பின் தொடர்பவர்கள்

புதன், 17 மார்ச், 2021

0057 நல்ல குணத்தை கைவிடல் நியாயமா?

நல்ல குணத்தை கைவிடல் நியாயமா? பேசாலைதாஸ்

அன்பர்களே அவன் அப்படி நினைப்பான், இவன் இப்படி சிந்திப்பான் என்று எண்ணி க்கொண்டு, நம் மனச்சாட்சி க்கு சரி என்று தோன்று வதை, சொல்லாமலும், செய் யாமலும் இருப்பது, நியாயா மா? என்ற கேள்வியில் எழுந் தது இந்த குட்டிக்கதை!

ஒரு முட்புதரில் தேள் ஒன்று மாட் டிக்கொண்டது. வெளியே வர முடி யவில்லை. அதைக் கண்ட ஒரு துறவி, அந்தத் தேளை விடுவிக்க முயன்றார். தேள் அருகில் அவர் கை சென்றதும், தேள் அவரைக் கொட்டியது. முட்புத ரும் அவர் கையைப் பதம் பார்த்தது. இருந்தாலும் அத்துறவி, தேளை விடுவிக்க மீண்டும் மீண்டும் முயன்றார்.

                           அருகிலிருந்து, இந்தக் காட்சியைப் பார்  த்துக் கொண்டிருந்த ஒருவர், பொறுமை இழந்தார். அத்துறவியிடம், "உமக்குக் கொஞ்சமும் மூளை இல்லையா? அந்தத் தேள்தான் உம்மைக் கொட்டிக் கொண்டே இருக்கிறதே. ஏன் அதை விடுவிக்க தொடர்ந்து முயற்சி செய்கிறீர்?" என்று கேட்டார். அதற்கு அத்துறவி, "கொட்டுவது தேளின் குணம். அதை மாற்றமுடியாது. அதற்குப் பயந்து, கஷ்டப்ப டும் ஒரு ஜீவனைக் காப்பாற்றும் என் குணத்தை நான் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்?" என்று பதில் கேள்வி கேட்டார். மிருகக் குணத்திற்குப் பயந்து, நம்மில் உறைந்திருக்கும் தெய்வீகத்தை நாம் மறைக்க வேண்டுமா? மறக்க வேண்டுமா? அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...