பின் தொடர்பவர்கள்

0109 அறிஞர்கள் குழப்ப வாதிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0109 அறிஞர்கள் குழப்ப வாதிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஜூன், 2015

0109 அறிஞர்கள் எல்லாம் குழப்ப வாதிகள்

அறிஞர்கள் எல்லாம் குழப்ப வாதிகள்

முல்லா நஸ்ருதீன் மன்னருடன் நெருங்கிய தொட ர்பு வைத்திருந்தார், அது அரசுசவையில் இருந்த பலருக்கு பிடிக்கவில்லை. ஒருமுறை முல்லா ஒரு நண்பரின் திருமணத்திற்கு சென்ற போது பேச்சுவா க்கில் நாட்டில் உள்ள அறிஞர்கள் எல்லாம் குழப்ப வாதிகள், எதையுமே உறுதியாக, தீர்மானமாகக் கூற இயலாதவர்கள் என்று சொன்னார். அதை அறிந்த முல்லாவின் எதிரிகள் மன்னரிடம் போய் "மன்னர் நீங்க அறிஞர்களை வைத்திருப்பதற்கு பதிலாக குழ ப்பவாதிகளை வைத்திருப்பதாகவும், சரியான முடிவு எடுக்கத் தெரியாமல் இருக்கும் அறிஞர்கள் பேச்சு கேட்பதாகவும் முல்லா சொல்லிக் கொண்டு திரிக்கிறார் என்று அரசரிடம் முல்லாவைப் பிடிக் காதவர்கள் கூறித் தூண்டி விட்டார்கள்.
                                                  உண்மை நிலையை அறிய விரும்பிய அரசர், முல்லாவை சபைக்கு வரவழை த்தார். அத்துடன், தத்துவ மேதைகள், மார்க்க ஞானி கள், சட்ட நிபுணர்கள், அறிவுசால் அமைச்சர்கள் அனைவரையுமே கூட்டினார். பிறகு முல்லாவை நோக்கி, " இவர்கள் எலலாம் குழப்பவாதிகள் என்று கூறினீர்களாமே?...ஏன் அப்படிக் கூறினீர்கள் ? இவர் கள் குழப்பவாதிகள் என்று உம்மால் நிரூபிக்க முடி யுமா?" என்று கேட்டார்.
                                              இது என்னடா வம்பா போச்சு, சும்மா வாய் பேச்சுக்கு சொன்னதை வைத்து என் னை மாட்டி விடப் பார்க்கிறீங்களா, அப்போ நீங்க குழப்பவாதிகள் தான், அதை நிறுபித்தால் ஆச்சுது என்று நினைத்து "அரசே என்னால் நிறுபிக்க முடி யும்" என்று கூறிய முல்லா, அனைவரிடமும் ஆளு க்கொரு தாளைக் கொடுத்தார்.
                                                               பின்னர் அவர்களிடம், " அறிஞர் பெருமக்களே...நான் ஒரே ஒரு கேள்வி தான் கேட்கப் போகிறேன். அதற்குரிய பதிலை, இந் தத் தாளில் நீங்கள் எழுதிக் கொடுக்கவேண்டும்" என்றார். பின்னர், அவர்களிடம் ஒரு தாளை கொடு த்தார், அதில் , " ரொட்டி என்றால் என்ன? " என்று கேட்டார். அனைவரும் பதிலைத் தாளில் எழுதி அரசரிடம் கொடுத்தார்கள். அரசர் படிக்க ஆரம்பி த்தார்.
                                      ஒருவர்- ரொட்டி என்பது சத்துள்ள பண்டம் என்று எழுதியிருந்தார். இரண்டாமவர் ரொ ட்டி என்பது ஒரு உணவு என்று குறிப்பிட்டிருந்தார்.
மூன்றாமவர் - இறைவன் கொடுத்த கொடையே ரொட்டி. நான்காமவர் - ரொட்டி என்பது வேகவைத்த மாவுப் பொருள். ஐந்தமவர் - ரொட்டி என்பது மாவும் நீரும் கலந்த கலப்பு. ஆறாமவர் - அவரவர் விருப்பத் துக்கு ஏற்ப சுவையும் வடிவும் பெறுவது ரொட்டி
ஏழாமவர் - ரொட்டி என்பதற்கு சரியான பொருள் யாருக்குமே தெரியாது......என்று குறிப்பிட்டு எழு தியிருந்ததை அரசர் படித்தார்.
                                             எல்லா பதில்களையும் அரசர் படித்து முடிக்கும்வரை பொறுமையுடம் காத்திருந்த முல்லா, " அரசே ! ...ரொட்டி என்பது என்ன? என்ற எனது சாதாரன கேள்விக்கு, இவர்கள் அனைவரும் பலவிதமான பதில்களைக் கொடுத்துள்ளார்கள்.
யாருடைய பதிலும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போக வில்லை பார்த்தீர்களா? இதனால்தான் நம் நாட்டில் உள்ள அறிஞர்கள் குழப்பவாதிகள் என்றேன்" என்றார்.
                                அரசர் முல்லாவில் அறிவாற்றலை வியந்து அவர்மீது இருந்த குற்றச் சாட்டினைத் தள் ளுபடி செய்தார். அரசவையில் கூடியிருந்த அனைவ ரும் முல்லாவின் திறமையை பாராட்டினார்கள்.

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...