பின் தொடர்பவர்கள்

புதன், 20 டிசம்பர், 2017

0461 எஜமானருக்கு விசுவசாமாக நடந்த நாய்குட்டி



எஜமானருக்கு விசுவசாமாக நடந்த நாய்குட்டி

அன்பர்களே! முன் கோபம் எப்போதும் முட்டாள் தனமான முடிவுகளை எடுக்கத்தோன்றும், அப்படி ஒரு முட்டாள் தனமான முடிவை எடுப்பதைவிட நமக்கு கோபம் ஆத்திரம் வரும்போது, அதனை திசை திருப்ப அல்லது கட்டுப்படுத்த நமது மனசிலே ஒட்டிக்கிடக்கும் ஒரு அழகியை நினைத்துப்பார்க்கலாம், கோப எண்ணங்கள் திசை மாறக்கூடும்! எப்படி இருந்தாலும் செய்வதற்கு முன் ஒருமுறை சிந்திப்பது நல்லது, சிந்திக்கதவறி நாம் செய்யும் செயலால் வருந்துவது நாம் தான் அதற்கு இது ஒரு நல்ல சம்பவம்,,,,

ஒரு இளஞ்ஜோடியருக்கு திருமணமாகி 5 ஆண்டுக ளாக குழந்தை பாக்கியமே இல்லை. அதனால் அவர் கள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர். ஒரு நாள் அழகிய நாய்குட்டியை வாங்கி வந்தனர், அதை தங்கள் மகன் போல வளர்க்க ஆரம்பித் தனர். அந்த நாய் குட்டியும் அவர்களுடன் விளையாடி மகிழ்ந்தது.ஒரு முறை திருடன் அவர்கள் வீட்டிற்கு வந்தபோது தன்னுடைய எஜமானருக்கு விசுவசாமாக நடந்து கொள்ள தன் உயிரையும் பொருட்படுத்தாமால் அவர்களை விரட்டி யது. நாட்கள் உருண்டோடின அந்த குட்டி நாய் நல்ல பெரிய நாயாக வளர்ந்தது. 7 வருடம் கழித்து அந்த தம்பதியனருக்கும் ஒரு மகன் பிறந்தான். இப்போதெல் லாம் அந்த குழந்தையுடன் தான் அந்த தம்பதியினர் நேரத்தை செலவிடுகின்றனர்
                                                நாய்இப்போதெல்லாம் தனிமையிலே தன் பொழுதை கழிக்க வேண்டியதாயிற்று. அவர்கள் வளர்த்த நாய் க்கு அந்த குழந்தை மேல் பொறாமை உண்டாயிற்று ஒரு நாள் அந்த தம்பதியினர் குழந்தையை தொட்டி லில் தூங்க வைத்து விட்டு மாடி யில் நின்று பேசி கொண்டு இருந்தனர். சிறிது நேரம் கழித்து நாயின் சத்தம் கேட் டதும் மேலே இருந்து இறங்கி ஓடி வந்தனர். படி அருகில் நாய் வாயில் ரத்தக் கறையுடன் நின்று கொண்டு இருந்தது. இதைப் பார்த்ததும் அதன் எஜமானர் ஓடி சென்று துப்பாக்க்கியை எடுத்து வந்து நாயை சுட்டு வீழ்த்தினார். பிறகு வீட்டின் உள்ளே சென்று பார்த்த அவர்களுக்கு ஒரே அதிர்ச்சி.குழந்தையின் அருகில் நல்ல பாம்பு இரண்டு துண்டுகளாக கிடந் தது .குழந்தையை காப்பாற்ற அவர்கள் வளர் த்த நாய் அந்த பாம்பை கடித்து போட்டுள்ளது, அந்த பாம்பின் ரத்தக் கறை தான் நாயின் வாயில் இருந்தது என்று அப்போது தான் அவர்களுக்கு புரிந்தது. தங்கள் குழந்தையை காப்பாற் றிய நாயை அநியாயமாக கொன்று விட்டனே என்று கதறி அழுதனர். ஆம் அன்பர்களே முன்கோபம் முட்டாள் தனத்தில் போய் முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்து காட்டு. எப்ப நாம ஒரு முடிவு எடுப்பது என்றாலும் நன்றாக ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.
அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...