பின் தொடர்பவர்கள்

ஞாயிறு, 10 ஜூன், 2018

0550 தவனை முறையில் விபச்சாரம்! பேசாலைதாஸ்

தவனை முறையில் விபச்சாரம்! பேசாலைதாஸ்

ஆணாதிக்க உலகத் திலே சக்தி படத்தவன் பல பெண்களை மனைவியாக வைத் துக்கொள்ளலாம், இஸ்லாம் மத்தில் இதற்கு இடம் உண்டு. இந்து சமயத்தில் இரு வரை  திருமணம் பொதுவாக இருக்கி ன்றது. இது ஆண்க ளுக்கு சாதகமாகவே அமைகின்றது. பெண்கள் எவ்வளவுதான் வல்லமை கொண்டவாளாக இருந்தாலும், பல ஆண்களை மணம் முடிக்க, அல்லது பலரோடு வாழ சமூகம் அங்கீகரிப் பது இல்லை. மகாபாரதத்தில் வரும் பஞ்சாலியின் கதை சற்று மாறுதலானது. பாஞ்சாலி ஐந்து பேருக்கு மனைவியாக வாழ்ந் தாள். இதை எப்படி மகாபாரதம் அஙீகரித்தது, இதனால் சொல் லவரும் தத்துவம் என்ன? இதனை அழகாக விளக்க ஒரு சம்ப வத்தை கதையாக விபரித்து எழுதுகின்றேன்.
                                                                   உடல் பலசாலியான பீமனுக்கு இருப்பு கொள்ளவில்லை, அவனது இதயம் சந்தேகத்திலும், அருவருப்பிலும் அலைபாய்ந்தது. அம்மா ஏதோ தவறுதலாக, அருச்சுணன் வென்று வந்த மாம்பழத்தை ஐவரும் பகிர்ந்து சுவையுங்கள், என்று சொன்ன சொல்லுக்காக, பஞாசலியான மாம்பழம் போன்ற பெணை, ஐந்து சகோதரங்களும் முறைப் படி, தவனை முறையில் அனுபவிக்க வேண்டும் என்ற தாயின் ஏற்பட்டில், பீமனுக்கு உடன்பாடு இல்லை. 

