பின் தொடர்பவர்கள்

0247 முட்டாள்கள் மொத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0247 முட்டாள்கள் மொத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 செப்டம்பர், 2015

0247 முட்டாள்கள் மொத்தம் எத்தனை பேர்


முட்டாள்கள் மொத்தம் எத்தனை பேர்


அன்பு உறவுகளே! நம்மில் அநேகருக்கு பெரிய பணக்காரர் ஆகவேண்டும் என்ற அவா நிறையவே உண்டு அதற்காக கடினமாக உழைப்பவர்களும் உண்டு ஒரு சிலர் அந்த இல க்கை அடைகின்றார்கர்கள் ஆனால் பலபேர் ஏமாற்றம் அடை கின்றார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் உழைக்கா மல் எந்த முயற்சீயும் செய்யாமல் பணக்காரர் ஆகிவிட்டால் என்ற வெறும் கற்பனையில் மிதப்பவர்கள் பலபேர். உழை க்காமல் முன்னேற முடியுமா? அதிஸ்டத்தை நம்பி காலம் கழிக்கும் ஒரு சிலர், அவர்களுக்கானது இந்த கதை

முல்லா நசுருதீன் ஊர்மக்கள் மத்தியில் உட்கார்ந்திருந்தார். வெளியூரில் இருந்து வந்த பெரியவர் ஒருவர், முல்லாவின் காதருகே சென்று ஏதோ சவால் விட்டார். முல்லா ‘கலகல’ என்று சிரித்து விட்டு, “ஆஹா… வெகு சுலபம்… கொஞ்ச நேர த்தில் சொல்லுகிறேனே… பொறுங்கள்” என்றார். பிறகு அரு கிலிருந்த சிலரைப் பார்த்து, “உழைக்காமல், சிரமப்படாமல் பெரும் பணக்காரர் ஆவதற்கான யோசனைகள் சில எனக்குத் தோன்றி உள்ளன. அவற்றை இன்னும் இரண்டு மணி நேரம் கழித்து இங்கே வெளியிடப் போகிறேன். யார் யாருக்கெ ல்லாம் அவை வேண்டுமோ, அவர்களை எல்லாம் உடனே இங்கே வரச் சொல்லிவிடுங்கள்” என்று உரக்கக் கூவினார். 

                                                  அவ்வளவுதான், செய்தி விஷம் போல பரவியது. ‘திபுதிபு’ என்று கூட்டம் சேர்ந்தது. முல்லா சொல்ல ப்போகும் யோசனைக்காகக் கூட்டம் அமைதியாகக் காத்தி ருந்தது. இரண்டு மணி நேரம் கழித்து “இன்னும் யாராவது வரவேண்டி இருக்கிறதா?” என்றார் முல்லா. “இல்லை. மற்ற வர்கள் வரமாட்டார்கள்; வர மறுத்து விட்டார்கள். நாங்க ள்தான் உங்கள் அரிய யோசனைகளைக் கேட்க ஆவலோடு காத்திருக்கிறோம்” என்றது கூட்டம். வெளியூரில் இருந்து வந்து, முல்லாவிடம் ஏதோ சவால்விட்ட நபரைப் பார்த்து “இவர்களை நன்றாக எண்ணிக் கொள்ளுங்கள்” என்று சொ ல்லிவிட்டு முல்லா எழுந்து புறப்பட ஆரம்பித்தார். “முல்லா, உழைக்காமலேயே பெரும் பணக்காரனாக ஆசைப்படும் எங்களுக்கு ஏதும் சொல்லவில்லையே” என்று கூட்டம் அல றியது. முல்லாவோ, வெகு அலட்சியமாக, “இதோ வெளியூரில் இருந்து வந்திருக்கும் இவர் என்னிடம் சவால் விட்டார். எல்லாக் கேள்விக்கும் விடை சொல்கிறீர்களே, இந்த ஊரில் முட்டாள்கள் மொத்தம் எத்தனை பேர் என்று துல்லியமாகச் சொல்ல முடியுமா? என்றார். உழைக்காமல் பணக்காரன் ஆக விரும்பும் உங்களை விட முட்டாள்கள் இருக்க முடியுமா என்ன? அதுதான் உங்களை வரவழைத்து, இவரை எண்ணிக்கொ ள்ளச் சொன்னேன்” என்று கூறிவிட்டு நடையைக் கட்டினார். அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்


தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...