Followers

Wednesday 13 October 2021

அடக்கம் அழகிய கவிதை

 அடக்கம் அழகிய கவிதை 

அவர் இறந்து விட்டார் 

அடக்கம் செய்யணும்

சொல்லிக் கொண்டே சென்றார்கள்..!! 

.

மெல்ல எட்டிப் பார்த்தேன் 

மூச்சு இல்லை – ஆனால் 

இப்போதுதான் இறந்திருந்தார் 

என்பதை மட்டும் நம்ப முடியவில்லை..!!  

.

இருபது வருடங்கள் 

முன்னாடி – அவர் மனைவி 

இறந்த பிறகு – சாப்பிட்டாயா..!! 

என்று யாரும் கேட்காத 

நேரத்தில் – அவர் இறந்திருந்தார் 

யாருமே கவனிக்க வில்லை...!!

.

பொண்டாட்டி போனதுமே

போய்த் தொலைய வேண்டியதுதானே – என்று

காதுபட மருமகள் பேசியபோது 

அவர் இறந்திருந்தார் அப்போதும் 

யாருமே கவனிக்க வில்லை...!!

.

தாய்க்குப் பின் தாரம் 

தாரத்துக்குப் பின் ..

வீட்டின் ஓரம் ...!!! 

என்று வாழ்ந்த போது – அவர் 

இறந்திருந்தார் 

யாருமே கவனிக்க வில்லை ..!!!

.

காசு இங்கே 

மரத்திலேயா காய்க்குது - என்று 

மகன் அமிலவார்த்தையை 

வீசிய போது..!!! 

அவர் இறந்திருந்தார் 

யாருமே கவனிக்க வில்லை...!!

.

என்னங்க...!!! 

ரொம்ப தூரத்திலே இருக்குற 

முதியோர் இல்லத்திலே விட்டு 

தலை முழுகிட்டு வந்திடுங்க...!!! 

என்று காதிலே விழுந்த போதும் 

அவர் இறந்திருந்தார் 

யாருமே கவனிக்க வில்லை...!!! 

.

உனக்கென்னப்பா...!!!

பொண்டாட்டி தொல்லை இல்லை 

என்று வாழ்த்துவது போல 

கிண்டலடிக்கப் பட்ட போது 

அவர் இறந்திருந்தார்..!!!

அப்போதும் யாருமே கவனிக்க வில்லை .

.

இப்போதுதான்

இறந்தாராம் என்கிறார்கள்..!!!

எப்படி நான் நம்புவது..???

நீங்கள் செல்லும் வழியில் 

இப்படி யாராவது

இறந்து கொண்டிருப்பார்கள்... 

ஒரு வினாடியாவது நின்று

பேசி விட்டுச் செல்லுங்கள்..!!! 

.

இல்லையேல்...!!!! 

.

உங்கள் அருகிலேயே 

இறந்து கொண்டிருப்பார்கள் 

புரிந்து கொள்ளுங்கள் ..

.

வாழ்க்கை என்பது 

வாழ்வது மட்டுமல்ல..!!! 

வாழ வைப்பதும்தான் ..!!!!

பலர் இறந்து விடுகிறார்கள். புதைக்க தான் சில ஆண்டுகள் ஆகிறது.


No comments:

Post a Comment

 சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.  அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா!...