பின் தொடர்பவர்கள்

திங்கள், 19 பிப்ரவரி, 2018

0510 தனக்கு மட்டுமா சோதனை?

தனக்கு மட்டுமா சோதனை? பேசாலைதாஸ்
                                  அன்பர்களே பல சந்தர்ப்பங்களில், அடுத்தவன் வீட்டில், அயலவனுக்கு ஒரு பிர ச்சனை என்றால், நமக்கேன் வீண் வம்பு, என்று ஒதுங்கிவிடுகி ன்றோம். அதே பிரச்சனை நம் காலடிக்கு வரும் போது விழித்து க்கொள்கின்றோம், உதவிக்கு யாரும் வரவில்லையே என்று கவலைப்படுகின்றோம். 

                                                                         சில பிரச்சனைகள், சிக்கல்கள் சமூகம் சார்ந்தது, அது சிலவேளைகளில், ஒரு சிலரின் தனிப்பட்ட பிரச்சனை யாக வந்து சேருகின்றது. காணாமல் ஆக்கப்பட்டோர், சொந்த காணி யை பறிகொடுத்தோர் இப்படிப்பட்ட பிரச்சனைகள் பொதுப்பிரச்சனை யாகவும், சிலருக்கு தனிப்பட்ட பிரச்சனையாகவும், அமைந்துவிடுகி ன்றது அல்லவா! ஒரு பாலஸ்தீன கவிதை, ஞாபகத்திற்கு வருகின்றது,

 " சென்ற மாதம், என் பள்ளி ஆசிரியர் கொல்லப்பட்டார், 
நான் சும்மா இருந்தேன், 
சென்ற வாரம், என் தெருவோரத்தில், 
மீன் விற்பவன் கொல்லப்பட்டான், 
நான் அலட்டிக்கொள்ளவில்லை. 
இன்று என் வீட்டில் 
என் தம்பியை சுட்டுக்கொன்றார்கள்! 
என் துயரத்தை கேட்க யாருமே இல்லை!,,,,,,, 

                                                              இப்படியாக கவிதை நீட்சி கொள்கின்றது. இதை நான் எழுதும்போது, இணையத்தில் யாரோ ஒருவர், பதிவு செய்த கதையை உங்களோடு பகிர்கின்றேன். 2014 ஆண்டு இந்த கதை சற்று மாறுதலாக என் நிலாமதி வலைத்தளத்தில் பதிவாகி இருந்தது, அதனை யும் வசதி இருந்தால், பாருங்கள், இப்போது கதைக்கு வருகின்றேன்.

                                                                   ஒரு பண்ணயார் வீட்டில் ஒரு எலி வசித்து வந்தது...ஒரு நாள் தனது இரவு நேர இரை தேடப் புறப்பட்டுக் கொண்டி ருந்தது. எலி வலையை விட்டு தலையை உயர்த்திப் பார்த்தது. வீட்டின் எஜமானனும், எஜமானியும், ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தா ர்கள். ஏதோ நாம் சாப்பிடக்கூடிய ஒரு பொருள் தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது எலி.

                                                          அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி.
அதைப்பார்த்ததும் அந்த எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது...
உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது...
"பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது என்றது.."

                                                                         இதைக் கேட்ட கோழி விட்டேற்றியாகச் சொன்னது.." உன்னைப் பொறுத்தவரை இது கவலைப்பட வேண்டிய விஷயம்தான். நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்றது கோழி.."

                                                               உடனே அது ..பக்கத்தில் இருந்த வான்கோழி யிடம் சென்று..அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு, "நான் எலிப் பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்..." என்றது.

                                                          மனம் நொந்த எலி... அடுத்தாக...பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது...ஆடும் அதே பதிலைச் சொல்லியது. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை...
"எலிப்பொறியை பார்த்து, என்னையும் பயப்படச் சொல்கிறாயா?"
என்று நக்கலும் அடித்தது.

                                                          அன்று இரவு...எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு...பண்ணையாரும், அவர் மனைவியும், தூங்கப் போயினர்...ஒரு அரை மணி நேரத்தில்,,*"டமால் "* என்றொரு சத்தம். எலிதான் மாட்டிக் கொண்டு விட்டது என்று என்னிய பண்ணை யார் மனைவி ஓடிவந்து..எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.

                                                       ஆனால்...எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது. எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்ட பின்னும்..பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை.

                                                       அருகில் இருந்த ஒரு மூதாட்டி... "பாம்புக் கடி க்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு.." சிக்கன் சூப் வைத்துக் கொடு த்தால் நல்லது.." என்று யோசனை சொன்னாள். கோழிக்கு வந்தது வினை. கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது.

                                                அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை. உறவினர்கள் சிலர் நலன் விசாரிக்க வந்தார்கள்...
அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள்...
வான்கோழியும் உயிரை விட்டது.

                                                                         சில நாட்களில் பண்ணையாரம்மாவின் உடல் நலம் தேறியது. பண்ணையார் தன் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார். இந்த முறை ஆட்டின் முறை.....
விருந்தாக ஆடும் உயிரை விட்டது..நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.

                                                       பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார்.
"எலி தப்பித்து விட்டது. அப்பாடா..."

நீதி :- அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் 
"என்ன..? என்றாவது கேளுங்கள். ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம். அடுத்த முறை... நம்முடைய தாகவும் இருக்கலாம்.. அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...