Followers

Thursday 2 September 2021

புத்தரின் கதை

 புத்தர் அதிக முறை கூறிய ஞானக் கதை

❤
நான் உனக்கு ஒரு கதையைச் சொல்கிறேன். புத்தர் இந்தக் கதையை அநேக தடவை கூறியுள்ளார்.
புத்தர் ஒரு காட்டைக் கடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு மனிதன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். யாரோ வேட்டையாடுபவர்களின் அம்பானது அவனது உடலில் பாய்ந்திருந்தது.
அவன் உயிருக்குப் போராடுகிறான். அவன் ஒரு தத்துவவாதி. புத்தர் அவனிடம் "இந்த அம்பை உனது உடலில் இருந்து எடுத்துவிட முடியும். அதை எடுப்பதற்கு என்னை அனுமதி"என்று கேட்டார்.
அந்த மனிதன் "கூடாது, தயவுசெய்து இதற்குக் காரணம் யார் என்று முதலில் எனக்கு தயவு செய்து கூறுங்கள்? எனது விரோதி யார்? இந்த அம்பு ஏன் எனது உடலைத் துளைத்தது? என்ன கர்மத்தின் பலன் இது? இந்த அம்பில் விஷம் தடவப்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்று கூறுங்கள்"என்று கேட்டான்.
அதைக்கேட்ட புத்தர் "விசாரணையை நீ பின்னர் வைத்துக் கொள்ளலாம். ஆனால் முதலில் இந்த அம்பை வெளியே எடுக்க விடு. ஏனெனில் நீ இப்போது சாவின் விளிம்பில் இருக்கிறாய். முதலில் இந்த விசாரணைகள் எல்லாம் செய்யப்பட்ட பிறகுதான் இந்த அம்பு வெளியே எடுக்கப்பட வேண்டும் என்றால் நீ உயிர்பிழைக்கப் போவதில்லை." என்று பதில் கூறினார்.
இந்தக் கதையை புத்தர் நிறைய தடவை கூறியுள்ளார். இதன் மூலம் அவர் கூறுவது என்ன?
நாம் அனைவரும் மரணத்தின் விளிம்பில்தான் இருக்கிறோம் என்று அர்த்தம்.
எனவே,
"இந்த உலகைப் படைத்தது யார்?
ஏன் படைத்தான்?
நான் ஏன் படைக்கப்பட்டேன்?
எனக்குப் பல பிறவிகள் உண்டா?
அல்லது ஒரு பிறவிதானா? நான் இறந்த பிறகு உயிரோடு இருப்பேனா அல்லது இல்லையா?" என்று கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்காதே.
அதனால்தான் புத்தர், "பிறகு விசாரணை செய்து கொள். முதலில் துன்பம் என்னும் இந்த அம்பு தியானத்தால் வெளியே எடுக்கப் படட்டும்"என்று கூறுகிறார்.
மேலும் புத்தர் சிரித்துக் கொண்டே, " தியானத்தால் அறியாமை அகன்ற பின்னர் இதைப் போன்று விசாரணை செய்கின்ற யாரையும் நான் ஒருபோதும் கண்டதில்லை." என்று கூறினார்.
--ஓஷோ--

No comments:

Post a Comment

 சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.  அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா!...