பின் தொடர்பவர்கள்

திங்கள், 14 அக்டோபர், 2024

பிணவறை

பிணவறை 

தோல்வி கண்ட மனிதருக்கு ஒரு குடும்பம் எப்படி உதவ முடியும்?

வியட்நாம் போர் முடிந்ததும் ஒரு சிப்பாய் தனது பெற்றோரை அழைத்தார். “அம்மா அப்பா, நான் வீட்டுக்கு வருகிறேன், ஆனால் நான் ஒரு உதவி கேட்கிறேன். என்னுடன் வீட்டிற்கு அழைத்து வர விரும்பும் ஒரு நண்பர் என்னிடம் இருக்கிறார்.

"நிச்சயமாக," அவர்கள் பதிலளித்தனர், "நாங்கள் அவரை சந்திக்க விரும்புகிறோம்."என்றனர்.

"நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று இருக்கிறது," மகன் தொடர்ந்தான், "சண்டையில் அவர் மிகவும் மோசமாக காயமடைந்தார். நிலத்தில் புதைத்து வைத்திருந்த வெடியை மிதித்து ஒரு கையையும் காலையும் இழந்தான். அவனுக்கு வேறு எங்கும் செல்ல முடியாது, அவன் நம்முடன் வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

அதைக் கேட்ட பெற்றோர்கள்.. வருந்துகிறேன் மகனே. அவர் எங்கேனும் நலமுடன் வாழ நாம் உதவலாம்.

"இல்லை, அம்மா அவன் நம்முடன் வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன்."

"மகனே," தந்தை கூறினார், "நீ என்ன கேட்கிறாய் என்று உனக்குத் தெரியாது. அத்தகைய ஊனமுற்ற ஒருவர் நமக்கு ஒரு பயங்கரமான சுமையாக இருப்பார். நாம் வாழ நமக்கு சொந்த வாழ்க்கை உள்ளது, மேலும் இதுபோன்ற ஒன்றை நம் வாழ்க்கையில் குறுக்கிட அனுமதிக்க முடியாது. நீ வீட்டிற்கு வந்துவிடு .உன் நண்பனை குறித்து மறந்துவிடு. அவர் சொந்தமாக வாழ ஒரு வழியைக் கண்டுபிடிப்பார் என்றார்.

மகன் போனை வைத்தான். அதன் பிறகு அவன் எதுவும் பேசவில்லை. இருப்பினும்,

சில நாட்களுக்குப் பிறகு, அவர்களுக்கு காவல்துறையில் இருந்து அழைப்பு வந்தது. அவர்களது மகன் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக கூறப்பட்டது. இது தற்கொலை என போலீசார் கருதினர்.

சோகத்தில் மூழ்கிய பெற்றோர்கள் தங்கள் மகனின் உடலை அடையாளம் காண நகர பிணவறைக்கு சென்றனர். அவர்கள் அவனை அடையாளம் கண்டுகொண்டார்கள்.

அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சிக்குளாக்கியது. அவர்களின் மகனுக்கு ஒரு கை மற்றும் ஒரு கால் மட்டுமே இருந்தது.

இந்தக் கதையில் வரும் பெற்றோர்கள் போல் நம்மில் பலர் உண்டு.ஆரோக்கியமாகவோ, அழகாகவோ, புத்திசாலியாகவோ இருப்பவர்களை நாம் விரும்புகிறோம்.நம்மை அசௌகரியப்படுத்துபவர்களை நாம் விரும்புவதில்லை.

எந்த நிபந்தனையும் இல்லாமல் , நாம் எப்படி இருந்தாலும் முழுமையாக அன்பு காட்ட, நமக்கு தைரியம் சொல்லி ஊக்கப்படுத்த ஓர் உறவு இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்.

அப்படி ஓர் உறவு கூட இல்லாத சூழ்நிலையில் தான் தற்கொலை முடிவை கூட ஒர் மனம் எடுத்துக்கிறது என்பது பரிதாபமான உண்மை ..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...