பின் தொடர்பவர்கள்

0131 அன்ன தானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0131 அன்ன தானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஜூன், 2015

0131 அன்ன தானம்

அன்ன தானம்

கர்ணனைப் பற்றி பல கதைகள் கேட்டிருக்கலாம், படித்திருக்கலாம் இதோ ஒன்று :- கர்ணன்வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட தான் செய்தபுண்ணியங்கள் அனைத்தையும் தானம் கொடுத்தவன். தானத்திற்கே பெயர் பெற்ற வன். தானம் என்றால் என்ன என்பதை உலகிற்குக் காட்டியவன். அவன் இறந்ததும்கண்ணனால் சுவர்க் கத்துக்கு அனுப்பப்பட்டவன்.
                                     அங்கு சென்று சகலவசதிகளுடன் இருந்தும் அவனுக்கு ஏனோ பசி அடங்கவில்லை. எப்பொழுதும்வயிற்றுப்பசி இருந்து கொண்டே இரு ந்தது. அவனும் சாப்பிட்டுச் சாப்பிட்டுஅலுத்துப் போ னான். பிறகு சுவர்க்கத்தின தலைவனிடம் சென்று கேட்டான். நான்எவ்வளவு தான தருமங்கள் செய்தி ருக்கிறேன் எனக்கு ஏன் இக்கொடிய தண்டனை எனக்கு ஏன் இப்படிப் பசிக்கிறது எனக் கேட்டான்.
                                     தலைவனோ கர்ணா நீ பூவுலகில் வாழ்ந்த காலத்தில் பொன்னும் பொருளும் மனியும் ஏன் உன்னுயிரும்தானமாகக் கொடுத்து பெரும் புகழ் பெற்றவன். ஆனால் சிந்தித்துச் சொல் எப்போ ழுதாவது யாருக்காகவாது அன்ன தானம் செய்திருக் கிறாயாஎனக் கேட்டான்.
                                                                  கர்ணனுக்கு அன்ன தானம்  செய்ததாக நினைவு இல்லை. அன்ன தானம் செய்யாததால் தான் இப்பொழுதுவயிற்றுப்பசி அட ங்க வில்லை எனவும் கூறக் கேட்டான். அப்படியா னால் இதற்குஎன்ன தான் வழி எனக் கேட்ட போது தலைவன் கூறினான் உனது வலது கை ஆள்காட்டி விரலை வாயில் வைத்துக் கொள் பசி அடங்கி விடும் என்றான்.
                                 கர்ணனுக்குஒன்றும் புரியவில்லை. விரலைச் சப்பினால் பசி அடங்குமா என்ன இது என ஐயப்பாடு இருந்தாலும் வேறு வழி இல்லை என வலது கை ஆள் காட்டி விரலைவாயில் வைத்து சப்ப பசி உடனே அடங்கிற்று. ஒன்றும் புரியாத கர் ணன் இது எப்படி மாய மந்திரம் எனக் கேட்க தலை வன் கூறினான் அன்பின் கர்ணாநீ பூவுலகில் வாழும் போது உன்னிடம் ஒரு வறியவன் பசியுடன் வந்து எங்குஅன்னதானச் சத்திரம் இருக்கிறதென்று கேட்க நீயும் உனது வலது கை ஆள்காட்டிவிரலால் இதோ இப்பக்கம் செல்க என வழி காட்டினாய். அந்த புண்ணியச் செயல்நற்செயல் உனக்கு இப்பொழுது உதவுகிறது எனக் கூற -கர்ணனும் அன்ன தான மகிமையை உணர்ந்தான். முதியோர் இல்லங்களில் வாழ்பவர்கள், அனாதைஇல்லங்களில் வாழ்பவர் கள், வறியோர் இவர்களுக்கெல்லாம் அன்ன தானம் செய்தால் அவர்கள் பெறும் மகிழ்ச்சியானது நமக் கும் மகிழ்ச்சியினையும் புண்ணியத்தைனையும் தரும் . வாருங்கள் அன்ன தானம் செய்வோம்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...