பின் தொடர்பவர்கள்

0020 வாழ்க்கை மகிழ்வாய் வாழ்வதற்கே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0020 வாழ்க்கை மகிழ்வாய் வாழ்வதற்கே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 செப்டம்பர், 2020

0020 வாழ்க்கை மகிழ்வாய் வாழ்வதற்கே,,,,

வாழ்க்கை மகிழ்வாய்  வாழ்வதற்கே  பேசாலைதாஸ் 

                        அன்பர்களே எப்போதும் நம்மை உட்சாகமூட்டும் உறவுகளை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களை குற்றம் கண்டு விமர்சிக்கின்றவர்க ளையும் ஒதுக்கிவிடாதீர்கள், ஏனெ னில் அவர்கள் தான் நம்மை நேரான பாதையில் செல்லுவதற்கு அங்கு சமாக இருக்கின்றார்கள், அதைவிட நம்மை உட்சாகப்படுத்துகின்ற உறவுகளே நம்மை வெற்றிப்பாதை யில் ஏற்றிவிடுபவர்கள். ஊக்குவிக்கறவனை ஊக்குவிக்க ஆளிருந்தால் தேக்கு விப்பான். என்று ஒரு முதுமொழி உண்டு. நம்மை எப்பொழுதும் உற்சாகப்படுத்துகின்ற ஒருவன் இருந்தால் வாழ்வில் நாம் ஜெயம் காணலாம், அதுவே நமது மனைவியாக இருந்துவிட்டால் மிகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

                                                                                          ஒரு கிராமத்தில் ஆசாரி  ஒருவர் வாழ்ந்து வந்தார். மர சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தார் அவருக்கு  அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள், அவன் வாழ் க்கை உழைப்பும், காதலும், ஊடலுமாக மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடிக் கொண்டிருந்தது.

                                                                                       எல்லாக் கதைகளிலும் வழக்கமாக வருவது போல் நம்ம ஆசாரி வாழ்க்கையிலும் சோதனை காலம் வந்தது ,,,நவநாகரீக காலத்தின் துவக்கமாய் இருந்த நேரம் அது, ஆசாரி பட்டறை தொழில் நலிவுற்றது, வருமானம் நாளுக்குநாள் குறைந்து கொண்டே வந்து அன்றாட உணவுக்கே வறுமை என்ற நிலை வந்துவிட்டது,,,

ஆசாரிக்கோ ஊடலிலும், மனைவி கூட நாட்டம் இல்லாமல் விரக்தி மன தில் குடிகொண்டது,,,சோகமே உருவாகி விட்டான்,,,ஒருநாள் மாலை வேளையில் மனைவியின் மடியில் தலைசாய்த்து வானத்து நட்சத்திரங் களை பார்த்துக் கொண்டிருந்தான், 

                                       மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்து கண் ணீர் துளிகளாய் வயதுகரைந்தோடியது,அதைக் கண்ட மனைவி தழு தழுத்து ஆறுதலாய் பேசினாள், "ஐயா எஞ்சாமி எதுக்கு கலங்குரீங்க, இந்த தொழில் இல்லைன்னா என்ன, பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி அதை அக்கம் பக்கத்து கிராமத்துல வித்தா நாலு காசு கிடைக்குமே, அதை வெச்சு ராசாவாட்டம் வாழலாமே" என்றாள்,,,

புது நம்பிக்கை புது உற்சாகம் உள்ளத்தில், ஆசாரி விறகுவெட்டி ஆனான், அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது. வீட்டில் தினமும் சோள க்கஞ்சி, கொள் ளுத் துவையல் கூடவே மனைவியின் சிரித்த முகமும் கனி வான கொஞ்சலும் அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும், சற்றே சோகமும் இழையோடி இருந்தது,

                         ஒருநாள் ஊடலும் சரசமுமாய் இருந்த வேளையில் மனைவி கேட்டாள்,"மாமோய்,,, இன்னும் ஒங்க மனசுல ஏதோ சோகமிருக்காப்ல தெரியுதே,  என்ன அது?" விறகு வெட்டியான நம்ம ஆசாரி சொன்னான் ...

