Followers

Sunday 1 October 2023

மளிகை கடை

 ஒருவர் முதலில் சிறியதாக 

*மளிகை கடை ஒன்றை ஆரம்பித்தார்*.

பின்பு ஜூவல்லரி ஷாப், ஹோட்டல், *துணிக்கடை, டிபார்ட்மென்டல் ஸ்டோர் என வளர்ந்தது.*

ஒருநாள் இரவு அவர் வீடு திரும்பியபோது மணி பன்னிரண்டைத்  தாண்டி இருந்தது.

*வழக்கமாக அவரை எதிர்கொண்டு அழைக்ககாத்திருக்கும் அவர் மனைவி அன்றைக்கு இல்லை.*

வீட்டுப் பணியாளர் தான் கதவை திறந்தார். அவர் முகக் *குறிப்பை* உணர்ந்து அந்தப் பணியாளர் சொன்னார்.

*ஐயா அம்மாவுக்கு திடீர்னு மயக்கம் வந்துடுச்சு ஹாஸ்பிடலுக்கு போய் ட்ரீட்மென்ட் எடுத்து விட்டு ஒரு மணி நேரத்திற்கு முன்னாடி தான் வந்தாங்க ரூம்ல தூங்குறாங்க.*

*ஏன் என்னாச்சு.?*

பிரஷர் என்று டாக்டர் சொல்லி இருக்காங்க. ஆனா பயப்படத் தேவை இல்லையாம். *மருந்து மாத்திரை சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடுமாம்.*

எனக்கு போன் பண்ணி சொல்ல *வேண்டியதுதானே.?*

நிறைய தடவை உங்க பெரிய பையன் போன் பண்ணினாராம். *ஸ்விட்ச்டு ஆஃப்னே  வந்துச்சாம்.*

அப்போதுதான் அவருக்கு ஒரு மீட்டிங்குக்காக இரவு எட்டு மணிக்கு.

 *தன் மொபைல் போனை சுவிட்ச் ஆஃப் செய்தது நினைவுக்கு வந்தது.*

அவர் தன் மனைவி படுத்திருந்த அறைக்குள் அவசரமாக நுழைந்தார். 

*அங்கு அவர் மனைவி ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்*.

அவர் மனைவியின் தலையை வருடிக் கொண்டிருந்தார். 

*சே இவளை கவனிக்காமல் விட்டு விட்டோமே என்கிற வருத்தம் எழுந்தது.*

அவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. *குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்ந்து இருந்த நாட்கள் எல்லாம் நினைவுக்கு கொண்டு வர முயன்றார்.*

அவர் நினைவுக்கு வந்தது மிக மிகச் சொற்ப தினங்களே.

*தன் மனைவியின் பக்கத்தில் இப்படி நெருக்கமாக அமர்ந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. என்பதை நினைத்ததும் அவருக்கு திடுக் கென்று இருந்தது.*

அறையை விட்டு வெளியே வந்தார் அடுத்த அறை கதவை திறந்து பார்த்தார். 

*இரு மகன்களும் படுக்கையில் படுத்து இருந்தார்கள்.*

சத்தம் இல்லாமல் கதவை மூடினார். *மாடியிலிருந்த தன் தனியறைக்கு போவதற்காக படிகளில் ஏறினார்.*

*ஐயா* சாப்பிட ஏதாவது வேணுமா.? *பணியால் கேட்டான்.*

வேண்டாம் என்று சொல்லிவிட்டு. 

*அவர் தன் அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டார்.*

உடையை மாற்றிக் கொண்டு கட்டிலில் அமர்ந்தார். *இவ்வளவு சம்பாதித்து என்ன பிரயோஜனம் நாம் யாருக்காக வாழ வேண்டும்*.

பிள்ளைகள் மனைவி இவர்களோடு கூட நேரத்தை செலவழிக்க முடியாமல். 

*அப்படி என்ன பிசினஸ் என்னென்னவோயோசனை வந்தது.*

கடைசியில் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். இன்றுதான் கடைசி. 

