பின் தொடர்பவர்கள்

புதன், 26 பிப்ரவரி, 2025

கிளிஞ்சது டவுசர் சார் !

 கிளிஞ்சது டவுசர் சார் ! பேசாலைதாஸ் 


புத்திசாலித்தனத்துக்கு வயது, தோற்றம், அதிகாரம், பதவி இவையெல்லாம் அவசியமே இல்லை என்பதை தெளிவாக உணர்த்தும் கதை இது! ஒரு பையன் தினம் வங்கிக்கு வந்து ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்து கொண்டு இருந்தான்.

இதை கவனித்த வங்கி மேலாளர் அவனை என்ன சேதி என்று கேட்க அதற்கு அந்த சிறுவன் வாங்க உங்க உங்க அறைக்கு அங்க போய் பேசலாம்! என்றான்.

உள்ளே போனதும் சிறுவன் சொன்னான் சார்! தினம் நான் ஒருவரிடம் ஆயிரம் பந்தயம் கட்டுவேன்! ஜெயித்த காசை இங்கு வந்து டெபாசிட் செய்கிறேன் என்றான். சரி இன்று என்னுடன் பந்தயம் கட்டு ஜெயித்தால் உனக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன்! சொல்லு என்ன பந்தயம்.

சிறுவன் சொன்னான் என் கண்ணை என்னால் முத்தமிட முடியும்! சரி பந்தயம் தயார் எங்கே உன் கண்ணை நீ முத்தம் இடு பார்க்கலாம். என்றார் மேலாளர்.

அவனும் உடனே தன் செயற்கை கண்ணை முகத்தில் இருந்து கையில் எடுத்து முத்தம் கொடுத்தான்!

வங்கி மேலாளரும் தன் தோல்வியை ஒப்பு கொண்டார்.

ஆனால் அவர் தோல்வியை தாங்கி கொள்ள முடியவில்லை, சிறுவனிடம் இன்னும் ஒரு தடவை பந்தயம் கட்டலாம், ஆனால் இந்த தடவை பந்தயம் என்னை வைத்து கட்ட வேண்டும். சரி என்றான் சிறுவன். ஆனால் சிறுவன் ஒரே ஒரு கண்டிசன் வங்கியில் வேலை செய்யும் பத்து பேர் முன்னிலையில் தான் நடக்கனும் என்று சொல்ல அவரும் சரி என்றான். மேலாளரை பார்த்து நீங்கள் இன்று பச்சை கலரில் ஜட்டி அணிந்து வந்துள்ளீர்கள், அதே ஆயிரம் ரூபாய் பந்தயம்! என்றான். இப்பொழுது மேலாளருக்கு சந்தோசம்! ஏனென்றால் அவர் அணிந்திருக்கும் உள்ளாடை கறுப்பு கலர். தன்னிடம் இருந்து போன ஆயிரம் ரூபா திரும்ப வந்துவிடும், என்றும், ஒரு சிறுவனிடம் வென்றோம் என்ற சந்தோசமும் கிட்டும் என்று எண்ணி,சரி என்று பந்தயதிற்கு ஒப்பு கொண்டார்.

பத்து பேர் முன்னிலையில் அவர் தன் கால் சட்டையை விளக்கி காட்ட, என்ன ஆச்சரியம் அவர் அன்று பச்சை நிறத்தில் உள்ளாடை அணியவே இல்லை. சிறவனை ஜெயித்து விட்டோம் திரும்பி ஆயிரம் ரூபாயை வாங்கி விட்டோம் என்று மகிழ்ச்சியில் அவர் தள்ளி குதிக்க!

வங்கி ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து என்ன சார் இப்படி செய்து விட்டீர்கள். என்று சொல்ல அவர் பதறி போய் என்ன ஆச்சு என்று கேட்க,

இந்த சிறுவன் எங்கள் எல்லாரிடமும் வந்து உங்கள் வங்கி மேலாளரை இன்று உங்கள் முன் டவுசரை கழட்டி நிற்க வைக்கிறேன் என்று ஆயிரம் ரூபாய் பந்தயம் கட்டினான். நாங்களும் நீங்கள் மிகவும் கண்டிப்பானவர் கட்டாயம் நாங்கள் தான் ஜெயிப்போம் என்று பத்து பேரும் தலைக்கு ஆயிரம் பந்தயம் கட்டினோம் என்றார்கள்.

சிறுவன் தோற்ற ஆயிரத்தை மேலாளரிடம் கொடுத்து விட்டு பத்து பேரிடம் பத்தாயிரம் வாங்கி கொண்டு வேற வங்கிக்கு செல்ல ஆரம்பித்தான்.அன்புடன் பேசாலைதாஸ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வீரமங்கையர் வெல்வர்

  வீரமங்கையர் வெல்வர்   பேசாலைதாஸ் ‘ ‘ஓர் ஊரில் ஒரு வணிகன் இருந்தான். அவனுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. அதனால் அவன் கடனாளி ஆகிவிட்டா...