Followers

Saturday 29 May 2021

வயிற்றிலே நெருப்பு


வயிற்றிலே நெருப்பு   பேசாலைதாஸ் 


முல்லா வியாபாரம் செய்வதற்காக வெளியூர் சென்றிருந்தார் . அங்குள்ள விடுதியில் இரவுப் பொழுதைக் கழிப்பதற்காகத்தங்கினார் சாதாரண மாக உடையணிந்திருந்த முல்லாவை விடுதி வேலைக்காரர்கள் கொஞ்சமும் மதிக்க வில்லை , உபசரிக்க வில்லை . இரவில் முல்லாவுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது . வேலைக்காரர்களைக் கூப்பிட்டு தமக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்று கேட்டார் . வேலைக்காரர்களோ அவரைக் கொஞ்சமும் லட்சியம் செய்யவில்லை . 


திடீரென முல்லா " நெருப்பு ! நெருப்பு ! நெருப்பு பற்றிக் கொண்டு விட்டது " எனக் கூக்குரல் போட்டார் . இதைக்கேட்ட வேலைக் காரர்கள் பதறியடித்துக் கொண்டு ஆளுக்கு ஒரு குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒடி வந்தார்கள் . 

முல்லாவைப் பார்த்து எங்கே தீப்பற்றிக் கொண்டது ? " என்று பரபரப்புடன் கேட்டார்கள் . 

முல்லா அமைதியாக , ஒரு குவளையை எடுத்து அவர்கள் கொண்டு வந்திருந்த குடம் ஒன்றிலிருந்து நீரை எடுத்து வயிறாரக் குடித்தார் . அவர் தாகம் அடங்கியது . 

" நெருப்பு பற்றிக் கொண்டதாகச் சொன்னீரே எங்கே ? " என்று விடுதியின் வேலைக் காரர்கள் கேட்டார்கள் . அடேடே , " நெருப்பு என் வயிற்றில்தான் பற்றிக் கொண்டு எரிந்தது . இப்போது நீங்கள் கொண்டுவந்த தண்ணீரை விட்டு அணைத்து விட்டேன் என்று கூறிவிட்டுச் சிரித்தார் முல்லா .

 வேலைக்காரர்கள் தங்களின் தவறை உணர்ந்து முல்லாவிடம் மன்னிப்பு கேட்டனர் . 

No comments:

Post a Comment

 சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.  அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா!...