பின் தொடர்பவர்கள்

0406 குழந்தைகளின் தன் நம்பிக்கை! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0406 குழந்தைகளின் தன் நம்பிக்கை! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 8 பிப்ரவரி, 2017

0406 குழந்தைகளின் தன் நம்பிக்கை!

குழந்தைகளின் தன் நம்பிக்கை!

அன்பர்களே! நமது குழந்தைகள் எல்லாம் அதி புத்திசாலியான குழந்தை களாய் இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோர்களும் விரும்புவ துண்டு. ஆனால் எல்லாக் குழந்தைக ளும் அப்படி இருப்பதில்லை. 
அதற்காக புத்திசாலியான பிள்ளைகள் தான் வாழ்க்கையில் வெற்றியடைகி ன்றார்கள் என்று அர்த்தம் இல்லை! தாமஸ் அல்வா எடிசன் ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிசயங்களை கண்டு பிடித்த விஞ்ஞானி! மின்சார விளக்கை கண்டுபிடித்து உலகுக்கு ஒளியூட்டி யவர் இவரே! இவர் சாதாரண பிள்ளை கள் போல பாடசாலையில் படிக்க முடியாத அளவு ஆற்றல் குறைந்த மாணவன். அவனை விஞ்ஞான மேதை ஆக்கியது அவன் தாய். இது உண்மை அதை நிரூபிக்கும் ஒரு உண்மை சம்பவம் இதோ!

ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் ஆல்வா எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடு க்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடு த்தான். அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும் படி இப்படி ( மாற்றி )படித்தாள்

                                                                “உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமை யான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது” என்று பல ஆண்டுகளுக்கு பிறகு எடிசனின் தாயாரும் காலமாகிவிட்டார் . 
எடிசனும் அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராக கண்டுபிடிப்பாளராகவும் ஆனார்…..!
இப்படி இருக்கையில் ஒருநாள் தனது வீட்டின் பழைய சாமான்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது அவர் தன் அம்மாவிடம் முன்பொருமுறை பள்ளியிலிருந்து கொண்டுவந்து கொடுத்த கடிதம் எதேச்சையாக கண்ணில் பட அதை எடுத்து படித்துப்பார்த்தார்…… அதில் இப்படி எழுதியிருந்தது
“மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்பவேண்டாம்” என்று……
“இதைப்படித்த எடிசன் கதறி அழுதார்” பின் அவரது டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார் 
மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா எடிசன் தனது “தாயாலேயே” மாபெரும் கண்டுபிடிப்பாளனானான்” என்று.
தன்பிள்ளைகள் மீதான “உயர்வான எண்ணங்கள்” அவர்களை மிக உயரத்துக்கு கொண்டு செல்லும்..! 
குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்.. அன்புடன் பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...