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட....ஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.

கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை.

எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான்.

அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. இப்போது புரிந்ததா? என கேட்க,  

ஈசனை வணங்கி நின்ற சூரியத் தேவன்.

தானமும்  

தர்மமும்  

பாவமும்  

புண்ணியமும்  

எல்லாமும் நீயே  

என்பதும் புரிந்தது என்கிறார்.

நாமும் புரிந்துகொள்வோம்.

#கேட்டு_கொடுப்பது #தானம் !  

#கேட்காமல்_அளிப்பது #தர்மம் !#தானம்_என்பது_வேறு

#தர்மம்_என்பது_வேறு

தானம், தர்மம் என்கிறார்களே?  

அப்படியென்றால் என்ன?

மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க  

பேறு பெற்றது.

சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. 

எவரிடம் கேட்பது.? 

எவர் தெளிவாகக் கூறுவார்கள் ? 

குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது.

இதை உணர்ந்த ஈசன்,  

அவர் முன் எழுந்தருளினார்.

சூரியனே,

என்ன தடுமாற்றம் உன் மனதில் ? கேட்டவர் ஈசன்.

பரம்பொருளே..

பலவிதமான தான தருமங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை போரில் கொன்றது விதி என்று ஏற்றுக் கொண்டேன்.

ஆனால்,

எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே.

பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது?  

இது அநீதி அல்லவா? என கேட்டார் சூரியத் தேவன்.

இறை சிரித்தது.

சூரியனே...

நிறைய மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது சொல்கிறேன் கேள்... என்றது.

தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ அல்லது அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம்.

புண்ணியக் கணக்கில் சேராது.

ஏனெனில்.. இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட....

ஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.

கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை.

எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான்.

அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. இப்போது புரிந்ததா? என கேட்க,  ஈசனை வணங்கி நின்ற சூரியத்தேவன்.  தானமும்  தர்மமும்  பாவமும்  புண்ணியமும்  எல்லாமும் நீயே  என்பதும் புரிந்தது என்கிறார்.நாமும் புரிந்துகொள்வோம்.

#கேட்டு_கொடுப்பது #தானம் !  #கேட்காமல்_அளிப்பது #தர்மம் ! 

அன்புடன் பேசாலைதாஸ்

வியாழன், 7 ஆகஸ்ட், 2025

"எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்."

 எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்." பேசாலைதாஸ்



ஒருமுறை பூமிக்கு கடவுள் வந்தார்...!"என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்..அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைக ளைக் கேட்க காத்திருந்தனர்...முதல் மனிதன் : “எனக்கு கணக்கில டங்கா காசும், பெரிய பிஸினஸும் வேண்டும்..!” இரண்டாம் மனிதன்:  “நான்  உலகில் சிறந்தோங்கி  பெரிய பதவியை அடைய வேண்டும்..!” மூன்றாம் மனிதன் : “உலப்புகழ் பெற்ற நடிகர் போல்  மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!” நான்காம் மனுஷி:  “உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..! உலகமே அதில் மயங்க வேண்டும்..!” இப்படி.. இன்னும் ஐந்து பேரும் தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..! கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன் றையும் டக் டக்கென்று கொடுத்து விட்டார்..! 

                                   பத்தாவது மனிதன் கேட்டான்: “உலகத்தில் ஒரு மனிதன் உச்சகட்டமாய் எந்த அளவு மன நிம்மதியோடும மன நிறைவோடும் வாழ முடியுமோ, அந்த நிலை எனக்கு வேண் டும்..!” ஒன்பது பேரும்  அவனை திரும்பிப் பார்த்தனர்.. சிரித்தனர் .“ மனநிம்மதி, மன நிறைவு…நாங்களும் அதுக்குதானே இதையெ ல்லாம் கேட்டோம்..?விரும்பியது கிடைத்தால்  மனநிறைவு கிடை த்து விடுமே..?”கடவுள் அந்த ஒன்பது பேரிடமும் : “நீங்கள் கேட்ட தைக் கொடுத்து விட்டேன்..! நீங்கள் போகலாம்..!” என்று கூறி விட்டு, பத்தாவது மனிதனைப் பார்த்து :  "நீ இரு..! நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்..  சிறிது  நேரம் கழித்து வருகிறேன்...”  என்று சொல்லிவிட்டு எங்கோ போனார்..!

                        இப்போது, அந்த ஒன்பது பேரும் போகாமல் அங்கேயே தயங்கி நின்றனர்..! கடவுள் அந்த பத்தாவது மனிதனிடம் என்ன சொல்லப் போகிறார்; என்ன தரப் போகிறார் என்பது தெரிந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் மனம்அலை பாய்ந் தது..!  துடி த்தது..!அவர்கள் விரும்பியது எதுவோ அது கையில் கிடைத்த பின்னும், இன்னும் எதுவுமே கிடைக்காத  அந்த பத்தாவது மனிதன் மேல் பொறாமை கொண்டு மனம் வெதும்பினர்..! 

