பின் தொடர்பவர்கள்

0506 மனதில் உறுதிவேண்டும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0506 மனதில் உறுதிவேண்டும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 8 பிப்ரவரி, 2018

0506 மனதில் உறுதிவேண்டும்

மனதில் உறுதிவேண்டும் பேசாலைதாஸ்
அன்பர்களே நாம் ஒரு செயலை, அல்லது ஒரு திட்டத்தை வெற்றி கரமாக செய்து முடிக்கவேண்டும் என்றால், முதலில் அதை செய்து முடிப்பேன், என்ற வைராக்கியத்தை மனதில் வளர்த்துக்கொள்ளவேண்டு. வைராக்கியம் என்று சொன்னவுடன், எனக்கு மயான வைரக்கியம் மனது க்கு வருகின்றது, இந்த வைராக்கியம் உங்கள் எல்லோருக்கும் கட்டாயம் வந்திருக்கும், நமக்கு பிடித்தமான உறவு ஒன்று இறக்கும் போது, கவலை தோய்ந்து, என்னடா நிலையில்லா வாழ்க்கை இது! கையில் என்ன கொண்டு வந்தோம், கொண்டு செல்ல,,, இப்படியாக மனதில் தத்துவங்கள் மனதில் அலைமோதும், பணம் பொருள் இவைகளின் ஆசை கொள்ளக்கூடாது, இருப்பதை கொண்டு திருப்தியாக வாழவேண்டும், மேலதிகமாக இருப்பதை ஏழைகளுக்கு கொடுத்து புண்ணியம் சேர்க்கவேண்டும், இப்படியாக மனது உறுதி கொள்ளும், எல்லாம் அந்த இறப்பு தந்த கவலை இருக்கும்மட்டும் தான், நாட்கள் செல்ல, செல்ல கவலை மறந்து, மனது மீண்டும் பொருள் தேடும், சேர்க்கும் படலத்திற்கு சென்றுவிடும், இதை நான் எழுதும் போது, என்றோ நான் படித்த கதை ஞாபகத்துக்கு வருகின்றது,,,,,,


                                                                                                     ஒரு மரத்தில் குடியிருந்த குரங்குகளெல்லாம் கூடி வாரம் ஒரு நாள் உண்ணா விரதம் மேற் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனவாம். எனவே தலைவர் குரங்கிடம் போய் மற்ற குரங்கு கள் எல்லாம் விஷயத்தைச் சொன்னவுடன், தலைவர் குரங்காரும் ''சரி அவ்வாறே செய்து விடுவோம். அதற்கு முன்னால் உண்ணா விரதம் முடிந்தவுடன் உண்ணு வதற்கான பழங்களைச் சேகரித்து வைத்து விடுங்கள். ஏனெனில் விரதம் முடியும் பொழுது பசியாக இருக்கும். எனவே அப்பொழுது போய் பழ ங்களைத் தேடிக் கொண்டிருக்க முடியாது'' என்று அறிவுரை சொன்னார். அதை அமோதித்த மற்ற குரங்குகளும் அருகில் இருந்த தோட்டத்திலிரு ந்து நிறைய வாழைப்பழங்களைக் கொண்டு வந்து தலைவர் முன் வைத்தன. உடனே தலைவர் ''சரி உண்ணா விரதத்தை ஆரம்பித்து விடு வோம்'' என்றார். அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒரு மூத்த அனுபவமு ள்ள குரங்கு ''தலைவரே விரதம் துவங்குவதற்கு முன் அவரவர் பழ ங்களை பிரித்து கொடுத்து விடுவோம். இல்லையென்றால் விரதம் முடி ந்தவுடன் சண்டையிட்டுக் கொள்வார்கள்'' என்று யோசனை சொல்லிற்று.


அதை ஆமோதித்த தலைவரும் அவ்வாறே பழங்களை பகிர்ந்தளித்தார். அப்பொழுது ஒரு குரங்கு எழுந்து, பழத்தின் தோலை உரித்து வைத்து விடுவோம். அந்த நேரத்தில் உரித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றவுடன். பழத்தின் தோல் உரித்து முன்னே வைக்கப்பட்டது. உடனே ஒரு குட்டிக் குரங்கு எழுந்து தலைவரே ஒரு நாள் விரதம் இருக்கப் போகிறோம். தோல் நீக்கிய இந்தப் பழங்க ளின் மேல் தூசிகள் படிந்து விடும். எனவே இந்த பழங்களெல்லாம் கனிந்து அழுகிப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. நமக்குதான் உணவை வாயில் ஒதுக்கி வைத்துக் கொள்ளும் வசதி இருக்கிறதே ? எனவே பழங்களை அவரவர் வாயில் ஒதுக்கி வைத்துக் கொள்வோம் என்றது. அவ்வளவுதான் பழங்கள் அனைத்தும் வாயில் ஒதுக்கி வைக்கப்பட்டன. சற்று நேரம்தான் ஆகியிருந்தது. ஒதுங்கியிருந்த பழங்களெல்லாம் தானாகவே தொண்டைக் குழியை நோக்கி போகத் துவங்கின. இவ்வாறு குரங்குகளின் விரதம் நிறைவுக்கு வந்தது. நம்மில் பெரும்பாலானவர்கள் நல்ல‌ முயற்சியும் இவ்வாறுதான் இருக்கிறது. அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...