பின் தொடர்பவர்கள்

வியாழன், 26 ஜூலை, 2018

0564 மனித சுபாவம்

 மனித சுபாவத்தை நினைத்துப் பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது. பேசாலைதாஸ்
                   ஆலையத்துக்கு செல்லும் போது, ஆடம்பரமாக செலவேண் டும் என்று பலர் நினைப்பதுண்டு. அடுத்தவன் என்னைப்பற்றி பெருமைபட பேசவேண்டும் என் பதே இதன் உள் அர்த்தம், ஆடம்பர மாய் ஆலையம் செல்பவர்கள், காணிக்கை பவணியில் வரும் போது, எல்லோரும் தம்மை பார்க்கும்படியாக, கை, கழுத்தில் இருக்கும் நகை அணிகளை சரி செய்துகொள்வார்கள், நாம் தான் கடவுளுக்கு வெகுமதியான காணிக்கை செலுத்துகின்றோம், நாம் தான் இறைவனுக்கு நெருக்கமானவர்கள், அதனால்தான் செலவ செழிப்போடு கடவுள் தம்மை ஆசிர்வதித்துள்ளார், மற்றவர்களை கைவிட்டுவிட்டார் என தமக்குள் நினைத்துக்கொண்டு  இ றுமாப்பை, இறைவனிடமும் காட்ட முற்படுவார்கள், இதனை அழகாக சித்தரிக்கின்றது, முல்லாவின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்.

                                                                             அந்த் மசூதியில் பலர் ஒன்று சேர்ந்து தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் முல்லாவும் இருந்தார். தொழுது கொண்டி ருந்த ஒருவர், திடீரென்று தனக்கு அருகே தொழுகையில் ஈடுபட்டிருந்தவரைப் பார்த்து "அடடா, நினைவு மறதி யினால் என் வீட்டுக் கதவை மூடாமல் வந்துவிட்டேன்" என்றார். "தொழு கை நேரத்தில் நீ பேசியதால் என் பிரார்த்தனையைக் கலைத்துவிட்டாய். அதனால் நீ மறுபடியும் தொழுது பிரார்த்தனை செய்யவேண்டும்" என்றார் இரண்டாமவர்.

                                                                    நீயுந்தான் இப்போது என்னுடன் பேசி பிரார்த்தனையைக் கலைத்துக்கொண்டாய். நீயுந்தான் மீண்டும் தொழுகையில் ஈடுபட்டுப் பிரார்த்தனை செய்யவேண்டும்" என்றார், இந்த இருவரின் வாய்த்தர்க்கத்தை கண்டு, முல்லா மெல்லச் சிரித்தார். "ஏன் சிரிக்கிறீர்" என அந்த இருவரும் கேட்டனர். "பொதுவாக மனித சுபாவத்தை நினைத்துப் பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது. மனிதன் தான் ஒழுங்காக முறையாகப் பிரா ர்த்தனையில் ஈடுபடுவதைவிட மற்றவன் ஒழுங்காகப் பிரார்த்தனை செய்கிறானா என்பதைக் கவனிப்பதில் அதிக அக்கறை செலுத்து கிறான்" என்றார் முல்லா. அந்த இரண்டு பேரும் வெட்கமடைந்து தலைகுனிந்து கொண்டார்கள்.  கோவிலுக்கு ஒழுங்காக செல்பவ ர்கள் முதலில் நினைப்பதுண்டு தாங்கள் கடவுளுக்கு மிக நெருக்க மானவர்கள் என்று, இவர்கள் தங்களை தாங்களே அறிந்து கொள்ளா மல் சொல்லும் வார்த்தைகளும், செயல்பாடுகளுக்கும் மற்றவர்க ளை கடவுளுக்கு அருகாமையில் வருவதை தடை செய்கின்றார்கள். தேர் ஏது சிலை ஏது?  திருநாள் ஏது? மனிதரெல்லாம் தெய்வங்களாய்மாறும் போது,,,,,, மாறுவோம் மாற்றுவோம் அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...