Followers

Monday 9 January 2023

புரிதலில் குழப்பம்

புரிதலில் குழப்பம் பேசாலைதாஸ்  


ஜீலு நாட்டில் *#மாவீரன்* ஒருவன் இருந்தான். 

அவன் அந்த நாட்டு மன்னனிடம் சென்று அவனது மகளைத் தனக்கு திருமணம் செய்து தருமாறு கேட்டான்.

" நான் இடுகின்ற மூன்று கட்டளைகளை அணுவளவும் பிசகாது எவன் ஒருவன் செய்கிறானோ, 

அவனுக்கே என் மகளைத் திருமணம் செய்து தருவேன்" என்று அந்த மன்னன் அவனுக்கு பதில் அளித்தான்.

" அந்த முன்று கட்டளைகள் என்னென்ன? சொல்லுங்கள் மன்னவா! 

உடனே அவற்றை நிறைவேற்றிவைக்கிறேன்!" என்றான் அந்த மாவீரன்.

" நான் மூன்று கூடாரங்களை ஏற்ப்படுத்தி வைத்திருக்கிறேன்,

 முதல் கூடாரத்தில் பெரியதொரு சாராயப் பீப்பாய் இருக்கிறது. 

அதில் உள்ள சாராயம் முழுவதையும் ஒரே மூச்சில் குடித்து முடித்துவிட வேண்டும் "

" இந்தக் காரியத்தை முடித்த கையோடு உடனே இரண்டாவது கூடாரத்திற்க்குச் செல்ல வேண்டும்

 அங்கே பல்வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் பைத்தியம் பிடித்த கொரில்லா குரங்கு ஒன்று இருக்கும்.

 ஏழு அடி உயரம் உள்ள அந்த கொரில்லா குரங்கிற்க்கு தொல்லை தரும் பல் எது என்பதைக் கண்டுபிடித்து , 

அந்த பல்லை வெறும் கையினாலேயே பிடுங்கி எறிய வேண்டும்."

இந்த வேலை முடிந்தவுடன் சிறிதும் தாமதியாது மூன்றாவது கூடாரத்திற்க்கு செல்லவேண்டும். 

அங்கே ஒரு ஆங்கிலேயப் பெண் இருப்பாள். 

எந்த ஒரு ஆண்மகனும் அவளை உடலுறவில் முழுதும் திருப்தி செய்ய முடியாதபடி ஒரு தனிப் பயிற்சி பெற்றவளாக இருப்பாள். 

அவளோடு உடலுறவு கொண்டு அவளை முழுவதும் திருப்தி செய்ய வேண்டும் " என்றான் மன்னன்

 இப்போதே இதை செய்கிறேன்" எனக் கூறிவிட்டு அந்த மாவீரன் முதல் கூடாரத்தினுள் நுழைந்தான். 

ஒரே மூச்சில் பீப்பாய் சாராயத்தையும் காலி செய்தான்.

பின்னர் பைத்தியம் பிடித்த கொரில்லாக் குரங்கு இறுக்கும் கூடாரத்தினுள் தடுமாறியபடி நுழைந்தான்.

அங்கே அவனுக்கும் அந்தக் கொரில்லாக்கும் ஒரு பயங்கரமான சண்டை நடந்து. 

அந்த சண்டையில் அந்த கூடாரமே ஆட்டம் கண்டது. 

வேதனைக் கூக்குரல் விண்ணைப் பிளந்தது.

அந்தக் கொரில்லாவின் உடம்பின் மேலுள்ள முடிக்கற்றைகள் பறந்து வந்து வெளியே விழுந்தன.

மனிதக் காது ஒன்றுகூட வெளியில் வந்து விழுந்து.

இந்த கூச்சலும் கூக்குரலும் சுமார் அரை மணி நேரம் நீடித்தது.

சற்று அமைதி, பின் அந்தக் கூடாரத்திலிருந்து மாவீரன் தவழ்ந்து கொண்டே வெளியே வந்தான்.

தள்ளாடிக் கொண்டே எழுந்து நின்று அந்த மன்னனைப் பார்த்துக் கேட்டான்.

" சரி அரசே! 

இப்போது பல்வலியால் அவதிப்படும் அந்த ஆங்கிலேயப் பெண்மனி இருக்கும் இடத்தைக் காட்டுகிறீர்களா😁😁😁 ?"

No comments:

Post a Comment

 சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.  அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா!...