இன்றோடு பிசினஸில் இருந்து ஓய்வு பெற்று விடவேண்டும். *இனிமேல் வாழவேண்டும் எனக்காக என் மனைவிக்காக என் குடும்பத்திற்காக.*

அப்போதுதான் கட்டிலுக்கு அருகில் இருந்த நாற்காலியில் யாரோ உட்கார்ந்து இருப்பது அவருக்கு தெரிந்தது. 

*கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு தானே வந்தோம் இது யார் எப்படி உள்ளே வந்தார்..?*

யார் நீங்க எப்படி உள்ளே வந்தீங்க.? *என்று கேட்டார்*.

அந்த உருவம் சொன்னது நான் மரண தேவதை. *உன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்*.

*அவர் திடுக்கிட்டுப் போனார்.*

*அய்யாசாமி* நான் இப்போதுதான் வாழணும்னு முடிவு செஞ்சிருக்கேன். *இப்போ போய் என்னை கூட்டிட்டு போக வந்து இருக்கீங்களே கொஞ்சம் அவகாசம் கொடுங்க.*

அவர் எவ்வளவோ பேசி மன்றாடிப் பார்த்தார். தன் *செல்வத்தை* *எல்லாம் கொடுப்பதாக சொல்லிப் பார்த்தார்*.

மரண தேவதை அவருக்கு செவிசாய்க்க மறுத்தது. *அங்கிருந்து நகராமல் அவரை அழைத்துச் செல்ல ஆணி அடித்ததுபோல் அப்படியே உட்கார்ந்து இருந்தது.*

ஒரே ஒரு மணி நேரம் மட்டும் அவகாசம் கொடுங்க ஐயா. 

*என் மனைவி குழந்தைகளுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கு.*

*அதை முடித்துவிடுவேன்.என்று கேட்டார்.*

அதற்கும் மரண தேவதை ஒப்புக்கொள்ளவில்லை. 

அவர் கெஞ்சி அழும் குரலில் கேட்டார். 

*சரி ஒரே ஒரு நிமிஷமாவது கொடுப்பீர்களா உலகத்திற்கு நான் ஒரு குறிப்பு எழுதனும்.*

மரண தேவதை ஒப்புக்கொண்டது.

*அவர் இப்படி எழுதினார்.*

உங்களுக்கான நேரத்தை. 

*சரியான வழியில் செலவழித்து விடுங்கள்.*

என்னுடைய அனைத்து சொத்துக்களை ஈடாக கொடுத்தாலும் கூட.

 *எனக்காக ஒரு மணி நேரத்தை என்னால் வாங்க முடியவில்லை.*

இது ஒரு பாடம் எனவே உங்கள் வாழ்க்கையில் *ஒவ்வொரு நிமிடத்தையும் வீணடித்து விடாமல் அனுபவித்து வாழ்ந்து விடுங்கள்.*

அப்போது யாரோ கதவை பலமாக தட்டும் சத்தம் கேட்டது. 

*அவர் திடுக்கிட்டு கண் விழித்தார்.*

விடிந்து வெகுநேரம் மாகிவிட்டிருந்தது. அவர் எழுந்து போய் கதவை திறந்தார். *பணியால் தான் வெளியே நின்று கொண்டிருந்தார்.*

*ஐயா* ரொம்ப நேரமா கதவைத் தட்டுறேங்க நீங்க திறக்கலையா. *பயந்துட்டேன் அதான் கொஞ்சம் பலமாக தட்டினேன்.*

அவர் அவசரமாக திரும்பி தன் பெட்டுக்கு அருகில் இருக்கும் *மேஜையை பார்த்தார்.*

அங்கே அவர் எழுதிய குறிப்பு இல்லை. 

*பேனாவும் எழுதப்படாத வெள்ளைத்தாளும் தான் இருந்தன*...

No comments:

Post a Comment

 சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.  அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா!...