Followers

Wednesday 2 June 2021

செவிட்டுத்தவளை

செவிட்டுத்தவளை   பேசாலைதாஸ்

தவளைகளைக்கொண்டு ஆராய்ச்சி செய்யும் ஒருவன் "தாவு"என்று சொன்னால் தாவும்படி ஒரு தவளைக்குபழக்கியிருந்தான். அந்த ஆராய்ச்சியாளனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, ஒரு நாள், தாவு என்று சொன்னால், தாவக்கூடிய அந்த தவளையின். ஓர் காலை வெட்டி விட்டு "தாவு"என்றான்.தாவியது. இரண்டாம் காலை வெட்டி விட்டு"தாவு"என்றான். வலியோடு தாவியது. மூன்றாம் காலை எடுத்தும் மிகுந்த வலியோடு ஒற்றைக் காலால் தாவியது.

நான்காம் காலையும் வெட்டி விட்டு "தாவு" என்றான். நகர முடியாமல் பரிதாபமாய் படுத்தது.

மறுபடி தாவச் சொல்லி கத்திக் கொண்டேயிருந்தான். அதனிடமிருந்து அசைவேயில்லை!

ஆராய்ச்சி முடிவை இப்படி எழுதினான்- "நான்கு கால்களையும் எடுத்து விட்டால் தவளைக்கு காது கேட்காது".

இப்படி தான் இன்றய கல்விமுறையும் பலரின் புரிதல்களும் உள்ளது.

No comments:

Post a Comment

 சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.  அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா!...