                    நேரம் ஆக ஆக, வெறுப்பில் வெந்தனர்..! தாம் விரும்பி யது கையில் இருப்பதை மறந்தனர்..! அதை அனுபவிக்க மறந்த னர்..! அப்போதே,  அந்த இடத்திலேயே, அவர்கள் நிம்மதி குலை ந்தது..! மனநிறைவு இல்லாமல் போனது..!பத்தாவது மனிதன் ,  கடவுள் சொல்லுக்காக எந்த பதட்டமும் இல்லாமல் காத்து நின் றான்..! கடவுள் தன்னிடம் பேசப் போகிறார் என்பதி லேயே அவ னுக்கு அவன் கேட்ட முழு மனநிறைவு கிடைத்து விட்டது..!

               நாம் பத்தாவது மனிதனா..?இல்லை 'பத்தாது' என்கிற மனிதனா..? முடிவு எடுங்கள்.. "எண்ணும் எண்ணங்களே உங்க ளைத் தீர்மானிக்கும்."இனிமையான எண்ணங்களுடன் மன நிறைவோடு வாழ்வோம்..மீண்டும் சந்திக்கும் வரை அன்பு பேசாலைதாஸ்

Knowledge is very important than money

Knowledge is  very important than money , Pesalaithas 


சீனா வில் நடந்த ஒரு வங்கி கொள்ளையின் போது ..... கொள்ளையா்கள் துப்பாக்கியடன் அனைவரையும் மிரட்டினா் . ""இந்த பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமானது"" அனைவரும் அசையாமல் படுத்துவிட்டார்கள் ....மனதை மாற்றும் முறை என்பது இதுதான் . *". This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking."*அங்கே ஒரு பெண் கொள்ளையர்களின் கவனத்தை திருப்ப அநாகரிகமாக நடந்தாள் . அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன் , இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி அமர வைத்தான்....இதை தான் செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம் *"Being Professional & Focus only on what you are trained""*   கொள்ளையடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான் "" வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்"" என்று . மற்றொருவன் சொன்னான் , பொறு , அவசரம் வேண்டாம் . பணம் நிறைய இருக்கிறது நேரம் செலவாகும் அரசே நாம் எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்று நாளை செய்திகளில் சொல்லி விடும். இதை தான் படிப்பை விட அனுபவம் சிறந்தது என்போம் *This is called "Experience.” Nowadays, experience is more important than paper qualifications! ""*

.

வங்கியின் மேலாளா் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது அவனுடைய மேல் அதிகாரி தடுத்து அவனிடம் கூறினார் "" வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி பதுக்கி வைத்து மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்" என்றார் .""காற்றுள்ள போதே தூற்றிக் கொள் ""என்பது இது தான் . *This is called Swim along with the tide.... Converting an unfavourable situation to yours.*இதை கேட்ட மற்றொரு அதிகாரி "" வருடம் ஒரு கொள்ளை இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும் "" என்றார் .""கலியுகம் "" என்பது இது தான் . *This is called Killing boredom World. Personal happiness is much more important than your job.*

.                                 மறுநாள் செய்திகளில் வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கபட்டது . கொள்ளையா்கள் அதிர்ந்து போய் பணத்தை எண்ண தொடங்கினர் . எவ்வளவு எண்ணியும் அவா்களால் இருபது கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை . கொள்ளையா்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து "" நாம் உயிரை பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம். ஆனால் இந்ந வங்கி அதிகாரி சிரமம் இல்லாமல் எண்பது கோடி கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழுது .இதற்கு தான் படித்திருக்க வேண்டும் .""என்றான். நான் சொல்வதில் உண்மையுண்டா நண்பர்களே  அன்புடன் பேசாலைதாஸ்*True.*  *Knowledge is nowadays very important than money in this world.*. 

துன்பம் இல்லாத இன்பம்!

 துன்பம் இல்லாத இன்பம்! பேசாலைதாஸ்


முன்னொரு காலத்தில் ஒட்டகம் மேய்க்கும் ஒருவன் இருந்தான். அவன் தன் ஒட்டகத்தை மேய்த்து விட்டு ஒட்டக கூடாரத்தில் கொண்டு போய் கட்டி விடுவது உண்டு. அவன் வாழ்க்கையில் தனக்கு இருக்கும் பிரச்சனை பற்றிய கவலையில் ஆழ்ந்திருந்தான். நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? வாழ்க்கையில் துன்பம் இல்லாமல் இன்பம் மட்டுமே இருந்தால் எப்படி இருக்கும்? என்றெல்லாம் யோசித்தவாரே சாலையோரத்தில் நடந்து கொண்டு இருந்தான்.

