பின் தொடர்பவர்கள்

0300 தியாக மேகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0300 தியாக மேகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 ஜூலை, 2019

0300 தியாக மேகங்கள்

தியாக மேகங்கள்  (சிறுகதை) பேசாலைதாஸ்
மோகத்தால் மழை பொழியும், மேகத்துக்கு இலாபம் என்ன?
(முகநூலில் அன்பர் ஒருவரின் பதிவில் இருந்து, கரு கதையாகின்றது)

         
                                ரேவதிக்குக்கு மனது இருப்புக்கொள்ளவில்லை, மனது க்குள் இருக்கும், எல்லா எண்ணச் சுமைகளையும் அம்மாவிடம் கொட் டித்தீர்க்கவேண்டும் என்ற              வேனவா! அதுவும் அம்மா மடியில், தலை சாய்த்து, நான் சொல்ல வேண்டும், அம்மாவும் அவள் பாட் டிற்கு என் தலையை கோதியபடி, "இம்" கொட்டிக்கொண்டு கேட்க வேண்டும்,,,, ஆனால் காலச்சூழல் அதற்கு இடம் கொடுக்கவேண்டுமேஆசைக்காத லனை கரம்பிடித்து, புகுந்த வீட்டில் காலடி எடுத்துவைத்த ரேவதிக்குத் தான் எத்தனை மாற் றங்கள்? புகுந்தவீடு வந்து ரேவதிக்கு ஆறுமாதம் ஆகிறது, ஆசைக்கண வன் வேலை விடயமாக வெளியூர் சென்றுவிட்டார் திரும்பிவர மூன்று நாடகள் ஆகும், வீட்டில் மாமி,மாமா மைச்சாள்மார் எல்லோரும் ஒரு நாள் திருப்பதி பயணம், அப்பாடா இன்றுதான் அம்மா வுக்கு கடிதம் எழுத வசதியான நேரம், மனதில் நினைத்த ரேவதி எழுத் தில் புதைந்து விட்டாள்!

அன்புள்ள அம்மா,
                                                                      எல்லா பெண்களைப் போலவே கல்யாண கனவில் களித்து மனதைக் கொள்ளையடித்தவரை உங்கள் சம்மதத்து டன் குதூகலமாக ஆடம்பரமாக திருமணம் புரிந்து கொண்டேன் . பின் னர் தான் தெரிந்தது வாழ்க்கை சினிமாவில் போடும் சுபத்திற்கு பின்பு தான் தொடங்குகிறதென்று. வாழ்க்கையில் விரும்புவது விரும்பப் படுவ தென்பதையும் தாண்டி நிறைய இருக்கிற்து என்று தெரிய வருகிறது. எத்தனை பொறுப்புகள்? எத்தனை சுமைகள்? எத்தனை எதிர் பார்ப்பு கள்? எத்தனை தியாகங்கள்? எத்தனை ஏமாற்றங்கள்? நினைத்த நேரத் தில், நிம்மதியாக முழு தூக்கம் கலைந்த நேரத்தில் எழுந்திருக்க முடியவில்லை..

                                                                          குடும்பத்தில் மற்றவர் விழிக்கும் முன் நான் விழித்து என் வேலைகளை ஆரம்பிக்க வேண்டி இருக்கு.. உன் னோடு இருந்த நாட்களில் எனக்கென்ற விருப்பமான உடைகளில் சிட் டாக பறந்து கொண்டிருந்தேன்.. இங்கே அவர்கள் விரும்பிய உடையில் வலம் வருவதையே விரும்புகின்றனர்.. இதோ என் தோழியை/தோழ னைப் பார்த்து விட்டு வருகிறேன் என்று உன்னிடம் சொல்லிவிட்டு சென் றது போல் சொல்லிச் செல்ல இயலவில்லை. என் தேவைகளை விட அடுத்தவர் தேவைகளை முன் வைத்தே நான் நடந்து கொள்ள வேண்டி இருக்கு.. நினைத்த நேரத்தில் தூங்க கூட முடிவதில்லை. எனக்கு விருப் பமான டிவி நிகழ்ச்சியைக் கூட பார்க்க முடிவதில்லை..

                                                                      சில நேரங்களில் எதற்கு இந்த திருமணம் என்று அலுப்பாக இருக்கிறது.. இந்த திருமணம் என் சுதந்திரதை அல் லவா பறித்து விட்டது.. என் சுயத்தை அல்லவா சூறையாடி விட்டது உன் னிடம் இருந்த போதே மிக மகிழ்வாக இருந்தேனே! உன்னிடம் திரும்ப வந்து விடலாமா என்று கூட தோன்றுகிறது. உன் மடியில் படுத்து கொள் ளனும் போல இருக்கிறது அம்மா வேண்டாம் வேண்டாம் என்று நான் சொல்ல சொல்ல ஒரே ஒரு இட்லி போட்டுக்கோ.. உனக்கு பிடிக்குமேன்னு பால் கோவா செஞ்சேன்னு நீ பின்னாலயே வந்து வந்து ஊட்டி விடுவதை கொஞ்சிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

                                                                எந்த கவலையும் இல்லாமல் உன் அரவணை ப்பில் உன் கொஞ்சலில் உன் பாதுகாப்பிலேயே இருந்திருக்க கூடாதா என்று தோன்றுகிறது.. ஆனால் அடுத்த கனமே நீயும் என் வயதில் என்னை மாதிரி தானே உணர்ந்திருப்பாய். நீ உன் திருமணத்தில் செய்த தியாகங்கள் தானே எனக்கு இந்த அழகிய நினைவுகளைக் கொடுத்திருக் கிறது.. நீ அன்று நான் இன்று நினைப்பது போல் நினைத்திருந்தால் நான் இன்று இருப்பேனா? நீ செய்த தியாகங்களையும் உழைப்பையும் பாசத் தையும் எதிர்பாரா அன்பையும் நான் திருப்பித் தர வேண்டாமா.. என்று நினைத்து கொள்கிறேன்..அதுவும் உன்னிடம் இருந்து கற்றது தான்.. அப்படி நினைக்கும் போது வாழ்க்கையே எளிதாக தெரிகிறது.. தெளி வாக புரிகிறது

                                                                                              காலம் செல்ல செல்ல நீ உன் குடும்பத்தை நேசித்தது போல் நானும் என் குடும்பத்தை நேசிக்க ஆரம்பித்து விடுவேன்.. நீ செய்த தியாகங்களை நானும் செய்ய தயாராகி விடுவேன்.. உனக்கு நாங்கள் கொடுத்த மன உறுதியை திடத்தை என் குடும்பமும் எனக்கு தரும். ஆமாம் மா நீ எனக்கு கொடுத்ததை நானும் என் குடும்பத்திற்கு கொடுக்க தயாராகி விட்டேன்..
                                                                                                  நன்றிம்மா…

                                                                                                                                                                                                                                                               என்றும் அன்புடன்…!!
                                                                                          உன் தேவதை ரேவதி

                                                                                                                                                           

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...