பின் தொடர்பவர்கள்

வியாழன், 16 ஜூலை, 2015

0215 தேங்காய்கள்

 தேங்காய்கள் 
ஒருவர், குதிரை வண்டியில் தேங்காய் களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்து கொண்டு இருந்தார். குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே ஒரு சிறுவன் நின் றிருந்தான். ‘‘தம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா?’’ என்று கேட்டார். ‘‘வருமே...’’ என்றான் சிறுவன். ‘‘போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’’ எனக் கேட் டார் அவர். அதற்கு சிறு வன், ‘‘மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம். வேகமாகச் சென்றால் அரை மணி நேரம் ஆகும்’என்றான். சிறு வன் சொன்ன பதிலைக் கேட்டு குதிரை வண்டிக்காரருக்குக் கோபம். ‘‘என்ன கிண் டலா? வேகமாகச் சென்றால் எப்படி நேரம் அதிகமாகும்?’’ என்று கேட்டார் அவர். ‘‘போய்த்தான் பாருங்க ளேன்’என்று சிறுவன் சொன்னதும், அவர் வண்டியை வேகமாக விரட்டிச் சென்றார். சிறிது தூரம் போனதுமே சாலை முழுவதும் கற்கள் கொட்டிக் கிடந்தன. வண்டி தடுமாறிக் கவிழ்ந்தது. தேங்காய் கள் சிதறின. வண் டியை நிமிர்த்தி, கீழே சிதறிய தேங்காய் களைப் பொறுக்கி எடுத்துப் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகிவி ட்டது. வண்டிக்காரருக்கு சிறுவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது. ஆம். சொல்பவ ரைப் பார்க்காமல் சொல் லும் சொல்லில் கவனத்தைச் செலுத்தினால் செல்லும் நோக் கம் நிறைவேறும். அன்புடன் பேசாலைதாஸ் பேர்கன் நோர்வே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...