பின் தொடர்பவர்கள்

0079 இன்றைய நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0079 இன்றைய நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஜூன், 2015

0079 இன்றைய நாள்

இன்றைய நாள்


அன்பர்களே கிறிஸ்தவர்கள் முக்கி யமான ஒரு செபத்தை தினமும் செபிப்பார்கள் அதை கர்த்தர் கற்பி த்த செபம் என்று சொல்வார்கள், அதில் அன்றன்றுள்ள அப்பத்த இன்று தாரும் என்ற வசனம் வரும் அத னையே இன்றைய சித்தனை க்கதையாக உருவாக் குகின்றேன். ஒருமுறை ஒரு அரசன் பெரும் போர் ஒன்றிலே வெற்றிவாகை சூடினான். பெரும் களிப் பில் இருந்த அரசன், தன் தளபதிகளை அழைத்து உங்களுக்கு என்ன வேண்டுமோ அதனைகேளுங் கள் தருகின்றேன் என்று ஆணையிட்டான். இதுதான் சந்தர்ப்பம் என்று எண்ணி, தளபதிகள் மாளிகை, கோட்டைகள் கட்டித்தருமாறு கேட்டனர் ஆனால் ஒரு தளபதி மட்டும் தனக்கு கொஞ்சப்பொன்னும் பொருளும், இரண்டு வருடத்திற்கான அரசவிடுமு றையும் தேவை என்று கேட்டு அன்றே பெற்றுக்கொ ண்டான். இதனைப்பார்த்த மற்ற தளபதிகள், அவ னைப்பார்த்து, நீ ஒரு முட்டாள், மன்னனிடம் இவ்வ ளவு அற்பமான கோரிக்கையை கேட்டு பெற்றுக் கொண்டாயே, எங்களைப்போல கோட்டை கொத்த ளங்கள் என்று கேட்டிருக்கலாமே என்றார்கள். அத ற்கு அந்த தளபதி நானா முட்டாள்? எனக்கு இன்றை க்கே நான் கேட்டது கிடைத்துவிட்டது, கோட்டை கொத்தளங்கள் கட்ட வருடக் கனக்காகும், ஒருவே ளை மன்னன் மற்றுமொரு போரில் தோற்றுவிட் டால், உங்கள் பாடு அதோகதிதான், இன்று கிடைத் தது எனக்கு போதும், என்று பதில் சொன்னான். ஆம் அன்பர்களே! நாளை நாளை என்று எண்ணி, இன் றைய பொழுதை தொலைத்துவிடக்கூடாது என்ப தற்காகவே இயேசு இந்த வார்த்தையை அந்த செபத் தில் இணைத்துள்ளார். இதயங்களே இறைவன் கொடுத்த இன்றைய நாளுக்கு நன்றி சொல்லி வாழ் வைத்தொடங்குங்கள்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...