பின் தொடர்பவர்கள்

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

0395 கழுதையும் எதிர்க்கட்சி தலைவராகிவிட்டது!

கழுதையும் எதிர்க்கட்சி தலைவராகிவிட்டது!


ஒரு முறை எதிக்கட்சித் தலை வர்  சம்பந்தன் ஐயா அவர்கள்      த‌ ன் நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த புதிசாலியான விவசாயி  "என்ன கழுதை யுடன் வாக்கிங் போகிறீர்கள்?"
என்று கிண்டலாகக் கேட்க, எதிக்கட்சித் தலைவருக்குக் கோபம் வந்து விட்டது.
"என்ன உனக்குக் கண் சரியாகத் தெரியவில்லையா? இது என் நாய்" என்றார்.

அதற்கு அந்த விவசாயி மிக சாமர்த்தியமாக எதிக்கட்சித் தலைவரிடம் சொன்னார். "அது நாய் என்று எனக்குத் தெரியும். நான் கேள்வி கேட்டது அந்த நாயிடம்" என்றார்.

எதிர்க்கட்சித்தலைவருக்கு தன்னைக் கழுதை என்று விவசாயி பரிகாசம் செய்கிறார் என்று தெரிய சிறிது நேரம் தேவைப்பட்டது. எல்லோரும் தன்னை ஐயா !தலைவா! என்று மரியாதையுடன் அழைக்கையில் இந்த விவசாயி கழுதை என்கிறாரே என்று உடனே வெகுண்டு நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி விவசாயி, ஒரு புகழ் பெற்ற தலைவரை கழுதை என்றழைத்தது தவறு என்றும் அந்தத் தலைவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.

உடனே விசயம் தெரிந்த விவசாயி,  நீதிபதியிடம் ஒரு சந்தேகம் கேட்டார்.  "ஐயா நான் கழுதையைத் தலைவா என்றழைப்பதில் சட்டத்தில் ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா?" என்று,

"இல்லை" என்றார் நீதிபதி.

சரி என்ற அந்த விவசாயி, அந்தத் எதிர்க்கட்சித்தலைவரிடம் சென்று "தலைவா என்னை மன்னித்து விடுங்கள்" என்று கேட்க நீதிமன்றத்தில் பலத்த சிரிப்பலைகள். யாவும் சும்மா கற்பனைதான்! அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...