பின் தொடர்பவர்கள்

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

0376 சிங்கமாய் வாழ்ந்து பார்!

சிங்கமாய் வாழ்ந்து பார்!


ஒரு துறவியிடம் அவர் சீடர் வந்து, 'சுவாமி... நான் எப்படி வாழ வேண்டும் என்பதைத் தெரிவித்தால் நலமாயிருக்கும்’ என்றார். குருவும், அந்நேரத்தில் தூரத்தில் நொண்டிக்கொண்டே வந்த ஒரு நரியைக் காட்டி, அதனுடன் செல், அதற்கு உணவு எப்படி கிடை க்கிறது என்று பார். அப்போது நீ எப்படி வாழவேண்டும் என்பது தெரியும் என்றார். நரியைத் தொடர்ந்து சென்ற சீடர், தூரத்தே ஒரு சிங்கம், வேட்டையாடப்பட்ட ஒரு மானின் உடலை இழுத்து வருவ தைப் பார்த்து ஒளிந்து கொண்டார். அதைச் சிறிது தின்றுவிட்டு, மீதத்தை நரியிடம் போட்டுவிட்டுச் சென்றது சிங்கம். உடனே சீட னுக்கு, வாழவேண்டிய வழி தெரிந்தது போல இருந்தது.அடுத்த நாள் முதல் சீடர், உண்ணாமல், யாரேனும் தனக்கு உணவு கொண்டுவந்து தருவார்கள் எனக் காத்திருக்க ஆரம்பித்தார். நாட்கள் உருண்டன... ஆனால் யாரும் உணவைக் கொண்டுவந்து தரவில்லை. சீடர் உடல் இளைத்து, குருவைத் தேடி வந்தார். நடந்த விடயங்களைக் கூறி, 'குருவே.. அந்த நரிக்கு கொடுத்தாற்போல் யாரேனும் எனக்கு உணவு கொண்டுவந்து தருவார்கள் என எண்ணினேன். ஆனால் யாரும் வரவில்லை எனப் புலம்பினார். பதிலுக்கு குரு, 'அட மடையா.. நீ என்னிடம் எப்படி வாழவேண்டும் என்று கேட்டாய். நானும் சொ ன்னேன். ஆனால் நீ நரியைப் பார்த்துத் தப்பாய் புரிந்து கொண்டாய். உண்மையில்..நீ என்ன செய்திருக்க வேண்டும். சிங்கம் போல வாழ நினைத்திருக்க வேண்டும். மற்றவர்களுக்கு உதவியாய், மற்றவர்க ளுக்கு, உணவளிக்கக் கூடியவனாய் இருக்க எண்ணியிருக்க வேண்டும் என்றார். அப்போதுதான் சீடருக்கு எப்படி வாழவேண்டும் என்பதற்கான விடை தெரிந்தது. ஆம் அன்பர்களே கிறிஸ்தவத்தின் அடிநாதமே கொடுப்பதுதான் அதற்காகவே இறைவன் மனிதானாய் பிறந்து சிலுவையிலே உயிர்கொடுத்து உயிர்கள் காத்தார்.  அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...