பின் தொடர்பவர்கள்

ஞாயிறு, 30 ஜூன், 2019

0305 உயர உயர பற!

உயர உயர பறப்பதற்கு ஆசைப்படுங்கள்!   பேசாலைதாஸ்
                                                             
                            நாம் அனைவரும் உயர உயர பறப்பதற்கு படைக்கப்பட்டவ ர்கள். ஆனால் பல சமயங்களில் நாம் நமது சக்தியை உணராமல் ஒரே இட த்தில் அமர்ந்து கொண்டு பழக்கப்ப ட்ட வேலை களை மட்டுமே அது தான் நம்மால் முடியும் என்று கருதி செய்து வருகி றோம். நாம் சாதிக்க கூடி யவை எண்ணற்றவை. முடிவற் றவை. ஆனால் நம்மில் பலருக்கு அது கண்டுபிடிக்கப்படாமலே போய் விடுகிறது. செக்கு மாடு போல, ஒரே இடத்தில், மிக சுலபமான, ஒரே வேலையை செய்வ திலே தான் நாம் ஆர்வம் செலுத்துகிறோம். ஆகை யால் தான் பலருக்கு வாழ்க்கை ஒரு உற்சாகமான, த்ரிலிங்கான, மன நிறைவான ஒன்றாக இல்லாமல் மிகச் சாதாரணமாக கழிந்துவிடுகிறது.நான் நண்பர் ஒருவ ரின் முகநூலில் வந்த ஒரு சிறு அறிவுத்துணுக்கை கதையாக இங்கே தருகின்றேன்.

                                                             மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்கு வரு கை தந்த சீன தேசத்து சேர்ந்த அறிஞர் ஒருவர் தாயை இழந்த இரண்டு பஞ்சவர்ண கிளிக்குஞ்சுகளை பரிசளித்துவிட்டு சென்றார். பஞ்சவர்ண கிளியை அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதுவர் என்பதால் அரசன் மிக வும் அக மகிழ்ந்து தனது நாட்டின் பறவைகள் பயிற்சியாளரை அழைத்து
“இவற்றை நல்ல முறையில் பராமரித்து, பழக்கப்படுத்தி பறப்பதற்கு பயிற்சியளியுங்கள்!” என்று கட்டளையிட்டான்.

                                                             மாதங்கள் உருண்டோடின.  பறவைகள் எப் படி வளர்கின்றன? நன்றாக பறக்கின்றனவா?  என்று தெரிந்துகொள்ள பயிற்சியாளரை அழைத்தான் மன்னன். “அரசே… இரண்டு பறவைகளில் ஒன்று நன்றாக பறக்க கற்றுக்கொண்டுவிட்டது. மற்றொன்று எவ்வ ளவோ முயற்சித்தும் அது அமர்ந்திருக்கும் கிளையை விட்டு நகர மறுக் கிறது”  என்றான்.

                                                              உடனே மன்னன்,  தனது நாட்டில் உள்ள பிரசி த்தி பெற்ற கால்நடை மருத்துவர்களையும் பறவையியல் நிபுணர்களை யும் அழைத்து பறவைக்கு என்ன ஆயிற்று? அது ஏன் பறக்க மறுக்கிறது? 
என்று ஆராயுமாறு கட்டளியிட்டான். அவர்களும் அதை முற்றிலும் பரி சோதித்துவிட்டு, “இந்த பறவையிடம் எந்த குறையுமில்லை. உடலில் ஊன முமில்லை.  ஆனால் அது ஏன் பறக்க மறுக்கிறது என்று புரியவில்லை அரசே” என்றனர்.

                                                              உடனே தனது அமைச்சரை அழைத்து “என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது.  இந்த கிளி இன்னும் இர ண்டு நாளில் பறக்கவேண்டும்” என்றான் கண்டிப்புடன். சில நாட்கள் கழித்து ஒரு நாள் தனது மாளிகையின் உப்பரிகையிலிருந்து வெளியே பார்க்கிறான்.  கிளி அதே இடத்தில் தான் உட்கார்ந்திருந்தது. நகரவேயி ல்லை. மன்னனுக்கு என்னவோ போலிருந்தது. “இதற்கு என்ன ஆயிற்று ஏன் பறக்க மறுக்கிறது என்று தெரியவில்லையே? நாட்டுப்புறத்தில் உள்ள வயலில் வேலை செய்யும் விவசாயிகள் அல்லது மூத்த குடிமக்கள் எவரையேனும் அணுகி இது பற்றி கேட்கவேண்டும்.  அவர்களுக்கு ஒரு வேளை இது பறக்க மறுப்பதன் காரணம் தெரிந்திருக்க்கலாம்” என்று கருதி உடனே காவலர்களை அழைத்து, “நாட்டுப்புறத்திற்கு போய் யாரே னும் ஒரு மூத்த விவசாயி ஒருவரை அழைத்து வா” என்று கட்டளை யிட்டான்.

                                                        அடுத்தநாள் காலை கண்விழிக்கும்போது, அந்த பஞ்சவர்ணக் கிளி மரத்தை சுற்றி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருப் பதை பார்த்தான். அவனுக்கு ஒரே சந்தோஷம்.  “இந்த அற்புதத்தை செய் தவரை உடனே அழைத்து வாருங்கள்!”  என்றான். அந்த விவசாயி மன் னன் முன்பு வந்து பணிந்து நின்றார். “எல்லாரும் முயற்சி செய்து தோற் றுவிட்ட நிலையில் நீ மட்டும் கிளியையை எப்படி பறக்கச் செய்தாய்?”
மன்னன் முன் தலையை வணங்கியபடி விவசாயி சொன்னார்…“அது ரொம்ப சுலபமான காரியம் அரசே. மரத்தில் ஏறி அந்த பறவை உட்கா ர்ந்திருந்த கிளையை நான் வெட்டிவிட்டேன். வேறொன்றுமில்லை!” என்றார்.

                                                  ஆம் அன்பர்களே! இறைவனும் சில சமயம் அந்த விவசாயி போல, நம்மை நமது சக்தியை உணரச் செய்யவேண்டி, நாம் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டிவிடுவான். அது நமது நன்மைக்கே. நம் சக்தியை ஆற்றலை நாம் உணரவேண்டியே என்று கருதி நம்மை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கவேண்டும். அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...