அப்பொழுது அங்கு ஒரு முனிவரைக் கண்டான். அவரிடம் சென்று, முனிவரே! மற்றவர்களுக்கு வாழ்க்கையில் தான் பிரச்சனை இருக்கிறது. ஆனால் எனக்கு மட்டும் வாழ்க்கையே பிரச்சனையாக இருக்கிறது. நான் என்ன செய்யலாம்? என்று கேட்டானாம். அதற்கு அந்த முனிவர், அவனைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டு, இன்று இரவு கூடாரத்திற்கு படுக்க செல்லும் முன் அங்கு கட்டப்பட்டுள்ள ஒட்டகங்கள் அத்தனையும் என்ன செய்து கொண்டிருக்கிறது? என்று உற்று நோக்கு. ஒட்டகங்கள் அனைத்தும் ஒன்று விடாமல் படுத்த பின்னரே நீ உறங்க வேண்டும். அதுவரை விழித்துக் கொண்டு இரு என்று கூறி வழியனுப்பி வைத்தார்.

இரவு கூடாரத்திற்கு சென்ற மேய்ப்பன், ஒட்டகங்களை உற்று நோக்கி கொண்டிருந்தான். அங்கிருந்த சில ஒட்டகங்கள் தானாகவே படுத்து விட்டன. சில ஒட்டகங்களை அவன் கட்டாயப்படுத்தி படுக்க வைத்தான். ஆனால் அவனால் எல்லா ஒட்டகங்களையும் அப்படி ஒருசேர படுக்க செய்ய முடியவில்லை. ஒரு ஒட்டகத்தை படுக்க வைப்பதற்குள், இன்னொரு ஒட்டகம் எழுந்து நின்று கொண்டிருந்தது. கடைசி வரை அவனால் ஒருசேர ஒட்டகத்தையும் படுக்க வைக்க முடியவில்லை, அதனால் அவன் தூங்கவும் இல்லை.

மறுநாள் காலையில் முனிவரை சந்தித்த மேய்ப்பன், நடந்த விவரத்தைக் கூறினான். முனிவர் சிரித்துக் கொண்டே அதற்கு இவ்வாறு பதில் அளித்தார்! உன்னுடைய பிரச்சனையும் ஒட்டகத்தை படுக்க வைப்பதற்கு சமமானது தான். வாழ்க்கையில் சில பிரச்சினைகள் தானாகவே முடிந்துவிடும். சிலவற்றை நாமே போராடி முடித்து வைக்க வேண்டும். அப்படி நாம் செய்தாலும், வேறு ஒரு பிரச்சனை புதிதாக எழுந்து நிற்க தான் செய்யும். இவற்றையெல்லாம் சிந்தித்து கொண்டு இருந்தால் கடைசி வரை தூக்கம் என்பது இல்லாமல் போய்விடும்.

பிரச்சனைகளை பற்றிய சிந்தனைகளை முதலில் தூக்கி எறி. வருவது வரட்டும் என்று தைரியமாக உன் வேலையை மட்டும் தொடர்ந்து பார்த்துக் கொண்டிரு. பிரச்சனைகளைப் பற்றிய சிந்தனை இல்லாமல் இருந்தாலே! துன்பமில்லாத இன்பமான வாழ்க்கை நிச்சயமாக வாழ முடியும். யாருக்கு தான் பிரச்சினை இல்லை? பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி நடை போடுவதற்கு பெயர் தான் வாழ்க்கை, அதைப் பற்றி சதா சிந்தித்துக் கொண்டிருப்பது அல்ல! என்று கூறி புரிய வைத்தாராம். இப்போது உங்களுக்கும் புரிந்திருக்கும் என்று நம்புகிறோம்  

அன்புடன் பேசாலைதாஸ்

வெருளி

 வெருளி   பேசாலைதாஸ்


ஒரு நாள் நான் ஒரு சோளக் கொல்லை பொம்மையைப் பார்த்து, ' உன்னைச் செய்த விவசாயிக்கு நீ தேவை.உன்னைக் கண்டு, அதிக விலங்குகள் உண்மை என்று நம்பி விடுவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் மழையிலும், வெயிலிலும், கொளுத்தும் கோடையிலும், நடுக்கும் குளிரிலும், நீ ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறாய்? ' என்று கேட்டேன்."

அதற்கு அந்தப் போலி மனித பொம்மை கூறியது : "உனக்கு என் மகிழ்ச்சி தெரியாது. மழை, வெயில், வெப்பம், குளிர் இவற்றில் கஷ்டப்பட்டாலும், அந்த விலங்குகளைப் பயமுறுத்துவதில் இன்பம் இருக்கிறது. என்னைக் கண்டு ஆயிரக்கணக்கான விலங்குகள் அஞ்சுகின்றன.ஆனால் அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.எனது இன்பம் பிறரை பயமுறுத்துவதில் இருக்கிறது."

