பின் தொடர்பவர்கள்

ஞாயிறு, 6 மே, 2018

0543 ஏழைகளின் வயிறே, ஆண்டவனின் அஞ்சல்பெட்டி!

ஏழைகளின் வயிறே, ஆண்டவனின் அஞ்சல்பெட்டி!
                            முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி! எங்கள் பிள்ளைக்கு பால் இல்லை பாரீர்! ஏழைகளின் பிள்ளைகள் குடிக்க பால் இல்லாமல், வறுமையில் வாடும் பொழுது, சிலைகளுக்கும். அரச மரங்களுக்கும் பாலா பிஷேகம் என்ற போர்வையில், குடம் குட மாக பசும் பாலை கும்பாபிஷேகம் என்று ஊற்றி, சேதப்படுத்துவது எவ்வகையில் நியாயமாகும், அண்மையில்  முகநூலில் உலாவிய ஒரு கதை இன்று உங்கள் பார்வை க்காக, நிலாமதி வலைப்பூங்காவில் பிடித்து வந்திருக்கின்றேன்.

                                                                                                                                                 பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை மரத்தி லிருந்து சுமார் 100 பழங்கள் உள்ள பெரிய வாழைத் தாற்றை அறுத்தார். தன் வேலைக்காரனை அழைத்து,  "இந்த வாழைத் தாற்றைக் கோயிலு க்கு கொண்டு போய் கொடுத்து விட்டு வா...." என்றார். வேலைக்காரனும் அவ்வாறே செய்தான்.

                                                 அன்றிரவு பண்ணையாரின் கனவில் தோன்றிய இறைவன், "நீ அனுப்பிய ஒரு வாழைப் பழம் கிடைத்தது...." என்றார்.
திடுக்கிட்ட பண்ணையார்,  "இறைவா நான் 100 பழங்களையல்லவா அனுப்பினேன்..." என்றார் இறைவன்,  "இல்லை ஒரு பழம் தான் எனக்கு வந்து சேர்ந்தது..." என்றார்.

                                                  விடிந்ததும் பண்ணையார் வேலைக்காரனை அழைத்து,  "நான் கொடுத்த வாழைப் பழங்களை முழுமையாகக் கோயி லில் கொண்டு சேர்த்தாயா....." என்றார். அவன் "ஆம்" என்றான். பண் ணையாருக்குக் கோபம் வந்து விட்டது. அவர் வேலைக்காரனை வேக மாக அறைந்தார். "உண்மையைச் சொல், இல்லையெ ன்றால் அடித்தேக் கொன்று விடுவேன்..." எனறார். அவன், "உண்மையைச் சொல்லி விடு கிறேன், வழியில் ஒருவன் பசியாய் இருக்கிறது என்றான், நான் பரிதா பப்பட்டு அவனுக்கு ஒரு பழத்தைக் கொடுத்தேன், மீதமுள்ள எல்லாப் பழத்தையும் கோவிலிலுக்குக் கொடுத்து விட்டேன்.." என்றான்.

                                                     பண்ணையாருக்குப் புரிந்து விட்டது. ஏழைக்குக் கொடுத்த பழமே  இறைவ னைக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. கோயிலு க்குக் கொடுத்த பழம் சேரவில்லை.....கோயிலில் இருக்கும் இறைவனுக்கு நீ ஏதாவது கொடுத்தால், அது ஏழைகளுக்குப் போய்ச் சேராது. ஏழைகளு க்கு நீ ஏதாவது கொடுத்தால், அது இறைவனிடம் போய்ச் சேர்ந்து விடும். கோயிலில் போய்க் கொடுப்பதும், ஏழைகளுக்குக் கொடுப்பதும் ஒன்றா என்று சிலர் கேட்கலாம். ஏழைகளின் வயிறு அஞ்சல்பெட்டி, இறைவனு க்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை இதில் போட்டால் இறைவனுக்குப் போய்ச் சேர்ந்து விடும்.... "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்... அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...