பின் தொடர்பவர்கள்

0440 ஊசி முனைக் காது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0440 ஊசி முனைக் காது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 மார்ச், 2017

0440 ஊசி முனைக் காதுக்குள் ஒட்டகம்!

ஊசி முனைக் காதுக்குள் ஒட்டகம்!
அன்பர்களே கிறிஸ்த‌வர்களு க்கு இது தவக்காலம்! தவக்கா லம் என்றவுடன் கோவில் படி யேரும் சில கோவில் பூனைக ளிடம் சில மாறுதல்கள் இரு க்கும், அது மனமாற்றத்தின் அறிகுறிகள் அல்ல மாறாக வெளிவேடமாக இருக்கும், சிலர் ஹலோ எப்படி சுகமா என்று தொடங்கி,  உங்கள் வீட்டில் சமையல் எப்படி என்று ஆரம்பிப்பார்கள் பின்னர் நாங்கள் தபசு காலம் முழுவ தும் மரக்கறி, இவரும் கண்டிப்பாக மரக்கறி தான் வேணும் என்று சொல்லிப்போட்டார். கூடவே கணவனின் மகிமையையும் தொட்டுக்கொள்வர்கள். உண்மையில் வெளிநாடுகளில் மரக்கறி சமையல் என்றால் அதிக விலை என்பது இவர்களுக்கு தெரி ந்தும் அதைச்சொல்வார்கள். பக்தி என்பது சதா கோவிலுக்குப் போவதும், தினமும் நீண்ட மன்றாட்டுக்களிலும் இருப்பதில்லை. அது உண்மையான மனதில், ஆழமான விசுவாசத்தில் தங்கியு ள்ளது. ஒரு ஊரிலே சூரன் என்ற செருப்பு தைக்கும் தொழிலாளி தினமும் மாதா படத்தை வணங்கிவிட்டு தொழிலை ஆரம்பி ப்பான். அவன் வருமானம் குறைவானதாக இருந்தாலும் அவன் சந்தோசத்திற்கு குறைவில்லை. அதே ஊரில் குலாஸ் என்ற இறால் வியாபாரியும் தினமும் தனது பிக்கப்பில் மாதா கோவிலு க்கு போய் மலர் வைத்து வணங்கிவிட்டுத்தான் தொழிலை ஆரம்பிப்பார். நல்ல இறால் பாடு, கொழுத்த வருமானம் ஆனா லும் அமைதி, சந்தோசம் இல்லை. இதை அவதானித்த காவல் சம்மனசு குழும்பிப்போய், நேராக இயேசுவிடம் சென்று அத ற்கான காரனத்தை கேட்டார். இயேசுவும் அப்படியா என்று கேட்டுவிட்டு, நீர் இப்போது பூ விக்கிற மனிசியாக மாறி, அந்த ஊருக்கு போ! முதலில் அந்த இறால் வியாபரியிடம் போ, அவ னிடம் நான் இயேசுவை கனவில் கண்டேன் என்று சொல், அவ னும் இயேசு என்ன செய்து கொண்டிருந்தார் என்று கேட்பான். இயேசு, ஊசி முனைக்காதுக்குள் ஒட்டகத்தை ஓட்டிக்கொண்டி ருக்கின்றார் என்று பதில் சொல், அப்படியே சூரனையும் கண்டு வா! என்று சொல்லி அனுப்பிவைத்தார். காவல் சம்மனசும், ஒரு பூக்காரியாக மாறி, குலாஸ் வீட்டுக்கு சென்றார்.  அவரிடம் பூ விகிற்கிர சாட்டில், இயேசுவை கனவில் கண்டேன் என்று சொல்ல, அந்த குலாஸ் வியாபாரியோ, அப்படியா கனவில் இயேசு என்ன செய்தார் என்று ஆவலாக கேட்க, அதற்கு பூக்காரி, ஓ! அவரா கனவில் ஒரு ஒட்டகத்தை பிடித்து அதை, ஊசியின் ஓட்டைக்குள் திணித்துக்கொண்டிருந்தார் என்று பதில் சொல்ல, அது எப்படி சாத்தியமாகும் என்று சிரித்தார். பின்னர் சூரனின் செருப்பு கடைக்கு சென்று, இயேசுவை கனவில் கண்டதாக சொன்னாள் அந்த பூக்காரி, ஆவலோடு இயேசப்பா என்ன செய்துகொண்டிருந்தார் என்று ஏழை சூரன் கேட்க, பூக்காரியோ அவ்ர் ஒட்டகத்தை ஊசியின் ஓட்டைக்குள் ஒட்டிக்கொண்டி ருந்தார் என்று பதில் சொல்ல சூரனோ. ஆ அப்படியா எல்லாம் வல்ல இயேசுவுக்கு இது இலேசான காரியமாச்சே! என்று சந்தோ சப்பட்டான். அப்துதான் காவல் சம்மனசுக்கு விசயம் புரிந்தது. உண்மையான மகிழ்ச்சி, சந்தோசத்தின் காரணம் அளவில்லா விசுவாசம், அதனால் வரும் உண்மையான இறை அன்பு என்று. உடனே விண்ணகம் நோக்கி பற‌ந்து சென்றது. யாவும் கற்பனையே அன்புடன் பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...