நான் உங்களைக் கேட்க விரும்புகிறேன்.

நீங்கள் இந்தப் போலி மனிதனைப் போல இருக்க விரும்புகிறீர்களா?

உள்ளே ஒன்றுமில்லாமல், ஒருவரை பயமுறுத்திக் கொண்டு, மற்றொருவரை மகிழ்வித்துக் கொண்டு, மற்றும் ஒருவரை அவமதித்துக் கொண்டு, மற்றொருவருக்கு மரியாதை கொடுத்துக் கொண்டு இருக்க விரும்புகிறீர்களா?

உங்ளது வாழ்க்கை பிறருக்காகத்தானா?

எப்போதாவது நீங்கள் உள்ளே பார்ப்பீர்களா?

வீட்டிற்குள் யாராவது இருக்கிறார்களா,இல்லையா?

வியாழன், 31 ஜூலை, 2025

காது கேட்காது! **

காது கேட்காது! பேசாலைதாஸ்

                                                 


 மனைவிக்கு திடீர் சந்தேகம் வந்தது*_
தன்னுடைய கணவனுக்கு காது கேட்கவில்லையோ என்று? ஆனால்...இதை கணவனி டம் நேரடியாக கேட்க அவருக்கு தயக்கம் இந்த விஷயத்தை அவரின் உறவு க்கார டாக்டருக்கு தெளிவாக விளக்கி ஒரு கடிதம் எழுதினார்....டாக்டரிடம் இருந்து வந்த பதிலில்..."இருபது அடி தூரத்தில் இருந்து கணவரிடம் ஏதா வது பேசிப் பாருங்கள்,...கணவரின் காதில் விழவில்லை எனில்....சற்று நெருங்கி பதினைந்து அடி தூரத்தில் இருந்துப் பேசுங்கள்பின் பத்து, ஐந்து இப்படி குறைத்துக் கொண்டே நெருங்கிச் சென்று பேசுங்கள் எத்தனை அடி தூரத்தில் இருந்து பேசினால் கணவருக்கு காது கேட்கவில்லை எனத் தெரி ந் தால் அதற்கேற்றபடி சிகிச்சை அளிக்கலாம்" என்றிருந்தது. அதைக் கேட்டவுடன் மனைவிக்கு ஒரே _*குஷி.*_

                                          அடுத்தநாள் வீட்டு வாசலில் இருந்தபடியே உள்ளிருந்த கணவரிடம்...இன்று மகனுக்கு பள்ளி கட்டணம் கட்டியாச்சானு? கேட் டாள். பதில் எதுவும் இல்லை...பின் வீட்டு வரவேற்பறையில் இருந்து அதே கேள்வியைக் கேட்டாள். அதற்கும் பதில் இல்லை, ஹாலில் இருந்து கேட் டாள், சமையலறை வாசலில் இருந்தும் மீண்டும் மீண்டும் அதே கேள்வி யைக் கேட்டாள். .கணவரிடமிருந்து பதிலே இல்லை. போச்சு _*இரண்டு ஸ்பீக்கரும் அவுட்*_ ஆகிவிட்டதுபோல என்று மனதில் கன்ஃபர்ம் செய்து விட்டார்.

                                    கடைசி வாய்ப்பாக கணவனின் காது அருகே சென்றுச் சத்தமாக...._*"இன்னைக்கு பையனுக்கு Fees கட்டியாச்சானு?"*_ கேட்டாள். காதில் ஏதோ குண்டு வெடித்தது போல் இருக்கவே... அவளின் கணவன் அவளை கோபமாக திரும்பிப் பார்த்து, ஏன்டீ இப்படி கத்துற, நீ வாசல் கேட்டிலிருந்து , வரவேற்பறையில் இருந்து,ஹாலில் இருந்து, சமைலறை வாசலில் இருந்து கேட்க, கேட்க நானும் கட்டியாச்சு கட்டி யாச்சுனு சொல்லிக்கிட்டே இருக்கேன்,அது உன் காதில் விழவில்லையா?காதுல என்ன பஞ்சு மூட்டையா வைச்சிருக்க...?* என பொரிந்துத் தள்ளிவிட்டான்...

                                        மனைவி அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றாள்.தவறு தன்னிடம் தானா? கதையின் நீதி*:-_இப்படித்தான் பலர் பிரச்சனையை நம்மிடம் வைத்துக் கொண்டு...அது பிறரிடம் இருப்பதாக நினைத்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.என்ன விசித்திரம்!!! அன்புடன் பேசாலைதாஸ்

இல்லற இரகசியம். அன்புடன் பேசாலைதாஸ் ஒரு சாது மரத்தடியில் அமர்ந்திருந்தார். ஒரு பறவை அவரிடம் சென்று, ‘ஐயா! உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறே...