பின் தொடர்பவர்கள்

0301 யார் பணக்காரர் ❓ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0301 யார் பணக்காரர் ❓ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 30 ஜூன், 2019

0301 யார் பணக்காரர் ❓

மனதில் பணக்காரர் யார்❓ பேசாலைதாஸ்

                              எனது ஊர் பேசாலை,  அங்குள்ளவர்களுக்கு மனதளவில் ஒரு மயக்கம்! அதாவது தடித்த தாலி கட்டிக்கொள்ளும் பெண்கள், விலை கூடிய சேலை அணியும் பெண்கள் தான் பணக்காரப் பெண்கள் என மதிப்படுவதுதான் அந்த மயக்கம்! இப்போது ஆண் களிடம் வந்துள்ள புதுக்குழப்பம், கோவி லுக்கு காரில் வந்து இறங் கும் குடும்பம் தான் பணக்காரர்கள் என்ற நமது மக்களின் தவறான மதிப் பீடுகள்! உண்மையில் பணக்காரர் என்பதை எப்படி எடை போடுவது என்பது நமக்கு தெரிவதில்லை, இதோ உங்கள் தெளிவுக்கு, முகநூலில் வந்த சில துணுக்குகளை உங்கள் சிந்த னைக்கு விட்டுச் செல்கின்றேன்

                                                                      ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்' ஆகவே எனது வீட் டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்..

                                                               சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண் வருகிறார் கடைக்காரரிடம் என் முதலாலியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த விலையுடைய ஒரு சேலையை வாங்கிச் செல்கிறார்..இதில் யார்_பணக்காரர்...நீங்களே முடிவு செய்யுங்கள், இதுவும் போதாதா இன்னொரு சந்தர்ப்பம் சொல்கின்றேன்

                                                                          'ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருக்கும் சுற்றுலாவிற்கு வந்த ஒரு பணக்காரவீட்டு 6 மாத குழந்தையின் அம்மா,
ஹோட்டல் மேலாளரிடம் குழந்தைக்கு ஒரு கப் பால் வேண்டும் என்று கேட்கிறார், அதற்கு அந்த மேலாளர்  பாலுக்கு நீங்கள் தணியாக  பணம் செலுத்த வேண்டும் என்று கூற ,பணக்கார அம்மாவும் பணத்தை செலு த்தி பாலை வாங்கி குழந்தைக்கு ஊட்டுகிறார்...

                                                            ஒருநாள் சுற்றிப் பார்த்தவிட்டு ஹோட்டலுக்கு திரும்பும் வழியில் குழந்தை பசியால் அழுததால் , ரோட்டின் ஓரத்தில் இருந்த டீ கடையில் ஒரு கப் பால் வாங்கி குழந்தைக்கு ஊட்டினார் பிறகு பால் எவ்வளவு என்று டீ கடைக்காரரிடம் கேட்க, டீ கடைக்கார பெரியவர் குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு நாங்கள் காசு வாங்குவதில்லை எனறு சிரித்த முகத்தோடு பதில் அளித்தார்...

                                                        பணம் உள்ளவர் எல்லாம் பணக்காரர் அல்ல ......
அதை கொடுக்க நினைப்பனே உண்மையான பணக்காரன்....இந்த உலக த்தில் நிறைய நல்ல மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் ,.....நம் கண்களுக்கு தென்படவில்லை என்றாலும் பரவாயில்லை நாம் அவர்களில் ஒருவராக இருக்க முயற்சி செய்வோம்.....தொடக்கம் நாமாக இருப்போமே...அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...