பின் தொடர்பவர்கள்

0197 நியாயமான தேவைகள்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0197 நியாயமான தேவைகள்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 ஜூலை, 2015

0197 நியாயமான தேவைகள்!

நியாயமான தேவைகள்!
நம் வாழ்வில் இறைவனின் ஆசீர்வா தம் எப்பொ ழுதும் தேவையாகவுள் ளது. நம் தேவைகளை அவர் அறி வார். அதற்காக நாம் உழைக்கவேண் டும் தேடவேண்டும் என்பதற்காக அறிவு ஆற்றல் எல்லாம் தந்திருக்கின்றார், ஆனாலும் நமது அறிவு, ஆற்றல் இவைகளை பயன்படுத்தியும் தேவைகள் பூர்த்தியாவதில்லை, சில சந்த ர்ப்பங்களில் ஆற்றல், அறிவு இவைகள் இல்லாத எத்தனையோ மனிதர்க ளை நாம் சந்திக்க நேரிடும், இதோ மளிகை கடை யில் கெஞ்சும் ஒரு ஏழை பெண்.மளிகைக்கடை முத லாளியிடம் ஓர் ஏழைப்பெண் வந்து, தன் குடும்பத்தி ற்கு அன்றிரவு மட்டும் உணவு செய்யத்தேவையா ன பொருள்களைக் கடனாகத் தரும்படி கெஞ்சி னார். அப்பெண்ணின் கணவர் உடல்நலமின்றி, வேலைக்குப் போக முடியாமல் இருந்தார். அவர்களுக்கு ஏழு குழந்தைகள். அவர்கள் அனைவரும் கடந்த சில நாட்களாக பட்டினியால் தவித்தனர். உதவி கேட்ட அப்பெண்ணை, அவ்விடத்தைவிட்டுத் துரத்திக் கொண்டிரு ந்தார் கடை முதலாளி.கடையில் பொரு ள்கள் வாங்கிவிட்டு, அதற்கு ரிய பணத்தைச் செலு த்த வந்த ஒருவர், இந்தக் காட்சியைக் கண்டு மனமி ரங்கி, அந்த முதலாளியிடம், "அந்தப் பெண்ணுக்குத் தேவை யானதைக் கொடுங்கள். நான் அதற்குரிய பணத்தைத் தருகிறேன்" என்று சொன்னார். முத லாளி சலிப்புடன் அந்தப் பெண்ணிடம், "சரி, உனக் குத் தேவையான பொருள்களை இந்தக் காகிதத்தில் எழுதி, தராசில் வை. அந்தக் காகிதத்திற்கு ஈடான எடைக்கு நான் பொருள்க ளைத் தருகிறேன்" என்று ஏளனமாகச் சொன்னபடி, அப்பெண்ணிடம் ஒரு காகி தத்தைக் கொடுத்தார். காகிதத்தைப் பெற்றுக்கொண்ட அப்பெண், ஒரு நிமிடம் கண்களை மூடி செபி த்தார். பின்னர், அந்தக் காகிதத்தில் வேகமாக எதை யோ எழுதி, தராசில் அக்காகிதத் துண்டை வைத் தார். காகிதம் வைக்கப்பட்ட தராசுத்தட்டு கீழிறங் கியது. இதைப் பார்த்த முதலாளிக்கு அதிர்ச்சியாக இருந்தது. உதவி செய்ய வந்திருந்தவரும் இதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்.  "சரி, உனக்குத் தேவையானப் பொருள்களை மற்றொரு தட்டில் வை" என்று எரிச்சலுடன் சொன்னார் முதலாளி. தனக்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், ஆகியவற்றை அந்தப் பெண் அடுத்தத் தட்டில் வைத் தார். அவர் எவ்வளவு வைத்தாலும், காகிதம் வைத்தி ருந்த தட்டு மேலே எழவில்லை. அந்தப் பெண் தரா சில் வைத்த பொருள்களைக் கட்டி, வேண்டா வெறு ப்பாக அவரிடம் கொடுத்தார் முதலாளி. அருகில் இருந்தவர், ‘தான் கண்ட இப்புதுமைக்கு எவ்வ ளவு கொடுத்தாலும் தகும்’ என்று சொல்லியபடியே, மகி ழ்ச்சியுடன் அதற்கு உரிய பணத்தையும் கொடுத் தார். அந்த ஏழைப்பெண் சென்றபின், கடை முத லாளி தராசை சோதித்தபோது, அது பழுத டைந்து விட்டதென்பதைப் புரிந்துகொண்டார். பின்னர், அந்த ஏழை ப்பெண் தராசில் வைத்த காகிதத் துண்டை எடு த்துப் பார்த்தார், முதலாளி. அந்தக் காகிதத்தில், பொருள்களின் பட்டியல் எதுவும் எழுதப்படவி ல்லை. மாறாக, அப்பெண் காகிதத்தில் ஒரு சிறு செப த்தை எழுதியிருந்தார். "இறைவா, எங்கள் தேவை என்னவென்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். எங் கள் தேவையை நிறைவு செய்தருளும்" என்பதே அந் தச் செபம். நம் தேவை இன்னதென்று அவர் அறிவார்  நாம் நம்பிக்கையோடு விட முயற்ச்சியோடு கேட் போம். நம் தேவைகள் நியாயம் என்றால் அது நிறை வேறும். நம்பிகையோடு  பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...