பின் தொடர்பவர்கள்

சனி, 21 நவம்பர், 2020

0007 நேர்மை எப்பொழுதும் நேராகவே இருக்கும்

 நேர்மை எப்பொழுதும் நேராகவே இருக்கும் பேசாலைதாஸ்


அன்பர்களேHonest is the best policy என்று ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு. வாழ்க்கையில் நேர்மை எவ்வளவு முக்கியம் என்பது நாம் அன்றாட வாழ்வில் அவதானித்திருக்கின்றோம் அதை விளக்கும் அழகான கதை ஒன்றை முகனூலிலே வாசித்தேன் அதை அப்ப டியே இங்கு பதிவு செய்கின்றேன். 


                                                 ஒரு வியாபாரி தனக்கு பயணம் செய்ய ஒட்டகம் வாங்க சந்தைக்கு போனான். ஒட்டக வியாபாரியிடம் அப்படி இப்படி என பேரம் பேசி நல்ல விலைக்கு ஒட்ட கத்தை வாங்கி கொண்டு ஓட்டி வந்தான்.

ஒட்டகம் வாங்கிய வியாபாரிக்கோ மகிழ்ச்சி. நயமான விலையில் நல்ல தரமான ஒட்டகம் கிடைத்தது என்று.


                              வீட்டுக்கு வந்ததும் தன் வேலை  யாளை அழைத்து ஒட்டகத்தை கொட்டிலில் அடைக்க சொன்னான். அதற்கு முன்பாக ஒட் டகத்தின் மேலிருந்த சேணத்தை அவிழ்க்க முய ற்சித்தான். அவனால் முடியவில்லை. தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தின் சேணத்தை அவிழ்க்க சொன்னான்..


                          ஒட்டகத்தின் மீதிருந்த சேணத்தை அவிழ்த்த வேலையாள், பொத் என ஏதோ கீழே விழுவதை கண்டு எடுத்து பார்த்தான். அது ஒரு சிறிய பொக்கிஷப்பை. உள்ளே பிரித்தால், ஆச்சரியத்தால் அவன் கண்கள் விரிந்தது...

விலை மதிப்பற்ற நவரத்தின கற்கள். தகதக வென மின்னியது. அதை எடுத்து கொண்டு முதலாளியிடம் ஓடி காண்பித்தான்.


                             உடனே வியாபாரி, அந்த பையை இப்படி கொடு, உடனே அந்த ஒட்டக வியாபா ரியிடம் கொடுக்கணும்னு சொல்லி புறப்பட் டான். பணியாளோ, ஐயா இது யாருக்கும் தெரியப் போவதில்லை. இது இறைவனின் பரிசு. நீங்களே வைத்து கொண்டால் என்ன என வற்புறுத்தினான்.


                        வியாபாரியோ ஒத்து கொள்ளாமல் புறப்பட்டு போனான். ஒட்டக வியாபாரியிடம் சேணத்தை அவிழ்த்த போது கிடைத்த பொக் கிஷப் பையை கொடுத்ததும் நன்றியோடு வாங்கி கொண்டவன், அந்த பொக்கிஷப் பையை வியாபாரியிடம் கொடுத்து, உங்கள் நேர்மையை நான் மெச்சுகிறேன். தங்களுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்புகிறேன். இதிலிரு ந்து உங்களுக்கு பிடித்தமான கற்களை சிலவ ற்றை எடுத்து கொள்ளுங்கள் என்று நீட்டினான்.

அதற்கு அந்த வியாபாரியோ சிரித்து கொண்டே உங்களிடம் இந்த பொக்கிஷத்தை தரும் முன்பே இரண்டு விலையுயர்ந்த ரத்தினங்களை நான் வைத்து கொண்டேன் என்றான்.


                                   உடனே ஒட்டக வியாபாரியோ கற்களை எண்ணி பார்க்க எதுவுமே குறைய வில்லை. சரியாக இருந்தது கண்டு குழம்பி னான். உடனே அந்த வியாபாரி நான் சொன்ன இரண்டு ரத்தினங்கள்...

1. எனது நேர்மை.

2. எனது சுயமரியாதை என்றான் கம்பீரமாக.

நேர்மையாளனாக வாழ்வது பெரிய விஷய மல்ல. தவறு செய்யக்கூடிய சந்தர்ப்பமும், வாய்ப்பும், வாய்த்தாலும் நேர்மையாக வாழ வேண்டும்.    

*வாழ்வில் ஒரு நாள் நேர்மையாய் வாழ்ந்து பார்த்தால், அதன் ருசி நாம் உணர்ந்து விட்டால், நாம் எதற்காகவும் நேர்மையை இழக்க மாட்டோம்.*    அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...