பின் தொடர்பவர்கள்

0242 வலது கை செய்வதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0242 வலது கை செய்வதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 29 ஆகஸ்ட், 2015

0242 வலது கை செய்வதை இடது கை அறியாது இருப்பதாக

வலது கை செய்வ தை இடது கை அறி யாது இருப்பதாக

அன்பர்களே! வலது கை செ ய்வதை இடது கை அறியாது இருப்பதாக என்று இயேசு சொன்னார் ஒருவேளை வலது கால், வலது கை என்ற  சகுனம் அடையாளம், யூத சமுகத்திலும் இருந்திருக்குமோ என்ற சந்தேகம் எனக்குள் இயல்பாக எழுகின்றது. நல்லவர்கள் வலது பக்கம் என்றும், கெட்டவர்கள் இடது பக்கம் என்றும் முதாலாலித்துவ சிந்தனை க்கு இயேசுவும் உட்பட்டவாரா? என்ற சந்தேகம் எனக்கு வேறு உண்டு. இந்த ஆராய்ச்சி இப்போது வேண்டாம் விட்டுவிடு ங்கள். சகுனம் சாஸ்திரம் இவைகள் எல்லாம் அவசியம்தானா என்ற கேள்வி இந்த அவசரமான உலகத்தில் கேட்கப்படுகி ன்றது. அண்ணன் என்னடா, தம்பி என்னடா அவசரமான உலக த்திலே, ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா காசு இல்லாதா குடும்பத்திலே என்ற சினிமா பாடல் உங்களுக்கு நினைவு இருக்கலாம். 

                               அவசரமான உலகத்திலே மனித மனங்கள் மிக அவசரமாக கடுகதியில் மாறிக்கொண்டிருகின்றது இந்த நிலையில் மனிதனிடம் தேங்கிக்கிடக்கும் அறங்களும், தர்ம சிந்தனைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றது. இதற்கு சகு னங்கள் பெரிதும் உதவி செய்கின்றதை அதை மாற்றவே ண்டும் என்ற தேவையை மிக எளிதாக சொல்லும் ஒரு சம்ப வம் கதையாகின்றது.  

                                                ஒருமுறை, கர்ணன், குளிப்பதற்கு முன், தன் இடது கையில் பிடித்திருந்த ஒரு தங்கக் கிண்ணத்திலிரு ந்து எண்ணெயை வலது கையில் ஊற்றி, உடலெங்கும் தேய்த்துக் கொண்டிருந்தார். அவ்வேளையில் ஓர் அந்தணர் அவரிடம் வந்து, யாசகம் கேட்டார். உடனே, கர்ணன், தன் இடது கையால், தங்கக் கிண்ணத்தை அந்தணர்க்குத் தர்மமாகக் கொடுத்தார். அந்தணர் உடனே, "கர்ணா, இடது கையால் தர்மம் கொடுத்தால், கொடுப்பவருக்கும், பெறுபவருக்கும் தீங்குவரும் என்று நமது சாஸ்திரம் சொல்கிறது. எனவே, கையைக் கழுவிவிட்டு, உன் வலது கையால் தர்மம் கொடு" என்று கேட்டுக்கொண்டார். கர்ணன் ஒரு புன்சிரிப்புடன், "அந்தணரே, அந்த சாஸ்திரம் எனக்கும் தெரியும். ஆனால், நான் இடது கையிலிருந்து வலது கைக்கு கிண்ணத்தை மாற்றுவதற்குள், என் மனம் மாறிவிடலாம் அல்லவா? எனவேதான், தர்மத்தை உடனே செய்தேன்" என்று பதில் சொன்னார்.
                                                         வலது கையால் கொடுத்தால்தான் தர்மமா? கொடுக்கின்ற தர்மத்தை விட, அதை இவ்வாறுதான் கொடுக்கவேண்டும் என்று நாம் வகுத்துக்கொண்ட சாஸ்திர ங்கள் முக்கியமாகிப் போகும்போது, தர்மமே தொலைந்து போகும் ஆபத்து உள்ளது அன்பர்களே. சாஸ்திரங்கள், சகு னங்கள் எல்லாம் எமக்கு தேவை இல்லை.  கொடுத்து உதவி செய்யும்  உயர்ந்த உன்னதமான செயலே நமக்கு தேவை, நம்மால் இயன்ற உதவிகளை நாம் பிறருக்கு செய்தால் அதுவே நம்மை வாழவைக்கும். தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர்காக்கும் பாடலை இப்போது செவிமடுங்கள் என் இனிய உறவுகளே!  அன்புடன் பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...