பின் தொடர்பவர்கள்

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

0233 சாக்கு போக்கு

சாக்கு போக்கு

அன்பர்களே நாம் நமக்காக உருவாகக்கி கொண்ட சில தீய நடவடிக்கைகளில் இரு ந்து மீண்டு வருவதற்கு சற்று சிரமமாக இருக்கும் அதேவேளை நாம் செய்யும் தவ றுகள், தவறுகள் அல்ல என்று, நமக்கு நாமே சமாதானமும் தீர்ப்பையும் ஏற்படுத்திக்கொள்கின் றோம்,  அதிகமாக நேர்மையற்ற அரசியல்வாதிகளிடம் இதனை நாம் காண முடியும். சிலவேளை நாமும் சிலவேளை களில் இதே தந்திரத்தை கடைப்பிடிப்பதுண்டு. .இதனை வாசி யுங்கள் உங்களுக்கு புரியும். அந்த வீட்டில் அந்த மனிதர் சாராயம் குடிப்பார், சிகரெட் பிடிப்பார், சூதாடுவார். இப்படி சில தீய பழக்கங்கள் உள்ளவர் அவர். அதனால் அவரின் மனைவி க்கும் அவருக்கும் இடையே அடிக்கடி வாய்ச் சண்டை நடக் கும். குடிக்காதே, சிகரெட் பிடிக்காதே, சூதாடாதே என்று அவரது மனைவி சில நேரங்களில் அழுது மன்றாடுவார், கெஞ்சிக் கேட்பார், சில நேரங்களில் வார்த்தைகளால் விளாசுவார். ஒருநாள் தெருவில் ஒல்லியான ஒரு மனிதர் நீண்ட தாடியுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார் அந்தக் கணவர். அந்த மனிதரிடம், நீ குடிப்பாயா? நீ சிகரெட் பிடிப்பாயா? சூதாடுவாயா? என்று கேட்டார் அவர். இவற்றில் நான் எதையுமே செய்ய மாட்டேன் என்றார் அந்தப் பிச்சைக்காரர். சரி, என்னோடு எனது வீட்டுக்கு வா, உனக்கு நூறு ரூபாய் தருகிறேன் என்று வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவரைக் கண்டதும், அவரின் மனைவி அவரிடம், பிச்சைக்காரரை வீட்டுக்கு ஏன் அழைத்து வந்தீர்கள் என்று கோபமாகக் கேட்டார். இல்லை என் கண்ணே, நீ என்னை குடிக்காதே, சிகரெட் பிடிக்காதே, சூதாடாதே என்று சொல்லி அடிக்கடி என்னோடு சண்டை போடுகிறாய் அல்லவா, இந்தப் பிச்சைக்காரர் இவற்றில் எதையுமே செய்வதில்லையாம், ஆனாலும் இவரின் நிலையைப் பார் என்று சொன்னார். என்ன அன்பர்களே! உங்கள் மனைவிமாரிடம் இருந்து தப்பிக்க அரிய வழி இது. அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...