Followers

Sunday 12 September 2021

நம்பிக்கை துரோகி

 நம்பிக்கை துரோகி பேசாலைதாஸ்


ஒரு முறை காடு வழியே சென்ற ஒரு மனிதனை ஒரு புலித் துரத்தியது.

அதனிடமிருந்து தப்பித்து அவன் ஒரு மரத்தின் மேல் ஏறினான்.

உச்சியை அடைந்தவனுக்கு ஒரு அதிர்ச்சி.

அங்கே ஒரு பெரிய மனிதக் குரங்கு உட்கார்ந்திருந்தது.

அதைப் பார்த்து நடு நடுங்கிய மனிதன் அந்த மனிதக் குரங்கிடம் அடைக்கலம் கேட்டான்.

அந்த மனிதக் குரங்கு, கவலைப்படாதே நான் உன்னை எதுவும் செய்யமாட்டேன்.

என்னை அண்டி வந்த உனக்கு நான் நிச்சயமாகப் பாதுகாப்புத் தருவேன் என்றது.

இரவுப் பொழுதும் வந்தது...

புலியோ மரத்தின் கீழே பசியோடு இருந்தது.

மனிதனும் மனிதக் குரங்கும் மாறி மாறி உறங்க முடிவு செய்தனர்.

மனிதன் தூங்கியப் போது மனிதக்குரங்கு காவல் காத்தது குரங்கு தூங்கும் போது மனிதன் காவல் காத்தான்.

புலி இவர்களைப் பிரிக்க முடியாவிட்டால் நமக்கு உணவு கிடைக்காது என எண்ணி அந்த மனிதனிடம்... வஞ்சகமாக 

இப்போது மனிதக்குரங்கு தூங்குகிறது நீ அதைப் பிடித்து கீழே தள்ளிவிடு... எனக்கு வேண்டியது பசிக்கு இரை, உன்னை விட்டு விடுகிறேன்” என்றது.

மனித மனம் குரங்கை விட மோசமானது.

நாம் தப்பிக்கலாம் என்றுத் தன்னலம் கருதி மனிதன் குரங்கை கீழே தள்ளிவிட்டான்.

கீழே விழும் போது நடந்ததைப் புரிந்துக் கொண்டது மனிதக்குரங்கு.

ஆனால் புலியோ “எனக்கு மனித மாமிசம் தான் வேண்டும்....உனக்கு மனிதனின் இயல்பைப் புரிய வைக்கவே நான் இவ்வாறு கூறினேன்.

இப்போதும் உன்னை விட்டு விடுகிறேன்....நீ மேலே சென்று மனிதனைக் கீழே தள்ளிவிடு நான் பசியாற மனித மாமிசம் உண்டு விட்டுப் போய் விடுகிறேன்” என்றது.

அப்படியே செய்வதாக சொல்லி விட்டு மரத்தின் மேலே ஏறி வந்த குரங்கு மனிதனின் அருகில் வந்தது.

மனிதனோ குரங்கைப் பார்த்து பயத்தால் நடுங்கினான்.

மனிதக் குரங்கோ “பயப்படாதே மனிதா என்னை நம்பி அடைக்கலம் என்று வந்த உன்னை எப்போதும் நான் காப்பேன்.

புலியிடமிருந்து தப்பிக்கவே நான் உன்னை கீழே தள்ளுவதற்கு ஒப்புக் கொண்டேன்.

நீ கவலை இல்லாமல் இருக்கலாம்... என்றது.

நண்பன் என்று வந்தவனிடம்

நட்பு பாராட்ட வேண்டும்...

நட்பு ஒரு பெண்ணின் கற்பைப் போன்றது.

ஒருமுறை நட்பின் புனிதத்தில் குறை கண்டோமே ஆயின் அந்த நட்பு அதன் மதிப்பை நிச்சயமாக இழந்தே போகும் இது தான் உண்மை...

கதையின் நீதி :-

நன்றிக்கு சிறந்த எடுத்துக்காட்டு விலங்குகள்...

துரோகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு மனிதர்கள்...

என்னைப் பொறுத்தவரை இந்த உலகத்திலேயே மிகவும் அபாயகரமான மிருகம் மனிதர்கள் மட்டும் தான் √

No comments:

Post a Comment

 சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.  அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா!...