பின் தொடர்பவர்கள்

0042 இலவசமாய் கிடைப்பதற்கு மதிப்பில்ல லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0042 இலவசமாய் கிடைப்பதற்கு மதிப்பில்ல லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 மார்ச், 2021

0042 இலவசமாய் கிடைப்பதற்கு மதிப்பில்லை

இலவசமாய் கிடைப்பதற்கு மதிப்பில்லை பேசாலைதாஸ்

இலவசமாய் நமக்கு கிடைப்ப தைப்பற்றி நாம் ஒருபோதும் அக்கறைப்படுவதில்லை, அதன் பெறுமதியும் நமக்கு தெரிவதி ல்லை. சுத்தமான நீரைப்பற்றி முன்பு மக்கள் அக்கறைப்பட்ட தில்லை, ஆனால் வரட்சி ஒரு புறம். சூழல் மாசடைதல் மறு புறம் வந்தவுடன் நல்ல சுத்த மான நீரின் அருமை பற்றி மக் கள் கவலைப்படுகின்றார்கள். இதே போன்றதொரு நிலைமை நாம் சுவாசிக்கும் காற்றுக்கும் ஏற்படலாம்! இதை அழகாக விளக்கும் அருமையான உண்மை சம்பவம் இதோ!

                                                      ஒரு நாள் காலை 8 மணிக்கு வாஷிங்டன் இரயில் நிலையம் அருகில் ஒரு வயலின் கலைஞர் தன்னுடைய வயலினை எடுத்து வாசிக்கத் தொடங்கினார். பரபரப்பான காலைப் பொழுது என்பதால் மக்கள் வேகவேகமாக சென்று கொண்டிருந்தனர். மூன்று நிமிடம் கழித்து, அந்த இசை கலைஞ ருக்கு வயதான ஒரு பெண் மணி ஒரு டாலர் போட்டுவிட்டு சென் றார். ஒரு சிலர் அவரை கடந்து போகும்போது சிறிது நேரம் நின்று, கைக்கடிகாரத்தில் மணியை பார்த்து விட்டு, வேகமாக சென்று கொண்டிருந்தனர். ஒரு 3 வயது சிறுவன் மட்டும் சிறிது நேரம் நின்று, அவரைப் பார்த்தான். அதற்குள் அவன் தாய் தரதரவென்று இழுத்து கொண்டு சென்றார். அடுத்த அரை மணி நேரத்தில் ஒரு 20 பேர் பணம் போட்டுவிட்டு சென்ற னர். 

                                       பெரும்பாலும் அவரைக் கடந்து செல்லும்போது நின்று இரசித்தவர்கள், சிறுவர்களே. 45 நிமிடம் அவர்  தொடர்ச்சி யாக வாசித்து முடித்தவுடன் ஒரு வர் கூட கை தட்டவில்லை, யாரும் பாராட்டவி ல்லை. அவர் வாசித்து முடித்துவிட்டார் என்ப தைக் கூட அங்கிருந்தவர்கள் பொருட்படுத்தவில்லை. அவருக்கு கிடைத்தது மொத்தம் 32 டாலர். அங்கு வயலின் வாசித்தது, உலக த்தின் மிகச் சிறந்த வய லின் வித்வான், ஜோஷுவா பெல், என்பது அங்கு இருந்த யாருக்கும் தெரியவில்லை. அவர் வாசித்த வயலி னின் விலை 3.5 மில்லியன் டாலர்கள். இர ண்டு நாட்களுக்கு முன் னர் அவர் அரங்கில் நடந்த இசை நிகிழ்ச்சியை ரசிக்க நுழைவு கட்டணம் 5000 ரூபாய். இது ஒரு உண்மை சம்பவம். வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிக்கை, பொது மக்களின் இசை பற்றிய ஆர் வம், அவர்களின் நடவடிக்கைகள், கரு த்துகளை தெரிந்துகொள்ள இந்த முயற்சியை மேற் கொண்டது. ஒரு பொது இடத்தில் எவ்வளவு பெரிய இசை கலைஞன் இசை நிகழ்ச்சி நடத்தினாலும் இது தான் நிலை. மக்கள் யாரும் உண்மையான திறமை க்கு மதிப்பு கொடுப்பதில்லை. எதிர்பாராத இடத்தில் எத்தனையோ இசை கலைஞர்கள் அருமையாக வாசிக்கிறார்கள், ஆனால் அதை யாரும் காது கொடு த்து கேட்பதுமில்லை, பாராட்டுவதுமில்லை.

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...