பின் தொடர்பவர்கள்

0173 கெடுவார் கேடு நினைப்பார்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0173 கெடுவார் கேடு நினைப்பார்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஜூன், 2015

0173 கெடுவார் கேடு நினைப்பார்!

கெடுவார், கேடு நினைப்பார்!

அன்பர்களே! பிறப்பினால் வந்த சுபாவம் அதை மாற்றுவது என்பது எளிதான காரியமல்ல, இருந்த போதும் ந‌மது சுபாவம் தீங்கானது என்று நாம் உண ர்ந்து கொண்டால் எப்படியா வது அதனை நாம் மாற்றியே தீரவேண் டும். இல்லை என்றால் அதனால் வரும் அழிவில் இருந்து நாம் தப்பிவிட முடியாது இதனை விளக்க இதோ ஒரு கதை ஓர் காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசி த்து வந்தது. அந்தக் காட்டின் நடு வில் ஒரு நீரோடை இருந்தது. அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு போக வேண்டி இருந்தது. அக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோ டையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, தவளை போன்ற வைகளிடம் தேள் உதவி கேட்டது, ஆனால் அந்த பொல்லாத தேள் தமக்குக் கொட்டிவிடும் என்று அவை மறுத்து விட்டன. எப்படி நீரோடையை க் கடப்பது என்று தேள்யோசித்துக்கொண்டு இருந்த போது அந்த நீரோடையில் ஆமை ஒன்று வந்து கொண்டிருந்தது. ஆமையைக் கண்ட தேள். ஆமை யாரே! நான் அக் கரைக்குச் செல்லவேண்டும் என் னை அங்கு கொண்டு போய் விட்டு விடுவீரா? என்று கேட்டது. நானும் அக்கரை க்குத்தான் போகிறேன், என் முது கில் ஏறிக்கொள்ளும் உம்மை நான் அக்க ரையில் விட்டுவிடுகிறேன்! என்றது ஆமை, தேளும் ஆமையின் முதுகில் ஏறிக்கொ ண்டது ஆமை நீரில் நீந்திச் செல்ல அரம்பித்தது சிறிது தூரம் தான் ஆமை சென்றிருக்கும் தேளுக்கு ஒரு யோசனை வந்தது ,நான் பல பேரைக் கொட்டி யிருக்கிறேன்.அவர்கள் வலி யால் துடித்ததையும் பார்த்திருக்கின்றேன். ஆனல் நான் ஒரு நாளும், ஆமைக்கு கொட்டவி ல்லை  இந்த ஆமையைக் கொட்டினால் எப்படித் துடிக்கும்? இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடை யாது .என்று ஆமைக்கு கொட்டிப் பார்க்க நினைத் தது தேள் ஆமையின் முதுகில் கொட்டியது .அனால் ஆமை பேசாமல் போய்க்கொண்டிருந்த்து. உடனே தேள் ஆமையைப் பார்த்து ஆமை யாரே! உமது முதுகு கடினமாக இருக்கிறதே. உமது உடம்பில் வலியே வருவதி ல்லையா? என்று கேட்டது. தேளின் கெட்ட எண்ண த்தைப் புரிந்துகொள்ளாத ஆமை எனது முதுகு கடினமான ஓட்டினால் மூடப்பட்டுள் ளது அதனால் எனக்கு அந்த இடத்தில் வலியே வரு வதில்லை, அனால் எனது கழுத்துப்பக்கம் மென்மை யாக இருக்கும் . இதில் தான் எனக்கு வலிகள் காய ங்கள் ஏற்படும் என்று சொன்னது ஆமை. ஓகோ அப் படியா?என்று கேட்ட தேள் ,மெதுவாக ஆமையின் கழுத்துப் பகுதியை நோக்கிச் சென்றது . கழுத்தில் இருந்து தலைப்பகுதிக்குச் சென்ற தேள் ஆமைக்கு கொட்ட ஆரம்பித்த்து . தலையில் ஏதோ குத்திய தால் விடுக்கென்று தலையை உள்ளே இழுத்துக் கொண்டது ஆமை . தேள் நீரோடையில் விழுந்து விட்டது. தனக்கு உதவி செய்த ஆமைக்கு கேடுவி ளைவிக்க நினைத்த தேள் .தண்ணீரில் மூழ்கி இறந் தது .ஆமை கரையை நோக்கி நீந்திச் சென்றது. ஒரு வர் எவ்வித பலனையும் எதிர்பாராமல் எமக்கு உதவி செய்தாராயின்,அவரின் உதவியை நாம், எம் வாழ் நாளில் என் றுமே மறந்துவிடலாகாது. அவரு க்கு நன்றியுடையவனாக இருத்தல்  வேண்டும். மாறாக அவருக்கு கெடு செய்ய நினைப்போ மாயின், அது எம்மையே வந்து சேரும்
அன்புடன் பேசாலைதாஸ் பேர்கன் நோர்வே

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...