என் ஈட்டியே எனக்கு போதும் பேசாலைதாஸ்
நானும் நாள் முழுதும் நானும் தான் நிக்குறேன் .நடக்குறேன் .ஓடுறேன் . ஆடுறேன் .பாடுறேன் .ஆனால் என்னய மட்டும் ஈட்டியை நீட்டிப்பிடி ன்னு சொல்லிட்டு பீர்பாலுக்கு மட்டும் ஏனிந்த செல்லம் ?என்று ஆதங்கத்துடன் ராஜா கிட்டே கேட்டுட்டான் .
ஒரு உண்மையான ஊழியரின் நியாயமான கேள்வியை தீர்த்துவைப்பது ராஜாவின் வேலையென்பதால் ராஜா யோசிக்கும்போதே அரண்மனை வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் கடந்து சென்றுகொண்டிருந்தன.
அவை என்ன ?என்று பார்த்து வர ராஜா பணித்தார் உப்பரிகையிலிருந்து.
சேவகன் ராஜா உத்தரவை நிறைவேற்றும்பொருட்டு வேகமாக கீழிறங்கி விசாரித்துவிட்டு மேலேவந்து நெல்லும் ,பஞ்சும் போகின்றது என்றான் .
எங்கிருந்து போகின்றது என்று கேட்டதும் சேவகன் கீழிறங்கி விசாரித்துவிட்டு மீண்டு ராஜாவிடம் பாரிஜாத நாடு என்றான் .
எங்கே போகின்றது ?என்று கேட்டதும் மீண்டும் சேவகன் கீழிறங்கி பவளமல்லி நாட்டிற்கு என்று சொன்னான் .
யாருடையது ?என்று ராஜா கேட்டதும் மீண்டும் கீழிறங்கி சென்று விசாரித்து வருகையில் கானா மூனா செட்டியாரிடமிருந்து என்றான் .
யாருக்கு என்று மீண்டும் கேட்டதும் சேவகனுக்கு கோபம் ஏற ஆரம்பித்து கீழிறங்கி விசாரித்து ரூனா மூனா வகையறாவுக்கு என்றான் .
இதேபோல இன்னும் ஏலெட்டு கேள்விகளுக்குப்பின்னர் சேவகனின் மூட்டு நழுவி மூணு மாசத்துக்கு முட்டுச்செத்த கதையானதும் ,போதும் ராஜா !!நான் கேள்வி கேட்டது தப்புதான் .என் ஈட்டியே எனக்கு போதும் .தூக்கி பிடிச்சு நின்னுக்குறேன்னு சொன்னான் .
அந்த நேரம் பீர்பால் வந்தார் .அவரிடம் இதேபோல ஒரே கேள்வி ராஜா கேட்டார் .பீர்பால் கீழே கூட இறங்கவில்லை .
ராஜா ,பாரிஜாத நாட்டிலிருக்கும் கானா மூனா செட்டியாரிடமிருந்து ,பவளமல்லி நாட்டிலுள்ள ரூனா மூனா வகையறாவுக்கு நெல்லும் ,பஞ்சுமாக 120 வண்டிகள் நேற்று கிளம்பி ,இன்று அரண்மனை வழியாக நாளை மறுநாள் சென்றுசேரும்,மொத்தப்பணமாக பத்தாயிரம் வெள்ளி பணம் ,அதில் பஞ்சுக்கு ஒருபங்கும் ,நெல்லுக்கு மூன்று பங்குமென்கிறார் .
ஏனென்றால் அரண்மனை வழியாக மொத்தமாக இதனை மாட்டுவண்டிகள் செல்லும்போதே அவர் வித்தியாசமாக உணர்ந்து விசாரித்துவிட்டுதான் மேலே வந்திருக்கின்றார் .
அதை கேட்டுவிட்டு ராஜா சேவகனை பார்த்ததுமே சேவகன் அர்த்தம் புரிந்துகொண்டான் .பீர்பலும் பார்வையிலேயே என்ன நடந்திருக்கும் என்று யூகித்து கொண்டார்.இதே கேள்விதான் அக்பரின் சபையில் வேலை காவலாளி ஒருவருக்கு .
