பின் தொடர்பவர்கள்

0394 தாய் ஒரு கோயில்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0394 தாய் ஒரு கோயில்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

0394 தாய் ஒரு கோயில்!

தாய் என்னும் ஒரு கோயில்!
அன்பர்களே! இது கதை அல்ல நிஜம், அந்த நிஜத்தை கதை வடிவில் தருகின்றேன்,,, விஜயன் வேலையில் இருந்து களைப்பாக வீடு வந்தான். வந்ததும் வாராததுமாக அவன் மனைவி நிலா சொன்னாள்,,,
என்னங்க..! உங்க அம்மாவை சேர்த்த 'முதியோர் இல்லத்தில்' இருந்து கடிதம் வந்திருக்கு . "உங்களை நாளைக்கு அங்க வரச் சொல்றாங்க"...!!!என்ற நிலாவை திரும்பிப் பார்த்தான் விஜயன்.  ஏன் என்னவாம் ...? இப்ப தானே போன மாசம் போய் பார்த்துட்டு வந்தேன் என்றவனிடம்…"இந்தாங்க கடிதத்தை வாசித்துவிட்டு போய் என்னனுதான் பாத்துட்டு வாங்க"...? நீங்க பாட்டுக்கும் இது 'தான் சாக்குன்னு' இப்பவே கூட்டிகிட்டு வந்து டாதீங்க...! இங்க ஏற்கனவே ஏகப்பட்ட செலவு இருக்கு..! இதுக்கு நடுவுலே அவங்களை வேற பார்க்க முடியாது. 'பொண்ணு படி ப்புச்' செலவுக்கே இங்க 'முழி' பிதுங்குது, இதுலே உங்க அம்மா 'வைத்திய செலவு' வேற செய்யமுடியாது பார்த்துக்கங்க'... என்றாள் நிலா. சரி... சரி... விடு நான் பார்த்துக்கறேன் என்ற அவன் மனதிலும் அம்மாவை பற்றிய இனம் புரியாத பயமும், அதே நேரம் மனைவி மீது கோபம் கோபமாய் வந்தது. மறுநாள் காலை அம்மாவை பார்க்க'முதியோர் இல்லம்' சென்ற விஜயன், அங்கிருந்த மேடத்திடம் விபரம் கேட்க, அவங்க அம்மா கொடு க்க சொன்னதாக அவர்கள் அவன் கையில் 'ஒரு கவரை' கொடு த்தாங்க. அதை பிரித்த பார்த்த போது அவன் பெயருக்கு ' இரண்டு லட்ச ரூபாய்க்கான காசோலையும்', ஒரு கடிதமும் இருந்தது. படித்த அவன் அதிர்ந்து போனான் அதில்

அன்பு மகனுக்கு, 
                                              உன் அன்பு அம்மா எழுதிக்கொள்வது,  உன் தந்தை இறந்தபோது 'உன்னை நான் சுமையாக' அப்போது நினைக்கவில்லை. இப்போதும் உனக்கு 'நான் சுமையாக' இரு க்க விரும்பவில்லை. உன் மனைவி எதிர்பார்ப்பது போல் என்னால் 'உடல் உழைப்பை தர முடியவில்லை. நீ கஷ்ட படு வதை பார்க்க என்னால் முடியவில்லை. இந்த நிலையில் என்னால் என்ன செய்யமுடியும் ? ஆனாலும் உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்று ஏங்கிக்கொண்டிருந்தபோது செல்வந்தர் ஒருவருக்கு அவசரமாக கிட்னி தேவைப்பட்டது. அதனால் எனது "கிட்னீயை" விற்று அந்தப்பணத்தை உனக்கு கொடுத்திருக்கிறேன். கடனையெல்லாம் அடைத்து விட்டு என் 'பேத்தி தீபாவை' நன்கு படிக்க வை..!.அவள் நாளை 'உன்னை உன் மனைவியை' காப்பாற்றுவா.! பார்த்துக்க எல்லாத்தையும்,
நீங்க எல்லாம் 'நல்லாருக்க' நான் அந்த கடவுள் கிட்ட வேண்டிகிறேன்...! நான் போகிறேன்...?  
                                                             இப்படிக்கு உன் அன்பு அம்மா ...!
விஜயன் அப்படியே 'இடிந்து' போய் விட்டான். இன்றுவரை 'மன திற்குள் சொல்லி'... சொல்லி... 'அழுது' கொண்டுதான் இருக்கி றான்...! அன்பர்களே இது ஒரு "கதையல்ல நிஜம்"...!  அன்பு'  என்பது 'அன்னையிடம்' மட்டுமே எல்லா காலங்களிலும் 'அமுதமாய்' கிடைக்கும். "தாயின் அன்பை யாருக்காகவும் தள்ளி வைக்காதீர்கள்"...!.பெற்ற தாயை பெண்டாட்டிக்காக விட்டுத் தருபவன் ஆம்பளையே இல்லை. அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...