                                                                                  பீமன் பஞச பூதங்களில் ஒன்றான காற்றின் அம்சமாக அவதரித்தவன். காற்றைப் போல உடல் பலம் கொண்டவன் பீமன்! அண்ணன் தர்மருடன் வாழ்ந்துவிட்டு, இப்போது பாஞ்சாலி, பீமனுக்கு மனைவியாக வாழும் முறை தொடங்கும் நாள். அண்ணனின் மனைவியாக போற்றிய ஒருத்தியுடன், சம்சார வாழ்கை வாழ்வதா? ஏற்க னவே அரக்கியான இடும்பியுடன் சம்சார போகம் அனுபவித் தவன் பீமன்! பஞ்சாலிக்கு கணவனாக வாழவேண்டும் என்ற ஏற்பாட்டில்,  பீமனுக்கு ஒரு துளிகூட விருப்பம் இல்லை, மாறாக பாஞ்சாலியை பார்க்கும் போது, அவள் மீது அவனுக்கு ஒருவித வெறுப்பு. எப்படி எப்படி ஒரு பெண்ணினால் பல ஆட வருடன் சேர்ந்து வாழ முடிகின்றது. அதுவும் தவனை அடிப்ப டையில் மனைவியாக! இது ஒருவகை விபச்சாரம் போலவே பீமனின் மனம் அவனுக்கு உணர்த்தியது. பீமனின் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்த நேரம் அவர்களை சந்திக்க, வருகின்றார் வாசு தேவராகிய கிருஸ்ணன். கிருஸ்ணனின் தங்கை முறைதான் பாஞ்சாலி.
                                                                    பீமன் முகம் சுருங்கிக் கிடந்தது. கிருஷ்ணர் ஒருவாறு ஊகித்துக் கொண்டார். திரெளபதியைக் கண்களால் பார்த்துச் சிரித்தார். திரெளபதியும் கிருஷ்ண ரைப் பார்த்துச் சிரித்தாள். பீமனுக்குக் கோபம் வந்தது. என்றா லும் தனிமைக்காகப் பொறுமையுடன் இருந்து, தனிமையில் கிருஷ்ணரைச் சந்தித்து,. ‘கிருஷ்ணா, உனக்கே இது நியா யமா? இவ்வளவு நாள் எனக்கு அண்ணியாக இருந்தவள், எனக் குத் தாய் ஸ்தானத்தில் இருந்தவள் இன்று முதல் ஒரு வருஷத் திற்கு மனைவி, என்றால் என்னால் எப்படி ஏற்க முடியும்? நீயா னால் சிரிக்கி றாய்! திரெளபதியும் சிரிக்கிறாளே!’ என்று கேட் டான். கிருஷ்ணர் சொன்னார்: ‘பீமா, நடப்பவை எல்லாம் உன் னைக் கேட்டு நடக்கவில்லை. ஏற்கெனவே இது இவ்வாறு நட க்கும் என்று சொல்லி இருப்பது தான் நடக்கிறது. இதில் நீ வரு ந்த ஒரு காரணமும் இல்லை. இருந்தாலும் உன் ஆறுதலுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன், கேள்!*
                                                            *இன்றிரவு திரெளபதி நள்ளிரவில் தனியாக வெளியில் செல்வாள் அல்லவா?” என்று கேட்டார். ‘ஆம், பார்த்திருக்கிறேன். ஒரு வருஷம் முடிந்ததும் ஒவ்வொரு நள்ளிரவிலும் வெளியே சென்று விட்டுப் பின் உதயத்தில் திரு ம்பி வருவாள்.’ என பீமன் சொல்ல, ‘அப்போது திரெளபதி எப்படி இருப்பாள்?’ என்று கிருஷ்ணர் கேட்க, பீமனோ, ‘புடம் போடப் பட்ட புதுப் பொன்னைப் போல் ஜொலிப்பாள். அவள் முகத்தின் தேஜஸ் சுடர் விட்டுப் பிரகாசிக்கும்.’ என்று சொல்கி றான்.* ‘பீமா, இன்றிரவு அம்மாதிரித் திரெளபதி வெளியே போகும்போது நீயும் உடன் போய்ப் பார்.’ என்று கிருஷ்ணர் சொல்கிறார்.*
                                                         *அன்றிரவில் நள்ளிரவில் திரெளபதி வெளியே போக பீமனும், கிருஷ்ணனும் அவளுக்குத் தெரியா மல் தொடர்ந்து போகிறார்கள். அவர்கள் இருவரும் மறைந்து இருந்து பார்க்கும் வேளையில் தீ மூட்டிய திரெளபதி, தானும் அந்தத் தீயில் விழுகிறாள். மனம் பதைத்த பீமன் அவளைக் காப்பாற்ற ஓட முயற்சிக்கத் தடுக்கிறார், பரந்தாமன். ‘அங்கே பார்!’ என்கிறார். என்ன ஆச்சரியம்! தீக்குள் திரெளபதியா தெரிந்தாள்? சாட்சாத் அந்த அகிலாண்டேஸ்வரி, சர்வ உலகத் தையும் காத்து அருளும் மஹா சக்தி, அன்னை தன் சுய உரு வில் காட்சி அளிக்கிறாள். அவளைத் தீயும் சுடுமோ? அவளே தீ, அவளே, நீர், அவளே வாயு, அவளே ஆகாயம், அவளே நிலம். சகலமும் அவளே அல்லவா? திகைத்துப் போன பீமனை அழைத்து வந்து புரியவைக்கிறார் அந்த வாசுதேவன்.*
                                                                         *‘பீமா, நீங்கள் ஐவரும் பஞ்ச பூதங்கள் என்றால் உங்களை ஆளும் மஹாசக்தி திரெளபதி ஆவாள். அவளுக்குள் நீங்கள் அடக்கமே அன்றி அவள் உங்களு க்குள் அடக்கம் இல்லை. எப்படி இந்தப் பிரபஞ்சமானது பஞ்ச பூதத்தையும் வெளிக்காட்டி ஆளுமை செய்கிறதோ, அதை ஆளுமை செய்யும் சக்தி இவளே! நீங்கள் ஐவரும் ஐம்புலன்கள் என்றால் உங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா இந்தத் திரெளபதி ஆவாள். இந்த ஜீவாத்மா எப்படிப் பரமாத்மாவிடம் ஐக்கியம் ஆகிறதோ அப்படி நீங்கள் அனைவரும் அவளுள் ஒடுங்குவீர் கள். உனக்கு இந்த உண்மை புரியவேண்டும் என்பதற்காக இந்தக் காட்சியைக் காட்டினேன். இந்த உண்மை உனக்குள் உறைந்து போகட்டும். இவளை விடக் கன்னியோ, அல்லது பத்தினியோ இவ்வுலகில் இல்லை. அனைத்தும் இவளே! இந்த உண்மைதான் உங்கள் ஐவரையும் திரெளபதி மணம் புரிந் ததாகக் காட்டப் படும் காட்சி. இதன் உள்ளே உள்ள இந்தத் தத்துவத்தை உணர்ந்தவர்கள் என்னையே உணர்ந்தவர்கள் ஆவார்கள். நீ கவலை இல்லாமல் உன் கடமையைச் செய்.’ என்கிறார் கிருஸ்ணர். ஓ! ஐவருக்கும் மனைவியாக வாழ்வ திலும் இத்தனை தத்துவமா?  சிந்தனைச் சாகரத்தில் அமிழ் ந்து போனான் பீமன். அன்பர்கேளே இப்போது உங்களுக்கு புரின்றதா?
அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...