நானும் நாள் முழுதும் நானும் தான் நிக்குறேன் .நடக்குறேன் .ஓடுறேன் .ஆடுறேன் .பாடுறேன் .ஆனால் என்னய மட்டும் ஈட்டியை நீட்டிப்பிடி ன்னு சொல்லிட்டு பீர்பாலுக்கு மட்டும் ஏனிந்த செல்லம் ?என்று ஆதங்கத்துடன் ராஜா கிட்டே கேட்டுட்டான் .
ஒரு உண்மையான ஊழியரின் நியாயமான கேள்வியை தீர்த்துவைப்பது ராஜாவின் வேலையென்பதால் ராஜா யோசிக்கும்போதே அரண்மனை வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் கடந்து சென்றுகொண்டிருந்தன.
அவை என்ன ?என்று பார்த்து வர ராஜா பணித்தார் உப்பரிகையிலிருந்து.
சேவகன் ராஜா உத்தரவை நிறைவேற்றும்பொருட்டு வேகமாக கீழிறங்கி விசாரித்துவிட்டு மேலேவந்து நெல்லும் ,பஞ்சும் போகின்றது என்றான் .
எங்கிருந்து போகின்றது என்று கேட்டதும் சேவகன் கீழிறங்கி விசாரித்துவிட்டு மீண்டு ராஜாவிடம் பாரிஜாத நாடு என்றான் .
எங்கே போகின்றது ?என்று கேட்டதும் மீண்டும் சேவகன் கீழிறங்கி பவளமல்லி நாட்டிற்கு என்று சொன்னான் .
யாருடையது ?என்று ராஜா கேட்டதும் மீண்டும் கீழிறங்கி சென்று விசாரித்து வருகையில் கானா மூனா செட்டியாரிடமிருந்து என்றான் .
யாருக்கு என்று மீண்டும் கேட்டதும் சேவகனுக்கு கோபம் ஏற ஆரம்பித்து கீழிறங்கி விசாரித்து ரூனா மூனா வகையறாவுக்கு என்றான் .
இதேபோல இன்னும் ஏலெட்டு கேள்விகளுக்குப்பின்னர் சேவகனின் மூட்டு நழுவி மூணு மாசத்துக்கு முட்டுச்செத்த கதையானதும் ,போதும் ராஜா !!நான் கேள்வி கேட்டது தப்புதான் .என் ஈட்டியே எனக்கு போதும் .தூக்கி பிடிச்சு நின்னுக்குறேன்னு சொன்னான் .
அந்த நேரம் பீர்பால் வந்தார் .அவரிடம் இதேபோல ஒரே கேள்வி ராஜா கேட்டார் .பீர்பால் கீழே கூட இறங்கவில்லை .
ராஜா ,பாரிஜாத நாட்டிலிருக்கும் கானா மூனா செட்டியாரிடமிருந்து ,பவளமல்லி நாட்டிலுள்ள ரூனா மூனா வகையறாவுக்கு நெல்லும் ,பஞ்சுமாக 120 வண்டிகள் நேற்று கிளம்பி ,இன்று அரண்மனை வழியாக நாளை மறுநாள் சென்றுசேரும்,மொத்தப்பணமாக பத்தாயிரம் வெள்ளி பணம் ,அதில் பஞ்சுக்கு ஒருபங்கும் ,நெல்லுக்கு மூன்று பங்குமென்கிறார் .
ஏனென்றால் அரண்மனை வழியாக மொத்தமாக இதனை மாட்டுவண்டிகள் செல்லும்போதே அவர் வித்தியாசமாக உணர்ந்து விசாரித்துவிட்டுதான் மேலே வந்திருக்கின்றார் .
அதை கேட்டுவிட்டு ராஜா சேவகனை பார்த்ததுமே சேவகன் அர்த்தம் புரிந்துகொண்டான் .பீர்பலும் பார்வையிலேயே என்ன நடந்திருக்கும் என்று யூகித்து கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக