பின் தொடர்பவர்கள்

சனி, 27 ஜூன், 2015

0180 பயம் பாதி

பயம் பாதி
ஒரு காட்டில் முனிவர் ஒருவர் தவம் இருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு நோய் போய்க்கொ ண்டிருந்தது, அதன் பெயர் காலரா...! முனிவர் நோயைக் கூப்பிட்டு, ‘எங்கே போகி றாய்’ என கேட்டார், பக்கத்து ஊரில் திருவிழா, நான் அங்கு சென்று எல்லா ருக்கும்கா லராவை பரப்பிவிட்டு கால ராவினால் கொல்லப் போகிறேன்’ என்றது நோய். இது பாவம் இல் லையா’ என முனிவர் கேட்க, ‘அப்புறம் ஏன் என்னை இறைவன் படைக்க வேண்டும்’ என நோய் கேட்டது
‘சரி. வெறும் 100 பேரை மட்டும் கொல், அதற்கு மேல் உயிர்பலி ஏற்பட்டால், என் சாபத்திற்கு ஆளாவாய்’ என முனிவர் கூறி அனுப்பினார். ஆனால் காலரா வினால் உயிர் பலி 2000மாக உயர்ந்துவிட்டது. முனிவருக்கு கோபம். நோயை அழைத்து ‘ஏன் இப்படி செய்தாய்’ எனக் கேட்டார்!
‘நான் கொன்றது 100 பேர்தான். மற்றவர்கள் அனைவரும் பயத்தினால் இறந்தவர்கள். நான் என்ன செய்யமுடியும், முனிவரே!’ என அப்பாவியாகக் கேட்டது காலரா நோய்.

பயம் பாதி கொல்லும்! அன்புடன் பேசாலைதாஸ் பேர்கன் நோர்வே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...