பின் தொடர்பவர்கள்

0168 கொக்குக்கு ஒரு கால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0168 கொக்குக்கு ஒரு கால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஜூன், 2015

0168 கொக்குக்கு ஒரு கால்



நண்பர் ஒருவர் என்னிடம்… நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று ஒரு பழமொழி சொல்லி வரு கிறோமே அது ஏன்? அதன் உண்மையான பொருள் என்ன? என்று கேட்டார். நான் சொன்னேன்.. நண் பரே.. அது ஒரு பழங்கதை..ஒரு குருவும் சீடனும் இருந்தார்களாம் நண்பர் ஒருவர் என்னிடம்… நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று ஒரு பழ மொழி சொல்லி வருகிறோமே அது ஏன்? அதன் உண்மையான பொருள் என்ன? என்று கேட்டார். நான் சொன் னேன். நண்பரே.. அது ஒரு பழங்கதை.                                                               ஒரு குருவும் சீடனும் இருந்தார்களாம். ஒருநாள் குரு தன் சீடனிடம் ஒரு முயலைக் கொண்டுவந்து தந்து அதை நன்றாக சமைத்துவை என்று சொல்லிவிட்டுக் குளிக்கச் சென்றாராம். அவர் திரு ம்புவதற்கு முன்பே மிகவும் சுவையாக சமைத்த சீடனுக்கு உணவின் சுவையும், மணமும் நாக்கில் எச்சிலை ஊறச் செய்ததாம். ஆசையில் முயலின் ஒரு காலை அவன் எடுத்துச் சாப்பிட்டுவிட்டானாம்.. திரும்பி வந்த குரு கேட்டா ராம்.. என்னப்பா மூன்று கால்தான் இருக்கிறது இன்னொரு கால் எங்கே என்று. .அதற்கு உண்மை யை மறைத்து நீங்கள் கொண்டுவந்த முயலுக்கு மூன்று கால்கள் தான் இருந்தன குருவே என்றா னாம்..என்னப்பா உலகில் மூன்றுகால்களோடு எந்த முயலுமே கிடையாதே என்று கேட்டாராம். எப்படிக் கேட்டும் சீடன் உண் மையை மட்டும் சொல்லாமல் தான் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தானாம். கால் போனதைப் பற்றிக்கூடக் கவலைப்படாத குரு. சீடனிடம் உண்மையை எப்படி யாவது வரவழைத்துவிடவேண்டும் என்பதில் உறு தியாக இருந்தாராம்.அவன் தூங்கும் போது நடுஇர வில் எழுப்பிக் கேட்பாராம்..அவன் ஏதாவது வேலை செய்யும் போது கேட்பாராம்.. தம்பி முயலுக்கு எத் தனை கால் என்று..அவனும் மறக்காமல் தெளிவா கச் சொல்வானாம்.. குருவே நீங்கள் தந்த முயலுக்கு மூன்றே கால்கள் தான் என்று நொந்து போன குரு நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்தவேளையில். இந்த சீடன் ஒரு திருட்டு வேலைசெய்து வந்ததை இவர் அறிந்தாராம். நெற்றியில் திருநீறு அணிந்து கொண் டு மந்திரத்தைச் சொல்லிய சீடன் யார் கண்களுக் கும் தெரியாமல் அர ண்மனைக்குச் சென்று அரச உணவுகளை ஒரு கை பார்த்துவந்தானாம்.. அரண் மனையில் உணவுகள் மாயமாவதை கண்டறிய முடியாமல் தவித்த அரசன் யாராவது இந்தத் திரு டனைக் கண்டுபிடித்தால் தக்க பரிசில் வழங்கப் படும் என்று அறிவிப்பு வெளியிட்டானாம்.
                                                        குருவுக்குத் தெளிவாக விளங்கியதாம் இது நம் சீடனின் வேலை தான் என்று. அரசனிடம் சென்று ஒரு வழிமுறை சொன் னாராம். இன்று சுடச்சுட உணவுதயாரித்து அதை மூடிவையுங்கள் இன்று அவன் மாட்டுவான். என்று. சொன்னதுபோலவே மாயமாக வந்த சீடன் ஆவலா க பாத்திரங்களின் மூடியைத் திறந்தானாம் அப் போது நீராவி வந்து அவன் நெற்றி யில் இட்ட திரு நீரைக் அழித்துவிட்டதாம். அவனும் எல்லோர் கண் ணிலும் தெரிந்தானாம்.குற்றம் சுமத்தப்பட்டு தூக்கு தண்டனைக் கைதியாக சீடன் நின்ற வேளை யில்.
அவனருகே சென்ற குரு “தம்பி இறுதியாகக் கேட்கி றேன்.. உண்மையைச் சொன்னால் உன்னை இந்த மரண தண்டனை யிலிருந்து என்னால் காப்பாற்றமு டியும்..முயலுக்கு எத்தனை கால், என்று கேட்டாரா ம். அப்போது கூட மனம் மாறாத சீடன் சொன்னா னாம். .குருவே சத்தியமாக நீங்கள் தந்த முயலுக்கு மூன்றே கால்கள் தான் என்று..அப்போது அந்த குரு ஒன் றைத் தெளிவாகப் புரிந்து கொண்டாராம். இவ னிடமிருந்து மட்டும் உண்மையை வரவழைக்கவே முடியாது என்று..அதனால் தான் இந்த சீடனைப் போல .தான் சொன்னது பொய் என்றாலும் அதை மறைக்க எத்தனை பொய்வேண்டுமானலும் சொல் லத் தயங்காதவர்களை இந்தப் பழமொழியோடு ஒப்பிட்டு உரைத்துவருகிறோம் என்று விளக்கம் சொன்னேன்.மகிழ்ந்த என் நண்பர் இதே போல வேறு ஒரு கதை உண்டு என்றார்.என்ன என்று ஆவலாகக் கேட்டேன். அதை கதை போல குரு தன் சீடனிடம் கொக்கு பிடித்துத் தந்து சமைத்து வைக்க சொன் னார். அவனும் சமைத்து அந்தச் சீடனைப் போலவே ஒருகாலை சாப்பிட்டு விட்டு நீங்கள் தந்த கொக்கு க்கு ஒரே கால் தான் என்று சாதித்தான். அந்த குரு வும் அவனை அழைத்துச் சென்று குளத்தில் நின்ற கொக்கைக் காண் பித்தார்.அந்தக் கொக்கு ஒற்றைக் காலில் நின்றுகொண்டிருந்தது. சீடனோ. பார்த்தீர்களா குருவே ஒத்தைக் காலில்தானே நிற்கிறது என்றான்.. நொந்து போன குரு ஒரு கல்லை எடுத்து அதன் மீது எறிந்தார்.அது பறந்தது. அப்போது குரு இப்போது பார்த்தாயா? இரண்டு கால் கள் தெரிகின்றன என்றார். அப்போதும் சீடன். “குரு வே இப்போது தான் புரிகிறது.. நீங்க பறக்கும் கொக் கை அடித்திருந்தால் அதற்கு இரண்டுகால்கள் இரு ந்திருக்கும்.நீங்கள் என்னிடம் தந்த கொக்கு நிலத் தில் நின்று கொண்டிருந்த கொக்காகத் தான் இருக் கும் அதனால் தான் அதற்கு ஒரே ஒரு கால் இருந் தது“ என்றானாம் என்று கதையை முடித்தார் என் நண்பர். அன்புடன் பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...