பின் தொடர்பவர்கள்

திங்கள், 23 ஜனவரி, 2017

0385 உள்ளத்தால் ஒன்றித்து செய்யாத எந்த ஒரு செயலுக்கும் பலனே கிடையாது

உள்ளத்தால் ஒன்றித்து செய்யாத எந்த ஒரு செயலுக்கும் பலனே கிடையாது

தெய்வ பயம் நிறைந்த தந்தை ஒருவர் தன் மகனை சிறு வய திலிரு ந்தே பக்தி வாழ்வில் வள ர்க்க விரும்பினார். தினமும் காலை நேர ஆராதனைக்கும் தன் மகனை அழைத்துச் செல்வார். கடவுளுக்கு காணி க்கை கொடுக்கும் நற்பழக்க த்தையும் உருவாக்க விரும்பிய தந்தை, ஒருநாள் அவனிடம் ஒரு ரூபாய் நாணயத்தையும் பத்து காசையும் கொடுத்து உனக்கு இவற்றில் எதைக் காணிக்கை போட விருப்பமோ அதைப் போடு என்று சொன்னார். தனது மகன் நிச்ச யமாய் ஒரு ரூபாயைப் போடு வான் என்று எதிர்பார்த்தார் தந்தை. ஆனால் அன்று உண்டியல் பிரி க்க வந்தபோது பத்து காசை மகன் போட்டதைப் பார்த்தார் தந்தை. ஆராதனை முடிந்து வீட்டிற்கு வரும் வழியில், ஆர்வமற்ற தொனி யில், மகனே உயர்ந்த கோட்பாடுகளை த்தானே உனக்குச் சொல்லி க் கொடுத்து வருகிறேன், அப்படியிருக்க அந்த ஒரு ரூபாயை உண்டியலில் போடுவதற்கு உனக்கு மனம் வர வில்லையா என்று கேட்டார். அதற்கு அச்சிறுவன், அப்பா, மனமகி ழ்ச்சியோடு கொடு க்கும் காணிக்கையைத்தான் கடவுள் ஏற்பார் என்று இன்று போதகர் மறையுரையில் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா? என்னால் பத்து காசைத்தான் மனமகிழ்ச்சி யோடு கொடுக்க முடிந்தது, ஒரு ரூபாயை அல்ல என்றான். உள்ள த்தால் ஒன்றித்து செய்யாத எந்த ஒரு செயலுக்கும் பலனே கிடை யாது. ஆம் எதுவுமே அளவில் அல்ல, பண்பில் தான் தங்கியுள்ளது, மன நிறைவோடு செய்யும் எந்த காரியமும் நல்ல பலனைக்கொடு க்கும். குசேலரிடம் கர்ணன் கண்ட சுகம் இது தான்!                    அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...