பின் தொடர்பவர்கள்

மிருகவதை 0001 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மிருகவதை 0001 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஜூன், 2015

0001 மிருகவதை

                            மிருகவதை பேசாலைதாஸ்

                                      மிருகங்களை வைதப்பது தடுக்கப்படவேண்டும் என சட்டங்கள் சொல் கின்றன, சில நேரங்களில் மதத்தின் சார்பி லும் மிருகவைஅத கையாளப்படு வதை நாம் பார்க்கின்றோம், ஆனால் தனது சோம்பேறி த்தனத்துக்காக மிருகங்களை வைத்து வேலை என்ற பெயரில் வதைப் பதும் ஒரு வகை மிருகவைதையே! 

                                                                           கழுத்தில் மாட்டப்பட்ட ஒரு சிறு கூடையுடன், ஒரு நாய், மளிகைக் கடைக்கு முன் வந்து நின்றது. பிச்சையெடுப்பதற்கு அந்த நாயை யாரோ பழக் கியுள்ளனர் என்று எண்ணிய மளிகைக் கடை க்காரர், அதை விரட்ட முயன்றார். அவர் எவ்வளவுதான் விரட்டினா லும், அந்த நாய் அவ் விடத்தை விட்டு அகல வில்லை. என்னடா பெரிய தொல்லையா போச்சு’ என்று எண்ணி யக் கடைக்காரர் வெளியே வந்து பார்த்தபோது, அந்த நாயின் வாயில் ஒரு சீட்டும், பணமும் இருந்தன. ஆச்சரியமடைந்த கடைக்காரர், அந்தச் சீட்டை எடுத்து பார்த்தார். 

                                                           அதில் மளிகைப்பொருள்கள் எழுத ப்பட்டிரு ந்தன. சீட்டில் எழுதப்பட்டிருந்த பொருள்க ளையும், மீதி பண த்தையும் கூடை யில் போட்டு, நாய் கழுத்தில் கடைக் காரர் மாட்டிவிட் டதும், நாய் புறப்பட்டுச் சென்றது. அந்த நாயை, தவறாக எடை போட்டதற்காக மனம் வருந்தியக் கடைக்காரர், அதை அவ்வாறு பழக்கிவிட்டவர் யாரென்று அறிந்துகொள்ள, நாயைப் பின் தொடர்ந்து போனார். 

                                                                   அந்த நாய், தெருவைக் கடந்து ‘மெயின் ரோட்’டிற்கு வந்தது. அப்போது ‘ரெட் சிக்னல்’ இருந் ததால், அந்த நாய் ‘ரோட்’டை கடக் காமல் நின்றது… ‘சிக்னல்’ பச்சையாக மாறியவுடன் நாய் ‘ரோட்’டைக் கடந் தது… கடை க்காரருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை… ‘ ரோட்’டைக் கடந்த நாய், ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது. ஒரு குறிப்பிட்ட பேருந்து வந்தவுடன், பேருந்தில் ஏறியது. கடைக்காரரும் ஏறினார். 

                                                      நாய் வாயில் கவ்வியிருந்த பணத்தை எடுத்து க்கொண்ட ‘கண்டக்டர்’ ஒரு டிக்கெட்’ கொடுத்தார். இரண்டு நிறுத்தங் கள் கடந்து, பேருந்தில் இருந்து இறங்கியது நாய். கடைக்காரரும் அதன் பின்னால் இறங்கினார். நாய் ஒரு தெருவை கடந்து, ஒரு வீட்டின் முன் நின்று கதவைத் தட்டியது. கதவைத் திறந்து ஒருவர் வந்தார். நாயின் கழுத்தில் இருந்த பையை எடுத்துக் கொண்ட அவர், நாயை அடித்தார். 

                                                                               கடைக்காரர் ஓடிச்சென்று, “நிறுத்துங்க! ஏன் அடிக்கறீங்க? அது எவ்வளவு பொறுப்பா என் கடைக்கு வந்து பொருள் களை வாங்கிகிட்டு, ‘சிக்னல’ மதிச்சு, ‘பஸ்’ல ‘டிக்கெட்’ எடுத்துகிட்டு வருது... அதைப் போய் அடிக்கறீங்களே…!” என்று கூறினார். அதற்கு, நாயின் உரிமை யாளர், “வீட்டுச் சாவிய எடுத்துட்டு போகாம வந்து, கதவத் தட்டி என் தூக்கத்தக் கெடுத்துடுச்சி, பாருங்க.. நாய்க்கு கொஞ் சம் கூட பொறுப்பில்லை” என்று சலித்துக் கொண்டார். மிருக ங்கள் வதைபடுவதற்கு ஒரு முக்கியக் காரணம், மனிதர்கள் சோம்பேறிகளாக மாறியதுதானோ? அன்புடன் பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...