 "பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில் நம்ம வீட்டில் தெனந் தெனம் நெல்லுச்சோறும் தினம் ஆறுசுவை கொழம்புமாய் இருக்கும், இப்போ இப்படி வயித்தக்கட்டி வாழுறோமே, அதுதான்டி குட்டிம்மா மனசு க்கு என்னவோ போல இருக்கு, இப்படி விறகு சுமந்துகிட்டு ஊர் ஊரா சுத்தினால் கிடைக்கிற வருமானம் நமக்கு நல்லபடியா வாழ பத்தலையே" என்றவனுக்கு கண்கலங்கவும் தவித்துப் போனாள் அவள்,

 "வேணாஞ்சாமி வேணாம், நீங்க ஏங் குலசாமி, கண்ணு கலங்காதீக,

 என்னோட நகை நட்ட வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே, அதை மூலத னமா போட்டு நாம ஒரு விறகு கடை வச்சிரலாம், காட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு கூலி கொடுத்து விறகு வாங்கிப் போடுவோம், கடைன்னு ஆயிட்டா எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாக, நமக்கு நல்லப டியா வருமானம் கிடைக்கும் என்றாள்.

                                                 மீண்டும் புத்துணர்ச்சி நமது ஆசாரி உள்ளத்தில், விறகு வெட்டியானவன் விறகுக்கடை முதலாளியா னான், வருமானம் பெருகியது, அப்புறமென்ன வீட்டில் தினமும் ஆறுசுவை சோறுதான்... ஆனால் வாழ்க்கை அடுத்தடுத்த சோதனைகளை ஏற்படுத்தாமல் விட்டுவிடுமா என்ன, வந்தது கெட்ட நேரம், விறகு கடையில் தீ விபத்து! அத்தனை முலதனமும் கரிக்கட்டையாகி விட்டது,,,தலையில் அடித்துக் கொண்டு அழுதான் விறகு கடை முதலாளி,,, நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள், கலங்காதே நண்பா மறுபடியும் விறகுவெட்டி வாழ்க்கை நடத்து, எதிர்காலத்தில் எதாவது நல்லது நடக்கும் என்றார்கள்.

                                                                        மனைவி வந்தாள்,கண்ணீரை துடைத்தாள்,,அவன் தலைசேர்த்து நெஞ்சோடு கட்டியனைத்தாள்,கண்ணீர் மல்க சொன்னாள்;

"இப்போ என்ன ஆயிடுச்சுனு எஞ்சாமி அழுதீக,விறகு எரிஞ்சு வீணாவா போய்ட்டு,

கரியாத்தானே  ஆகிருக்கு" நாளைலயிருந்து கரி யாவாரம் பண்ணுவோம்" தன் தலை நிமிர்த்தி அவளின் முகம் பார்த்தவனுக்கு மீண்டும் வாழ்வில் ஒளி தெரிந்தது. ஆமாம், ஊக்குவிக்கவும் உற்சாகப் படுத்தவும் ஆட்களிருந்தால் கோமா ஸ்டேஜ்ல இருக்கவன் கூட ஒலிம்பிக் ஓட்டபந்தயத்தில் ஜெயிப்பான்.சதா உதாசினப்படுத்தி கொண்டிருந்தால் ஆரோக்கியமா இருக்கறவனுக்கு  குளுகோஸ் தான் போடனும்.

ஆற்றில் வெள்ளம் வந்து தண்ணீர் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் போது கரையை கடக்க எதிர் நீச்சல் அடிக்க கூடாது.ஆற்றோட வேகத்துக்கு தகுந்த மாதிரி கரையை அதோட போக்குல போய் கடந்து தான் கரையேறனும் வாழ்கிறோம் வாழ்கை என்று இல்லாமல் அதை மகிழ்வித்து வாழும் வாழ்கையோ மகிழ்வை தரும் 

                                                                    அன்புடன் பேசாலைதாஸ்



தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...