பின் தொடர்பவர்கள்

0497 விழிப்புணர்வுடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0497 விழிப்புணர்வுடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 12 ஜனவரி, 2018

0497 விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்

விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
அன்பர்களே விழிப்புணர்வு என்று நாம் அடிக்கடி கேள்விப்படுவதுண்டு. மிகச்சரி யான விளக்கத்தைக்கொண்டிருக்கின்றா ர்களா? என்பதே ஒரு விழிப்புணர்வு சம்ப ந்தப்பட்டதே! விழிப்புணர்வு என்றால் நான் விளன்க்கிக்கொண்டது இதுவே, அதாவது அறிவை விழிப்புடன் இருக்கச் செய்வதா கும்.  எதையும் நன்றாக சிந்தி த்து, அறிவி ன்பால் சார்ந்து செயல்படவே ண்டும், இத யத்தின் போக்கிற்கேற்ப நாம் சிந்தித்தால் அது தவறான பாதையில் போக நேரிடும். நமது எண்ணங்கள் அறி வினால் ஆராய ப்படவேண்டும்.  எதையும் நன்றாக அறி வைக்கொண்டு, சிந்தி செயல்படு, அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று நீ சிந்திக்காதே! உன்னையே நீ அறிவாய் என்று சாக்ரட்டீஸ் விழிப்புணர்வுடன் முழங்கியதை இங்கே கவனியு ங்கள். விழிப்புணர்வுக்கு அழகிய கதை ஒன்றை நான் சொல்கின்றேன்.                                                                                            தன்னுடைய விழிப்புணர்வை வளர்த்துக்கொள்ள விரும்பிய ஒருவர் ஒருநாள் ஓர் ஆசிரமம் சென்றார். அங்கிருந்த குருவிடம் அவர் சென்று தன்னைச் சீடனாக ஏற்குமாறு கேட்ட தோடு, விழிப்புணர்வை அதிகரிக்கும் கல்வியைத் தனக்குப் புகட்டுமா றும் வேண்டினார். அதற்கு குரு, இது கடினம், ஆனால், உண்மையிலேயே விழிப்புணர்வை நீ அதிகரிக்க விரும்பினால் சிலவற்றைக் கடைப்பிடி க்க வேண்டும் என்று கூறினார். சீடரும் அதற்கு ஒப்புக் கொண்டார். குரு தந்த பலதரப்பட்ட பயிற்சிகளில், அச்சீடர் நாள் முழுவதும் விழிப்புடன் இருக்க வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில் குரு சீடரிடம், நீ உன்னுடைய இலக்கை அடைந்துவிட்டாய், அதனால் இப்போது வாழ்வில் மற்ற வேலை களுக்கு நீ செல்லலாம் என்று சொன்னார். இதில் மகிழ்வடைந்த சீடர் ஆசிரமத்தைவிட்டுச் செல்வதற்கு முன்னர், அந்தக் குருவின் விழிப்புண ர்வைப் பரிசோதித்துப் பார்க்க எண்ணினார். அந்நேரமே சீடரின் எதிரே வந்துகொண்டிருந்தார் குரு. சரி, இந்தக் கல்லை எடுத்து குருவின்மீது எறிந்து அவரின் விழிப்புணர்வைப் பார்க்கிறேன் என்று எண்ணினார் சீடர். எப்போது சீடர் இவ்வாறு சிந்தித்தாரோ அப்போதே குரு சீடரிடம், இதோ பார், எனக்கு வயதாகிவிட்டது, நீ என்மீது கல் எறிந்தால் ஒரு வேளை என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது, அதனால் என்மீது கல் எறியும் எண்ணத்தை உன் மனதில் கொண்டு வராதே என்று சொன்னா ர். இதைக் கேட்டு திடுக்கிட்ட சீடர் குருவின் கால்களைப் பற்றிக்கொண்டு, ஐயனே, நான் மேலும் பயிற்சி பெற விரும்புகிறேன், பிறர் எண்ணங்களை அறிவதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். அப்போது குரு சீடரிடம், இதற்கு முதலில் நீ உன்னுடைய எண்ணங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும், உன்னுடைய எண்ணங்கள் மீது முழுமையான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சொன்னார். விழிப்புணர்வு என்பது அறிவை விழிப்புடன் இருக்கச் செய்வதாகும்.  அன்புடன் பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...