பின் தொடர்பவர்கள்

0388 தாய்ப்பாசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0388 தாய்ப்பாசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 23 ஜனவரி, 2017

0388 தாய்ப்பாசம்

தாய்ப்பாசம்
தாய்ப்பாசம்
அன்பு நண்பர்களே! தாய் அன்பை பற்றி நான் அதிகமாக எழுதிவருகின்றேன். காரணம் நான் இன்று நல்ல நிலையில் இருப்பதற்கு காரணம் என் தாய்! மீன்பிடிக்கிராமத்தில் நாங்கள் பிறந்தாலும், நாங்கள் எட்டு ஆண்பிள்ளைகள், வறுமை வாட்டிய பொழுதிலும் கூட, எங்கள் தாய் எங்களை கடற்கரைக்கு அனுப்பியதில்லை, எப்படியோ படித்து பட்டதாரிகள் ஆகவேண்டும் என்று உறுதிபூண்டவள். நாங்கள் படித்து பட்டம் பெற்ற பின் என் தாய் எங்களை விட்டு மறைந்து போனாள், தாயிடம் நான் பட்ட கடன் இன்னும் தேங்கிக்கிடக்கின்றது. அது கதை வடிவமாய் பீறிட்டு வருகின்றது. நான் எதையாவது சொன்னால் ஒரு கதையோடு ஆரம்பிப்பேன். அது போல இதோ இன்னொரு கதையோடு,,,,,,,,,,,,,,,,,,  ய‌ப்பான் நாட்டில் பழங்காலத்தில் ஒரு பழக்கம் இருந்தது, அதாவது பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக ஆற்றல் குறைந்து, மற்றவர்களுக்கு எவ் விதப் பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்துவிட் டால், அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் உயரமான மலைகளின் மேல் வைத்துவிட்டு வந்துவிடுவா ர்கள். எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள அம் முதியோர்கள் பசி, தாகத்தினால் தனிமையில் வாடி வதங்கி மடிவார்கள். இப்படியான சூழ்நிலையில் ஓர் இளைஞன் முதுமையடைந்த தன் தாயை சுமந்து கொண்டு மரங்கள் சூழ்ந்த காட்டுப்பகுதியில் மலை உச்சியை நோக்கி நடந்து கொண்டிருந்தான். தாய், மகன் இருவருமே எதுவும் பேசவில்லை! ஆனால் சிறிது நேரத்தில் தன்தோளில் இருந்த தாயார். ஏதோ ஒருவித மணம் கொண்ட மரங்களின் சின்னசின்ன கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வரு வதை மகன் அறிந்தான். உடனே, ""அம்மா, ஏதோ ஒரு மாதிரியான மரத்தின் கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருகிறீர்களே! ஏன்?'' என்று கேட்டான். அதற்கு தாயார், ""மகனே, நீ என்னை மலை மீது விட்டுவிட்டு வீடு திரும்பும்போது வழி தெரியாமல் திண்டாடக் கூடாதல்லவா? இங்கே போட ப்பட்டுள்ள கிளைகளை கவனித்து நடந்தால் வழி தவ றாமல் நீ பாதுகாப்பாக வீடு போய் சேரலாம். அதற்காகவே கிளைகளை அடையாளமாகப் போடுகிறேன்'' என்றாள். ""வயதாகிவிட்ட தன்னை தவிக்கவிட்டுச் சென்றாலும் மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டும் என்று நினைக்கும் பாசமிகுந்த இந்த தாயா பயனற்றவர்?  என்று உள் மனம் கேட்க, அவன் தன் தாயை மீண்டும் தன் வீட்டுக்கே கொண்டு வந்து பாசத்துடன் பராமரிக்கலானான் . அதன்பின்பு அந்தக் கொடூரமான பழக்கம் அந்த நாட்டை விட்டே ஒழிந் தது. இந்த கதை சொல்ல வரும் கருத்து நம் வாழ்வு க்கு மிக முக்கியம்.. நீ நல்லவனா கெட்டவனா என்று தெரிவதற்கு முன்னாலேயே தன் வயிற்றில் இடம் கொடுத்தவள் உன் தாய் ❗ எத்தனை ஜென்மம் சம்பாதித்தாலும் நீ இருந்த வீட்டிற்கு வாடகை கொடுக்க முடி யாது என்றால் அது உன் தாயின் கருவறை என்பதை மறந்து விடாதே ❗ எத்தனையோ கஷ்டங்கள் நஷ்ட ங்கள் துன்பங்கள் துயரங்கள் அசிங்கங்கள் அவமா னங்கள்  கடந்த பிறகும் ஒன்றுமே தெரியாதது போல் காட்டிக்கொன்டு குடும்பத்தின் மத்தியில் சிரித்துக் கொன்டிருக்கும் தந்தைக்கு நிகரான நம்பிக்கை ஊட் டும் புத்தகம் இந்த உலகில் வேரேதுமில்லை . நம் பெற்றோர்கள் எப்போதும் நம் நலன் நினைப்பவர்கள். அவர்களை கண் போன்று பாதுகாப்போம். என அன்பர்களே என் கருத்துக்கு நீங்களும்  உடன்பாடுதானே!          அன்பின் பேசாலைதாஸ் பேர்கன் நோர்வே        அன்பின் பேசாலைதாஸ் பேர்கன் நோர்வே

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...