பின் தொடர்பவர்கள்

0149 நீ இருக்கும் இடமே கடவுள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0149 நீ இருக்கும் இடமே கடவுள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஜூன், 2015

0149 நீ இருக்கும் இடமே கடவுள்

நீ இருக்கும் இடமே கடவுள்



ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலை யில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடா லயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டி ருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது.  மடத்தின் உள்ளேயே பிக்ஷுக்கள் யாரும் ஒரு வரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். பொறுக்க இயலாமல் ஒரு நாள் நம் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார். 

                                      தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார். அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு "உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்க வும் இல்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?"  என்று கேட்டார். இதைக் கேட்ட நம் தலைவர் வியப்பு மாறாமலே மடத்திற்குத் திரும்ப வந்து,  அங்கே இருந்த புத்த பிக்ஷுக்களுக்கு விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒரு வர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற,  அனுமான  த்தில் எல்லோரையும் பணிவாகவும்,  அன்பா கவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொரு வரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது என்பதைச் சொல்லத் தேவையே இல்லை! கூடிச் செயல் படும் போது கொடுத்துப் பெறுதல் அவசியமான ஒரு சூட்சுமம் ஆகும். "அன்பின் ஆழம்தான் கடவுளை காண சிறந்த வழி" என்று ஓஷோ கூறுகிறார்  


தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...