பின் தொடர்பவர்கள்

0264 காட்டுராணிக்கோட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0264 காட்டுராணிக்கோட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

0264 காட்டுராணிக்கோட்டை

காட்டுராணிக்கோட்டை

அன்பர்களே காடு, அது முட்புதர்க ளும் பற்றைகளும், பழமரச் செடிக ளும், பூக்களும் நிறைந்த இயற்கை இடம். அந்தக்காடுகளுக்கு சொந்தக் காரனும் இல்லை, காவாலாளியும் இல்லை. காட்டுராணிக் கோட்டை களுக்கு கதவுகள் இல்லை.அதை சொந்த கொள்ள, காவல்காக்க கட வுளே அன்றி, ஒருவரும் இல்லை, என்ற பாடல் நினைவுக்கு வருகின் றதா? நமது மனித மனங்களும் இப் படி காடுபோன்றதுதான் அன்பர்க ளே! நமது மனம் சிலவேளைகளில் தர்மம் செய்யச்சொல்லும், சிலவேளைகளில் சுயநலமாய் அதர்மம் செய்ய தூண்டும், ஆனால் எதை எந்த நேரம் செய்யவேண்டும் என்ற குழப்பம் அதற்கு உண்டு. மனிதமனம் காடு போன்றது என்று இராம கிருஷ்ணர் சொன்ன கதை இது! ஒரு நாள் ஒரு செல்வந்தர் காட்டு வழியே போய்க் கொண்டிருந்தார். வழிப்பறிக் கொள் ளையர்கள் அவரிடம் ஓடி வந்து, மரியாதையா வச்சிருக்கிற எல்லாத்தையும் கொடுத்திடு என்று மிரட்டினார்கள். இவரும் உயிருக்குப் பயந்து தான் வைத்திருந்த எல்லாவற்றையும் எடு த்துக் கொடுத்தார். எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு ஓடி ப்போகும் நேரத்தில் ஒரு திருடர் மற்ற இருவரிடம், இவனை உயிரோடு விட்டு வைப்பதில் இலாபம் இல்லை என்று சொல் லிக்கொண்டே கத்தியைக் கையில் எடுத்தார். ஆனால் அடுத்த திருடர், வேண்டாம், இவரைக் கொல்வதால் நமக்கென்ன இலா பம், அதனால் இவரின் கை கால்களைக் கட்டி இங்கேயே போட் டுவிட்டுச் சென்று விடுவோம் என்றார். மூன்று பேரும் சேர்ந்து அந்தச் செல்வந்தரைக் கட்டி சாலையோரமாகப் போட்டுவிட் டுச் சென்று விட்டார்கள். சிறிது நேரம் சென்று மூன்றாவது திருடர் திரும்பி வந்து அந்தச் செல்வந்தரை, இரக்கமுடன் பார் த்து, உனக்கு வலிக்கிறதா என்று கேட்டு, கட்டுகளை அவிழ்த்து விட்டார். பின்னர், என்னோடு வா, உனக்கு வழி காட்டுகிறேன் என்று அழைத்துக்கொண்டு போனார். சிறிது தூரம் நடந்த பின் னர், அதோ பார், அதுதான் உனது வீடு, போ என்று கையைக் காட்டினார். அந்தத் திருடருக்கு நன்றி சொன்ன அந்தச் செல்வந் தர், நீயும் என்னோடு வா, எனது வீட்டார் மகிழ்ச்சியடைவர் என்று அழைத்தார். அதற்கு அந்தத் திருடர், இல்லை. உங்க ளோடு வரக்கூடிய தகுதி எனக்கில்லை, வந்தால் காவலர்கள் பிடித்துக் கொள்வார்கள் என்று சொல்லித் தன் வழியே சென் றார். அன்பர்களே, இந்தக் கதையைச் சொன்ன ஸ்ரீ இராம கிருஷ்ணர், மனித வாழ்க்கையும் ஒரு காடு போன்றது, இந்த மூன்று திருடர்களின் குணங்கள் ஒவ்வொரு மனிதருக்குள் ளும் உள்ளன என்று விளக்கினார். காடு போன்ற மனதை வீடாக்குவோம் வாருங்கள். அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...