பின் தொடர்பவர்கள்

0554 நாளை நாளை என்றிருந்தேன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0554 நாளை நாளை என்றிருந்தேன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 30 ஜூன், 2018

0554 நாளை நாளை என்றிருந்தேன்,,,,,,,,,,,,

நாளை நாளை என்றிருந்தேன்,,,,,,,,,,,,
அன்பர்களே ஒரு முறை தலாய்லாமாவிடம் பத்திரிகை யாளர் ஒருவர் கேள்வி கேட்டார். உங்களை ஆச்சரியப்பட வைக்கும் நிகழ்ச்சி எது என்று. அதற்கு அவர் சொன்னார் சில மனிதர்க ளின் அறியாமை! நாளைய வாழ்வுகாக, இன்று எதையும் அன்பவிக்காமல் மாடாய் உழைத்து சேமிக்கின்றார்கள். பின்னர் காலம் சென்றவு டன் சேர்த்த பணத்தையெல்லாம்   நோய்க்காக செலவழிக்கின்றனர் ஆக மொத்தத்தில் அவர் கள் கட‌ந்த காலத்தையும் அன்பவிக்கவில்லை. நிகழ்காலத்தையும் அனுபவிக்கவில்லை, எதிர்காலத்தையும் அனுபவிக் கபோவதில்லை. வாழ்கையை போதும் என்ற மனோ நிலையில் அனுப விக்க மறந்துவிடுகின்றனர் என்று சொன்னார். இன்று இப்போது வாழ் வதே புத்திசாலி த்தனம் அதற்கு சம்பவத்தை கதையாக சொல்கின்றேன்.

                                               ஒருமுறை ஒரு மனிதருக்கு, அவர் செய்யாத குற்றத் துக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டது. அடுத்த நாள் காலை அவரை தூக்கில் போட வேண்டும் என்று அந்த நாட்டின் அரசர் உத்தரவிட்டு விட்டார். இப்படி ஒரு தீர்ப்பு சொன்னவுடன், அவர் அரசனை நோக்கி, ‘அரசே! எனக்கு ஒரு வருடம் அவகாசம் கொடுத்தால், உங்கள் குதிரையைப் பறக்க வைப் பேன் என்று சொன்னார். இதைக் கேட்டுவிட்டு சிந்தனையில் ஆழ்ந்த அரசர், கடைசியில், ‘சரி! ஆனால் அப்படி குதிரை பறக்காவிட்டால், உன் தலையை யானையின் காலுக்குக் கீழே வைத்து நசுக்கிவிடு வேன்’ என்று எச்சரித்து, அவனுக்கு ஒரு வருடம் காலக்கெடு கொடுத்தனுப்பினார். 

                                                                  அரசரின் குதிரையை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்த அம்மனிதரைப் பார்த்த அவர் மனைவி, ‘என்ன இப்படி செய்து விட்டீர்கள்? குதிரைக்கு எப்படி பறக்க கற்றுக் கொடுப்பீர்கள்? எங்காவது குதிரை பறந்து கேள்விப்பட்ட துண்டா?’ என்று சோகமாகக் கேட்டார். அதற்கு அந்த மனிதர், ‘எனக்கு ஒரு வருடம் அவகாசம் இருக்கிறது. இந்த ஒரு வருடத் தில் ஒருவேளை அரசர் இறந்துவிடலாம், அல்லது நானே இயற்கை மரணம் அடைந்துவிடலாம் அல்லது இந்தக் குதிரை இறந்துவி டலாம். இல்லையென் றால், இந்தக் குதிரை பறக்கக் கூட கற்றுக் கொள்ளலாம், யாருக்குத் தெரி யும்?’ என்றார்.

                                                                            இந்த கதையில் நீங்கள் என்ன  புரிந்து கொள்கின்றீர்கள்? நாளை என்ன நடக்கப் போகிறது என்பதை தற்போதைய சூழ்நிலைகளை வைத்து தீர்மானிக்கத் தேவையில்லை. நாளை நடக்கப் போவதற்கு இப்போதிருக்கும் சூழ்நி லைகள் ஒரு வழிகாட்டியாக வேண்டு மானால் இருக்கலாமே தவிர, அவையே ஒரு தீர்மானமாக, இறுதி முடிவாக இருக்கத் தேவையில்லை. இன்றைய சூழல்களை நாளைய எதிர்காலமாக மக்கள் கற்பனை செய்து கொள்வதால்தான் அவர்களுக்கு துயரங்களும், மன அழுத்தமும் ஏற்படுகின்றன. அன்புடன் பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...