பின் தொடர்பவர்கள்

0569 மனமுண்டானால்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0569 மனமுண்டானால்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 ஜனவரி, 2019

0569 மனமுண்டானால்?

மனம் இருந்தால் அதற்க்கு ஆயிரம் வழி உண்டு!  பேசாலைதாஸ்
(இணையத்தில் ஒருவர் எழுதிய சம்பவம் கதையாகின்றது)


                                                 எழிலன் அவன் பிறப்பில் இருந்தே வறுமையில் மூழ்கிக்கிடக்கும் ஒரு வாலிபன், ஆனாலும் தன் வறுமை பற்றி அவன் அலட்டிக்கொள்வதில்லை, நாலுபேருக்கு நன்மையாக வாழ்ந்தாலே போதும் என்ற வாழ்ந்துகொண்டிருந்தான் எழிலன். ஒரு நாள் அவன் அயலில் உள்ள ஒரு குக்கிராமத்துக்கு ஒற்றையடி பாதை வழியே நடந்து கொண்டிருந்தான், போகும் வழியில் ஒரு மின்கம்பத்தில் ஒரு சிறு துண்டு காகிதம் எழுதி தொங்க விட பட்டிருந்தது. அப்படி என்னதான் அதில் எழுதியிருக்கு என்ற ஆர்வத்தில் எழிலன் போய் படித்தான்.

                                            அதில் " என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது. யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து இந்த விலாசத்தில் தரு மாறு கேட்டு கொள்கிறேன். எனக்கு கண் பார்வை அவ்வளவு சரியி ல்லை" என்று விலாசத்துடன் எழுதியிருந்தது. அதை கண்டதும் எழிலனு க்கு இருப்புகொள்ளவில்லை எப்படியாவது அந்த ஐம்பது ரூபாவை உரிய வரிடம் ஒப்படைக்கவேண்டும் என மனம் நச்சரித்தது, அந்த குறுக்கு வழியில் பார்த்த ஒரு நபரிடம் விலாசம் கூறி வழி கேட்டான். "இந்த அம்மாவா, கொஞ்சம் தூரம் போனால் ஓர் பழைய வீடு இருக்கும். அங்க தான் அந்த கண் தெரியாத அம்மா இருக்கு".

                                     அங்கே ஓர் சிறிய கீத்து கொட்டகை. ஒரு நாள் மழைக்கு கூட தாங்காது. வெளியில் , கண்கள் குழி விழுந்து, எலும்பும் தோலுமாக வயதான ஓர் அம்மா . எழிலனின் காலடி சத்தம் கேட்டதும், யாருப்பா நீ? அம்மா நான் இந்த வழியாக வந்தேன், எனக்கு 50 ரூபா கீழே விழுந்து கிடைத்தது. அது உங்களிடம் தரலாம் என்று வந்தேன். கேட்டதும் அந்த அம்மா அழ ஆரம்பித்து விட்டார்.

                                  தம்பி ரெண்டு நாளா கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு பேர் வந்து 50 ரூபா கீழே விழுந்து கிடைச்சது என்று சொல்லி குடுத்துட்டு போறாங்க.. அந்த கடிதம் நான் எழுதவில்லை. எனக்கு எழுத படிக்க தெரி யாது. பரவாயில்ல அம்மா நீங்க வச்சிக்கிங்க என்று சொல்லி கொடுத்து விட்டு திரும்பினான் எழிலன்.. தம்பி நீ போகும் போது மின்கம்பத்தில் இருக்கும் அந்த கடிதத்தே மறக்காமல் கிழித்து போட்டு விடு என்று அறிவு ரைத்தாள் அந்த தாய்.

                               எழிலன் மனதில் வித விதமான எண்ணங்கள். யார் அந்த கடிதத்தை எழுதி இருப்பார். அந்த கடித்ததே கிழித்து விடு என்று அந்த அம்மா ஒவ்வொருவரிடமும் கூறி கொண்டு தான் இருப்பார். ஆனால் யாரும் அப்படி செய்யவில்லை. யாரும் இல்லாமல் அனாதையாக வாழும் ஓர் உயிருக்கு கடித வடிவில் உதவி செய்த அந்த நண்பருக்கு மனத்தால் நன்றி சொல்லி கொண்டான் எழிலன். நன்மை செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்க்கு ஆயிரம் வழி. மனதில் யோசித்து கொண்டே வரும்போது வழியில் ஒருவர் எழில‌னிடம். 

                           " அண்ணே இந்த விலாசம் எங்கே என்று சொல்ல முடியுமா? கீழே இருந்து 50 ரூபாய் கிடைத்தது. அந்த அம்மா கிட்டே குடுக்கணும். வழி சொல்றீங்களா? எழிலனின் எண்ணங்கள் வானில் அலையும் மேகத் தோடு ஒட்டிக்கொண்டது, இப்படியும் சில மனிதர்களா? உதவும் எண் ணம் இருந்தால் அதற்கு ஆயிரம் வழியுண்டு ஏதோ தீர்மானத்தோடு  எழிலன் தன் நடையை தொடர்ந்தான்,,,,,, அன்புடன் பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...