Followers

Sunday 22 May 2022

  பன்றியிடம் அரசியல் பயிலுங்கள்  பேசாலைதாஸ்  


ஒரு அநியாயக்கார அரசன் ஒருவன் ஒரு அப்பாவிக் குடிமகனைக் கைது செய்து *மூன்று மீட்டர் மாத்திரமே பரப்பளவான ஒரு தனிச் சிறையில்* அடைக்கும்படி கட்டளையிட்டான். 

நிரபராதியான அந்த குடிமகன் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தான். 

*"நான் நிரபராதி, ஏன் என்னைக் கைது செய்தீர்கள்? ஏன் என்னைச் சிறையில் அடைத்தீர்கள்?"*

என்று உரக்கக் கதறினான். 

பின்னர் அவனை *ஒரு மீட்டர் மாத்திரமே விசாலமான ஒரு தனிச் சிறையில்* அடைக்கும்படி கட்டளை வந்தது. 

மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்தான். ஆனால் இம்முறை *"நான் நிரபராதி"* என்ற வாதத்தை மறந்துவிட்டான். *"இது என்ன கொடுமை! இந்தச் சிறையில் எப்படி இருப்பது! உறங்குவது! அமர்ந்து கொண்டுதானே உறங்க முடியும்! இது உங்களுக்கே தப்பாகத் தெரியவில்லையா?"*

 எனக் கதறினான். 

சினம் கொண்ட காவலர் இன்னும் *நான்கு சிறைக் கைதிகளை* அவனோடு சேர்த்து அந்தச் சிறிய கூட்டில் அடைத்துவிட்டான். 

இப்போது ஐந்து பேரும் இணைந்து கூக்குரலிட்டனர். *"எங்களால் முடியாது. நாங்கள் மூச்சுத்திணறி செத்துதுவிடுவோம். உங்களுக்கு ஈவிரக்கம் எதுவும் இல்லையா?"*

 என புலம்பினார்கள். 

மேலும் சினம் கொண்ட காவலர் ஒரு *பன்றியை* அவர்களோடு சிறையில் அடைத்து விட்டான். 

விரக்தியடைந்த அவர்கள், *"நாங்கள் இந்த அசிங்கத்தோடு இந்தச் சிறிய கூட்டில் எப்படி இருப்பது! தயவுசெய்து இந்த பன்றியை மாத்திரமாவது வெளியே எடுத்துவிடுங்கள் "* எனக் கெஞ்சிக்கேட்டனர். 

தயவு காட்டிய காவலர் *பன்றியை* வெளியே எடுத்தான். 

அடுத்த நாள் அரசன் அந்தப் பக்கமாக வந்து *"இப்போது உங்கள் நிலை எப்படி?"* என்று விசாரித்தான்.

*"நாங்கள் நல்ல சுகமாக இருக்கிறோம். எங்கள் பெரிய பிரச்சினை தீர்ந்துவிட்டது"* என்று பதில் கூறினார்கள். 

இப்படித்தான் *எமது நாடுகளில் பன்றிமயக் கோட்பாடு அமுல்படுத்தப் படுகிறது.* பன்றியை மாத்திரம் எடுத்து விட்டால் போதும் என்ற கோரிக்கையில் ஆர்ப்பாட்டம் முடிந்துவிடுகிறது. அதற்கு முன்னால் இருந்த விவகாரம், அதற்கும் முன்னால் இருந்த மூல  விவகாரம் எல்லாம் மறக்கடிக்கப்படுகிறது. 

*புதுப் பது பிரச்சினைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றனர்.* *முடிவில் பன்றிமய கோட்பாட்டை அவிழ்த்து விடுகின்றனர்.* *பின்னர் நாம் அதிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக முதன்மைப் பிரச்சினைகளை நாமே மறந்து விடுகின்றோம்.* 

*மறக்க வைக்கப்படுகிறோம்.

No comments:

Post a Comment

 சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.  அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா!...