பின் தொடர்பவர்கள்

ஞாயிறு, 30 ஜூன், 2024

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ் 


ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,அதில் அரசியல்வாதிகள் அதிகம், அது வும் தமிழ் தேசியம் என்ற உணர் ச்சித்தூண்டலை வீசி வாக்குகள் சேகரிக்கும் அரசியல்வாதிகள் மன்னாரிலும் இலங்கையிலும் அதிகம்! வெற்றி பெற்றதும் மக்களை கண்டு கொள்வதி ல்லை. கரும்பு தோட்டம் செய் வதும். பெற்றோல் செட் போடுவதுகம், காணி கொள் வனவு செய்வதும் இப்படியாக பல நல்ல காரியங்களை தம் சுய நலனுக்காக செய்வார்கள், மக்கள் தேவைகளை தெரிந்து கொள்வதில்லை. சேவை செய்வ தற்கு பாராளமன்ற பதவி தேவயற்றது. நான் தைப்பெண்கள் என்ற அமைப்பை உருவாக்கி கிட்டதட்ட எழுபது வறிய பெண்களுக்கு வாழ்வாதார உதவி செய்கின்றேன். ஏன் இவர்களால் அப்படி செய்ய முடியவில்லை? மக்களே நீங்கள் விழிப்பாக இருந்தால் தூண்டலில் மாட்டிக்கொள்ள மாட்டீர்கள், அதற்காக இந்த கதையை சொல்கின்றேன்.

                                             ஒரு மன்னனுக்கு நிறைய குழந்தைகள். அந்த நாட்டின் சட்டப்படி மன்னனின் வாரிசுகளில் யாருக்கு மக்களிடம் அதிக செல்வாக்கு இருக்கிறதோ அவர்களே மன்னனாக முடியும். அந்த வகையில் மன்னனின் பிள்ளைகளில் ஒருவன் மக்களிடம் அவன் அந்த நாட்டு அரசனானால் அவர்களுக்கு நிறைய சலுகைகள் வழங்குவதாக உறுதியளித்தான். 

அவனின் பேச்சு மக்களை ஈர்த்தது. மக்கள் அதில் மதி மயங்கினர். அதனால் அவனை அமோகமாக ஆதரித்தனர். அவனும் அந்நாட்டின் மன்னனானான்.

ஆனால் அவன் மன்னனான பின் அவன் கொடுத்திருந்த உறுதிமொழிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. 

இதனால் மக்கள் வெறுப்படைந்து இருந்தனர். மக்களின் சார்பாக மன்னரிடம் மெய்க்காப்பாளனாக வேலை பார்த்த ஒருவன் அவரிடம் கேட்டான்,

"மன்னா! உங்கள் வார்த்தைகளை நம்பித்தான் மக்கள் உங்களுக்கு ஆதரவளித்தார்கள். ஆனால் நீங்கள் அவர்களின் ஆதரவை மட்டும் பெற்றுக்கொண்டு அவர்களுக்குச் செய்வதாகச் சொன்ன சலுகைகள் ஒன்றைக்கூட செய்யவில்லையே! ஏன் மன்னா?"

மன்னன் பதிலேதும் பேசவில்லை. சில நாட்கள் கழித்து அந்த மெய்க்காப்பாளனை அழைத்துக் கொண்டு நதிக்கு மீன் பிடிக்கச் சென்றான்.

மெய்க்காப்பாளன் தூண்டிலில் புழுவை மாட்டிக் கொடுக்க கொடுக்க அதை வாங்கிய மன்னன் நதியில் மீன் பிடித்தான். நிறைய மீன்கள் சிக்கின. 

மன்னன் மீண்டும் அரண்மனைக்கு கிளம்பும் முன் மெய்க்காப்பாளனிடம் கேட்டான்,

" வீரனே! நான் மீன் பிடிப்பதற்கு முன்பாக மீனுக்கு விருப்ப உணவாக இருக்கும் புழுக்களை தூண்டிலில் மாட்டி என்னிடம் கொடுத்தாயே! 

இப்பொழுது இரண்டு கூடை நிறைய மீன்கள் பசியால்  துடிதுடித்துக் கொண்டிருக்கின்றன. அவைகளுக்கு ஏன் நீ புழுவை இப்பொழுது உணவாக வழங்கவில்லை?"

வீரன் சட்டென பதில் சொன்னான், 

"மன்னா! நமது நோக்கம் புழுவைக் காட்டி மீன்களை பிடிப்பது தானே தவிர மீன்களைப் பிடித்து அதற்கு புழுக்களை உணவாக அளிப்பது அல்ல"

மன்னன் சிரித்துக் கொண்டே கேட்டான்,

"இப்பொழுது புரிகிறதா? நான் ஏன் மன்னனாகும் முன் மக்களிடம் சொன்னவைகளை மன்னான பின் செய்யவில்லை என்று..!" 

நீங்க எதையோ கற்பனை செய்தால் கம்பெனி பொறுப்பில்லை!! 

நண்பர்களே இப்போது புரிகின்றதா? மீண்டும் அடுத்து சிந்தனை கதைகளுடன்  உங்கள் அன்பின் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...